Saturday, June 25, 2011

அதிசய மூலிகைகள்!

   மெச்சிகோவில் பல ஆண்டுகள் தங்கி அங்குள்ள மூலிகைகள் குறித்து ஆராய்ந்தார், கார்லோஸ் காஸ்ட் என்ற அறிஞர். அவர் எழுதியுள்ள ஒரு நூலில், தான் கண்டறிந்த மூலிகைகளைப் பற்றிச் சுவையான விவரங்களைத் தந்திருக்கிறார். அவர் கூறியுள்ள தாவரங்கள், மூலிகைகள் ஆகியவற்றைப் பற்றி இன்றை நாகரீக உலகுக்குத் தெரியாது.
   சிலதாவரங்களின் சாற்றை அரிந்தினால் உடனடியாக உடலை விட்டு உயிர் பிரிந்து விடுமாம். சில தாவரங்களை உட்கொள்வோருக்குப் படிப்படியாக இளமைத் தோற்றம் ஏற்பட்டு விடும். அவற்றை இளைஞர்கள் உட்கொண்டால் அவர்களுடைய ஆண்மைத் திறன் அளவு கடந்து அதிகரித்துவிடும். வேறு சில தாவரங்களை அந்தி வேளையில் புசித்தால் உடல் ஒளிரத் தொடங்கிவிடும். இரவில் பயணம் செய்வதற்கு அந்த ஒளியே போதும். வேறு விழக்குகள் வேண்டாம்.
   பண்டைகாலத்தில், தாவரங்களிள் ரகசியங்களை அறிந்த யோகிகள் பலர் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். பசி தெரியாமல் இருக்கவும், இமையமலைச் சாரலில் குளிர் தெரியாமல் இருக்கவும் இவர்கள் சில பச்சிலைகளைப் புசித்து வந்ததாகச் சொல்கிறார்கள்.
   தேள்கடி, பாம்புக்கடி போன்ற விஷங்களை அகற்றுவதற்கும், வெட்டுக் காயங்களைக் குணப்படுத்துவதவும் பச்சிலைகள் உள்ளன. பல வியாதிகளைக் குணப்படுத்தும் திறன் வாய்ந்த மூலிகைகள் நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அவை வேதியல் முறையில் உருமாறிப் புட்டிகளில் சிறைப்பட்டு புதுமையான மருத்துவப் பெயர்களுடன் மீண்டும் நம்மிடமே வருகின்றன.

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...

No comments: