Saturday, September 29, 2012

பாலைவன உயிரினங்கள்


  பாலைவனத்தில் பார்க்குமிடமெல்லாம் மருந்துக்குக்கூட தண்ணீர்கிடைக்காது, ஆனால் இந்த இடத்திலும் பல உயிரினங்கள் வாழ்கின்றன. தாவரங்கள் முளைக்கின்றனர். இதுதான் இயற்கையின் வினோதம்.
  பாலைவனத்தில் பகலில் கடுமையான வெப்பமும் இரவில் கடுமையான குளிரும் இருக்கும். வெப்பத்தின் கொடுமையை தாங்கிக் கொள்வதற்காக ஆங்காங்கே காணப்படும் புதர்களில் அங்கு வாழும் உயிரினங்கள் ஒதுங்கிக்கொள்ளும். எப்போதவது பெய்யும் மழையின் நீரை சேமித்து வைத்துக்கொள்ளும்.
  பாலைவனத்தில் நத்தைகள் ஏராளமாக இருக்கும் அமெரிக்க பாலைவனங்களில் "பேக் ரேட்" என்ற ஒருவகை எலிகள் உண்டு. வட ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ள பாலைவனங்களில் "ஜெர்போவா" என்ற விலங்குகள் உண்டு. இவை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட கங்காருவைப்போல நீளமான பின்னங்கால்களை கொண்டிருக்கும். அரேபிய, ஆப்பிரிக்க பாலைவனங்களில் ஓநாய் வகையைச் சேர்ந்த ஒருவகை விலங்கு காணப்படுகிறது.
  பலவிதமான பல்லிகள், ஆந்தைகள், புழு, பூச்சிகள், கொடிய விஷமுடய பாம்புகளை பாலைவனங்களில் அதிகம் காணலாம். இவை உயிர்வாழ நீர் அதிகம் தேவையில்லை. வியர்வை, சிறுநீர் கூட மிகமிகக் குறைந்த அளவிலேயே வெளிப்படும். சிறு அளவில் வெளியிடப்படும் இவற்றின் சிறுநீரில் யூரியாவும், யூரிக் அமிலமும் அதிகம்.
  பாலைவன மிருகங்களில் மிக முக்கியமானது ஒட்டகமாகும். இதை பாலைவனக் கப்பல் என்கிறார்கள். உலர்ந்த புல்லும், முட்செடிகளும் இதன் உணவு. அதன் மூக்கு, காது, கண் முதலிவை மணலால் பாதிக்கப்படாடதபடி அமைந்துள்ளது.
  பாலைவனத்தில் புதர்செடிகளும், சப்பாத்திக்கள்ளி வகையைச் சேர்ந்த செடிகளும் காணப்படுகின்றன. புதர் செடிகளில் இலைகளை விட முட்கள்தான் அதிகம். இலைகள் குறைந்திருப்பதால் நீர் ஆவியாதல் குறைவாகவே இருக்கும். சப்பாத்திக் கள்ளியின் தண்டுப்பகுதி தடித்து சதைப்பற்றுள்ளதாக அமைந்திருக்கிறது. இதிலும் முள் மட்டுமே உண்டு. இலைகள் கிடையாது.
  சில வகை சப்பாத்திக் கள்ளிகளின் முட்கள் நிலத்தை நோக்கி வளர்ந்திருக்கும். இதன் நுனியில் தங்கும் பனித்துளிகள் நிலத்தில் விழுவதால் அடிப்பகுதியில் நீர்ப்பசை இருந்து கொண்டே இருக்கும். இதன் வேர்களும் நிலத்தின் அடியில் வெகுதூரம் பரந்து இருக்கும். பல நாள் வெயில் வாட்டிய பிறகு ஒரு மழை பெய்தால்கூட போதும் இந்த வேர்கள் நீரை முழுமையாக உறிஞ்சிக் கொள்கின்றன. சில கல்ளிச் செடிகள் அவற்றின் அருகில் வேறு எந்த செடியையும் வளர விடாது. இதனால் அதிக உணவும் நீரும் இதற்கு கிடைக்கின்றன. இப்படியாக உயிரினங்கள் பாலைவனத்தில் உயிர் வாழ்ந்து வருகின்றன.

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ... 

Saturday, September 15, 2012

காய்கறியில் பசுமையை அதிகரிக்கும் பெரும் மோசடி


 'காய்கறிகள் பெரியதாக காய்ப்பதற்கும், அதிக விளைச்சலை ஊக்குவிக்கவும் செலுத்தப்படும் ஆக்சிடோசின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்'.
 அதிக மகசூலை தருவதற்காக குறிப்பாக காய்கரிகள் பெரிய அளவில் காய்ப்பதற்காக விவசாயிகள்,  ஆக்சிடோசின் என்ற ஹார்மோனை பயிர்களுக்கு செலுத்துகின்றனர்.
 இதனால், காய்கறிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே அதிக பருமனையும், அழகான வடிவத்தையும், சில காய்கறிகள் அதிக பசுமை நிறத்தையும் பெறுகின்றன. பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் கத்தரிக்காயில் ஆக்சிடோசின் ஹார்மோன் அதிக அளவில் செலுத்தப்படுகிறது.
 ஆக்சிடோசின் ஹார்மோன் பிரசவத்தின்போது பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. விர, மனிதர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட மருந்து அட்டவணையில் ஆக்சிடோசின் இடம் பெற்றுள்ளது.
 ஆனால் விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு ஆக்சிடோசின் கொடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
 ஆக்சிடோசின் ஹார்மோன் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தொடர்ந்து சாப்பிடும் போது நரம்பு தளர்ச்சி, மலட்டுத்தன்மை, புற்றுநோய், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் கர்பிணிகளுக்கு பிரசவத்தின் போது பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.
 சந்தையில் ஆக்சிடோசின் விலை மலிவாகவும் எளிதாகவும் கிடைப்பதால், விவசாகள் அதை வாங்கி காய்கறி பயிர்களில் செலுத்துகின்றனர்.
 காய்கறிகள் மற்றும் பழங்களில் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்.
 'ஒரு காய்கறியையோ, பழத்தையோ வாங்கும் போது அது ஆக்சிடோசின் செலுத்தப்பட்டு விளைவிக்கப்பட்டதா? என்பதை கண்டறிய சாதாரண மக்களால் முடியாது. இந்த ஹார்மோனால் உடனடியாக பாதிப்பு இல்லாவிட்டாலும் பின்விளைவுகள் ஏற்படும் என்கின்றனர்'.

இயற்கை அன்னை நமக்கு அளித்த அழகு காடுகள்...

Friday, September 14, 2012

அழிவை நோக்கி 'கிரிசில்ட் ஜயன்ட்' அணில்கள், 4 கொம்பு மான்கள்!


 ஓசூர் வனப் பகுதிகளில் வசி்க்கும் கிரிசில்ட் ஜயன்ட் ஸ்குரில் (grizzled giant squirrel) எனப்படும் அரிய வகை அணில், 4 கொம்புடைய மான் மற்றும் நீண்ட வாலுள்ள குரங்குகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன. அவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் விருப்பம். 
 கிரிசில்ட் ஜெயின்ட் ஸ்குரில் (zoological name: Ratufa macroura) இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள மலைப் பகுதிகள், இந்தியாவில் காவேரி ஆற்றங்கரையோரம் இருக்கும் காடுகள், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள மலைக் காடுகளில் காணப்படுகிறது. 
 இந்த அணில்கள் அதன் வாழ்விடம் அழிக்கப்படுவதாலும், அவைகள் வேட்டையாடப்படுவதாலும் அழியும் அபாயத்தில் உள்ளது என்று இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச சங்கம் தெரிவித்துள்ளது. 
 முன்னர் இந்த வகை அணில் ஓசூர் வனப்பகுதியில் பதிவு செய்யப்படாத வகையாக இருந்தது. சமீபத்தில் ஏசியன் நேச்சர் கன்சர்வேஷன் பவுண்டேஷன்(ஏஎன்சிஎப்) என்னும் அமைப்பு இந்த வகை அணில் குறித்து ஆய்வு நடத்தத் துவங்கியது. 
 கடந்த 2009ம் ஆண்டில் ஏஎன்சிஎப் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கரன், சரவணன் மற்று செந்தில் குமார் ஆகியோர் இந்த வகை அணில்கள் மேலும் பல்வேறு இடங்களில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
  கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி (கேஏஎன்எஸ்) அமைப்பைச் சேர்ந்த பிரசன்னா என்பவர் அதிர்ஷ்டவசமாக கிரிசில்ட் ஜெயின்ட் ஸ்குரிலை கண்டு, அதை புகைப்படம் எடுத்ததால் இந்த வகை அணிகள் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
 அழியும் அபாயத்தில் இருக்கும் இன்னொரு இனம் நான்கு கொம்புகள் உள்ள மான் (டெட்ராசெரஸ் குவாட்ரிகார்னிஸ்). இதை சௌசிங்கா என்றும் அழைப்பார்கள். இந்த மான் அதிகம் தண்ணீர் குடிக்கும் தன்மை உடையது. அதனால் பெரும்பாலும் வற்றாத தண்ணீர் ஆதாரம் உள்ள இடங்களில் தான் வசிக்கும். 
 தமிழக வனத்துறையுடன் சேர்ந்து கேஏஎன்எஸ் மற்றும் ஏஎன்சிஎப் ஆகியவை ஓசூர் வனப் பகுதிகளில் நடத்திய வன விலங்குகள் கணக்கெடுப்பில் இந்த இரண்டு அரிய வகை உயிரினங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
 தமிழகத்தில் காவேரிக் கரையோரங்களில் வசிக்கும் நான்கு கொம்புகள் உள்ள மான் இனம் அநேகமாக அழிந்துவிட்டது என்று டாக்டர் ஏஜேடி ஜான்சிங் அன்மையில் தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓசூர் வனப் பகுதிக்குட்பட்ட ராயக்கோட்டா மலைத்தொடரில் உள்ள உடதுர்கம் பகுதியில் இறந்த மான் உடல் கண்டெடுக்கப்பட்டது.
 தற்போது அதே காவேரிக் கரையோரம் உள்ள பல இடங்களில் இந்த மான்கள் காணப்படுவது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். இந்த மான்கள் ஓசூர் வனத்தில் 3 மான்கள் கொண்ட சிறு சிறு குழுக்களாகத் திரிகின்றன. 1970களில் ஓசூர் வனப்பகுதி அலுவலராக இருந்த மறைந்த டாக்டர் ராஜா சிங்கின் மகன் டாக்டர் ரவி ராஜா சிங் அண்மையில் இந்த மான்களைப் பார்த்துள்ளார்.
 ஆடு, மாடுகள் மேய்ச்சல், விறகு சேகரித்தல், காட்டில் விளையும் பொருட்கள் சேகரித்ததலால் இயற்கை வளம் அதிகம் உள்ள இந்த பகுதிகள் அழிவை நோக்கிச் செல்கின்றன. இந்த அரிய உயிரினங்களை அழிவில் இருந்து காக்கும் வகையில் தற்போதைய வன அதிகாரியான உலகநாதன் கிரிசில்ட் ஜெயின்ட் ஸ்குரில் வசிப்பிடங்களின் நுழைவாயிலில் சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளார். அந்தப் பகுதியை எப்பொழுதும் கண்காணிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 கிரிசில்ட் ஜெயின்ட் ஸ்குரில், 4 கொம்புடைய மானைத் தொடர்ந்து லாங்குர் எனப்படும் நீண்ட வால் உடைய குரங்குகளும் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்

Thursday, September 13, 2012

வெட்டிவேர் செலவில்லாத சுத்திகரிப்பு கருவி!


 அறிவியல் எனற பெயரால் உயிருள்ள நிலத்தில் ரசாயன உரங்களை கொட்டினோம். அதன் விளைவு நிலம் வளமிழந்து போய்விட்டது. அதை மீண்டும் சீர்திருத்தி, பழையபடி இயற்கை விவசாயத்திற்கு கொண்டு வருவதற்கு இன்றைக்கு நிறையவே கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஆனால் இனி கஷ்டப்பட தேவையிருக்காது. எங்கெல்லாம் ரசாயன உரத்தால் பாதிக்கப்பட்ட நிலம் உள்ளதோ, அங்கு வெட்டிவேரினைப் பயிரிட்டால் போதும்... மண் பழையபடி உயிர்த்தன்மை மிக்கதாக மாறிவிடும். காரணம், மண்ணிலிருக்கும் விஷத்தன்மையை முற்க்கும் வல்லமை வெட்டிவேரிடம் இருக்கிறது.
  நாகரிகம் என்ற பெயரால் நகரங்கள் முழுக்கக் சாக்கடைகளை உருவாக்கி விட்டோம். தொழிற்சாலைக் கழிவுகளை, குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படும் ஆறுகளில் கலந்து ஓடச் செய்துவிட்டோம். இதனால் புற்றுநோய், நரம்புக் கோளாறு என்ற அதிபயங்கர ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் நம்மைத் தாக்க ஆரம்பித்துவிட்டன.
 ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் இப்படிபட்ட சூழ்நிலை உள்ள கழிவுநீர் வெளியே செல்லும் பகுதியில் வெட்டிவேர்களை வளர்த்ததில், கழிவுநீரில் இருந்த குரோமியம், காட்மியம் போன்ற போன்ற உயர் உலேகங்கள் எல்லாம் சிலமாதங்கலில் காணமல் போய்விட்டன. கழிவுநீர் நல்ல நீராக மாறிவிட்டது. இத்தைகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்தது வெட்டிவேர்.
 ஆஸ்திரேலியாவை காட்டிலும் சாக்கடைகள் அதிகம் ஓடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிவமைத்ததில், சில மாதங்களில் அந்த நீர் நல்ல நீராக மாரியது.
 நமது சென்னை மாநகரின் இதை வளர்க்கலாம். திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர்களையும் இம் முறையிலே சுத்திகரிக்கலாம் செலவே இல்லாமல்.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Tuesday, September 4, 2012

நெல்லு விளையுற பூமியில தட்டானும், தும்பியும் வாழணும்


 ஜெட் வேகத்தில் தட்டான், தும்பி பூச்சிகள் பறந்து செல்வது பார்ப்பதற்கு பரவசமூட்டும். குறிப்பாக நெல் வயல் பகுதிகளில் பகல் நேரத்தில் கூட இவை அதிகமாக சுற்றி திரிவதை காண முடியும். ஆனால் பல வகை பூச்சிகளிடமிருந்து நெற்பயிரை காக்கும் பாதுகாவலர்களாக இவ்விரு பூச்சியினங்களும் விளங்குகின்றன.
 உலகளவில் 6,000 வகையான இரை விழுங்கிகள் உள்ளன. அதில் தட்டான் மற்றும் தும்பி பூச்சிகள் முக்கியமானவை. தட்டான் மற்றும் தும்பி பூச்சிகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான உடல் அமைப்பை கொண்டிருந்தாலும் இரண்டும் வெவ்வேறு வகையை சேர்ந்தவை. உடல் அமைப்பில் சில வித்தியாசங்களை வைத்து தான் தட்டான், தும்பி பூச்சிகள் என்பதை கண்டறியமுடியும். பயிரின் பச்சையை தாக்கி, தீமை செய்யும் பூச்சிகளை தின்று அழித்து விடுகிறது. இதனால் இதை இரை விழுங்கிகள் என்றும் அழைக்கின்றனர்.
 கொசுக்களை அழிப்பவை: தாய் பூச்சிகள் விடும் முட்டையில் இருந்து வெளி யேறும் இப்பூச்சிகள் குறைந்தபட்சம் 8 நாள் முதல் அதிகபட்சம் 3 மாதம் வரை உயிர் வாழும். முட்டையில் இருந்து வெளிவந்தவுடன் நீர் நிலையில் உள்ள கொசு, பூச்சிகளை பிடித்து உண்டு தனது இரைவேட்டையை துவக்கி விடுகிறது. நீர்ப்பாங்கு உள்ள நெல் வயல்களுக்கு படையெடுக்கும் இவ்விரு பூச்சிகளும், அங்குள்ள புகையான், தத்துப்பூச்சி, இலை மடக்குப்புழுவை அழித்து விடுகிறது. பயிர்களை எளிதில் நாசம் செய்யக்கூடிய புகையான், தத்துப்பூச்சிகளை உருத்தெரியாமல் அழித்து விடுவதால் பயிர்கள் பாதுகாக்கப்படுகிறது. தட்டானும், தும்பையும் அதிகமாக பறந்தால் அந்த பகுதியில் நெற்பயிர் செழிப்பாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பலாம்.
 கண்கள் பெரியதாக பார்ப்பதற்கு முட்டைக் கண்கள் போல இருக்கும். இதன் ஒரு கண்ணில் 3000 கூட்டுக் கண்கள் இருக்கும். இந்த கண்களின் உதவியுடன் 360 டிகிரி அளவுக்கு உள்ள எல்லா பகுதிகளிலும் பறக்கிற இரைகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இவை 25 கிலோ மீட்டர் முதல் 35 கிலோ மீட்டர் வரை வேகமாக பறக்கும்.  

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ... 

கழிவறையை விட அசுத்தமானது உங்கள் செல்போன்


 கழிவறையை விட மிக அசுத்தமான ஒன்றாக நீங்கள் உபயோகப்படுத்தும் செல்போன் உள்ளது என்றால் அது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் அதுதான் உண்மை. ஏன் என்றால், பல இடங்களில், பல நபர்களால் பல சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அதனை எப்போதும் சுத்தப்படுத்துவதில்லை என்பதால், ஏராளமான கிருமிகள் நிறைந்ததாக செல்போன் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வயிற்று வலி, வயிற்று உபாதை, தொற்றுநோய் பரவல், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்பட கழிவறையை விட செல்போன்களே மிக அதிக அளவில் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
ஏராளமான கிருமிகளைக் கொண்டிருக்கும் செல்போன் எப்போதும் நமது கையிலும், வாய்க்கு அருகேவும் இருப்பதால் பல நோய் உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று அரிசோனா பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜித் துறை பேராசிரியர் சார்லஸ்  கெர்பா தெரிவித்துள்ளார்.

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்.....