Saturday, January 31, 2015

கடல் ஆமைகள் சுற்றுச்சூழல் மாசினால் எப்படி பாதிக்கிறது?

 
கடல் ஆமைகள் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான உயிரினம். பனி யுகம் மற்றும் கண்டங்கள் இடம் பெயர்ந்த காலத்துக்கு முன்பிருந்தே வாழ்கின்றன. ஆனாலும் அவற்ரால் புவி வெப்பமாதல் மற்றும் கதல் நீர்மட்டம் உயர்வதை தாக்குப் பிடிக்க முடிவதில்லை. பச்சை ஆமை, ஹாவ்க்ஸ்பில், லாக்கர்கெட், கெம்ப்ஸ் ரைட்லி, ஆலிவ் ரைட்லி, தோல்பை ஆமை போன்ற 6 ஆமை இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.
  பெண் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் முட்டையிடுவதற்காக கடற்கரைக்கு வருகின்றன. அவை முட்டைகளை மணலில் குழிதோண்டி இடுகின்றன. புவி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கடற்கரையொட்டிய பகுதியில் இடப்படும் ஆமை முட்டைகள் அதிகமாக அழிகின்றன. அதேபோல வெப்பநிலை உயர்வு அதிகமான பெண் ஆமைகள் உருவாக காரணமாகின்றன. புளோரிடா மாகாணத்தில் ஆமை முட்டைகள் 90 சதவீதம் பெண் ஆமைக்குஞ்சுகளை பொரித்திருகின்றன. இதே நிலை நீடித்தால் விரைவில் ஆண் ஆமைகள் இல்லாமல் அந்த இணமே அழியும் நிலை உருவாகிவிடும்

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...