Monday, June 13, 2011

நமது நாது 23.தமிழ்சங்கம்


    தமிழிநாட்டு முவேந்தரும் தமிழைக் கருத்தோடு வளர்த்தனர். அவ்வேந்தரின் அரண்மனையில் தமிழ்ப் புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் அரசனது வெற்றிகளையும் பிற புகழ்களையும் அழகிய இனிய பாடல்களாகப் பாடினர்கள். அப்பாடல்கள் அரண்மனை விழாக் காலங்களில் அரசனதும் பெருமக்களுடையவும் முன்னிலையிற் படிக்கப்பட்டன. புலவர்கள் அரிய கல்விப் பொருள்களை விரிவுரை நிகழ்த்துவதற்கெனத் தனி மண்டபங்கள்பல நகரில் இருந்தன. அவை பட்டி மண்டபங்கள் எனப்பட்டன. அரசர் சபைகளில் தமிழ்ப்புலவர்கள் பெரிதும் வரவேற்கப்பட்டனர். அரசன் அவர்களின் வரிசைகளை அறிந்து அவரர்களுக்கு வேண்டுவன நல்கினான்.
   
  பாண்டிய அரசன் ஒருவன், தமிழ் நாட்டில் ஆங்காங்கு வாழ்ந்த தமிழ்ப் பெரும்புலவர்களைத் தனது தலைநகருக்கு அழைத்தான். அவன் தனது ஆதரவின்கீழ் தமிழ்க் கழக மொன்றை நிறுவினான். அக்கழகம் பல பாண்டிய அரசர்கள் காலம் வரையில் நன்கு நடைபெற்றது. சங்கப் புலவர் கூடியிருந்து தமிழ் ஆய்வதற்கெனத் தனி மண்டபம் இருந்தது. அதனகத்தே கன்மாப்பலகையினால் செய்யப்பட்ட பீடங்கல் இடப்பட்டிருந்தன. இப்பீடங்களில் சங்க உறுப்பினர்களாகிய புலவர்களே வீற்றிருந்தார்கள். புதிதாகப் புலமையில் அரங்கேறிய புலவர்களும் அவ்விருக்கை இடப்பட்டது. இது, பிற்காலத்தே சங்கப் பலகை விரிந்து புலவர்களுக்கு இடங்கொடுக்கும் கதையாக மாறிற்று.
  புதிய நூல்களை இயற்றுவோர் தமது நூல்களுடன் பாண்டியனது தலைநகருக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் தமது நூல்களைச் சங்கப் புலவர் முன்னிலையிற் படித்துக்காட்டினர். சங்கப் புலவர்களால் குற்றமற்றன என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நூல்களைச் செய்தோர் சிறந்த புலவர்களாக மதிக்கப்பட்டனர். முற்காலத்தில் கல்வி அறிவாற் சிறந்தவன் என மக்கள்ல் மதிக்கப்படுதலே எல்லாப் புகழ்களிலும் மேலானதாகக் கருதப்பட்டது. "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றேன் எனக்கேட்ட தாய் " என்னும் திருக்குறளும் இதனையே குறிக்கின்றது.
    ஆதியில் சங்கம் பாண்டியரின் தலைநகராகிய தென்மதுரையிற் கூடிற்று. அது இப்பொவுதுள்ள மதுரையன்று. அது கன்னியா குமரிக்குத் தெற்கேயிருந்து கடலாற்கொள்லப்பட்டது. கடல் கோளுக்குப்பின் பாண்டியர் தமது தலைநகரைக் கவாட புரத்துக்கு மாற்றினார்கள். அது திருநெல்வேலி மாகாணத்திலேதாமிரவர்ணி என்னும் பொருநை ஆற்று முகத்திவாரத்திலிருந்தது. அங்கு மறுபடியும் தமிழ்ச்சங்கம் கூட்டப்பட்டது. பின்பு கவாடபுரம் கடலாற் கொள்ளப்பட்டது. அப்பொழுது பாண்டியர் தமது தலை நகரை மணலூருக்கு மாற்றினர். அது திருச்செந்தூருக்குப் பக்கத்தில் இருந்தது. சிலகாலத்தின் பின்னர் பாண்டியர் தமது தலைநகரை வையை ஆற்றுக்கு அருகே இருந்த கடம்பவனத்தில் அமைத்து அதற்கு மதுரை எனப் பெயரிட்டனர். மறுபடியும் தமிழ்ச்சங்கம் இங்குகூடி நீண்டகாலம் நடைபெற்றது. ஆதியில் தொடங்கிய சங்கம் தொடர்ந்து நடவாமல் இடையிடையே நின்று போயிற்றல்லவா? அக்காரனத்தினால் முதல் நடைபெற்ற முதற் சங்கம் என்றும், அதற்குப்பின் நடைபெற்ற சங்கம் இடைச்சங்கம் என்னும், இறுதியில் நடைபெற்ற சங்கம் கடைச்சங்கம் என்னும் பெயர் பெற்றன.

நமது நாடு தொடரும்...

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள்...

No comments: