Tuesday, July 21, 2009

காட்டன் சூதாட்டம்
நான் எத்தனையோ சூதாட்டம் கேள்விப் பட்டிருக்கிரேன் சீட்டுகட்டு ஆடுவதை பார்த்து இருக்கிறேன் அதனால் பல குடும்பம் கஷ்டத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறது. அடுத்து குதிரை ரேஸ் இதில் பணத்தை கட்டி பணத்தை இலந்து விட்டதை பிடிக்கிறேன் என்று உள்ளதை இலந்ததுதான் மிச்சம். அடுத்து லாட்டரி சீட்டு இந்த சீட்டை வாங்கி லாட்டரி அடிக்கும் என்று சோத்துக்கு லாட்டரி அடித்ததுதான் மிச்சம். இதை அரசாங்கம் தடை செய்து விட்டது. அடுத்து மூன்று சீட் இதில் ஆசைபட்டு கூலி பணம் முழுவதும் இலந்தது தான் மிச்சம் இது ஒரு வகை, அடுத்து ஒரு டப்பாவில் நான்கு ஐந்து அடையாள கட்டைகளை போட்டு கட கடனு கலக்கி வைசார் ஐஞ்சு வைச்சா பத்து, பத்து வைச்சா இருவது இப்படி ஒரு சூதாட்டம் இந்தனை சூதாட்டம் நடக்கிறது. இதலாம் அரசாங்கம் ஒழிக்கும் என்று நினைத்தால் சுத்தமடத்தனம் ஏன்னா இதை நடத்துவது அவர்களின் கைதடிகள்தான். இதல்லாம் போகட்டும் இந்த காட்டன் சூதாட்டம்னா என்னானு பார்போம் முதலில் இந்த சூதாட்டம்னா என்னானு எனக்கு தெரியாது பேப்பரில் வந்த செய்தியை பார்த்து (நன்றி தினமனி....) நன்பர் ஒருவரிடம் கேட்டேன் அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்து சிரித்தார் ஏன் சிர்க்கிறேங்கனு கேட்டேன் அதற்க்கு அவர் விளக்கம் சொன்னார். ஒரு நம்பர் மேல் பணம் கட்டினால் இதை நடத்துபவர் ஒரு நம்பர் கொண்ட பேப்பர் அச்சிட்டு வெளியிடுவார் எந்தெந்த நம்பர் உள்ளதோ அது பரிசுக்கு உரிய நம்பர் அந்த நம்பகுரியவர் பரிசு பெற்றவர் ஆவார். இது என்னனா ஒரு 20 வருடங்களுக்கு முன் மும்பையில் பருத்தியின் விலையை நிர்நயம் செய்து தினமும் செய்தி பேப்பரில் வெளிவருவதை வைத்து சூதாடியுள்ளார்கள் அதுதான் இன்று ஒரு மிகப் பெரிய சூதாட்டமாக ஏழைகளை பிடித்து ஆட்டுகிறது. இதை எப்படி ஒழிக்கப்போகிறது நமது அரசாங்கம்.
சோ.ஞானசேகர்.

Tuesday, July 7, 2009

சங்கிலி பறிப்பு

நாம் இப்பொழுது காலை மாலை பேப்பரை கையில் எடுத்தால் அதிகமாக செய்தி வருவது கொலை, கொள்ளை, திருட்டு, சங்கிலி பறிப்பு. கொலை செய்பவர் பணத்துக்காகவோ முன்பகையோ காரனமாக இருக்கும். இரண்டாவதாக கொள்ளை இது ஒரு கூட்டம் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளை அடிப்பார்கள். திருட்டு இது தனிநபர் அல்லது 2,3 பேர் சேர்ந்து செய்வார்கள். இவர்கள் எல்லாம் இதுதான் அவர்கள் தொழில்.ஆனால் இந்தசங்கிலி பறிப்பு வழக்கமாக ஒரு கூட்டம் செய்து கொண்டு இருந்தது ஆனால் இப்பொழுது இந்தமாதிரி சங்கிலி பறிக்கும் நபர்கள யார் அறியும் போது மனது மிகவும் வேதனையாக உள்ளது.யார் என்று நினைக்கிறேங்க படித்த இளைஞர்கள், வேலையில் உள்ள, வேலை இல்லாத இளைஞர்கள், கல்லுரி மாணவர்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். அதிர்சியா இருக்குல வேதனையாக இருக்கிறது.இதற்கெளளாம் காரனம் என்ன கூடபலகுற நன்பர்கள் வட்டம்தான். நன்பர்கள் தாராளமாக பணம் செலலு செய்கிறார்கள் நம்மிடம் அவ்வளவு பணம் கிடைக்கவில்லை பெற்றேர்கள் சொஞ்சம் பணம்தான் கொடுக்கிறார்கள் அவர்களுக்கு இணையாக செலவு செய்ய முடியவில்லை அதனால் இந்த வழியை ஆரம்பித்து விடுகிறார்கள்.இது தவருனு தெரிவதில்லை பிடிபட்டவுடன்தான் இதன் பின் விலைவு தெரிய ஆரம்பிக்கிறது.இளைஞர்கலே சொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இதனால் உங்கள் எதிர்காலம் மட்டும் அல்ல உங்கள் பெற்றோர், சகோதரியின் வாழ்க்கை, சகோதரின் எதிர்காலமும்தான்சிந்தியுங்கள் கெட்ட சகவாசத்தை விட்டுவிடுங்கள். உங்கள் தாய், தந்தை வருமாணத்தை மனதில் வைத்து படித்து நல்ல வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரவும்.

சோ.ஞானசேகர்

Saturday, July 4, 2009

இரயில் பயணங்கள்
எத்தனையே வண்டிகளில் பயணம் செய்தாலும் இரயில் வண்டியில் பயணம் செய்யும் போது ஏற்படும் அனுபவம் இருக்கே அதுவே தனிசுகம். அதை நிறையப் பேர் அனுபவித்து இருப்பார்கள். சுகம் என்றவுடன் சுகம் மட்டும் இல்லை கஷ்டமும்தான். முதலில் கஷ்டம் பின்பு சுகமும் சுவராசியமும் கூட நான் நிறையத்தடவை அனுபவித்து இருக்கிறேன். நீங்கள் எப்படி அங்கேயும் அப்படித்தானே.
இரயில் பயணம் மூண்று வகை முதல் வகுப்பு பயணம், இரண்டாம் வகுப்பு பயணம், பொதுவகுப்பு பயணம். (முன்பு மூன்றாம் வகுப்பு) முதல் வகுப்பு பயணம் இதில் ஏசி கோச், ஏசி இல்லாத கோச்.
ஏசி கோச்சில் பயணம்
ஏசி கோச்சில் பயணம் செய்பவர்கள் இரயில் புறப்படுவதற்க்கு 10 நிமிடம் முன்பு வருவார்கள் அவர்கள் யாரையும் கண்டுகொள்ள மாட்டார்கள் சகபயணிகள் இருப்பதையே கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொண்டு ஒரு இந்தியன் எக்ஸ் பிரஸ் பேப்பர், அல்லது இந்து பேப்பரை பொரட்ட அரம்பித்துவிடுவார்கள். இரயில் தன் பயணத்தை தொடங்கிவிடும். ஒரு அரைமணி நேரம் ஆனவுடன் சாப்பாட்டு பொட்டனத்தை பிரித்து கோழி முழுங்கின மாதிரி முழுங்கிங்கிட்டு யாரைப் பற்றியும் கவலைப் படாமல் பேக்கை துறந்து லுங்கியை எடுத்து தனக்கு எதிரில் இருப்பவர் ஆனா பென்னா என்ற என்பது பற்றி கவலைப்படாமல் பேண்டை கலட்டி மாட்டுவார் உடனே படுக்கையை போட்டு படுத்து விடுவார் படுத்த ஐந்து நிமிடத்தில் எட்டுக்கட்டை ராகத்தில் குறட்டை விட்டு தூங்கி விடுவார் காலையில் அவர் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் இறங்கி விடுவார் இதுதான் முதல் ஏசி கோச் பயணம்.
ஏசி கோச்சில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் பிஸ்னஸ் மேன், அரசியல் வாதி, ( பயணம் செய்பவர்) நம் பணம் கம்பனி ஆபிசர் இவரும்
ஓசி கிரக்கி தெழிழாலர் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை இவர்கள்தான் முதல் வகுப்பு பயணம் இதில் ஏசி கோச்சில் பயணம் செய்பவர்கள். இப்போது நிலமை சொஞ்சம் மாரி வருகிறது சாமானியனும் முதல் வகுப்பு ஏசியில் பயணம் செய்யும் நிலமை வந்துள்ளது.
முதல் வகுப்பு
இந்த பயணம் செய்வோர் பெரும்பாலும் நடுத்தரவர்க்கம் ஆபிஸ் டூர் செல்வேர்தான் அதிகமாக பயணம்செய்வார்கள். இவர்கள் இரயில் பெட்டியில் ஏரியஉடன் தன்னுடைய உரிமையை நிலைநாட்டுவார் எப்படினா தன் அமர சீட்டுக்கு அடியில் வேரு யாரவது பேக், பை ஏதாவது வைத்திருந்தால் அதை நகட்டிவைத்துவிட்டு தன்னுடயதை அதன்கில்வைப்பார் யாரவது அவர் இடத்தில் உக்கார்திருந்தால் எழுப்பிவிட்டு அவர் உக்கார்வார். பின்பு பக்கத்தில் உள்ள நபர் தமக்கு தகுதியானவரா என்று பார்த்து லேசாக புன்முருவல் செய்வார் பதிலுக்கு அவர் புன்முருவல் செய்தால் அவரிடம் ஒரு சில வார்த்தைகள் பேசுவார் நேரம் கடந்தவுடன் கொண்டுவந்த சாப்பாடை சாப்பிட்டவுடன் தன்னுடைய படுக்கையை போட்டு படுத்து விடுவார். அவர் இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் எந்த சலனமும் இல்லாமல் இறங்கி விடுவார். இதுதான் முதல்வகுப்பு பயணம்.
இரண்டாம் வகுப்பு பயணம்
இந்த இரண்டாம் வகுப்பு பயணம் கொஞ்சம் சுவரஸ்யமாக இருக்கும் ரிசர்வ் செய்த டிக்கட்டை ஒரு கையில் வைத்துக்கொண்டு லக்கேசை ஒரு கையில் தூக்கிக்கிட்டு குழந்தை குட்டிகளுடன் தன்னுடைய கோச் எதுனு தேடுவார் பாருங்கங்க அவர் மட்டுமல்ல நாமும்தான் கோச்சை கண்டுபிடித்தவுடன் ஒரு சந்தேகம் வந்துவிடும் நம்முடைய சீட் நம்பர் சார்ட்டில் வந்துருக்கானு பார்ப்பார் அவர் பெயர் சார்டில் பார்த்தவுடன் அவர் முகம் பிகாசமாக மாரும். உடண் கோச்சில் ஏரியவுடன் இருக்கை தேடுவார் ஒரு வழியா கண்டுபிடித்தவுடன் யாராவது அவர் இடத்தில் உக்கார்ந்து இருந்தால் பிலிஸ் சார் உங்க நம்பர்னு கேப்பார் சிலபேர் எந்திருச்சிருவாங்க சிலபேர் உக்காருங்க அதுதான் இடம் இருக்கில உடனே இவர் முனங்கிக்கொண்டே லக்கேசை பொத்துனு போடுவார் ஒரு வழியா உக்காருவார். தனனை ஒருவாரு அசிவாசப்படுத்திக் கொண்டுசுத்தி ஒரு பார்வை பார்ப்பார் பக்கத்தில் குழந்தை இருந்தால் பார்த்துச் சிரிப்பார் பெயர் என்ன என்று கேப்பார் பக்கத்தில் பத்திரிக்கை ஏதாவது இருந்தால் வாங்கி புரட்டுவார். பிறகு சகபயணிகளிடம் சகசமாக பேச ஆரம்பித்துவிடுவார் பாலவிசயங்கலை அலசுவார்கள். சாப்பாடு நேரம் வரும் சாப்பிட்டு முடித்தவுடன் பக்கத்தில் உள்ளவரிடம் உங்கபெர்த் எதுனு கேப்பார் எங்க பெர்த் அப்பர், மிடில் லேடீஸ் மேலே ஏற முடியாது அதனால் உங்க லேயர் பெர்த்தை கொடுத்தால் நன்றாக இருக்கும் நீங்கள் எங்கள் இடத்தில் படுத்துக் கொள்ளுங்கள்னு கேப்பார் சிலபேர் தாரலமாக எடுத்துக்கொள்ளுங்கள்னு சொல்வார் சிலபேர் சாரிசார் எனக்கு ஆபரேசன் ஆகியிருக்கிறது என்னால் முடியாதுனு சொல்வார். ஒருவழியா படுத்து தூங்கி அர்கள் இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் இறங்கிப் போயிட்டு இருப்பார். இதுதான் இரண்டாம் வகுப்பு.
பொதுவகுப்பு பயணம்.
பொதுவகுப்பு பயணம் (செனரல் கம்பார்ட்மண்ட்) இதிலபாருங்க மத்த இரண்டு வகுப்புல பயணம் செய்யும் போது கிடைக்காத நல்ல அனுபவம் இதில் கிடைக்கும் இந்த கோச்சில் பயணம் செய்யத் தனித்திரமை வேண்டும் இரயில் புரப்படுகிற நேரத்திற்க்கு 1மணி அல்லது 2மணி நேரத்துக்கு முன்பு இரயில் நிலையம் வந்து விட வேண்டும் டிக்கட் எடுக்க நீண்ட வரிசை நிற்க வேண்டும் டிக்கட்டு ஒரு வழியா எடுத்து இரயில் பிளாட்பாம் வந்தவுடன் நிற்பதற்க்குள் முண்டியடித்து அடித்து பிடித்து ஒருத்தரை ஒருத்தர் தள்ளி சண்டை போட்டு ஒருவர் பேகமுடியும் வழியில் 4பேர் நுலைவார் எப்படியே உள்ளே போய் சீட் பிடிப்பதற்க்கு சண்டை முதலில் போனவர் ஒருபகுதியை மொத்தமாக அவர் குடும்பத்திற்க்கு பிடித்து விடுவார் பின்னால் வருபவர் இடம் கியைக்காமல் சண்டை பிடிப்பார். ஒரு வழியாக வண்டி புறப்பட்டவுடன் பிளாட்பாரச் சத்தம் வண்டியில் உள்ள சனங்கள் சத்தம் கொஞ்சம் அடங்கும். மூட்டை முடிச்சு சரியாக இருக்கிறதா என்று எண்னிப்பார்ப்பார்கள் மக்கள் எங்கேல்லாம் இடம் கிடைக்கிறதே அங்ககல்லாம் உக்கார்ந்து விடுவார்கள் பக்கத்தில் உள்ளவர்கலை யெல்லாம் நீங்கள் எங்கே போரேங்க என்று விசாரிப்பார்கள் ஒரே ஊர் என்றால் சந்தோசம் ஆகி ஒன்னுக்குள் ஒன்றாக ஆகிவிடுவார்கள். அப்பரம் கேக்கவே வேன்டாம். உடனே பையனை எழுப்பி டேய் மாமா உக்காரட்டும் அத்தைக்கு வழியவிடு ஒரே உபசரிப்புதான் போங்க அவுங்க கொண்டு வந்த தின்பண்டங்கலை இவர்களுக்கு கொடுத்து உபசரிப்பார்கள் இவர்கள் அவர்களுக்கு கொடுப்பார்கள். இவர்கள் அட்ரசை வாங்கி வைத்துக்கொள்வார் போன் நம்பரை வாங்கி கொள்வார்கள். இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் ஏறும் போது சண்டை போட்டவர்கள் இறங்கும்போது நல்ல நன்பர்கள் போல் உறவுக்காரர் போல் ஆகிவிடுவார். சிலபேர் இரயில் நண்பர்கள் போல் என்பார்கள் சிலபேருக்கு இரயில் பயணத்தில் நல்ல நன்பர்கள் கிடைத்துள்ளார்கள். ஒரே இரயில் பயணத்தில் ஒவ்வெரு வேருபட்ட மனிதர்கள்.இரயில் பயணத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன எனக்கு எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன அதில் நல்லதும் கெட்டதும் நடந்துள்ளது நாம் நல்லத என்னி நல்லது செய்வோம்.
முக்கியமாக இரயில் பயணத்தின் போது யார் எதைக் கொடுத்தாலும் காபி, டீ, குளிர்பாணங்கள், பிஸ்கட், தண்ணீர், சாப்பிடும் பொருள்கள் எதையும் சாப்பிட வேண்டாம்.
சகபயணிகலிடம் சுகுகமான உறவு வைப்பது நன்று. அதிகம் வேண்டாம். உங்கள் விலாசம், போன் நம்பர், செல் நம்பர் எதைடும் கொடுக்க வேண்டாம். உரவினர், நண்பர்கள் போன் நம்பரை உறக்கசொல்ல வேண்டாம். நன்றி...சோ.ஞானசேகர்..