Friday, June 17, 2011

நமது நாடு 24. நாடகத் தமிழ்


   தமிழ் இயல், இசை, நாடகம் என மூவகைப் படும். ஆதியில் நாடகத் தமிழும், பின் இசைத் தமிழும், அதன் பின் இயற்றமிழும் தோன்றின. இம்மூவகைத் தமிழும் மொழியின் இயற்கை வளர்ச்சிப்படிகளாகும்.
   ஒருகாலத்தில் மக்கள் பேச அறியாதிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் தமது கருத்துக்களை உடல் நிலை, முகம், பார்வை என்பவைகளால் வெளியிட்டனர். சதிர் என்று சொல்லப்படும் நாட்டியம் ஒரு பாட்டின் கருத்தை நடித்துக் காட்டுதலாக அமைந்துள்ளது. முற்காலத்தில் சிவனாடல், வேலன் ஆடல், திருமால் ஆடல் எனப் பலவகை ஆடல்கள் வழங்கின. இவ்வாடல்களும் சதிர் ஆட்டங்கள் போன்றனவே. நடிப்பு, நாடகம், கூத்து, துள்ளல் என்னும் சொற்கள் ஒரு காலத்தில் ஒரு பொருளில் வழங்கின. பிற்காலத்தில் நாடகம் என்பது பலர் சேர்ந்து ஒரு கதையை நடித்துக் காட்டுவதை மாத்திரம் குறிக்க வழங்குவதாயிற்று.
   ஒரு கருத்தை நடித்துக் காட்டும் ஆடலுக்குப்பின் கதையை நடித்துக் காட்டும் நாடகம் தோன்றிற்று. தமிழரிடையே தோன்றி வளர்ச்சியடைந்திருந்தது. தமிழருடைய கடவுள் நடராசன் எனப்படுகிறார். நடராசன் என்பதற்கு நடன சபைக்குத் தலைவன் என்பது பொருள். பொழுது போக்குக் கலையாகத் தொடங்கிய நாட்டியக் கலை கடவுட் புனிதமுடையதாகத் தமிழராற் கொள்லப்பட்டடு ஒருகாற் போற்றப்பட்டது.
   நாடகத் தமிழுக்கு உயிர், மெய்ப்பாடு. மெய்ப்பாடு என்பது உள்ளத்தே தோன்றும் உணர்ச்சி மெய்யிடத்திற்றேன்றுதல்.
   நாடகம் நடிக்கும் மேடை அரங்கு எனப்பட்டது. நாடகத் தமிழ் வளர்ச்சியடைந்த காலத்தில் நாடகத் தமிழ் இலக்கணங்கள் பல எழுதப்பட்டன. அவ்வகை இலக்கணங்கள் இன்று தமிழ் மொழியில் காணப்படவில்லை.
   இன்றைக்கு ஆயிரட்டு எண்ணூறு ஆண்டுகளின் முன் சிலப்பதிகாரம் என்னும் சிறந்த தமிவ் நூல் ஒன்று இளங்கோவடிகள் என்னும் சேர இளவரசனால் எழுதப்பட்டது. அந்நூலில் அரங்கேற்று காதை என்னும் ஒரு பகுதி உள்ளது. அதனகத்தே பழைய நாடகத் தமிழ் வழக்குகள் பல காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்குநல்லார் என்னும் புலவர் ஒருவர் உரை எழுதியுள்ளார். அவர், பழைய நாடகத் தமிழ் நூல்கள் பலவற்றிலிருந்து தமது உரைக்கு மேற்கோள் காட்டியிருக்கிறார். அதனால் முற்காலத்து நாடக இலக்கணங் கூறும் தமிழ் நூல்கள் பல இருந்தனவென்று நாம் நண்கு அறிகின்றோம்.
   சிறுமியர், குரவை கும்மி கோலாட்டம் எனப் பல ஆடல்கள் புரிந்தனர். அரசர் முன்பும் பெருமக்கள் முன்பும் ஆடி அவர்களை மகிழ்விக்கும் கூத்தர் கூத்தியர் பலர் இருந்தனர்.
   நாடக அரங்கு வட்டமாக இருந்தது. அதன்மீது இடப்பட்ட கொட்டில் வட்டவடிவினது. பலவகை ஓவியங்கள் எழுதிய ஆடைகள் மேற்கட்டியாகக் கட்டப்பட்டிருந்தன. அரங்கில் திரைச் சீலைகள் பயன்படுத்தப்பட்டன.
   பலர் முந்நிலையில் ஆடுதல் பாடுதல் முதலியன குலமகளிர்க்கு ஏற்ற செயலாக முற்காலத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் குல மகளிரும் ஆடல் பாடல்களை நன்கு அறிந்திருந்தனர். அரங்கு ஏறி நடிப்போர் கணிகையர் குலத்தினராவே யிருந்தனர்.

நமது நாடு தொடரும்...  

இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

No comments: