Friday, November 30, 2012

வேகமாக உயருகிறது கடல் நீர் மட்டம்


 சர்வதேச பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட மிக வேகமாக உலகில் உள்ள கடல் மட்டம் உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருவதன் காரணமாக பனிக்கட்டிகள் உருகி அதனால் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. இதனால், டோக்கியோ போன்ற கடற்கரையோர பகுதிகள் பலவும் நீருக்குள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட 60% வேகமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதை செயற்கைக் கோள் மூலமாக அறிந்து அதனை விஞ்ஞானிகள் கணித்ததோடு ஒப்பிட்டதில் இந்த விவரம் தெரிய வந்தது.


அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...


Wednesday, November 21, 2012

பறக்கும் பாம்பு


  பாம்பினங்களிலேயே மிகவும் அழகிய நிறங்கொண்ட பாம்பு "பறக்கும் பாம்பு' ஆகும். உண்மையில் இது பறவைகள்போல் பறப்பதில்லை. ஆனால் உயர்ந்த மரக்கிளையிலிருந்து கீழே உள்ள கிளைக்கு காற்றில் எழும்பிச் செல்கிறது. மேலும், இவை ஒரு மரத்திலிருந்து பல மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு மரத்திற்குத் தாவிக் குதிக்கும்.
   மரங்களில் வாழும் இந்தப் பாம்பு மிக வேகமாக மரங்களிடையே தாவிச் செல்லக்கூடியது. இது, தாவும்போது தன் உடலை விறைப்பாக வைத்துக்கொண்டு கீழ் நோக்கி வரும். அதே நேரத்தில் தன் வயிற்றுப் பகுதியை இழுத்துக்கொள்ளும். இந்தச் செயலால் இதன் விலா எலும்பின் வெளிப்பகுதி அகன்று நிற்கும். இதனால், பார்ப்பதற்கு இந்தப் பாம்பு பறப்பது போலத் தெரியும்.
   இந்தப் பாம்பு மென்மையான செதில்களுடன் மிகமெலிந்த உடலமைப்பைக் கொண்டிருக்கும். ஏறத்தாழ ஒரு மீட்டர் நீளம் இருக்கும். இதன் உடல் கருப்பு நிறத்தில் இருக்கும். அதில் ஆங்காங்கே மஞ்சள் மற்றும் வெண்மை நிறங்கொண்ட வளையங்களும், அவற்றின் நடுவில் பொட்டு வைத்ததுபோன்று சிவப்புப் புள்ளிகளும் காணப்படும்.
   இவ்வாறு பல்வேறு வண்ணங்கள் நிறைந்த உடலைக்கொண்டிருக்கும் இந்தப் பாம்பு "அணிகல மரப் பாம்பு'  என்றும், "தங்க மரப் பாம்பு' என்றும் அழைக்கப்படுகிறது.
   இந்தப் பாம்பு "கொலுபிரிடே' என்ற குடும்பத்தைச் சேர்ந்த விஷமற்ற மரப்பாம்பு வகையாகும். நம் நாட்டில் காணப்படும் பறக்கும் பாம்பு "கிரிசோபீலியா ஆர்நேடா'  என்ற இனத்தைச் சேர்ந்தது. இவ்வகைப் பாம்புகள் நம் நாட்டில் தென்மேற்குப் பகுதி மலைகளில் 1500 அடி உயரத்தில் காணப்படுகின்றன. மேலும், வட கிழக்குப் பகுதிகளான பிகார், ஒரிசா, அசாம் ஆகிய காட்டுப் பகுதிகளிலும், இலங்கை, தென் ஆசியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
   இந்தப் பாம்பின் மற்றொரு இனமான "கிரிசோபீலியா பார்டேசி' அந்தமான் தீவில் காணப்படுகிறது. பெரும்பாலும் அடர்ந்த காடுகளிலும், பெரிய மரங்களிலும் வசிக்கும் இந்தப் பாம்புகள், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வீடுகள் மற்றும் பூங்காக்களின் சுற்றுப்புறங்களில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
   மற்ற மரப் பாம்புகளைப் போல இந்தப் பாம்புகளும் பகல் வேளையில் இரை தேடுகின்றன. இவை பொதுவாக தாழ்வான புதர்களிலும், புல்லிலும், மரங்களிலும் காணப்படும் தவளை, பல்லி, ஓணான், சிறிய பறவைகளின் முட்டைகள், பூச்சிகள்போன்றவற்றை உண்ணும். இந்தப் பாம்புகளின் விஷம், சிறு பிராணிகளை அசைவற்றுப்போகச் செய்வதற்கு உதவுகிறது. ஆனால், இந்த விஷம் மனிதனுக்கு எந்தவிதமான தீங்கையும் விளைவிப்பதில்லை. பறக்கும் பாம்புகள் பெரும்பாலும் இரையை உயிருடனே உட்கொள்ளும். மரக் கிளைகளில் வேட்டையாடும்போது மிக மெதுவாக ஊர்ந்து செல்லும்.
   இவை ஏறத்தாழ ஆறுமுதல் பன்னிரண்டு முட்டைகள் வரை இடுவதாகத் தெரிகிறது.
   இந்தப் பாம்புகளின் பறக்கும் தன்மையைப் பற்றி குறிப்பாக மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பழங்கதைகள் இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் இவை பறவைகளாக இருந்து பின்னர் பாம்பாக மாறிவிட்டதாக இந்தப் பழங் கதைகள் கூறுகின்றன. ஆனால் இது உண்மையில்லை. அழகிய நிறங்கள் கொண்ட இந்த அணிகலப் பாம்புகள் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தப் பாம்புகள் வித்தியாசமான நிறங்களில் இருக்கும் ஒரே காரணத்திற்காகவே, இவற்றைப் பார்ப்பவர்கள்  நச்சுப் பாம்பு என்று நினைத்துக் கொன்றுவிடுகிறார்கள். இது தடுக்கப்பட்டு இந்தப் பாம்புகள் பாதுகாக்கப்படவேண்டும்.

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ... 


Tuesday, November 20, 2012

பல்லிகள்


 பல்லி என்றதுமே சுவரில் அங்கங்கே இருந்தபடி பூச்சி பிடித்துக்கொண்டிருக்குமே அதுதான் நினைவுக்கு வரும். இந்தவகைப் பல்லிகள் நம் வீடுகளில் நடமாடும் பூச்சிகளை பிடித்துத் தின்று வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதெல்லாம் குட்டிப்பல்லி வகைகள். முதலை சைசில் பல்லிகள் இருகின்றன. இந்தப்பல்லிகள் சமயத்தில் மனிதர்களையும் தாக்கிவிடும்.
கொமாட்டா பல்லி
 பார்த்த மாத்திரத்தில் தோற்றத்தாலேயே பயமுருத்தும் இந்த வயைப்பல்லிகள் 3மீட்டர் நீளம் கொண்டவை. எடை ஒரு சராசரி மனிதனின் எடையைப்போல் 70 கிலோவரை இருக்கும். இந்தோசினியத் தீவுகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. இவற்றின் உணவு பெரும்பாலும் அழுகிக் கியைக்கும் மிருகங்களின் உடல்தான். தோற்றத்தில் பெரிதாக இருந்தாலும் வேட்டையாடும் திறன் இல்லாதவை. அதனால் சிங்கம், புலி போன்ற மிருகங்கள் வேட்டையாடி சாப்பிட்டதில் மீந்துபோன உணவுகளை இவை சாப்பிடும். எதிரிகளிடம் இவை மாட்டிக்கொள்ளும்போது வாயில் இருந்து எச்சிலை எதிரி மிருகங்கள் மீது பீச்சியடிக்கும். இந்த எச்சிலில் விஷம் இருப்பதால் எதிரி விலங்குகள் அதை உணர்ந்து கொண்டு ஓட்டம் பியித்து விடும். இந்த வகைப்பல்லிகள் சமயங்களில் மனிதர்களையும் தாக்க முற்படும்.
       ப்ளையிங் டிராகன் லிசார்டு
 இது சாதாரன பல்லி வகைதான். ஆசியா வெப்ப மண்டல காடுகள் காணப்படுகின்றன. சுமார் 15 இனங்கள் உள்ளன. 8 (20 செமீ) இருக்கும். மழை நேரங்களில் அதிக காற்றோ, அதிக குளிரோ இதனால் தாங்க முடியாது. அதனால் அம்மாதிரி சமயங்களில் முடிந்தவரை பாதுகாப்பான இடம் தேடி பதுங்கிக் கொள்ளும்.
 இதன் சிறப்பு அம்சம், இதன் தாவும் திறன் தான். மரம் விட்டு மரம் தாவும்போது பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்தனை அழகு. இரண்டு மரங்களுக்கு இடையே அதிக பட்சதூரமான 8 மீட்டர் தூரத்தை இது கடக்கும்போது இவை காற்றில் மிதப்பது போல் தோற்றம் தரும். இதன் தோல் அமைப்பு இப்படி பறப்பதற்கு ஏதுவாக அமைந்திருப்பது சிறப்பு.
மானிட்டர் லிசார்டு
  உடும்பு வகைகளை இந்தப் பெயரிட்டு அழைக்கிறார்கள். மனிதர்களின் செல்லப் பிராணியாகவும் இவை வளர்க்கப்படுகிறது. இவை புத்திசாலிகள். நினைவாற்றலில் தேர்ந்தவை. பட்டுப்பூச்சி, மண்புழுவையும் உணவாகக் கொள்ளும். மலேசியாவில் மட்டும் இது அங்குள்லவர்களுக்கு உணவாகி விடுகிறது. உடும்பை அங்குள்ள பெரும்பாலான ஓட்டல்களில் சுவையான உணவுப் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.
       ரீகன்கவுட் லிசார்டு
  ஆப்பிரிக்காவிலும் மெக்சிகோவிலும் அதிகம் காணப்படும் இந்தவகைப் பல்லிகள் வாழ ஏற்ற இடமாக இருப்பது பாலைவனங்கள்தான். மண்ணில் இவை இருக்கும் போது இது சட்டென கண்ணில் படாது. அந்த அளவுக்கு மண்ணின் நிறம் அதன் நிறத்தோடு ஒத்திருந்து இதற்கு உதவுகின்றன.
 இந்த வகைப் பல்லிகள் எதிர்பாரமல் எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள நேரும்போது மூச்சை இழுத்துப் பிடித்து தன் உடம்பை பெரிதாக்கிக் காட்டும். இந்த திடிர் உடல் விரிவாக்கம் பார்த்து பயப்படாத எதிரி மீது, கண்ணில் இருந்து இரத்தத்தை பீய்ச்சியடிக்கும். நரம்புகள் வழியே மூளைக்குப் போகும் இரத்தத்தின் செயல்பாட்டை இப்படி நிறுத்திக் கொண்டு இப்படி கண் வழியே இரத்தம் பீய்ச்சும் போது எதிரி விலங்குகள் பயத்தில் ஓட்டம் பிடித்துவிடும்.
பிரில்டு லிசார்டு
 ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் இந்த வகை பல்லிகளின் ஸ்பெஷல், சிங்கத்தின் பிடரிமயிரை திருப்பிவைத்த மாதிரியான இதன் வித்தியாச முகத்தோற்றமே. நடக்கும், பறக்கும் பூச்சிகள் அத்தனையும் அவற்றின் உணவே. சின்ன பல்லியையும் பிடித்து உணவாக்கிக் கொள்ளும். சமயத்தில் இதைவிட பெரிய பல்லிக்கு இரையாகிவிடுவதும் உண்டு. கழுகு, ஆந்தை இதன் எதிரிகள்.

இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்.