Saturday, December 19, 2009
Tuesday, December 15, 2009
Saturday, December 12, 2009
சோ.ஞானசேகர்.
Thursday, December 10, 2009
Monday, December 7, 2009
தக்காளி
நன்றி தினத்தந்தி
சோ.ஞானசேகர்
Tuesday, November 17, 2009
படித்தது...
நன்றி....
சோ.ஞானசேகர்.
Friday, November 13, 2009
Tuesday, November 10, 2009
Monday, November 9, 2009
Thursday, October 15, 2009
Thursday, October 8, 2009
மனம் மகிழ்ச்சி
சோ.ஞானசேகர்..
Thursday, October 1, 2009
Tuesday, September 22, 2009
Wednesday, September 9, 2009
"நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும், ஒற்றுமையோடு பாடுபடுவதிலுந்தான் நமது முன்ன்ற்றம் இதுக்கிறது."
1933-சதி வழக்கில் காமராஜ் சிறைக்கனுப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.
"அப்பாவியான ஏழை மக்களை வடதி படைத்தவர்களும், கல்மனம் படைத்தவர்களுந் கசக்கிப் பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது அவசியம்."
1953-இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தார்.
"நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும் இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாகச் சொல்ல முடியாது."
1961-அக்டோபர் 9- சென்னை மநாகராட்சி உருவாக்கிய காமராஜ் திருஉருவச் சிலையைப் பிரதமர் நேரு திறந்துவைத்தார்.
"பெணகள் விழிப்பு அடைந்தால், குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும்."
1971-பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி. நாடளுமன்ற உறுப்பினராகத் காமராஜ் தேர்வு.
" நினைவில் காமராஜ்"
சோ.ஞானசேகர்.
Saturday, August 15, 2009
வசந்தகாலம் வந்துவிட்டால் பறவைகள் நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் வந்து முட்டையிட்டு, குஞ்சு பொரித்து அந்தக் குஞ்சுகளுடன் தாய்நாடு திரும்பும், இப்படி வந்து போகிற பறவைகளை நம் நாட்டில் நிறைய சரணாலயத்தில் பார்த்து இருக்கிறேம் கேள்விப்பட்டிருக்கிறேம்.இது இல்லாமல் வண்ணத்துப் பூச்சிகளும் நீண்டதுரம் 4ஆயிரத்து 300 மைல் துரம் பயணிப்பாதாக கேள்விப்பட்டிருக்கிறேம். இதெல்லாம் இல்லாமல் நம்ம ஊரில் மழை காலம் முடிந்தவுடன் ஒரு பூச்சி இணம் பறக்கும் அதுதான் 'தட்டான் பூச்சி' (தும்பினும்) சொல்வார்கள். இதுவும் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கிறது 12 ஆயிரம் மைல்கள் பயணம் செய்கிறது நம் தமிழ் நாட்டு தட்டான்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட்டு மாதம் தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டு அக்டோபர் ம்தம் மாலத்தீவை அடைகிறது. பின்னர் அங்கிருந்து நவம்பரில் செகேல்ஸ் தீவை அடைகிறது. டிசம்பரில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொசம்பிக் நகரை அடைகிறது. அங்கு இருந்து ஏப்ரல் மாதம் மாலத்தீவு வழியாக மீண்டும் இந்தியா திரும்புகிறது. இதில் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவெனில் அவை ஒவ்வொரு இடத்திலும் சில நாட்களே தங்குகின்றன. இடையே 600 மிதல் 800 கிலோமீட்டர் தூரம் கடலை கடக்கின்றன. இவை 3 ஆயிரத்து 200 அடி உடரத்தில் பறக்கின்றன. தாழ்வாக பறந்தால் காற்றிந் வேகம் தட்டாந்களை தள்ளிவிட்டு திசை மாற்றிவிடக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் சுவராசியமான விசயம் என்னவென்றால் இப்படி நீண்டதூரம் கண்டம் விட்டு கண்டம் செல்வதற்கு அவற்றின் அத்தியாவசிய தேவையான சுத்தமான தண்ணிர் கிடைக்காததுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நாம் சின்னவயதில் சாதரனமாக நினைத்து அடித்து துன்புறுத்திய ஒரு தட்டானுக்கு இப்படி ஒரு திறமை..
நன்றி தினத்தந்தி இளைஞர் மலர்....
சோ.ஞானசேகர்..
Tuesday, August 4, 2009
ஈரமில்லாத ஈரானிய ராணுவம்
ஈரானில் 'லாயல் மிலிஷியா' என்றொரு ராணுவப் பிரிவு இருக்கிறது. 1979 இல் மக்கள் ராணுவமாக அயதுல்லா கொமினியால் தொடங்கப்பட்ட இந்தப் பிரிவு ஈரானின் பிரதான ராணுவத்தின் கீழ் செயல்படுகிறது. கொமினிக்குப் பிறகு அவரது இடத்திற்க்கு வந்த காமெனிக்கு இப்போது இந்த லாயல் மிலிஷியா ரெம்பவும் விசுவாசமாக இருக்கிறது.
இந்த ராணுவப் பிரிவினருக்குத் தரப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று என்ன தெரியுமா?
குற்றம் செய்ததாக மரண தண்டனை விதிக்கப்படும் ஈரானிய இளம் பென்களை 'தற்காலிகமாக' திருமணம் செய்து கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தினத்திறக்கு முதல் நாள் இரவு அவர்களை கற்பழிக்க வேண்டும்.
ஏன் இந்தக் கொடுமை?
ஈரானில் 'கன்னி கழியாத' பெண்களை மரண தண்டனைக்கு உட்படுத்துவது சட்டத்தை மீறியதாகக் கருதப்படுகிறது. அவர்களுக்கு மரண தண்டனை தரலாம். ஆனால் நிறை வேற்றப்படும்போது அவர்கள் கன்னிகளாக இருக்ககூடாது.
விசுவாச ரானுவப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தந்த வாக்கு மூலம் இது: 'ஐயோ ரெம்பக் கொடுமை இது. நாளை காலை மரண தண்டனை என்றால் இன்று இரவு தடண்டனை பெற்ற பெண்ணை நான் தற்காலிகமாக மணந்து கொண்டு கற்பழிக்க வேண்டும். அப்படி என் கடமையைச் செய்யும்போது அந்த இளம் பெண்களின் கதறல் கேட்டு நான் நொறுங்கிப் போகிறேன். பல பெண்கள் 'அது' முடிந்ததும் தன் நகங்களால் உடல் முழுவதும் கீறிக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன். மருநாள் மரண தண்டனையை எதிர்கொள்ளும்போது முகத்தில் அவர்கள் எந்த எக்ஸிபிரஷனும் இல்லாமல் நிற்பது இன்னும் சோகம்.
மரண தண்டனை கூட அவர்களுக்கு பயமில்லை. அதற்க்கு முதல் நாள் நடக்கும் கொடுமைதான் அவர்களுக்குப் பயம்.
இப்படியும் நடக்கிறது உலகத்தில் இந்த 20ஆம் நூற்றாண்டில்.
(நன்றி தினமணி கதிர் அக்கரைச் சீமை ராணிமைந்தன்).
சோ.ஞானசேகர்.
Tuesday, July 21, 2009
சோ.ஞானசேகர்.
Tuesday, July 7, 2009
நாம் இப்பொழுது காலை மாலை பேப்பரை கையில் எடுத்தால் அதிகமாக செய்தி வருவது கொலை, கொள்ளை, திருட்டு, சங்கிலி பறிப்பு. கொலை செய்பவர் பணத்துக்காகவோ முன்பகையோ காரனமாக இருக்கும். இரண்டாவதாக கொள்ளை இது ஒரு கூட்டம் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளை அடிப்பார்கள். திருட்டு இது தனிநபர் அல்லது 2,3 பேர் சேர்ந்து செய்வார்கள். இவர்கள் எல்லாம் இதுதான் அவர்கள் தொழில்.ஆனால் இந்தசங்கிலி பறிப்பு வழக்கமாக ஒரு கூட்டம் செய்து கொண்டு இருந்தது ஆனால் இப்பொழுது இந்தமாதிரி சங்கிலி பறிக்கும் நபர்கள யார் அறியும் போது மனது மிகவும் வேதனையாக உள்ளது.யார் என்று நினைக்கிறேங்க படித்த இளைஞர்கள், வேலையில் உள்ள, வேலை இல்லாத இளைஞர்கள், கல்லுரி மாணவர்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். அதிர்சியா இருக்குல வேதனையாக இருக்கிறது.இதற்கெளளாம் காரனம் என்ன கூடபலகுற நன்பர்கள் வட்டம்தான். நன்பர்கள் தாராளமாக பணம் செலலு செய்கிறார்கள் நம்மிடம் அவ்வளவு பணம் கிடைக்கவில்லை பெற்றேர்கள் சொஞ்சம் பணம்தான் கொடுக்கிறார்கள் அவர்களுக்கு இணையாக செலவு செய்ய முடியவில்லை அதனால் இந்த வழியை ஆரம்பித்து விடுகிறார்கள்.இது தவருனு தெரிவதில்லை பிடிபட்டவுடன்தான் இதன் பின் விலைவு தெரிய ஆரம்பிக்கிறது.இளைஞர்கலே சொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இதனால் உங்கள் எதிர்காலம் மட்டும் அல்ல உங்கள் பெற்றோர், சகோதரியின் வாழ்க்கை, சகோதரின் எதிர்காலமும்தான்சிந்தியுங்கள் கெட்ட சகவாசத்தை விட்டுவிடுங்கள். உங்கள் தாய், தந்தை வருமாணத்தை மனதில் வைத்து படித்து நல்ல வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரவும்.
சோ.ஞானசேகர்
Saturday, July 4, 2009
இரயில் பயணம் மூண்று வகை முதல் வகுப்பு பயணம், இரண்டாம் வகுப்பு பயணம், பொதுவகுப்பு பயணம். (முன்பு மூன்றாம் வகுப்பு) முதல் வகுப்பு பயணம் இதில் ஏசி கோச், ஏசி இல்லாத கோச்.
ஏசி கோச்சில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் பிஸ்னஸ் மேன், அரசியல் வாதி, ( பயணம் செய்பவர்) நம் பணம் கம்பனி ஆபிசர் இவரும்
ஓசி கிரக்கி தெழிழாலர் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை இவர்கள்தான் முதல் வகுப்பு பயணம் இதில் ஏசி கோச்சில் பயணம் செய்பவர்கள். இப்போது நிலமை சொஞ்சம் மாரி வருகிறது சாமானியனும் முதல் வகுப்பு ஏசியில் பயணம் செய்யும் நிலமை வந்துள்ளது.
முக்கியமாக இரயில் பயணத்தின் போது யார் எதைக் கொடுத்தாலும் காபி, டீ, குளிர்பாணங்கள், பிஸ்கட், தண்ணீர், சாப்பிடும் பொருள்கள் எதையும் சாப்பிட வேண்டாம்.
சகபயணிகலிடம் சுகுகமான உறவு வைப்பது நன்று. அதிகம் வேண்டாம். உங்கள் விலாசம், போன் நம்பர், செல் நம்பர் எதைடும் கொடுக்க வேண்டாம். உரவினர், நண்பர்கள் போன் நம்பரை உறக்கசொல்ல வேண்டாம். நன்றி...சோ.ஞானசேகர்..
Monday, June 22, 2009
கடந்த இரண்டு ஆண்டுகலாக நமது செண்ரல் ரயில் நிலையத்தில் வரும் பயனிகலை கவனித்தால் தினமும் வெளிமாநில இளைஞர்கள் என்னிக்கை அதிகமாக உள்ளது.
இவர்கள் பீகார், ஒரிசா, அசாம், மணிப்பூர், திரிபுரா, நகலாந்து இப்படி வடமாநில மக்கள் இவர்கள் எதற்க்கு வருகிறார்கள் என்றால் வேலை தேடி அவர்களின் ஊரில் வேலை கிடையாது. வேலை கிடைத்தாலும் வேலைக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இவர்கள் எப்படி இங்கு முதலில் ஒருவர் வருகிறார் அவர் மூலம் அடுத்தவர் வருகிறார் இப்படியாக குறைந்த காலத்தில் பல்லாயிரக்கனக்கானவர்கள் வந்தவன்னம் உள்ளார்கள்.
ஓட்டல், கடைகள், ஜவுளிக்கடை, வர்ததக நிருவனங்கள், கட்டட வேலைகள் என்று எல்லா வேலைகலையும் செய்கிறார்கள் குறைந்த கூலிக்கு அதிகநேரம் வேலை இதைத்தான் வேலை கொடுக்கும் நிருவனர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதில் மட்டும் மல்ல அம்பத்தூர் போன்ற தொழிற்சாலைகளிலும் இவர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.
ஓட்டல், வர்த்தகநிருவனர்கள், மற்றும் கம்பனிகளின் முதலாலிகள் சொல்கிறார்கள் நம்வர்கள் அதிகநேரம் வேலை, செய்வதில்லை, கூலி அதிகமாகக் கேக்கிறார்கள், சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை கூருகிறார்கள்தமிழ்நாட்டு இளைஞர்களே விழித்திருங்கள் வடமாநில ஆட்கள் எல்லா நிருவனங்களிலும் வேலையை அவர்கள் செய்தால் எதிர் காலத்தில் உங்களுக்கு வேலை கிடைப்பகாது நாம் நமது தாய் மாநிலத்தில் தமிழர்களின் என்னிக்கை குறைந்து வேறு மாநிலத்தின் மக்கள் தொகை அதிகமாகி நாம் அன்னியராக இருப்போம். விழிப்போடு இரு.. விழிப்போடு இரு.. விழிப்போடு இரு..
சோ.ஞானசேகர்
Saturday, June 13, 2009
சோ.ஞானசேகர்.
Saturday, June 6, 2009
ஒருநாள் கூத்துக்கு மீசையை எடுத்த கதை போல்
பயணிகளிடம் சோதனை தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து ரயில் பயணிகளிடம் பரிசோதனை என்ற பெயரில் போலிசார் நடத்தும் கூத்து இருக்கே இதை சொல்லி மாலாது. ஒரு அசம்பாவிதம் நடந்தாலோ, நடத்ப்படலாம் என எச்சரித்தாலோ உடனே மெட்டல் டிடக்டர், ஸ்கேன் என்று தடபுடல் பன்னுவாங்க பாருங்க அனுபவித்தாள்தான் தெரியும்.
பயணிகள் பைகள், பேக், பிரிப்கேஸ் எல்லாத்தையும் அக்குவேர் ஆணிவேராக பிரிச்சு போட்டு. வீட்டில் இருந்து துணிகளை நன்கு தேய்த்து எடுத்து வச்சது இப்படி ஆனால் எப்படி இருக்கும் பயணிகளிடம் நாகரிகமாக நடக்கவும். இதில் சில பயணிகளின் உடமைகள் கானாமல் போய்விடுகிறது. பயணிகள் உள்ளே செல்லும் வழியில்தான் காவல் துறை சோதனை செய்கிரார்கள்.ஆனால் இரயில், பஸ் நிலையங்களில் நிறைய ஓட்டை வழிகள் உள்ளது அங்கு எந்த கண்கானிப்பும் கிடையாது. எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது கிடையாது. அந்தந்த நேரத்துக்கு தான் நடவடிக்கை எடுக்கிறார்கள்.தினமும் சோதனை செய்தாள் பயணிகள் அதற்க்கு தயாராக வருவார்கள் முன்கூட்டியே வந்து விடுவார்கள். காவல் துறைக்கும் சோதனை செய்வது எளிமையாக இருக்கும். தவரு செய்ய வருபவனும் பயப்படுவான்.அதனால் ஒருநாள் கூத்துக்கு மீசையை எடுத்த கதை போல் இல்லாமல் தினமும் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.
சோ.ஞானசேகர்.
Thursday, June 4, 2009
அரக்கர் கூட்டத்தில் ஒரு மனிதர்
முகாம்களில் வாழும் அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களில் விளக்க முடியாது: சிறிலங்காவின் தலைமை நீதிபதி கவலை
முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களை சொற்களில் விளக்க முடியாது என்று சிறிலங்காவின் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா என் உணர்வுகளை என்னால் அவர்களிடம் வெளிப்படுத்த முடியவில்லை. அவர்களின் துன்பங்களைக் கண்டு நாங்களும் அழுகிறோம் என்பதை அவர்களிடம் என்னால் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு நிவாரண உதவிகளை நாம் போதிய அளவுக்கு வழங்க வேண்டும். அதைச் செய்யத் தவறினால் நாம் பழிக்கு ஆளாவோம்.
இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்க முடியாது. அந்த மக்களின் துன்பங்கள் இந்த நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படவில்லை.
இடம்பெயர்ந்த மக்களின் நலனில் இந்த நாட்டின் சட்டம் எந்த அக்கறையும் காட்டவில்லை. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவ்வாறு சொல்வதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா குறிப்பிட்டார்.
புதினம் காம் வெளியானதின் சுருக்கம்.
நன்றி புதினம் காம்...
சோ.ஞானசேகர்.
Tuesday, June 2, 2009
ஈழத்தின் தீயூழ்!
மாவீரன் பிரபாகரன் மாண்டான் என்னும் செய்தி தொலைக்காட்சிப் பெட்டிகளைத் துளைத்துக்கொண்டு வெளிப்பட்டபோது, அடிவயிற்றை முறுக்கிக் கொண்டு, இனம் புரியாத பீதி யாவரையும் ஆட்கொண்டது. தமிழ்நாடு இழவு வீடாக மாறியது! 'ஈழம் எங்கள் தாகம்' என்று போர் முரசு கொட்டியவன், தன்னுடைய தாய் நாட்டு விடுதலைக்காகப் பதினெட்டு வயதில் களம் புகுந்தவன், களத்திலேயே செயல்பட்டு, களத்திலேயே உண்டு, களத்திலேயே உறங்கி, சிங்களக் காடையர்களுக்கு முப்பதுதாண்டு காலம் சிம்மசொப்பனமாக விளங்கியவன், களத்திலேயே நீடு துயில் கொண்டுவிட்டான் என்று சிங்களச் செய்திகள் சொல்லுகின்றன! ஒரு புறநானூற்றுத் தாய் சொன்னாள்: ''அவனை ஈன்ற வயிறு இதுதான்; அதன்பிறகு அவனை நான் எங்கே அறிந்தேன்! பகைவர்களின் கருவறுக்கப் போர்க் களங்களில் தென்படுவான்! அங்கே போய்ப் பாருங்கள்!'' ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி ஒரு மகனை ஈழத் தாய் ஒருத்தி அந்த மன்னின் விடுதலைக்காகச் சுமந்தாள்! இலங்கை மக்கள் ஒரேநாட்டின் மக்கள் என்று முழங்குகிறாரே ராஜபட்ச! சிங்கள ராணுவக் குண்டு வீச்சுக்கு அஞ்சி ஈழ மக்கள் ஊர்களைக் காலி செய்து கொண்டு போன பிறகு, அந்தப் பகுதியிலே கூட அன்று அந்தத் தமிழர்களின் வீடுகளிலேயே சிங்களவர்களைக் கொண்டு வந்து ராணுவப்பாதுகாப்போடு குடியேற்றுகிறாரே ஏன்? வஞ்சகம்தானே! தமிழினத்தை முற்றாக அழித்து, அந்தப் பகுதிகளையும் சிங்களப் பகுதிகளாக்கும் அவருடைய வஞ்சகச் செயலை அறிந்தும், மன்மோகன்சிங் - கருணாநிதி கூட்டணி அரசு அவருக்கு வகைதொகை இல்லாமல் போர்க் கருவிகளை வழங்கியதே! போரால் அவருடைய கருவூலம் வறண்டு விட்டது என்று வகை தொகை இல்லாமல் கடன் கொடுத்து உதவியதே! வாலி வலிமையானவன்; நேரியவன்; பெருந்தன்மையானவன்; ஆனால் தன்னால் வாலில் கட்டி அடிக்கப்பட்ட ராவணன் தன்னுடைய நட்புக்காக இறைஞ்சுகிறான் என்று இரங்கி, தீயவனோடு நட்புப் பூண்டான். ராவணனின் நட்பால் வாலிக்கு எந்தப்பயனுமில்லை. ஆனால், சிற்றினச் சேர்க்கை காரணமாக ராமனின் அம்புக்கு இரையாக நேரிடவில்லையா? ராவணவதம் நிகழ்வதற்க்கு வாலி வதம் நிகழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லையா வலிமையான நாடு இந்தியா! பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்களைக் கொன்று மாபாதகம் புரிகின்ற ராஜபட்சவுடன் சேராத கூட்டு ஏன் சேர வேண்டும்? அந்த நீச ஆட்சிக்கு ஆயுதங்கள் ஏன் வழங்க வேண்டும்? இந்த நீச நட்பால் இந்தியா மானக்கேடடைந்தைத் தவிர பெற்ற பயன் என்ன நடந்து முடிந்த தமிழினப் பேரழிவு குறித்துச் சிங்களக் காடையர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். தமிழினத்தைச் சின்னா பின்னாப்படுத்தி விட்டதாகக் குதூகலிக்குறார் ராஜபட்ச! மண்டியிட்டு மண்ணை மித்தமிடுகிறார்! அந்தக்குறியீட்டின் மூலம் அவர் சிங்கள இனத்திற்க்குச் சொல்லும் செய்தி இந்த மண்ணை உங்களுக்கு மட்டுமே உரித்தாக்கிவிட்டேன் என்பதுதானே! சிறுபான்மை, பெரும்பான்மை என்பதெல்லாம் கிடையாது ஒருபான்மைதான் உண்டு என்று வெற்றிக்குப்பிந்தைய பாராளுமன்றத்தில் விளம்பி இருக்கிறார் ராஜபட்ச! அதனுடைய பொருள் இதுவரை இருந்து வந்த, இடையில் கேள்விக்குள்ளான, ஒற்றையாட்சி முறையை மீண்டும் உறுதிப்படுத்தி விட்டேன் என்பதுதானே! ஈழப்பிரிவினைக்குக் கூட பாரளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, முடித்தால் நிறைவேற்றிக்கொள் என்பது ராஜபட்சவின் அறை கூவல்! அப்படி முடியாதென்றால் ''ஜனநாயகத்தில் நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று சமதானமாகப் போய்விட வேண்டும் என்பது ராஜபட்சவின் அறிவுரை! அதை விட்டுவிட்டு உரிமை பற்றி போராடினால் சிங்கள ராணுவம் சுட்டுப்பொசுக்கும்; அதற்க்குச் சுடத் தெரியவில்லை என்றால் இந்தியாவைத் துணைக்கழைத்துக் கொள்ளும் என்பது ராஜபட்சவின் எச்சரிக்கை. இலங்கையை ஆண்ட அத்தனை சிங்கள அதிபர்களும் தங்கள் தங்கள் பங்குக்குத் தமிழின அழிப்பு வேலையை மேற்கொண்டவர்கள்தான்! ஆனால் கடைசியாக ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் அந்தப்பகுதி சிக்கிக் கொண்டதுதான் பேரவலம்! இந்தியா அந்தக் கசாப்புக் கடைக்காரருக்கு வெட்டுக்கத்தி கொடுத்து உதவியது அதை விடக் கொடுமை! அந்த வெட்டுக்கத்தியைக் கொடுக்கவிடாமல் தடுத்து, ஆடுகளைக் காக்கும் அதிகார பீடத்தில் கருணாநிதியைத் தமிழ் மக்கள் கீழேயும் மேலேயும் ஏற்றி வைத்திருந்தும், இருவரும் சேர்ந்து கொண்டு ஐயோ! ஆடுகள் வெட்டப்படுகின்றனவே! என்று நீலிக் கண்ணீர் வடித்துக் குரலெடுத்து ஒப்பாரி வைத்து, வஞ்சகத்திலெல்லாம் வஞ்சகம்! ஈழத்தமினத்திற்க்கு எதிராக நினைக்கவே நெஞ்சு நடுங்குங்கும் கொடுஞ்செயல்கள் ஜெயவர்த்தன காலத்திலேயே தெடங்கி விட்டன! ஆனால் அவருடைய கழுத்தை அப்போதைக்கப்போது பிடித்துக் கட்டுக்குள் வைக்க இந்திரா காந்தி போன்ற வீராங்கனைகளும், எ.ம்.ஜி.ஆர். போன்ற பொன்மனச் செம்மல்களும் ஆட்சிகளில் இருந்தார்கள்! ஈழப் போரளிகளை ரானுவரீதியாக வளர்த்தவர்கல் அவர்கல்தான்! முதல் மூன்று ஈழப் போர்களிலும் மூன்றில் இருபகுதிச் சிங்களவர்கள் மூன்றில் ஒருபகுதித் தமிழர்களிடம் மண்ணைக் கவ்வியதன் விளைவாக தமிழீழம் அறிவிக்கப்படாத விடுதலை பெற்ற நாடாகச் செயல்பட்டது! ஈழத்தில் போராளிகளிடம் தரைப்படை இருந்தது; சிறு கப்பல்களும், விமானங்களும் இருந்தன. ஈழத்தின் 16,000 சதுர கிலோ மீட்டர் பரப்புப் போராளிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அவர்களின் நாடு ஐக்கியநாடுகள் அவையில் உறுப்பினராக இல்லையே தவிர மற்ற எல்லாம் நடந்தேறின.இதற்கிடையே ரணில்விக்கிரமசிங்க வரவேண்டிய இடத்திற்க்கு ராஜபட்ச வருவதுக்குத் தங்களை அறியாமலேயே ஈழப் போராளிகள் உதவி விட்டார்கள்! எத்தனையோ பிழைகள் செய்திருக்கிறார்கள்! யானை படுத்தாலும் குதிரை மட்ட்ம் என்பது போலத்தான் அது! இவர்களின் இடத்தில் டக்ளஸ் தேவானந்தாவையும், இத்தனை லட்சம் தமிழர்கள் அழிவதற்க்குச் சிங்களவர்களுக்கு உளவு சொல்லி, ஈழப்பிழைப்புக்கு பதிலாக ஈனப் பிழைப்பு பிழைத்த கருணாவையும் நினைத்துப் பாருங்கள்! மலத்தை மிதித்துவிட்டது போன்ற அருவருப்பு ஏற்படவில்லையா? ரணிலுக்கு பதிலாக ராஜபட்ச வந்து தமிழின அழிவிற்க்கு முதற்காரணம். சோனியாவின் 'ரப்பர் முத்திரை' என்று புகழ்கொண்ட மன்மோகன்சிங் பிரதமரான காலமும், சொல் வேறாகவும், செயல் வேறாகவும் வாழ்ந்து பழக்கப்பட்ட கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரான காலமும் ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தோடு பொருந்தி அமைந்துவிட்டதை ஈழத்தின் தீ யூழ் எந்றுதான் வள்ளுவமொழியில் சொல்ல வேண்டும்! இவ்வளவு கொடுமைகளுக்கும் ஈழம் கசாப்புகடை ஆனதற்க்கும் ராஜபட்ச முதற்காரணம்! ஆயுதம் வழங்கிய மன்மோகன்சிங் துணைக்காரனம்! மன்மோகன்சிங்கை முடக்குகின்ற அதிகாரம் முற்றாகவாய்த்திருந்தும், அந்த அதிகாரத்தை உரியவழியில் பயன்படுத்தி இந்தியாவின் அயல்விவகாரக் கொள்கையையே மாற்றுவதை விடுத்து, நாளைக்கொரு மனிதச்சங்கிலி, ஒருவேளை தொடங்கி மறுவேலை வரும்வரை உண்ணா நோன்பு என்று பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த கருணாநிதி இன்னெரு துணைக்காரணம்! ராஜபட்ச என்னும் முதற் காரணமும் மன்மோகன்சிங், கருணாநிதி என்னும் துணைக் காரணங்களும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பிணமாவதற்க்கும் நான்காம் விடுதலைப் போர் முடிவுக்கு வரவும் காரணங்களாயின! நான்காம் விடுதலைப் போர் முடிவுற்று விட்டது. அதனுடைய பொருள் ஐந்தாம் விடுதலைப் போர் அடுத்து தொடங்கும் என்பதே! நான்கோடு எண்ணிக்கை முடிந்து விட்டதாக ராஜபட்சவோ, மன்மோகன்சிங்கோ, கருணாநிதியோ, கருணாவோ கருத மாட்டார்கள். நான்கின் வளர்ச்சி ஐந்து என்பதை அவர்கள் அறியாதவர்களில்லை! எந்த விடுதலைப் போராட்டமும் இலக்கை அடையாமல் முற்றுப் பெற்றதாக வரலாறு கிடையாது. ஒருவேளை அந்த ஒற்றைப் பிரபாகரன் இல்லையென்றே ஆகிவிட்டாலும் ஓராயிரம் பிரபாகரன்களை காலம் உடனடியாக உருவாக்கும்! ஈழத்தின் தேவைக்கு ஏற்பக் காலத்தால் வடிவமைக்கப்பட்டவன்தானே பிரபாகரன்! ஈழம்தான் அற்றுப்போய்விட்டதா? உலகின் மூத்த இனம், சிந்து சமவெளி நாகரிகம்கண்ட இனம், தெய்வப்புலமைத் திருவள்ளுவனைப் பெற்ற இனம் நாதியற்றுப்போக இயற்க்கை அனுமதிக்காது! ஒற்றைப் பிரபாகரன் இல்லையென்றே ஆகிவிட்டாலும் ஓராயிரம் பிரபாகரன்களை காலம் உடனடியாக உருவாக்கும்!
நன்றி தினமணி...
தினமணியில் வெளியான பழ.கருப்பையா அவர்களின் கட்டுரை
சோ.ஞானசேகர்