Saturday, December 31, 2011

2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

   வலைப்பதிவு நன்பர்கள் அனைவருக்கும் என்

விலங்குகளின் பற்கள்

  முதுகெலும்புள்ள உயிரினங்களின் பற்கள் அனைத்தும் சிறிய அளவில் கால்சியத்தால் ஆனவை. இவை கெட்டியாக, வெண்மை நிறத்தில் காணப்படும். விலங்குகள் இத்தகைய பற்களைக் கொண்டு உணவை மென்று தின்னுகின்றன. மாமிசம் சாப்பிடும் விலங்குகளுக்கு பற்கள் கூர்மையாக இருக்கும். இவை மாமிசத்தை வேட்டையாடுவதற்காகவும், தங்கள் பாதுகாப்பிற்காகவும் அமைந்திருக்கும். கீழ்தாடை எழும்புகளில் பல் ஈறுகளில் பற்களின் வேர் பதிந்திருக்கும். பல திசுக்கள்ல் ஆன இந்த பற்கள் உறுதியாகவும், கெட்டியாகவும் அமைந்திருக்கும்.
   பாலூட்டிகளின் பற்கள் நீண்ட நாட்களுக்கு உறுதியாக இருக்கும். தொல்உயிரின ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் பற்களை கொண்டு அவை எந்த காலகட்டத்தில் வாழ்ந்துள்ளன என்றும், அவற்றின் உறவுகள் பற்றியும் கன்டறிந்து விடுகி்ன்றனர்.
   விலங்குகளின் உணவுமுறைக்கு ஏற்ப  அவற்றின் பற்கள் பல்வேறு அமைப்புகளில் காணப்படுகின்றன.
  உதாரனமாக கடினமான தாவரங்களை அரைத்து தின்பதற்கு ஏற்றவகையில் தாவர உண்ணிகளுக்கு  உறுதியான பின் கடவாய் பற்கள் அதிகமாக இருக்கும். மாமிச உண்ணிகளுக்கு இறைச்சியை கிழித்து சாப்பிடும் வகையில் கோரப்பற்கள் அதிகமக காணப்படும்.
   பாலூட்டிகளுக்கு 2வரிசைகளில் பற்கள் காணப்படும். குழந்தை பற்கள், பால் பற்கள், ஆரம்ப நிலைபற்கள், வளர்ச்சியடைந்த பற்கள் என்று நான்கு நிலைகளில் காணப்படும். பிறந்து 6 மாதங்களுக்குள் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கத் தொடங்கி விடுகிறது. இந்த நிலையில் சில குழந்தைகளுக்கு ஒன்று அல்லது பல பற்கள் காணப்படும். பின்னர், பால்பற்கள் விழுந்து உறுதியான பற்கள் முளைக்கத் தொடங்கும்.
   சில விலங்குகளுக்கு ஒரு வரிசையில் பற்கள் கைணப்படும். சில விலங்குகளுக்கு பல வரிசைகளில் பற்கள் காணப்படும். சுறா மீனுக்கு 2 வாரங்களுக்கு ஒரு முறை பழைய பற்கள் விழுந்து புதிதாக பற்கள் முளைக்கும்.
   கொறித்துத் தின்னும் விலங்குகளுக்கு பற்கள் உறுதியாக இருக்கும். எலி போன்ற விலங்குகளுக்கு முகத்தின் கீழ்பக்க அமைப்பு பாதுகாப்பு கவசம் போல காணப்படும்.
  தென் அமெரிக்காவில் வாழும் கினியா பிக்ஸ் மற்றும் முயல்களுக்கு பின்கடவாய் பற்களும், கூரிய வெட்டுப்பற்களும் காணப்படும்.

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

Tuesday, December 27, 2011

உருளைக்கிழங்கு சாப்பிட்டா பிரஷர் குறையுமாம்

   உருளைக்கிழங்கு என்று சொன்னாலே நம்மில் பலருக்கு ஞாபகம் வருவது சிப்ஸ். நொறுக்குதீனிகளில் உருளைக்கிழங்கு சிப்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள், இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.
    அதேநேரத்தில் உருளைக்கிழங்கு என்றாலே, 'ஐயோ 'என்று அலறுபவர்களும் உண்டு. கேஸ் டிரபிள், உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சனைகளை நினைத்து உருளைக்கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.
   ஆனால் 'நீங்கள் நினைப்பது தவறு. உருளைக்கிழங்கு ரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திறனுண்டு' என்று ஆய்வாளர்கள் அடித்துச்சொல்கிறார்கள்.
   ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்துகொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை, மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமேரிக்காவைச்சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இதுதொடர்பான ஆய்வை நடத்தியது.
    இந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோவேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிபுள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாதகாலம் இந்த உருளைக்கிழங்கை கொடுத்து வந்தனர்.
   பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது, அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடை அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
   அதெல்லாம் சரி, ரத்தக்கொதிப்பை குறைக்குமளவுக்கு உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?
    பைடோ கெமிக்கல் (Phytochemicals) என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில வேதிப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் உருளைக்கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.
   உருளைக்கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் பேன்றவற்றை அதுக வெப்பத்தில் சமைப்பதால், ரத்த கொதிப்பை குறைக்கவல்ல வேதிப்பொருட்களும், பைடோ கெமிக்கல்ஸ்களும் அழிக்கபட்டுவிடுகின்றன. எனவே, சிப்சில் எஞ்சியிருப்பது உருளைக்கிழங்கின் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தாதுக்கள் மட்டுமே எனறு சிப்ஸ் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் ஜோய் வின்சன்.
   இந்தஆய்வில் பயன்படுத்தப்பட்டது கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு என்பதால், ம்ம்ம்....நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நீங்கள் புலம்பவேண்டாம். ஏனென்றால், வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன்தான் இருக்குமென்று உருதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.
   இனிமேல் பிரஸர் குறைய தைரியமாக உருளைக்கிழங்கு சாப்பிடலாம்   

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.  

Monday, December 26, 2011

     மனிதன் உலகில் தோன்றுவதற்கு முன்பே பூமியில் தோன்றி  வாழ்ந்து வரும் பெருமை பூச்சியினங்களுக்கு உண்டு. இவற்றின் ஆற்றலும், சிந்தனைக்கே எட்டாத பணிகளும் நம்மை வியக்க வைக்கின்றன.
   சமிப காலம் வரை புதிராக இருந்த பூச்சியினங்களின் வாழ்க்கை    விசித்திரங்களை இயற்கை ஆய்வாளர்கள் தமது நுண்ணிறிவைக் கொண்டு, உழைப்பு, துணிவின் மூலம் கண்டு பிடித்திருக்கின்றனர். பூமியின் உண்வையாண "பழங்குடிகள்" பூச்சிகளே.
   பல்வேறு விதமான எதிரிகளை எதிர்த்துப் போராடி பல லட்சம் ஆண்டுகளாகப் பூமியில் நிலைத்து நிற்கும் பூச்சியினம், இயற்கையின் படைப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. பல துறைகளில் மனிதனின் திறனுக்கு அப்பாற்பட்ட அதிசயத் திறனை பூச்சியினம் பெற்றிருக்கிறது.
   பூச்சி இனத்தில் தச்சுத் தொழிலாளர்கள், மண்பாண்ட விற்பனர்கள், நெசவு நெய்பவர், வலைபின்னுபவர், வீரர்கள், பாடகர்கள், அஞ்சா நெஞ்சுறுதி படைத்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள், பொறியியல் வல்லூநர்கள் என்றும் பலர் உள்ளனர் என்றால் ஆச்சரியமாயில்லை?
   மனிதனுக்கு முன்பே கரையான்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளை அமைத்திருக்கின்றனர். குளவிகள் காகிதம், சுண்ணாம்புச் சாந்தும் உற்பத்தி செய்திருக்கின்றன. கம்பளிப் பூச்சிகள் நெசவுத் திறன் வாய்ந்தவையாக உள்ளன. எறும்புகள் தமது கூட்டு முயற்சியால் மண் குன்றுகளில் 'பெருநகர்களை' அமைத்திருக்கின்றன.
   இப்படி பூச்சியினங்களை ஆராயும்போது அவை ஏற்படுத்தும் ஆச்சரியம் விரிந்துகொண்ட் போகிறது.
பூச்சி, பறவை, விலங்குகள் இவைகளிடம் இருந்துதான் மனிதன் தொழிலைக் கற்று இருக்க வேண்டும் இதன் மூலம் அறியப்படுகிறது.

வனவிலங்குகள், பறவைகள்,
பூச்சிகள்  இற்றைக் காத்து இயற்கையை காப்போம்...

Thursday, December 22, 2011

வவ்வால் பறக்கும் ரகசியம்


    குட்டி போட்டு பால் தருவதால், வவ்வாலை பறவை வகைகளில் சேர்க்க முடியாது. வவ்வாலுக்கு கண்கள் உண்டு இருந்தாலும் அதற்கு பார்வைத்திறன் தேவையில்லை. வவ்வால் 'சவுண்டு ரேஞ்சிங்' என்ற முறைப்படி இருளில் மோதிக்கொள்ளாமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப பறந்து செல்கிறது. இதற்கு அல்ட்ரா சவுண்ட் என்ற ஒலி அலைகள் உதவுகின்றன. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் சைக்கிள்கள் (சைக்கிள் என்பது ஒலிகளுக்கான அளவு) வரைதான் ஒலி அலைகளை உணர முடியும்.
   வவ்வாலின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சைக்கிள் அளவில் ஒலி உண்டாகிறது. இந்த சத்தத்தை நம்மால் உணர முடியாது. இவை இந்த சத்தத்தை சின்ன சின்ன துடிப்பலைகளாகத் தான் வெளிப்படுத்தும். வவ்வால்கள் வினாடிக்கு 5 முதல் 60 வரை துடிப்பலைகளை வெளிப்படுத்தும்.
    ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம்தான்.
    17 மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தால், வவ்வால் வெளிப்படுத்தும் அல்ட்டாசவுண்ட் அதைப் போய் அடைந்து திரும்ப ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரமாகும். எனவே வெளிப்படுத்தும் சவுண்டுக்கும், எதிரொலித்து திரும்பும் சவுண்டுக்கும், இடையே உள்ள நேர வித்தியாசத்தை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப சாமர்த்தியமாக பறக்கிறது வவ்வால்.

காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன, பெருமளவில் மனிதகுலத்திற்கு...

காற்று மாசுபடுதல்


     இயற்கையுடன் இணைந்து வாழும்போது நாம் ஆரோக்கியமாக வாழலாம். கடந்த நூற்றாண்டில் ஏராளமான அறிவியல், தொழில் புரட்சி பல நன்மைகளைச் செய்துள்ளது. என்றாலும், சுற்றுப்புறமும், நாம் சுவாசிக்கும் காற்றும் மாசுபடுவதால், பலவிதமான தீமைகள் உண்டாகுகின்றன.
    காற்றில் கலக்கும் ரசாயன கழிவுகள் காற்றை அசுத்தமாக்கி விடுகின்றன. இதற்கு காற்று மாசுபடுதல் என்று பெயர். சமையல் வாயு, மின்சார விளக்குகளின் வெப்பம், வாகனங்களில் இருந்து வெள்வரும் கார்பன்-மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் மாசை உண்டாக்குகிறது.
    தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் சல்பர்-டை-ஆக்சைடு, கார்பன்-மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றில் ஹைட்ரோ கார்பன், புற்றுநோயை உண்டாக்கக் கூ டியது.
    சில ரசாயனங்கள் காற்றில் உள்ள நீர்த் திவலைகளுடன் சேர்ந்து பனி மூட்டத்தை உருவாக்கி விடுகின்றன. இதை சுவாசித்தால், உடனடியாக உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...    

Wednesday, December 21, 2011

கழுதைப்புலி

     கழுதைப்புலி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர்   விலங்காகும். இவ்விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது. இவ்விலங்குகள் ஒரே இடத்தில் வசிக்காதவை திரிந்துகொண்டிருக்கும்.  
   கழுதைப்புலி அசாத்திய திறமை உடைய ஒரு விலங்கு. மோப்பம், சப்தம் ஆகியவற்றை உணர்வதில் கில்லாடி. பார்க் சாதாரனமாக இருந்தாலும் மிகவும் கொடுரமான விலங்கு. விதவிதமா ஊளையிட்டே தன் இன நன்பர்களுக்கு சொல்ல நினைக்கும் சங்கதியைத் தெரிவித்து விடுமாம். இதனுடைய வாலின் அசைவுகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும் அதன் எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ளலாம். வால் நுனி பூமியை நோக்கி இருந்தால், சாதரனமாக இருக்கிறது என்று அர்த்தம். சிலிர்த்துக்கொண்டு நிமிர்ந்து  இருந்தால் எதற்கும் தயாராகிவிட்டது என்று அர்த்தம். வால் வில்லாய் வளைந்து முதுகைத் தொட்டுக் கொண்டு இருந்தால், 'ஜாலியாக' உள்ளது என்று அர்த்தம். வாலைச்சுருட்டி பின்னங்கால்களுக்கு இடையியே இடுக்கி வைத்துக்கொண்டு இருந்தால், எதையோ பார்த்து பயந்து போய் ஓடுகிறது என்று அர்த்தம்.
   கழுதைப் புலிகள் உற்சாகமான நேரங்களில், காடு அதிர சப்த மாக பாடுமாம். கழுதைப்புலிகள் வேட்டையாட நினைக்கும் விலங்கை கூட்டம் போட்டுத்தான் தேர்ந்தெடுக்குமாம். கழுதைப்புலிகளின் எண்ணிக்கை அதிகமமாக இருந்தால், இன்று பெரிய வேட்டை நடக்கப்போகிறது என்று அர்த்தம். அந்தி சாயிம் நேரத்தில் தான் கழுதைப்புலிகள் கொலைவெறியுடன் வேட்டையாடச் செல்லும். எந்த வகை விலங்கை தேர்ந்தெடுத்தாலும் எந்த விலங்கு பலவீனமாக உள்ளது என்று கண்டுபிடித்து அதை தொடர்ந்து சென்று வேட்டையாடுமாம். எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் கூட்டமாக சேர்ந்து தாக்கும்.
   கழுதைப்புலி வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். பெண் கழுதைப்புலிகள் 2-3 வருடங்களில் பருவமடைந்து இனப்பெருக்கத்திற்கு தயராகும். இதன் பேறுகாலம் 88 முதல் 92 நாட்களாகும். தாய் கழுதைப்புலி குட்டிகளை பெரும்பாலும் குகைகளில் ஈன்றெடுக்கும். பொதுவாக 1 முதல் 5 குட்டிகள் வரை ஈனும். குட்டிகள் பிறந்த 30 நாட்களுக்குப் பிறகு மாமிச உணவை உட்கொள்ள ஆரம்பிக்கும்.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

Thursday, November 10, 2011

எங்கள் வீட்டுத் தோட்டம்













வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் நல்ல காற்றை சுவாசிப்போம்....

''வானத்தின் மழைத்துளி வையத்தின் உயிர்த்துளி''
''மழை நீரை சேகரிப்போம்'
'

2015-க்குள் ஆர்க்டிக் கடல் ஐஸ்கட்டி முழுவதும் உருகிவிடும்

   2015-க்குள் ஆர்க்டிக் கடலில் உள்ள ஐஸ்கட்டி முழுவதும் உருகி தண்ணீராக மாறிவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானி பீட்டர் வதம்ஸ் தெரிவித்துள்ளார்.
   அவ்வாறு ஐஸ் கட்டி முழுவதும் உருகிவிட்டால் அங்கு வாழும் துருவக் கரடி உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கடல் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ் பூமியின் வடதுருவத்தில் உள்ள ஆர்க்டிக் கடல் குறித்து கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தார். அவரது ஆய்வில் அந்தக் கடலின் ஐஸ் கட்டிகள் முழுவதும் விரைந்து உருகி வருவது தெரியவந்துள்ளது.
   ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் உருகி வருவதற்கு சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருவதே காரணம். சமீபகாலமாக ஐஸ் கட்டி விரைந்து உருகுவது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
   ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் முழுவதும் 2030-க்குள் உருகும் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கமிட்டி ஏற்கெனவே அறிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்த பல்வேறு ஆய்வாளர்களும் ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் முழுவதும் உருகுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
   ஆனால் பிரிட்டிஷ் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ், ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் 2030-வரை இருக்காது. அவை நிச்சயம் 2015-க்குள் உருகிவிடும் என்று கூறியுள்ளார்.

நண்றி தினமணி நாளிதழ்...

''வானத்தின் மழைத்துளி வையத்தின் உயிர்த்துளி''
''மழை நீரை சேகரிப்போம்''

Friday, November 4, 2011

மறுசுழற்சி (Recycle)

இன்று உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்று,  அதிகரிக்கும் கழிவுகள். பெருகிவரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வீடுகளில் இருந்து தேவையற்றது என்று தூக்கிப் போடப்படும் குப்பைகூளங்கள் போன்றவற்றை ஒழிப்பது, முற்றுப் பெறாத பிரச்சினை.
   சில கழிவுகள் வேறொரு தொழிலுக்கு கச்சாப்பொருளாகப் பயன்படுகின்றன. உதரணமாக, கரும்புச் சக்கையில் இருந்து காகிதம் தயாரிக்க முடிகிறது. சில கழிவுகள் எரி பொருளாகப் பயன்படுகிறன்றன.
   சில கழிவுப்பொருட்கள், அவை வெளிவரும் தொழிற்சாலையிலேயே
மறுசுழற்சி முறையில் மீண்டும் உள்ளே அணுப்பப்பட்டு உபயோகப்படுத்தப்படுகின்றன. அல்லது அடர்த்தி, வீரியம், திடம் போன்றவை குறைக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகின்றன. பயிர்களுக்கு  உரமாக்கப்படுகின்றன.
   இன்று வீடுகளில் பயன்படுத்துவதற்கு, தூக்கியெறிந்து விடக்கூடிய பேப்பர் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் தட்டு, கிண்ணம், டின்னில் அடைக்கப்பட்ட உணவு என்று வருகின்றன. குப்பைத் தொட்டியில் போடப்படும் இவற்றை மீண்டும் உபயோகத்துக்கு உரிய வேறு  பொருட்களாக்க முடியுமா?
   முதலில் காகிதக் குப்பைக் கூளங்களைப் பார்ப்போம். செய்தித்தாள், குப்பைக் கூளங்கள் போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து, மேலும் பல ரசாயனங்களைக் கலந்து கூழாக்கி, அந்தக் கூழை உபயோகித்து மலிவைன காகிதம், அட்டைப் பெட்டிகள், காகிதப் பொம்மைகள், தட்டு, உறிஞ்சு குழாய்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
   செய்தித்தாள் முதலில் அலசப்படும். பிறகு அச்சு மையை பிளிச் செய்வார்கள். அதன் பிறகு அட்டை போன்றவற்றைத் தயாரிப்பார்கள். ஆனால் இது செலவு அதிகமாக ஆகும் முறையாகக் கருதப்படுகிறது. ஆனால் காகிதம் சிறந்த எரிபொருள். அந்த வகையிலும் வீணான காகிதம் பயன்படுத்தப்படுகிறது.
  உலோகங்கள் மறுசுழற்சி செய்வது, தகரம், இரும்பு ஆகியவை தூக்கியெரியப்பட்ட பொருளாக அதிக அளவில் கிடைக்கின்றன.    இவ்வாறு திரளும் பழைய இரும்பு பொருட்களை மின் அடுப்பில்  உறுக்குகிறார்கள். ஆக்சிஜன் அதில் ஊதப்பட்டு, இரும்பு ஆக்சைடு  கிடைக்கிறது. இதில் கரித்துண்டுகள் சேர்க்கப்பட்டு ஆக்சிஜன்  நீக்கம் நடைபெறுகிறது.     இவ்வாறு செய்யப்படும்போது கார்பன் மோனாக்சைடு குமிழிடுகிறது.  இம்முறையில் இளக்கப்பட்ட இரும்பு, தேவைக்கேற்ற வடிவங்களில்   வார்க்கப்பட்டோ, வளைக்கப்பட்டோ இரும்பு பொருளாகிறது.
       உலோகங்களின் பண்புகள் அவற்றின் மறுசுழற்சி தனித்த நன்மைகளை அளிக்கின்றன. காகிதம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மற்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள், போலன்றி, உலோகங்கள் மீண்டும் மீண்டும் கழிவு இல்லாமல் மறுசுழற்சி செய்ய முடியும். இரண்டாம் மூலங்களிலிருந்து மறுசுழற்சி உலோகங்கள் முதன்மையான மூலங்களில் இருந்து தயாரிக்கும் உலோகங்கள் போலவே உள்ளன. பண்டைய காலத்தில் இருந்தே ஸ்கிராப் உலோக மறுசுழற்சி செய்யப்பட்டிருக்கிறது
     ஸ்கிராப் உலோக மறுசுழற்சி முக்கிய பிரிவுகள் சில
     * முன்னணி / ஆசிட் பேட்டரி மறுசுழற்சி
     * நிக்கல் உள்ளடக்கம் பேட்டரி மறுசுழற்சி
     * மின்னணு ஸ்கிராப் மறுசுழற்சி
     * பயன்படுத்திய அயர்ன் & ஸ்டீல் மறுசுழற்சி
     * ஸ்கிராப் எஃகு மற்றும் இரும்பு மறுசுழற்சி
     * மில் தயாராக ஸ்டீல் ஸ்கிராப் மறுசுழற்சி
     பிரேக்கிங் * ரெயில் ஸ்கிராப் & கப்பல்
     * காப்பர் ஸ்கிராப் மறுசுழற்சி
     * வெண்கல மற்றும் பிராஸ் ஸ்கிராப் மறுசுழற்சி
     * அலுமினியம் ஸ்கிராப் மறுசுழற்சி
     * துத்தநாக ஸ்கிராப் மறுசுழற்சி
     * மெக்னீசியம் ஸ்கிராப் மறுசுழற்சி
     * டின் ஸ்கிராப் மறுசுழற்சி
     * முன்னணி ஸ்கிராப் மறுசுழற்சி
     * துருப்பிடிக்காத ஸ்டீல் உலோகம் ஸ்கிராப் மறுசுழற்சி
     * டைட்டானியம் ஸ்கிராப் மறுசுழற்சி
     * டங்க்ஸ்டன் ஸ்கிராப் மறுசுழற்சி
     * அயல்நாட்டு உலோகங்கள் மறுசுழற்சி ஸ்கிராப்
     * ஸ்கிராப் தங்கம் மீட்பு
     * வெள்ளி மீட்பு
     * ஸ்கிராப் பிளாட்டினம் குழு உலோகங்கள்
     * ஸ்கிராப் கிரியாவூக்கி மாற்றி மறுசுழற்சி
     * கலப்பு விலைமதிப்பற்ற உலோகங்கள் மறுசுழற்சி
வின்னின் மழைத்துளி மன்னின் உயிர்த்துளி

Tuesday, October 25, 2011

தீப ஒளி திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

உலக தமிழ் வலைத் தளம் நன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீப ஒளி திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

Friday, October 14, 2011

அமில மழை


   சாதாரண மழையை நாம் பார்த்திருக்கிறோம் அதில் நனைந்து அதன் குளிர்ச்சியை அனுபவித்திருக்கிறோம். இதில் குறைந்த அமிலத்தன்மையிருக்கும் இது எந்தவகையிலும் நம்மை பாதிக்காது. ஆனால் சிலசமயங்களில் மழை பெய்யும்போது அதில் அமிலத்தன்மை அதிகமா இருக்கும். அந்த மழையை அமிலமாழை என்கிறார்கள்.
   அமில மழை பொழிவதற்கான காரணம் வானத்தில் சூழ்ந்திருக்கும் இயற்கை நிலைமைகள் பொதுவாக அமில மழைக்குக் காரணமாகின்றன. அத்துடன், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகரிக்கின்றன. ஆலை புகை, தொழிற்சாலை புகை, மற்றும் கார் வெளியேற்ற உள்ள சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள்,
அடிக்கடி குமுரும் எரிமலைகளும், காடுகள் தீப்பிடிப்பதால் ஏற்படும் புகையும், மின்னல் மற்றும் திடப்பொருட்களிள் நொதிவு ஆகியவையும் வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தை எதிர்வினையாற்றுகிறது.புகைக்கரி மற்றும் சாம்பல், ஆலங்கட்டி மழை,  பனி, பனிப்புகை மற்றும் குறைந்த அளவு ஓசோன் வறண்ட படிதல்,வானத்தில் வீரிய அமிலத்தன்மையை உண்டாக்குகின்றன.
   தொழிற்சாலைகள் மிகுந்த நாடுகளிலும், மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாகப் பெய்வதாக கண்டறிந்திருக்கிறார்கல்.
   நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்கு குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில்அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
   அமில மழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கட்டிடங்கள், சிலைகள் மற்றும் பாலங்கள் சீர்குலையும். மற்றொரு சிக்கல் இது உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகள், ஆறுகள், மற்றும் நீரோடைகள் பாதித்து உள்ளது.  கடல் பகுதியில் உள்ள மீன்கள் பெருமளவில் உயிரை இழக்கின்றன. அந்தப் பிரதேசங்ளில் உள்ள சின்னஞ்சிறு உயிரினங்களும் அமில மழையால் உயிரிழக்க நேரிடுகிறது.
   சமிப காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அமில மழையால் தாவரங்கள் பாதிக்கப்படுவது கண்டரியப்பட்டுள்ளது.

வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...

Saturday, September 17, 2011

இந்தியக் காடுகள்

     இந்தியாவில் அதன் புவியியல், வரலாறு மற்றும் கலாச்சார, இயற்கை சுற்றுச்சூழல்  பன்முகத்தன்மை ஒரு தனித்துவமான அடையாளத்தை, கொண்டிருக்கிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், மேற்கு தொடர்ச்சி மலைகளில் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பசுமையான வெப்பமண்டல மழைக்காடுகள்  வடக்கே இமயமலை ஆல்பைன் புதர்க்காடுகள் பசுமைமாறா மழை காடுகள், இலையுதிர் பருவ காடுகள், முள் காடுகள், வெப்ப மண்டல காடுகள்,  மிதவெப்ப மண்டல பைன் காடுகளை கொண்டிருக்கிறது.
    இதில் 16 முக்கிய காடுகள் வகைகள் 221 சிறு வகைகளாக பிரித்து, அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. இந்திய காட்டின் வகைகளை பொது அமைப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
   மேற்கத்திய மலைத்தொடர்கள், இது துணை தீபகற்பம் இந்திய அரபிக்கடல் கடலோர; மற்றும் வடக்கு கிழக்கில் அசாம் பகுதியில் இந்திய வெப்பமண்டல காடுகளின் முக்கிய பகுதிகளில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் காணப்படுகின்றன. இந்திய மழைக்காடுகள் சிறிய மீதமுள்ளவைகளாக ஒரிசா மாநில காடுகள் காணப்படுகின்றன. பசுமைமாறா காடுகள் மனித குறுக்கீடால் அரை-பசுமைமாறா காடுகளாக தரம் குறைத்து கொண்டுள்ளன. அரை பசுமையான மழைக்காடுகள் பசுமைமாறா உருவாக்கம் விட விரிவானதாக உள்ளது. மூன்று முக்கிய மழைக்காடுகள் பகுதிகளில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை இரண்டிலும் கணிசமான வேறுபாடுகள் அங்கு உள்ளன.
   இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை காடுகளின் மலைத்தொடர்கள் மேற்கு (கடற்கரை) விளிம்புகளில் மற்றும் கிழக்கு பக்கத்தில் குறைவான மழை அங்கே ஏற்படுகின்றன. இந்தியாவில் காடுகள் பெரிய வணிக முக்கியத்துவத்தை கொண்டுள்ளது தேக்கு இந்திய ரோஸ்வுட்  மலபார் கினோ   பல மர இனங்கள் கொண்டிருக்கின்றன, ஆனால் அவைகள் இப்போது பல பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டு விட்டது. இந்திய மழை காடுகளில் ஒரு மகத்தான மர இனங்கள்  பல அங்கு உள்ளது. மேல் கூரை மரங்கள் குறைந்தது 60 சதவீதம் தனித்தனியாக மொத்த எண்ணிக்கையை விட ஒரு சதவிகிதம் இல்லை. தென் மேற்கு இந்திய பசுமைமாறா காடுகள், அநேக பகுதிகளில் நீரோடைகள் சேர்த்து மோசமாக வடிகட்டிய நிலை ஏற்பட்டுவிட்டது  இந்திய வனப்படுதிகளில.
   வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய வெப்பமண்டல தாவர (அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் மற்றும் அருணாச்சல பிரதேச சமவெளி பகுதிகளில் அடங்கும்) பொதுவாக 900 மீ வரை உயரத்தில் வளரும். அது பசுமையாக மற்றும் அரை பசுமைமாறா மழை காடுகள், ஈரமான இலையுதிர் பருவ காடுகள், ஆற்றங்கரை காடுகள், சதுப்பு மற்றும் புல்வெளிகள் இருக்கிறது. இந்தியாவில் பசுமைமாறா மழை காடுகள் மழை வீழ்ச்சி வருடத்திற்கு 2300 மிமீ தாண்டுகிற அசாம் பள்ளத்தாக்கு, கிழக்கு இமயமலை அடிவாரத்தில் மற்றும் நாகா ஹில்ஸ், மேகாலயா, மிசோராம் கீழ் பகுதிகள், மற்றும் மணிப்பூர் காணப்படுகின்றன. அசாம் பள்ளத்தாக்கில் 50மிமீ 7மிமீ வரை ஏற்படுகின்றன. இந்தியாவில் பருவ மழை காடுகள் இந்த பகுதியில் பரவலாக முக்கியமாக ஈரமான சல் காடுகள், உள்ளன.
   அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வெப்ப மண்டல பசுமைமாறா மழை காடுகள் மற்றும் வெப்ப மண்டல பகுதி பசுமைமாறா மழைக்காடுகள் அத்துடன் வெப்ப மண்டல பருவ ஈரமான பருவ காடுகள்  கொண்டிருக்கின்றன. தீவு தெற்கு பகுதிகளில் சில தீவுகளில் இந்த இந்திய காடுகளில் மேலாதிக்க இனங்கள், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ளன. அந்தமான் மழைக்காலங்களான காடுகள் தெர்மினலியா ஆதிக்கத்தில் உள்ளன.
 
இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...

Saturday, September 10, 2011

அல்பெடராஸ் பறவை

     ஹானலுலூ: காடு மற்றும் கடல் பகுதிகளில் வசிக்கும் பறவையினங்களில் ஒன்றான அல்பெடராஸ், உலகிலேயே மிகவும் வயதான தாய்ப்பறவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க பறவை 60 வயதிலும்  முட்டை போடுகிறதாம். அமெரிக்காவின் கடல் மற்றும் வனத்துறை ஆராய்ச்சியாளர்கள், ஹானலுலூவின் வடமேற்கு பகுதியில் இருந்து சுமார் 2000 கி.மீ. தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அல்பெட்ராஸ் என்ற பறவையின் முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், அந்த முட்டையை போட்ட தாய்ப்பறவை 60 வயது நிறைந்தது என தெரியவந்துள்ளது.  விஸ்டம் என்று பெயரிடப்பட்ட இந்த அல்பட்ராஸ், 1956&ம் ஆண்டு 5 வயதில் முதல் முட்டை இட்டது என்று அமெரிக்க ஜியலாஜிக்கல் கணக்கெடுப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    அமெரிக்காவின் பறவைகள் பாதுகாப்பு நிறுவனத்தலைவர் மற்றும் பறவை இன ஆர்வலர் ப்ரூஸ் பீட்டர்ஜான் கூறியது: ஆராய்ச்சி குறிப்பேடுகளின்படி ராட்சத பறவை இனமான அல்பட்ராஸ், 90 ஆண்டுகளுக்கு முன்பு  அமெரிக்காவில் அதிக அளவில் வசித்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முட்டைக்கு முன்பு, விஸ்டம் 30 முதல் 35 முட்டைகள் இட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த இனம் அழிந்து வரும் இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அரிய பறவை இனமான அல்பெட்ராஸை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

நன்றி தமிழ் முரசு.....

Friday, September 9, 2011

மூங்கில் காடுகள்


   மூங்கில் காடுகள், சீனா, ஜப்பான் மற்றும் கிழக்கு  தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் காணலாம். ஆனால் அவைகள் கூட வடக்கு ஆஸ்திரேலியா, இந்தியா,  சகாரா ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க வெப்பமண்டல பகுதிகளில் காணலாம். மூங்கில் காடுகள் குறிப்பாக மூங்கில் செடிகள் தங்களை வளர்ச்சி சுழற்சி அடிப்படையில், கடின காடுகள் பெரிதும் மாறுபடுகின்றன.
   மூங்கில் காடுகள் பல நூற்றாண்டுகளாக உணவு மற்றும் கட்டிட பொருட்களுக்கு ஒரு ஆதாரமாக மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மற்றும் அவைகள் இன்றும் அதே நோக்கங்களுக்காக, குறிப்பாக ஆசியாவில், பயன்படுத்தப்படுகின்றன. அவைகளுடைய பொருள் முக்கியத்துவத்தை தவிர, மூங்கில் காடுகள், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் கலாச்சார அடையாளமாக உள்ளன. சீனாவில்,  மூங்கில் தோப்புகளில் புத்த கோயில்கள் இருக்கும். மூங்கில் காடுகள் தீயவைகளை விரட்டுவதற்காக நம்பப்படுகிறது.
  மூங்கில் காடுகள் உருவாக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்றாலும், மூங்கில் காடுகள் மிக வேகமாக வளர்கின்றன மற்றும் முழுமையாக முதிர்ந்த மூங்கில் செடிகள், 3 முதல் 7 ஆண்டுகளுக்குள், உயரம் 20 முதல் 30 அடி வரை வளரும். மூங்கில் அனைத்து ஒரு மரம், ஆனால் அது ஒரு பெரிய புல் ஒரு வகை,  மூங்கில் செடி தான் தளிர்கள் இறந்து பிறகு, அவைகள் விழுந்துவிடும்.  தாவர மூல கணுவில் இருந்து முளைகள் விட்டு வளரும்.
   மூங்கில் மரங்கள் 48 வருடங்களுக்கு ஒரு முறை  பூக்கும்.
இந்த பூவிலிருந்து வரும் மனிகளை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. காட்டில் உள்ள மக்கள் அதை சமைத்து சாப்பிடுகிறார்கள். மூங்கில்கள் பூத்து முடிந்தவுடன் காய்ந்து விடும். இதே போன்று 1980களில் சீனாவில் பசானியா பாங்கியானா (Bashania fangiana) என்ற மூங்கில் இனத்தின் மிகுதியான பூப்பினால் அங்குள்ள பாண்டா (Giant Panda) விலங்குகள் பாதிக்கப்பட்டன. பாண்டாகரடிகள் மூங்கில் இலை அதிகமாக உணனும்.
   மூங்கில் பூக்கும் போது அதி விளையும் நெல் அரிசியை சாப்பிடுவதற்கு அதிகப்படியான எலி வரும். அச்சமயத்தில் அதிகமாக இனப்பெருக்கம் செய்யும், மூங்கில் பூத்து முடிந்தவுடன் அவை உணவைத் தேடி வயல்களில் வந்து விளையும் தானியங்களை அழித்துவிடும். அச்சமயத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்படும்.
   காட்டில் இருக்கும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு மூங்கில். நாம் காட்டி இருக்கும் மூங்கில் மரத்தையெல்லாம் வெட்டி அழிப்பதால் அதற்கு உணவும், மறைவிடமும் கிடைக்காமல் போவதாலும் அதன் வழித்தடங்களை அழித்து விடுவதாலும் யானைகள் மனிதர்கள் வாழ்விடத்தை நோக்கி வருகிது.
    பச்சைத்தங்கம் என்று அழைக்கப்படும் இந்த மூங்கில் உலகில் சுமார் 1400 இனங்களில் இந்தியாவில் 136 இனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பெருவாரை (தட்டை மூங்கில்) மற்றும் சிறுவாரை (கல் மூங்கில்) என இருவகைகள் மட்டுமே காணப்படுகின்றன.
   முள்ளில்லா மூங்கில் ரகங்கள் தமிழ்நாட்டிற்கு ஏற்றதாகவும், லாபகரமான வளர்ச்சியும் கூடியதாகவும் உள்ளதால், அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலிருந்து கொண்டுவந்து இரண்டு ரகங்களாக இவைகள் - கெட்டி மூங்கில், பொந்து மூங்கில் என சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
   வலுவாகவும், நீண்டகாலம் கெடாமலும் இருப்பதால், வீடு கட்டவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும், விவசாயத் தொழில்களுக்கும், மேஜை, நாற்காலிகள், கலைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
    ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் பிராணவாயு அதாவது ஆக்சிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவை 800 கிராம். ஆனால், ஒரு குத்து தருவதோ 850 கிராம். ஒரு மூங்கில் குத்தில் வெளியிடக்கூடிய பிராண வாயு ஒரு மனிதனுக்குப் போதுமானது.
 
 ஆளுக்கொரு மூங்கில் மரம் அல்லது குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மூங்கில் மரம் இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும்!


Tuesday, September 6, 2011

பசுமை இல்ல விளைவு

   சூரியனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதன் மூலம் பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை பெற்றுக்கொள்கிறது. பூமி தான் பெற்றுக்கொண்ட வெப்பத்தின் ஒரு பகுதியை மீண்டும் செந்நிறக்கதிர்களாக விண்வெளியை நோக்கி வீசுகிறது. இவற்றின் ஒரு பகுதி மேகம், நீராவி, கார்பன்-டை-ஆக்சைடு வாயு போன்றவற்றின் மீது படுகிறது. அவை இந்த கதிர்களை வெளியே விட்டுவிடாமல் தன்னகத்தே அடக்கி வைத்து விடுகின்றன. இப்படி தேக்கி வைக்கப்பட்ட கதிர்கள்தான் பூமியை சூடாக வைத்திருக்கின்றன. இதுதான் 'பச்சை வீட்டு விளைவு'  அல்லது 'பசுமை இல்ல விளைவு' என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்ற நிகழ்வு பூமியில் நடைபெறாமல் போனால், பூமி குளிர்ந்து நீர் முழுவதும் உறைந்துவிடும்.
   ஆனால், அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடு வளிமண்டலத்தில் மேலும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இந்த வாயுக்கள் பூமியைச் சுற்றிலும் கண்ணாடுக் கூண்டு போல இருந்து செந்நிறக் கதிர்களை வளிமண்டலத்தில் இருந்து தப்பி விட முடியாதபடி, தன்னகத்தே உறிஞ்சி வைத்துக் கொள்கின்றன.
   இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஒருபக்கம் கடும் வறட்சியும், மற்றெரு புறம் பெரும் வெள்ளம், கடும் புயல், சூறாவளி என்று இயற்கை சீற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
     பச்சை வீட்டு விளைவால் வெப்ப மண்டல நாடுகளின் பனி மலைகள் எப்போதோ உருகத் தொடங்கி விட்டன. துருவ பகுதிகளின் பனிக் குவியல்களும், உருக ஆரம்பித்து விட்டன. இவை கடலில் கொண்டு போய்ச் சேர்க்கும் நீரால் கடல் மட்டம் உயரும். ஏற்கனவே 25 சென்டிமீட்டராய் உயர்ந்து விட்ட கடல் மட்டம் இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு மீட்டரைத் தொட்டுவிடும் எனறு அஞ்சப்படுகிறது. இது மட்டும் நிகழ்ந்தால் மாலத்தீவுகள் மட்டுமல்லாமல், நியூயார்க் முதல் மும்பை வரை உள்ள கரையோர நகரங்கள் பலவும் கடலுக்குள் மூழ்கிவிடும். பூமி சூடாவதைக் கட்டுப்படுத்தி வைத்தால் மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து தப்ப முடியும்.
   நாம் எரிபொருட்களை எரித்து கரியாக்குவதால், காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. இதன் அளவில் பெரும்பகுதியை கடல் நீர் உள்வாங்கி தன்னுள் கரைத்து விடுகிறது. எரிபொருட்களின் பயன்பாட்டால் வரும் கார்பன்-டை-ஆக்சைடில் 48 சதவிதத்தை இப்படி கடல் உள்வாங்கிவிடுகிறது. இதனால் கடலுக்குக் கடல் இந்த வாயுவின் அளவு வேறுபடுகிறது. இந்த வாயு கடல் நீரில் கரைந்து கார்போனிக் அமிலமாக மாறுவதால் கடல்வாழ் உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கிறது.
   இதுபோன்ற அபாயகரமான விளைவுகள் பூமியில் தொடர்ந்து நடைபெறும்போது, ஒருகட்டத்தில் பூமியின் வெப்பம் அதிகரித்து விடுகிறது. இந்தக் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுவதைக் குறைக்கவே கியாட்டோ ஒப்பத்தம் உருவானது.
  பூமி வெப்பமாவதை தடுக்க மரம், செடி, கொடிகள், காடுகள், வனங்கள், வனவிலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் காப்போம்.

Monday, September 5, 2011

வனங்களின் அருமை


      அனைத்து நாடுகளிலும், இயற்கை வளங்களை அளிப்பதில் காடுகளின் பங்கு முக்கியமாக உள்ளது.

   மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணற்ற மூலிகைகள், ஒப்பனைப்பொருட்கள் மற்றும் பல மதிப்புள்ள விளைபொருட்கள் ஆகியவற்றையும் காடுகள் அளிக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், காடுகளின் பங்கு கணிசமான அளவில் உள்ளது.
   ஒவ்வொரு காடுகளிலும், காட்டுயிர்களின் எண்ணிக்கை முழுமையாக இருக்கிறது. நாம் பயன்படுத்தும் காட்டு வளங்களின் சூழ்நிலையை சமநிலையாக வைத்திருக்க வேண்டும்.
  காடுகளின் வளத்தை தவறாக பயன்படுத்துவதால் தான், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேராபத்துக்கள் ஏற்படுகின்றன.
   காட்டு விலங்குகள் இடம் பெயர்ந்து மக்கள் வாழும் இடங்களை தேடி உணவுக்காகவும் நீருக்காகவும் வருகின்றன.
  இதைவிட இன்னும் ஒரு அதிச்சியான விசம் காடுகள் அழிப்பால் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக உயிரினங்கல் வடதிசை நோக்கி விரைந்து செல்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
   இது தொடர்பாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2 ஆயிரம் உயிரின வகைகள், வருடத்திற்கு ஒரு மைல் என்ற வேகத்தில் நிலநடுக்கோட்டில் இருந்து வடக்குப் பகுதி நோக்கி நகர்வது தெரியவந்துள்லது.
   இந்த உயிரினங்களில் பெரும்பாலனவை பூமியின் வடகோளத்தைச் சேர்ந்தவை. பல்லாண்டு காலமாகவே இப்படி நகர்ந்து வருகின்றன என்றதும் தற்போது அவற்றின் வேகம் கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மணிக்கு எட்டு அங்குலங்கள் என்ற வேகத்தில் நகர்ந்து வருகின்றன.
   "உயிரினங்கள் வடக்கு நோக்கி நகரும் வேகம் ஒரு முக்கியமான விஷயம். அது நாம் நினைத்ததை விட அதிகமாக இருக்கிறது என்கிறார்".
   இந்த ஆய்வை மேற்கொம்ட யார்க் பல்கலைக்கழகத்தின் கிறிஸ் தாமஸ். குளிரான காலநிலையை நாடியே உயிரினங்கள் இவ்வாறு இடம்பெயர்கின்றன.
   கடந்த பத்தாண்டுகள் தான் பூமியின் மிக வெப்பாமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. இகில் 2005-ம், 2010-ம் அதிகபட்ச வெப்பநிலை ஆண்டுகளாக இருக்கின்றன.
   2000 ஆண்டுகளில் வெப்பநிலை உயரத் தொடங்கியதுமே உயிரினங்கள் குளிரான இடத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. இவ்வாறு நகரும் உயிரினங்களில் ஐரோப்பாவின்  'சிட்டி காப்பர்' வண்ணத்துப்பூச்சியும், ஸ்வீடனின்  'பர்ப்பி எம்பர்' வண்ணத்துப்பூச்சியும் குறிப்பிடத்தக்கவை. இங்லாந்தின்  'காமா' பட்டாம்பூச்சி கடந்த 21 ஆண்டுகளில் 135 மைகள் தூரம் நகர்ந்துள்ளது.
   வெப்பநிலை காரணமாக மிக வேகமாக இடம்பெயரும் உயிரினங்களில் ஒன்று,  'சிலோமெட்டஸ்' என்ற இங்லாந்து சிலந்தி. இந்த சிறிய சிலந்தி கடந்த 25 ஆண்டுகளில் 200 மைல்கள் வடக்கு நோக்கி தனது இருப்பிடத்தை நகர்த்திக்கொண்டுள்ளது. அதாவது ஒரு ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக 8 மைல்கள்.
  இப்படி பெரிய விலங்குகளும், சிறிய பூச்சி, பறவை இனங்களும் இடம் நகர்வது அலட்சியப்படுத்தும் விசயம் அல்ல. அவைகள் நமக்கு கொடுக்கும் எச்சரிக்கை என்பதை மனிதர்களாகிய நாம் உணரவேண்டும். அதலால் இயற்கை வளங்களை காப்பது நமது கடமை என்பதை உணரவேண்டும்.

  நாம் பயன்படுத்தும் காட்டு வளங்களின் சூழ்நிலையை சமநிலையாக வைத்திருக்க வேண்டும்.

Monday, August 22, 2011

எங்கே? அந்த கிராமம்

   ஒவ்வொரு சமயமும் எங்கள் கிரமத்திற்கு போகும்போது ஒரு நாள்தான் இருக்க முடியும், உடனே திரும்பி வர நேர்ந்துவிடும். சமிபத்தில் ஒரு ஐந்து நாள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்பொழுது நான் சின்ன வயதில் இந்த கிராமம் எப்படி இருந்தது இப்போது எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது, எங்கே? அந்த கிராமம், எப்படி இருந்தது என்று நினைத்து  நினைத்ப் பார்தேன். 
    முன்பு கிராமத்தைச் சுற்றி பாசன வயல் வெளிகள், தோட்டங்கள்! தோட்டங்களைப் பாதுகாக்க கருவேல முள் வேலிகள். வேலிகளின் மீது பச்சை நிறத்தில் படர்ந்துள்ள பல வகை செடி, கொடிகள். வேலிகளில் மீது அமரும் பூச்சிகளை பிடிக்க அமர்ந்திருக்கும் ஓணான்களைக் கல்லெறிந்து காயப்படுத்தும் சிறுவர்கள். அதிகாலையில் வயல் வெளிகளுக்கு ஏர் ஓட்ட செல்பவர் இரண்டு காளை மாடுகளை கையில் பிடித்து, கலப்பையை தோலில் சுமந்து செல்லும் காட்சி, காட்டிற்கு வேலைக்கு செல்லும் பெண்கள், அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களைக் கொண்டுவந்து போரடிக்கும்  கலத்து மேடு.
   ஓட்டு வீடுகள், ஓலை வீடுகள், ஓலைக்குடிசைகள் அங்கொன்று இங்கொன்று காரை வீடுகள் வீட்டுச் சுவர்களில் ஒட்டப்பட்டுக் காயவைக்கப்பட்டுள்ள, சாண வறட்டிகள். வீட்டுமுன் படுத்து உறங்கும் தெரு நாய்கள், வீட்டுத் தின்னையின் அடியில் உள்ள கோழிக் கூடு.
    வீட்டின் கொல்லைப் புறத்தில் முருங்கை மரம். நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் வேப்பமரங்கள். வீட்டு உபயோகத்திற்கு வளர்க்கும் பயிர்க் குழிகளில் பூசணிகாய், சுரைக்காய். புடல், பீற்கங்காய், பாகற்காய், அவரைக் கொடி. கொல்லை தொளுவத்தில் கட்டியிருக்கும் பசுவும், கன்றும். தெருக்களில் இரட்டை மாடுகளால் இழுக்கப்படும் கட்டைவண்டி காளைமாடுகள், காளைமாடுகளைக் கயிற்றால் கட்டி கீழே படுக்கவைத்து லாடம் கட்டுவது. வீடுகளில் கட்டி வைத்திருக்கும் ஆடுகள், மந்தையில் படுத்திருக்கும் ஆட்டு மந்தைகள், கோயில், தெப்பக்குளம், அதில் நீந்தித் திரியும் சிறுவர், சிறுமிகள் அதில் உள்ள மீன்கள் அதில் திரியும் தண்ணீர் பாம்புகள்.
  தெருக்களில் சிறுவர்கள் அரைக்கால் சட்டையுடன் சைக்கிள் டயர்களையும் பனம் நுங்கின் குடுக்கைகளை வண்டியாக ஓட்டும் காட்சி, பம்பரம் கிட்டி, குண்டு விளையாட்டு. வயதானவர்கள் பஞ்சாயத்து தின்னையில் வெட்டிகதை பேசி தூங்கித்திரியும் பெரியவர்கள். வயதான அப்பத்தா, அம்மாச்சிமார்கள், காதுகளில் பெரிய பெரிய பாம்படம், தந்தட்டிகள் சுமக்கும் அதிசய காட்சிகள் அவர்களின் இடுப்பில், சொருகி வைத்திருக்கும் சுருக்குப் பை.
    தெருக்களில் ஆங்காங்கே திரியும் நாட்டுக்கோழிகள். வீடுகளின் முன்வரந்தாவில், வைக்கப்பட்டிருக்கும் போட்டோக்கள், போட்டோகேகளின் பின்னால் கூடுகட்டி வாழும் சிட்டுக் குருவிகள். பெரிய அரசமரம், ஆலமரம், நாவல்மரம். இதில் பழம் பழுக்கும் போது பழம் தின்ன வரும் பலவகை பறவைகளின் இனிமையான சத்தங்கள். மரப்பொந்துகளில் வாழும் கிளிகள், மைனாக்கள், இரவில் அலரும் ஆந்தைகள் என விதவிதமான பறவைகள் கண்மாய், கண்மாயில் நீந்தித் திரியும் நீர்க் கோழிகள், கொக்கு, நாரை பேன்ற பறவைகள் கண்மாயிக்கு தண்ணீர் வரும் ஆறு, ஓடைகள் ஊரணி, ஊத்துகள் மேடு, பள்ளம், நீர் ஆதாரங்கள் இதில் படர்ந்திருக்கும் தாமரை கொடிகள், இது போல் இன்னும் நிறைய. இது எல்லாம் உள்ள கிராமம் எங்கே? இதைவிட ஒருத்தருக்கொருவர் உதவும் கிராமத்து பன்பும் எங்கே?   
படம்  தினமலர்...

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

Friday, August 19, 2011

ஸ்வார்டுபிஷ் (Swordfish)

    ஸ்வார்டுபிஷ் (Swordfish) இது ஒரு அற்புதமான உயிரினம். இது குளிர் சூட்டுக்குருதியுடையது கண்கள் மற்றும் மூளை சூடாக வைக்க என்று சிறப்பு உறுப்புகள் இருக்கின்றது. வெப்பம் அவைகளின் பார்வை திரனை அதிகரித்து அவைகளின்  உணவு வேட்டையாடுவதை சுலபமாக்கிறது. இந்த ஸ்வார்டுபிஷ், மார்லின், மற்றும் டுனா ஒத்திருக்கிறது.
   ஸ்வார்டுபிஷ் இது கிரேக்கம், லத்தீன் மொழியில் வாள் எனப்படும். இதில் ஒரு பிரிவு இடம் பெயருந்து, கொள்ளையடிக்கும் மீன் என்றும் மற்றொன்று விளையாட்டு மீன் என்றும் கூறப்படுகிறது. இதன் உடல் வாகு நீண்டு குறுகி உள்ளது, அவைகள் 14 அடி அங்குலம் நீளம் மற்றும் 650 கிலோ எடை அதிகபட்சமாக அடைகிறது.
   ஸ்வார்டுபிஷ் அதன் நெறிப்படுத்தப்பட்ட உடலமைப்பு அது மிகவும் எளிதாக நீந்துவதற்கு உதவுகிறது. அதன் வாள் ஈட்டிபோன்ற கூர் நுனி அதன் இரையை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.  முக்கியமாக ஸ்வார்டுபிஷ் தனது இரையை பிடிக்க 80 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும் திறன் கொண்டது.
   ஆண் ஸ்வார்டுபிஷ் விட பெண் ஸ்வார்டுபிஷ் பெரிய வளர்கின்றன 135 கிலோ எடை வரை இருக்கும். ஆண் ஸ்வார்டுபிஷ் 3 முதல் 4  ஆண்டுகள் முதிர்ந்தபோது பெண் ஸ்வார்டுபிஷ் 4 முதல் 5 ஆண்டுகளில் முதிர்கின்றன. ஸ்வார்டுபிஷ் தீவனம் சிறிய டுனா, பொன்னாடு, சீலா மீன், பறக்கும் மீன், கானாங்கெளுத்தி ஆகியவை. மனிதர்களை தாக்குவதில்லை என்றாலும் ஸ்வார்டுபிஷ் மிகவும் ஆபத்தானது.
  ஸ்வார்டுபிஷ் அட்லாண்டிக், பசிபிக், மற்றும் இந்திய பெருங்கடல் உட்பட உலகம் முழுவதும் கடல் பகுதிகளில், காணப்படுகிறது. ஒரு நீண்ட எல்லை உடன், வெப்பமண்டல, மிதவெப்ப, மற்றும் சில நேரங்களில் குளிர்ந்த நீரில் காணப்படும். ஸ்வார்டுபிஷ் பொதுவாக கோடையில் குளிர் மற்றும் குளிர்ந்த நீரில் வெப்பமான நீர்ப்பகுதிக்கு இடம் பெயரும் இனங்கள் உள்ளது.


அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...

Thursday, August 18, 2011

விலங்குகளின் வினோதமான தூக்கம்


   குறும்புத்தனத்துக்குப் பெயர் பெற்ற ராக்கூன் என்ற ஒருவகை கீரிப்பிள்ளை போன்ற பிராணி, நல்ல குறட்டை ஒலியுடன் ஆழ்ந்து உரங்கும். அத்துடன் மனிதரைப் போல் இப்பிராணிகள் கனவும் காணுகின்றன என்று தூங்கும் போது இவற்றின் உடல் அசைவைக் கொண்டு விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
   நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் உடம்பைட் சுருட்டிக் கொண்டு உடலின் வெப்பத்தை காப்பாற்றி, தலையை உடலின் உள்பதிந்து தூங்கும்.
   ஆடு, மாடு, மான் போன்ற தாவர உண்ணிகள் நான்கு கால்களையும் மடித்து, தலையை உடலின் மேல் வைத்துத் தூங்கும்.
   யானை மற்றும் குதிரை இன விலங்குகள் நின்று கொண்டே தூங்கும். யானை தூங்கும்போது அதன் எடை முழுவதையும் ஒவ்வொறு காலுக்கும் மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளும்.
   பாம்பு வகையைச் சேர்ந்தவை அனைத்தும் உடலை கடிகார ஸ்பிரிங் போல சுருட்டிக்கொண்டு தூங்கும். பாம்புகள் தூங்கும்போது கண்கள் திறந்த வண்ணமே இருக்கும்.
   சிலவகை மான்கள் தூங்கும்போது தமது சுவாச சக்தியின் மூலம் பகை விலங்குகளின் நடமாட்டத்தை உணரும் அற்புத சக்தி கொண்டவை.
   சிலவகை ஐரோப்பியக் கிள்கள், வவ்வால் போலவே கால்களால் மேலே உள்ள கிளைகளைப் பற்றிக்கொண்டு தலை அதன் மார்பைப் பார்த்திருக்குமாறு ஒய்யாரமாகத் தூங்கும்.
   பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில் உறங்கும் வழக்கம் கொண்டிருந்தாலும், ஆந்தை இனப் பறவைகள் பகலில் தூங்கி இரவில் இரை தேடும் பணியைச் செய்கின்றன. வாத்து தரையில் நின்றுகொண்டோ, தண்ணீரில் மிதந்துகொண்டோ தூங்கும்.
   சுறுசுறுப்புக்குப் பெயர் போன எறும்புகள், மண்ணீல் அழகான மணற்படுக்கை போன்ற திண்டுகளை ஏற்படுத்தி, கால்களை உடலுடன் அழுத்திவைத்து ஒய்யாரமாய் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நிம்மதியாய் உறங்குகின்றன.

வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகளை காத்து இயற்கையை காப்போம்...

Friday, August 12, 2011

கல் மீன் (Stone fish)


    கல்மீன் இது இந்திய பசிபிக்கிக் வெப்பமண்டல கடல் பகுதியில் காணப்படுகின்றன, இது 20 இனங்கள் இருக்கிறது. கொடிய நச்சுத்தன்மையுடையவை, கரடுமுரடான உடல் கீழ்தாடை ஒரு அசிங்கமான மேல் நோக்கிய பெரிய தலை மற்றும் சிறிய கண்கள் அதன் பெயர் குறிப்பிடுவதுபோல் ஒழுங்கற்ற புள்ளிகள் மற்றும் உடல் முழுவதும் மருக்கள் ஒரு முதுகு துடுப்பு அது கற்கள் மத்தியில் அல்லது கடற் பவள பாறை பிளவுகளில் புதைக்கப்பட்டது போல் கல் மீன் தன் நிறம் மற்றும் வடிவத்தை கல் போன்று கண்ணுக்கு தெரியாத உருவத்தில் உருமாற்றிருக்கும்.
  ஸ்டோன் மீன் புரதங்கள் கொண்ட, உலகின் மிக கொடிய விஷ மீனக கருதப்படுகிறது. ஒரு கல் மீனை துரதிர்ஷ்டவசமாக மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள்  மிதித்துவிட்டாலோ இந்த மீன்  உடலில் விஷம் புகுத்த என்று பதிமூன்று மிக நீண்ட ஈட்டிகளை கொண்டிருக்கிறது அதன் விஷம் உடலில் பாயும் ஆழம் பொறுத்து திசு இறப்பு, கடுமையான வலி, அதிர்ச்சி, பக்கவாதம் ஏற்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை தாக்கும் அதனால் இது 2-3 மணி நேரத்திற்குள் சிகிச்சை செய்யவில்லை என்றால் மரணம் நிச்சயம். கொடிய சிலந்தி மற்றும் பாம்பு கடித்தல் போலவே சீக்கிரம் சிகிச்சை எடுக்கவேண்டும். உடனடியாக குறைந்தது 43 டிகிரி செல்சியஸ் சுடு நீரை காயம்பட்ட இடத்தில் விடவேண்டும். இந்த மீன் இருக்கும் இந்திய பெருங்கடல் பகுதியில் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்... 

Saturday, August 6, 2011

நமது நாடு 30. வாணிகம்


   ஓரிடத்தில் உள்ள பண்டங்களை இன்னேரிடத்திற் கொண்டு சென்று விற்றுப்பொருள் ஈட்டுதல் வாணிகம் எனப்படும். பல இடங்களிலுள்ள மக்கள் பண்டங்களை விற்கவும் வாங்கவும் கூடும் இடங்கள் அங்காடிகள் (சந்தைகள்) எனப்பட்டன. சந்தை என்பது சந்தி என்பதினின்றும் பிறந்தது. உள்நாட்டுச் சந்தைகளுக்குப் பண்டங்கள், கழுதை பொதி மாடு வண்டிகளிற் கொண்டுபோகப்பட்டன. இன்று நமது நாடுகளில் ஆங்காங்கே நடைபெறும் சந்தைகளுக்கும் முற்காலச் சந்தைகளுக்கும் அதிக வேறுபாடு இருக்கவில்லை.
   தமிழ் மக்கள் மேற்கு ஆசிய நாடுகளோடு மிகப் பழங்காலந் தொட்டுக் கடல் வழியாகவும் தரைவழியாகவும் வாணிகம் நடத்தினர். சிந்துநதி முகத்துவாரத்திலிருந்து எகிப்பிலுள்ள மெம்பிஸ் நகர்வரையில் பாரசீகத்துக்கூடாகப் பெரிய தரைப்பாதையிருந்தது.
   இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளின் முன் எகிப்தியர் மரக்கலம் வழியாகத் தமமிழ் நாட்டுக்கு வந்து மீண்ட வரலாறு அவர்களின் பட எழுத்துப் புத்தகங்களிற் காணப்படுகின்றது. அவர்கள் மொழியில் குரங்கு, யானைத் தந்தம் என்பவைகளைக் குறிக்க வழங்கிய பெயர்கள் தமிழ்ச் சொற்களின் திரிபுகள் என்று கருதப்படுகின்றன.
     "திரைகடலோடியுந் திரவியந் தேடு "   தெண்ணீர்க்கடல் கடந்தும் "  "நாவாய் கவிழ்ந்த நாய்கன் போல " என்னும் தமிழ் வழக்குகளால் தமிழ் மக்கள் கடல் கடந்து தொலைவிலுள்ள நாடுகளுக்குச் செந்று பொருளீட்டினார்கள் என நன்கு அறிகிறோம். சுமத்திரா, யாவா, இந்துச்சீனம் முதலிய நாடுகளில் வாணிகத்தின் பொருட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று தங்கிய தமிழரே அந்நாடுகளுக்கு முன் சென்று தங்கிய தமிழரே அந்நாடுகளில் அரசுகளைக் கோலி அவைகளை ஆண்டு வந்தனர். இன்றும் அந்நாடுகளில் தமிழர் நாகரிகத்தின் அடையாளங்கள் பல காணப்படுகின்றன.
  கிறித்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பலஸ்தின் நாட்டை ஆண்ட சலமன் என்னும் அரசன் தனது மாலுமிகளை அனுப்பித் தந்தம், மயில், குரங்கு, பொன், யானைத் தந்தம், அகிற்கட்டை முதலிய பல பொருள்களைத் தமிழ் நாட்டினின்றும் பெற்றான். இப்பண்டங்களைக் குறிக்கப் பலஸ்தின் மக்கள் வழங்கிய தமிழ்ப் பெயர்கள் சிறு மாறுபாட்டுடன் எபிரேய மொழியிற் காணப்படுகின்றன.
   கறுவா, இஞ்சி, திப்பிலி, அரிசி முதலிய பொருள்களைக் குறிக்கக் கிரேக்க மொழியில் வழங்கிட பெயர்களும் தமிழ்ச் சொற்களின் திரிபுகள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் எகிப்து, மேற்கு ஆசியா, சீனம் முதலிய நாடுகளுக்குச் சென்று வாணிகம் நடத்தியதற்கு ஆதாரங்கள் பல பிறமொழிகளில் எழுதப்பட்ட பழைய நூல்களிற் காணப்படுகின்றன.
   தமிழர் 6000 ஆண்டுகளுக்கு முன்னரேயே நாணயங்களின் பயனை அறிந்திருந்தனர். இது பழைய சிந்துவெளிப் புதைபொருல் ஆராய்ச்சியால் நன்கு தெளிவுறுகின்றது.

நமது நாடு தொடரும்....

இயற்கை அண்ணை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

Friday, August 5, 2011

மிளகு

    மிளகு இந்தியாவில் பெரும்பாலும்  மலபார் கடற்கரை தென் இந்தியாவின் வெப்பமான, ஈரப்பதமான பகுதியில் விளையும். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும்,  மலைப்பகுதி எஸ்டேட்களிலும், தமிழகத்தில் ஊட்டி, குன்னூர், ஏலகிரி, ஏற்காடு மலைப்பகுதி எஸ்டேட்களிலும் குடகு மலையிலும் அதிகமாகமான  இடங்களில் மிளகு பயிரிடப்பட்டுகிறது. இந்த பகுதியில் தரம் உயர்ந்த மிளகு உற்பத்தியாகிறது, தாவரங்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு பழம் தரத் துவக்குகின்றன 40 ஆண்டுகள் வரை ஒவ்வொரு மூன்றாவது ஆண்டும்  தொடர்ந்து பழம் கொடுக்கிறது. இது  சிவப்பு மாறும், பச்சை நிறத்தில், கோள  வடிவத்தில் இருக்கும்.
    இந்தியாவிலிருந்து ஐரோப்பா, சைனா, மத்திய கிழக்கு நாடுகள் வட ஆப்பிரிக்காவிற்குப் பரவிற்று. மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும் மரத்தில் பற்றி வளரும்.
    இந்திய சர்வதேச தரமான மிளகு அதிக அளவு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. கேரளா தென் மாநில மொத்த மிளகு உற்பத்தியில் 90% கொண்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் முக்கிய உற்பத்தி மையங்கள் உள்ளன.
   சுக்கு, மிளகு திப்பிலி இந்த மூன்றையும் 'திரிகடுகம்'னு சொல்வாங்க. சித்த மருந்துகள்ல பெரும்பாலும் இந்த மூன்றுல ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கும். ஒரு காலத்தில் மிளகு வானிகம் கொடிகட்டிப் பறந்தது. அந்தக் காலத்தில் ஒருவர்கிட்ட இருக்கிற மிளகோட அளவை வைத்தே, அவரோட செல்வத்தைக் கணக்கிடுவாங்கலாம். எல்லா சமையலுக்கும் சுவை சேர்க்க மிளகு பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் சாப்பட்டு மேஜையில் உப்பையும், மிளகையும் வச்சிருப்பாங்க.
    கருமிளகு, வெள்ளைமிளகு வால்மிளகு என்று மூன்று வகை இருக்கிறது. காரமும், சூடும் நிறைந்த உணவுப் பொருள் என்பதால், நன்கு பசியைத் தூண்டிவிடும் சக்தியும், உணவை செரிக்கச் செய்யும் திறனும் கொண்டது. மேலும், சுவை உணர்வை அதிகரித்து, உமிழ்நீரை நன்கு சுரக்கச் செய்யும். சுவாசக்கோளாறுகளை நீக்கும்; சிறுநீரைப் பெறுக்கும்; உடலை சுறுசுறுப்பாக்கும்.
     இருமலை குணப்படுத்த மிகச் சிறந்த வீட்டு மருந்து, மிளகு. இரண்டு அல்லது மூன்று மிளகை வெறும் வாயில் போட்டு மென்று, அந்த சாற்றை விழுங்கினால் கொஞ்ச நேரத்தில் இருமல் கட்டுப்படும். மிளகின் காரத்தைத் தாங்க முடியாதவங்க, மிளகைப் பொடியாக்கி பாலில் கலந்து குடிக்கலாம்.

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

Thursday, August 4, 2011

கடல் காடுகள்

     நதிகள், ஓடைகள் போன்றவற்றின் பிறப்பிடம் காடுகள்தான். அவை தான் நீரின் ஆதாரம். ஆனால் ஆச்சரியமாக நீருக்கு அடியிலும் காடுகள் இருக்கின்றன. நீர்காடுகளில் இரண்டு வகை உள்ளன.
    முதல் வகையை அலையாத்தி காடுகள் என்கிறார்கள். இது பெரும்பாலும் கடல்நீருக்கு அருகிலேயே வளரும். இந்த தாவரங்கள், தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துவாரங்களின் மூலம் ஆக்சிஜனை உள் இழுத்துக்கொள்ளும். நீர்மட்டம் அதிகரிக்கும் போது, சிறிய குழல்களை வெளியே நீட்டி சுவாசிக்கும். கடலுக்கு அருகில் இருந்தாலும், உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக்கொள்ளும். இதன் இலைகள் மூலமாக நீர் ஆவியாதல் மிக மெதுவாகவே நடக்கும்.
      சுனாமி, கடல் கொந்தளிப்பு போன்ற காலங்களில் அதன் வேகத்தை கட்டுப்படுத்தி இந்த அலையாத்தி காடுகள் நம்மை காப்பாற்றுகின்றன. உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடுகள் பிரேசிலில் உள்ளன. இதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இரண்டாவது இடம் நமது பிச்சாவரம் கடற்கரை. கடந்த சில ஆண்டுகளாக பிச்சாவரத்தில் அலையத்திக் காடுகளில் அடர்த்தி அதிகரித்து வருகிறது.
      இரண்டாவது வகை காடுகள் கெல்ப் காடுகள் என்கிறார்கள். இவை கடலுக்கு அடியில் வளரும் பூஞ்சை வகை செடிகள். செடிகள் என்றால், ஏதோ நம்வீட்டில் வளர்க்கும் செடிகள் போன்று கிடையாது. இந்த செடிகள் ஒவ்வொன்றும் 20 முதல் 40 அடி உயரம் வரை வளர்ந்து மிரட்டும். உலகில் இருக்கும் மிக முக்கியமான காடுகளின் பட்டியலில் இந்த கெல்ப் காடுகளும் உண்டு.
    கடலுக்கு அடியில் எந்த தப்பவெப்ப சூழலிலும் இவை வளரும். நீருக்கு அடியில் கிடைக்கும் வெளிச்சம், நீரில் கலந்திருக்கும் ஆக்சிஜன், பாறைகளில் இருக்கும் தாதுக்களை உட்கொண்டு இவை வளருகின்றன. மெல்லிய நாணல் போல இருக்கும் ஆயிரக்கணக்கான தாவரங்கள் ஒன்று சேர்ந்து நிற்பது போல இருக்கும் ஆயிரக்கணக்கான தாவரங்கள் ஒன்று சேர்ந்து நிற்பது தான் இந்த கெல்ப் காட்டின் பலம்.
    கெல்ப் காடுகள் குளிர், ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரில் ஏற்படுகின்றன மற்றும் கடல் சூழலில் மிக அழகான மற்றும் உயிரியல் ரீதியாக வாழ்விடங்கள் உள்ளன. அவைகள் ஆழமற்ற திறந்த கரையோர நீர் உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன, மற்றும் பெரிய காடுகள் ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் வட்டங்கள் இரண்டிலும் நீண்டு இருக்கிறது, 20 º C விட குறைவான வெப்பநிலை தடை செய்யப்படுகின்றன. ஒளிச்சேர்க்கை  சார்ந்திருக்கிறது ஆழமற்ற நீர் அவற்றை கட்டுப்படுத்துகிறது மற்றும் அவைகள் 15-40m விட அரிதாக மிகவும் ஆழமாக. கெல்ப் தாவர இனமே மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதங்கள் சில பொதுவான ஒரு திறனை கொண்டிருக்கின்றன. கடலுக்கு அடியில் ஏற்படும் நீரோட்ட மாறுபாடு, சுனாமி போன்றவற்றின் வேகத்தை இவை தடுக்கின்றன. கிரகத்தில் ஒவ்வொரு இயற்கை அதிசயம் போல், கெல்ப் காடுகள் அச்சுறுத்தல் கீழ் பெரும்பாலும் உள்ளன. முக்கிய பிரச்சினைகள் "கடல் மாசுபாடு மற்றும் நீர் தரம், கடற் பாசிகள் அறுவடை மற்றும் மீன், நுண்ணுயிர், காலநிலை மாற்றம் இவற்றின் முக்கிய எதிரி, மனிதனால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் மாசுதான்.

இயற்கையின் அதிசயம் கெல்ப் காடுகளை காக்க கடல் மாசுபடாமல் இருக்க உதவுவோம்.....

Tuesday, August 2, 2011

குதிரை நண்டு (Horseshoe Crab)

   குதிரை நண்டு அல்லது கிங் நண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது பல மில்லியன் வருடங்களாக பூமியில் வாழ்கிறது, இது ஒரு ''நாடு படிம'' என்று அழைக்கப்படுகிறது. தட்ப வெப்பமான கடல் தரையில் காணப்படும். இது நண்டு என்று அழைக்கப்பட்டாலும்,  ஆனால் சிலந்திதேள் அல்லது சிலந்தி குடும்பத்தை சேர்ந்தவை.
    குதிரை நண்டு நான்கு இனங்கள் உள்ளன. மூன்று இனங்கள் இந்தியா, ஜப்பான், மற்றும் இந்தோனேஷியா சுற்றி நீரில் இருக்கிறது. நான்காவது இனங்கள், பாலிஃபெமஸ், வடக்கு மெயின் இருந்து யுக்காட்டன் தீபகர்ப்பம் வட அமெரிக்கா கிழக்கு கடற்கரை கடல் பகுதியில் வாழ்கிறது.
    ஆண் குதிரை நண்டு பெண் குதிரை நண்டை விட சிறியதாக இருக்கும். இது இரண்டு அடி நீளம் இருக்கும். உயிருடன் இருக்கும்போது அது  பழுப்பு, பச்சை நிறத்தில் இருக்கும். அது இறந்த பிறகு, கரும் பழுப்பு நிறமாக இருக்கும். குதிரை நண்டுடின் தோற்றம் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததற்கு மிகவும் சிறிதளவே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கருதப்படுகிறது. அவை  அடிவயிற்று கால்களின் கடைசி ஜோடியில்  இணைக்கப்பட்ட செவுள்கள் மூலம் சுவாசிக்கிறன. வாய் உடலின் மையத்தில் உள்ளது. கண்கள் ஷெல்லின் முன் பகுதியின் மேல் உள்ளன. குதிரை நண்டு ஒரு கடினமான வெளிப்புற ஷெல், ஐந்து கால்கள் ஜோடிகள் மற்றும் குதிரை நண்டு மாறாக ஒரு தற்காப்பு ஆயுதமாக விடா நீச்சல் அதே நேரத்தில் திசை மாற்றப் பயன்படுத்தும் ஒரு நீண்ட, மெல்லிய வால் கொண்டிருக்கிறது.
   குதிரை நண்டுகள் பாலியல் முதிர்ச்சி அடைய 9-10 ஆண்டுகள் ஆகின்கின்றன மற்றும் 16-17 ஆண்டு வரை உயிர் வாழும்.  அவர்கள் 2 அடி மற்றும் 10 பவுண்டுகள் எடை வரை வளரும். அவைகள் பெரும்பாலும் கடலின் கீழ்ப்பகுதியில் இருக்கும்.
   குதிரை நண்டுகள் இருளில் வெளியில் உணவு தேடும் புலால் உண்ணுகிற விலங்குகளை போல், குதிரை நண்டுகள்  கடல் புழுக்கள், சிறிய மெல்லுடலிகள் மற்றும் ஓட்டுமீன்கள் உட்பட  சாப்பிடுகின்றன.
    பெண் குதிரை நண்டுகள் ஒரே நேரத்தில் 60,000 120,000 முட்டைகள் இடுகிறது. இனச்சேர்க்கை பிறகு, பெண் குதிரை நண்டு மணலில் 15-20 செ.மீ. (6-8 ல்) ஒரு ஆழத்தில் பொந்துகள் ஒரு கூட்டினை அமைக்கும். இந்த கூடுகளை பொதுவாக கடற்கரை குறைந்த மற்றும் உயர் அலைகள் இடையே அமைக்கிறது.
   சில பகுதிகளில் குதிரை நண்டு மக்கள் நீர் மாசுபாடுத்தல் மற்றும் அதிகமான மீன்பிடிதலால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட போதிலும், இன்று, குதிரை நண்டு இன்னும் உலகின் வெப்பமான கடற்கரைகள் பரவலாக காணப்படுகிறது.
  
 இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...

Saturday, July 30, 2011

கிவி பறவை (Kiwi)

      கிவி பறவை (Kiwi) இது ஒரு கோழி இனம் இது பல வித்தியாசமான பன்புகள் கொண்டது. இதன் இறக்கைகள் மென்மையான சாம்பல்-பழுப்பு நிறத்தில் சிறிய மற்றும் மறைக்கப்பட்டதாக இருக்கும். மற்றும் மூக்கு நீளமானது வளைந்து இருக்கும். கால்களில் நான்கு விரல்களில் ஒரு பெரிய தடித்த மற்றும் தசை உள்ளன. கிவி தனித்து இரவு நேரங்களில் நடமாடும், இவை பகல் முழுவதும் பொந்துகளில் தூங்கும் மற்றும் புழுக்கள், பூச்சிகள், மற்றும் பழங்களை உண்ணும் இவை நியூசிலாந்து அதை சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளில் வாழ்கின்றனர்.
     கிவியின் முட்டைகள் தாயின் அளவை பொருத்து பெரிதாக உள்ளன, பெண் கிவி தனது உடல் நிறையில் 15-20 சதவிதத்திற்கு சமமான ஒரு முட்டையை இடும். தீக்கோழி முட்டைகள் பெண்தீக்கோழி தான் எடையில் வெறும் 2 சதவீதமாகவும், மனிதன் அதன் தாயின் எடையில் வெறும் 5 சதவீத எடையுடையது.
     கிவி அனைத்தும் ஐந்து அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் உள்ளன, அனைத்து இனங்களும் மோசமான வரலாற்று காடு அழித்தலால் பாதிக்கப்பட்டது. ஆனால் அவைகள் காட்டுவசிப்பிடங்களை தற்போது பெரிய பகுதிகள் மற்றும் தேசிய பூங்காக்களில் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது அவைகளின் உயிர் பிழைத்தலுக்கு மிக பெரிய அச்சுருத்தல், பாலூட்டி கொன்றுண்ணுகள் வேட்டையாடிகளைல் உள்ளது.
    கிவி  நியூசிலாந்தின் தேசிய அடையாளமாக உள்ளது. ஒரு சின்னமாக கிவி முதல் நியூசிலாந்து பிரிவுகளின் முத்திரைகள்  19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்தது. இது பின்னர் 1886 இல் தென் சென்டர்பரி பட்டாலியன் மற்றும் 1887 இல் ஹேஸ்டிங்ஸ் துப்பாக்கி தன்னார்வலர்களின் முத்திரைகள் இடம்பெற்றது. பிறகு விரைவில், கிவி பல இராணுவ முத்திரைகளில் வெளிவந்தது, மற்றும் 1906 இல் கிவி, ஷூ பாலிஷ்க்கு  இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
   முதல் உலக போரின் போது, நியூசிலாந்து வீரர்கள் பெயர் கிவி "kiwi" பொது பயன்பாட்டிற்கு வந்தது, மற்றும் ஒரு மாபெரும் கிவி (இப்போது Bulford Kiwi அறியப்படுகிறது),
    கிவி Kiwi நியூசிலாந்தில் மிகவும் நன்கு அறியப்பட்ட தேசிய சின்னமாக மாறிவிட்டது, மற்றும் பறவை பல நியூசிலாந்து நகரங்களில், கிளப் மற்றும் அமைப்புக்களின் ஆயுத, மற்றும் முத்திரைகள் கோட் முக்கியமாக உள்ளது. நியூசிலாந்து டாலரில் பெரும்பாலும் கிவி "kiwi டாலர்" என குறிப்பிடப்படுகிறது.

வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...

  

Thursday, July 28, 2011

நமது நாடு 29.தமிழரின் வீரவாழ்க்கை

    வீரம் என்பது மக்கள் எல்லோராலும் கொண்டாடப்படும் சிறந்த மன உணர்ச்சி. ஒரு சிறந்த கொள்கையின் பொருட்டுத், தமது உயிருக்கு நேரும் கேட்டைப் பொருத்தாது எதிர்த்துப் போராடுதலே வீரம் என ஒருவாறு கூறலாம். உயிர் துறக்க ஒருக்கமாயிருத்தலின் வீரம் என்பதும் துறவுபோன்ற அரிய உணர்ச்சியாகும்.
    தமது நாட்டைப் பகைவரின்றும் காத்தற்பொருட்டு ஒருவராற் காட்டப்படும் வீரம் மிக உயர்வுடையதாகக் கொள்ளப்பட்டது. முற்காலத்தில் வீரத்தாற் சிறந்தவன் ஒருவனே அரசன் ஆனான். அவனே படையை நடத்திச் சென்றான். அரசனுக்கு அடுத்தபடியில் படைத் தலைவன் முதன்மையுடையவனா யிருந்தான். வீரர்களுக்குப் பட்டங்கள் அரசனால் வழங்கப்பட்டன. இனினும் அரசினால் பெருமக்களுக்கு அளிக்கப்படும் பட்டங்களிற் பல அவ்வீர பட்டங்களின் எதிர் ஒலிகளேயாகும்.
   முற்கால ஆடவர் தாம் வீரர் என்னும் பெயர் பெறுதல் வேண்டுமென விரும்பினார்கள். வீரனை மக்களும் அரசனும் மதித்தனர். பெண்கள் யாதேனும் ஒரு வீரச் செயலைக் காட்டுகின்ற ஒரு வீரனையே மணக்க விரும்பினார்கள். இன்று பெண்கள் கழுத்தில் அணியும் தாலியும் வீரத்தை உணர்த்துவதே. முற்காலப் பெண்கள் தம் கணவர் புலியைக்கொன்று வீரத்தின் அறிகுறியாகக் கொண்டுவந்த அதன் பற்களைக் கயிற்றிற் கோத்துக் கழுத்தில் மாலையாக அனிந்தார்கள். இன்றும் பொன்னினாற் செய்யப்பட்டுத் திருமணக் காலத்தில் அணியப்படும் தாலி அவ்வழக்கத்தின் எதிரொலியேயாகும். ஆரிய மக்களே தமிழ் நாட்டுக்கு இவ்வழக்கத்தைக் கொண்டுவந்து புகுத்தினார்கள் என வரலாறு அறியாத சிலர் கூறுவர். ஆரியர்களிடத்தில் தாலிகட்டும் சடங்குகளோ வழக்கங்களோ ஒரு போதும் இருக்கவில்லை.
   நாட்டின் பொருட்டு யாதேனும் ஒரு வீரச்செயலைக் காட்டி மடிந்து போகிறவனே வானுலகம் புகுகின்றான் என்று மக்கள் நம்பினார்கள். போரில் இறவாது நோய்வாய்ப்பட்டு இறந்த அரசை வாளாற் பிளந்து, பின்பு அடக்கஞ் செய்தல் முற்காலத்தில் மரபு என்பது தமிழ் இலக்கியங்களிற் காணப்படுகின்றது. அவ்வாறு செய்தல் அவர்கள் போரில் வாளால் வெட்டுண்டிறந்தார்கள் எனபதைக் குறிப்பதற்கேயாம். இதனால் போரிடத்து மடிதலை அக்காலமக்கள் எவ்வளவு உயர்வாகக் கருதினார்கள் என்பது நன்கு விளங்குகின்றது. போரிற் புறங் கொடுத்தாலும் முதுகிற்காயம் படுதலும் இழிவுடையன என்று கருதப்பட்டன. முதுகிற் புண்பட்ட அரசர் பலர் நாணத்தினால் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார்கள். முகத்திலும் மார்பிலும் பட்டு ஆறிய வாள், அம்புத் தழும்புகள் வீரபதக்கங்களிலும் (Medals)சிறந்த அணிகலன்களாக மதிக்கப்பட்டன. ஒவ்வொறு வீரனும் தனது நாட்டின்பொருட்டு உயிரைத் துரும்பென மதித்தான். போரிடத்தே வியக்கத் தகும் வீரச் செயலைக் காட்டி ஒருவன் இறந்தால் இறந்த இடத்தில் அவன் வீரச் செயல்களை எழுதிய கல் நடப்பட்டது.
   ஆடவர் மட்டுமல்லர், பெண்டிரும் வீரம் செறிந்து விளங்கினார்கள். தங்கணவரும் புதல்வரும் போர்க்களத்தே சென்று வீரச் செயல்களைக் காட்டுவதை அவர்கள் விரும்பினார்கள் வியக்கத் தகும் வீரச்செயலைக் காட்டி அவர்கள் போர்களத்தே மாண்டனராயின் அதுகுறித்து அவர்கள் கவன்று கண்ணீர் வடித்திலர், அவர் போரிற் புறங்கொடுத்தோடி வந்தாராயினும், முதுகிற் புண்பட்டாராயினும் பெரிதும் வருந்தினார்கள். பழைய தமிழரின் வீரத்தை நினைக்கும் போது எமது உள்ளம் சுழலுகின்றது. இன்று அவ்வீரம் எங்கு ஒளித்தது!

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

Wednesday, July 27, 2011

டிராகன் பழம் (Dragon Fruit )

    டிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை. நானும் இதைப்பற்றி படித்திருக்கிறேன் கேள்விபட்டு இகுக்கிறேன்.  இந்தப் பழத்தை பார்ப்பதற்கு நம்ம ஊர் சப்பாத்தி கள்ளி பழம்போல் உள்ளது. உள் நிறமும் அப்படித்தான் இருக்கிறது. இது ஒரு கற்றாலை குடும்பம். கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இதன் நிறம், வடிவம் மற்றும் திகைப்பூட்டும் பூக்கள் இதன் பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். இரவில் பூக்கள் பூப்பதால் இதை "நைட் ராணி" என்று கூறப்படுகிறது. வழக்கமாக பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், அது மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணலாம். இந்த பழத்தில் பச்சை செதில்கள் போல் அமைப்பு உள்ளது. பழம் மையத்தில், இனிப்பு கூழ் சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
     டிராகன் பழம் ஒரு மிதமான அளவு உலர் வெப்ப மண்டல சீதோஷ்ண நிலையில் வளரும். இதன்  சரியான பிறப்பிடம் தெரியவில்லை, ஆனால் தெற்கு பெலிஸ் மூலமாக மெக்ஸிக்கோ, குவாதமாலா, எல் சால்வடார் மற்றும் கோஸ்டா ரிகா இருக்க வாய்ப்பு உள்ளது. இது வெப்ப மண்டல பகுதிகளில் உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது.
   மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் சிறிய அளவீடுகளில் வணிக ரீதியாக வளர்த்து குறிப்பாக கொலம்பியாவில்புகழ்பெற்று விளங்குகிறது. இப்போது அமெரிக்க, ஆசிய, மெக்ஸிக்கோ, வியட்நாம் வரை பரவியுள்ளது. உற்பத்தி மெக்ஸிக்கோ,    இந்தோனேஷியா (குறிப்பாக மேற்கு ஜாவாவில்), தாய்வான், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, மலேஷியா, மற்றும் மிக சமீபத்தில் வங்காளம் போன்ற ஆசிய நாடுகளில் பயிரிடப்படுகின்றன. அவைகள் ஓகினாவாவில், ஹவாய், இஸ்ரேல், ஆகிய இடங்களில் காணப்படுகின்றன வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு சீனாவில் பயிரிடப்படுகின்றன.
     டிராகன் பழம் மகரந்த சேர்க்கை வெளவால்கள் மற்றும் அந்துப்பூச்சிகளாள் இரவில்  ஏற்படுகிறது. பழங்கள் சிவப்பு தோல் மற்றும் வெள்ளை சதை கொண்டிருக்கிறது, சிவப்பு தோல் மற்றும் சிவப்பு சதை உள்ளது, மஞ்சள் தோல் மற்றும் வெள்ளை சதை கொண்டிருக்கிறது.
     தாவரம் வளர குறைந்தது மூன்று மாதங்களுக்கு தேவைப்படுகிறது. அது பின்னர் ஒவ்வொரு மாதம் வரை ஆறு மாத காலம் வரை பழம் விளைகிறது. ஒவ்வொரு பழம் 700 மற்றும் 800 கிராம் வரை எடையுள்ளதாக. ஸ்வீட் டிராகன் பழம் மென்மையான நறுமணத்தை கொண்டிருக்கிறது.
  104F வரையிலான வெப்பநிலைகளை சமாளித்துக்கொள்ளும், மற்றும் பனி குறுகிய காலமே தாங்கும் ஆனால் நீண்ட குளிரிரை தாங்காது சேதம் ஏற்படும்.
      டிராகன் பழம் 20-50 ஆண்டுகள் மழை   ஈரமான, வெப்ப மண்டல பகுதிகளில், தாவரங்கள் நன்றாக வளர்கின்றன.
  100 கிராம் பழத்தில் உள்ள  ஊட்டச்சத்துகள் தோரயமாக.
நீர் 80-90 கிராம்
கார்போஹைட்ரேட்கள் 9-14 கிராம்
புரதம் 0.15-0.5 கிராம்
கொழுப்பு 0.1-0.6 கிராம்
இழை 0.3-0.9 கிராம்
சாம்பல் 0.4-0.7 கிராம்
கலோரிகள்: 35-50
கால்சியம் 6-10 மி
இரும்பு 0.3-0.7 மிகி
பாஸ்பரஸ் 16 - 36 மி.கி.
கேரட்டின் (வைட்டமின் A) தடயங்கள்
தயாமின் (வைட்டமின் B1) தடயங்கள்
ரிபோஃப்ளாவினோடு (விட்டமின் B2) தடயங்கள்
நியாஸின் (வைட்டமின் B3) 0.2-0.45 மி
அஸ்கார்பிக் அமிலம் (விட்டமின் சி) 4-25 மி
இந்த புள்ளிவிவரங்கள் சாகுபடி நிலைமைகளின் படி மாறும். ஆரோக்கியமான ஆரோக்கியமான பழம் டிராகன் பழம்.

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...

Monday, July 25, 2011

காஃபி (Coffee)

    காஃபி (Coffee) இதை நாம் அனைவரும் விரும்பி அருந்தும் பானம். இந்தக் காஃபி எங்கிருந்து தோன்றியது தெரியுமா? எதியோப்பியாவில்தான் முதன் முதலில் காஃபிச் செடிகள் தோன்றின.  
   ஆனால் ஒரு செவி வழி கதை பரவலாக உண்டு கதையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த   சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள். ஆடுகள் ஏன் அப்படி நடந்து கொள்கிறது அவர்களுக்கு தெரியவில்லை மறு நாளும் ஒரு குறிப்பிட்ட செடியின் இலை, காய்களை சாப்பிட்டு சுறு சுறுப்பாக இருந்தது அதுதான் காப்பிச் செடி. ஆடுகள் காஃபிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்ததெனக் கண்டு தாங்களும் அவ்வாறே உண்டு காப்பியின் சிறப்பான உணர்வூட்டும் தன்மையை உணர்ந்தனர். இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும்.
     700 ஆண்டுகளுக்கு முன்னர், எதியோப்பியாவிலிருந்து ஏமன் நாட்டுக்கும் பிற அரபு நாடுகளுக்கும் காப்பிச் செடி கொண்டுபோகப்பட்டது. அரபு வியாபாரிகள்தான் காஃபி விதைகளை (400 ஆண்டுகளுக்கு முன்னர்) ஆசியா கண்டத்துக்கும் இந்தியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் விற்பனைக்காகக் கொண்டு சென்றனர். 1727-ம் ஆண்டு பிரேசில் நாட்டில்தான் முதல் காஃபி எஸ்டேட் நிறுவப்பட்டது.
   இந்தியாவுக்கு காஃபி வந்தது ஒரு சுவையான வரலாறு: 1720-ம் ஆண்டு பாபா புதான் என்பவர் மெக்காவுக்குச் சென்று வரும்போது 7 காஃபி விதைகளைக் கொண்டு வந்தார். கர்நாடகாவிலுள்ள சிக்மகளூர் கிராமத்தில் தனது நிலத்தில் இந்த விதைகளை விதைத்தார். இந்தியக் காஃபிச் செடிகள் அனைத்தும் இந்த 7 விதைகளிலிருந்துதான் தோன்றின. பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால் நீலகிரி மலைப் பகுதியில் காஃபி எஸ்டேட்டுகள் ஏராளமாக நிறுவப்பட்டன. இன்றும் இது தொடர்கிறது.
         காஃபி (Coffee) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்). ஆரம்பக் காலத்தில் பானமாக இல்லாமல் வெறுமனே காப்பி இலைகளைச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.
காஃபி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காஃபிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காஃபி ஆகும். இந்தியாவில் பலரும் பாலுடனும் சிறிது சர்க்கரை (சீனி) சேர்த்துக் குடிப்பார்கள். மேற்கு நாடுகளில் பால் இல்லாமலும், சர்கரை இல்லாமலும் கசப்பான கரும் காஃபியாகக் குடிக்கிறார்கள். சர்க்கரை சேர்த்துக் குடித்தாலும் காஃபி சற்று கசப்பான நீர்ம உணவுதான் (பானம்தான்). ஒரு குவளை (தம்ளார்) (200 மில்லி லிட்டர்) காஃபி குடித்தாலே அதில் 80-140 மில்லி கிராம் வரை காஃவீன் என்னும் போதைப் பொருள் இருக்கும்   இந்த காஃவீன் என்னும் போதைப் பொருள் இருப்பதால் காஃபி குடிப்பவர்கள் ஒருவகையான பழக்க அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள்.

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்...

Saturday, July 23, 2011

நமது நாடு 28.கடவுட் கொள்கை.

   மிகப் பழைய காலத்திலேயே தமிழ் மக்கள், எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் உண்டு என அறிந்து அவரை வழிபட்டார்கள். நினைவுக்கு எட்டாதவர், எல்லாவற்றையும் இயக்குபவர் என்னும் பொருளில் அவர்கள் எல்லாம்வல்ல அம்முழுமுதற் பொருளுக்குக் கடவுள் இயவுள் என்னும் பெயர்களை இட்டு வழங்கினர். ஆறாயிரம் ஆண்டுகளுக்குமுன் பொறிக்கப்பட்ட மொகஞ்சொதரோ முத்திரைகளில் கடவுள்  என்னும் பெயர் காணப்படுகிறது.
    கடவுள் உயிர்களிடத்து தாயுந் தந்தையும் பேன்று அருள் வழங்குபவர் என அவர்கள் நம்பினார்கள். ஆகவே அவர்கள் கடவுளை அம்மை வடிவிலும் அப்பர் வடிவிலும் வைத்து வழிபட்டார்கள். அம்மையும் அப்பரும் வேறு வேறு அல்லர் என்பதை விளக்கும் பொருட்டுப் பாதி ஆணும் பாதி பெண்ணுமாயுள்ள வடிவங்களையும் வைத்து அவர்கள் வழிபட்டார்கள்.
   நல்வினை தீவினைகளின் விளைவாகிய ஊழ், மறு பிறப்பு, உயிர்களின் அழிவின்மை போன்ற உண்மைகள் அவர்களால் நன்கு அறியப்பட்டிருந்தன. உள்ளத்தை ஒருவழிப்படுத்தி இறைவனை நினைத்தாலாகிய யோகத்தைப்பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். மொகஞ்சொதரோ முத்திரைகளில் இறைவன் யோகத்தில் அமர்ந்திருக்கும் கோலமுடைய வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இறைவன் பசுவின் (உயிர்களின்) பதி என்னும் கருத்தை விளக்க அவ்வடிவைச் சுற்றிப் பல விலங்குகள், மக்கள் முதலியவற்றின் வடிவங்களும் வெட்டப்பட்டுள்ளன. உள்ளத்தை ஒரு வழிப்படுத்தி இறைவனை நினைப்பதால் மனிதன் பெரிய ஆற்றல்களைப் பெறுகின்றான். அவ்வகை ஆற்றல் அடைந்தோர் சித்தர் எனப்பட்டார்கள்.
   இவ்வகை ஆற்றல் பெற்றோர் உலக மக்களும், அரசனும் நல்வழிப்படுதல் வேண்டும் என்று கோவில்களில் சென்று கடவுளை வேண்டினார்கள். இவேவாறு செய்யப்படும் பூசை பரார்த்த பூசை (பிறர்பொருட்டுச் செய்யப்படும் பூசை) எனப்படும் இதற்கு எடுத்துக் காட்டு,
"வாழ்க வந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக மும்துயர் தீரவே"

என்னும் சம்பந்தர் தேவாரமாகும்.
   கோவில்கள் நல்லார் வந்து கூடும் இடங்கள் ஆதலின் அவர்கள் இணத்தினால் மக்கல் நல்வவிப்படுத்துவார்கள் என்னும் கருத்துப்பற்றியே ஒளவைப் பிராட்டியாரும் கோயிலில்லாதவூரிற் குடியிருக்க வேண்டாம் என அருளிச்செய்தார்.
   தமிழ் மக்களின் வவிபாட்டுக்குரிய கோவில்களில் ''மலங்கெடுத்து மனங்கரைக்கும்'' திருவாசகம், தேவாரம் முதலிய தமிழ்ப்பால்கள் பத்திச் சுவை ததும்பப் பாடப்படுதல் வேண்டும். தமிழ் மக்கள் பொருள் விளங்கமாட்டாத வடமொழிச் சுலோகங்களைத் தமிழ்க்கடவுளர் முன்னிலையில் ஓதுதல் அறிவுடைடார் செயலாகமாட்டது. மக்கள் முன்னேற்றம் அடையவேண்டுமாயின் அவர்கள் தமது உயிர் நிலையாயுள்ள கோவில்களில் சீர்திருத்தஞ் செய்தல் வேண்டும்.

நமது நாடு வளரும்...

அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...