Friday, June 10, 2011

தேள்


   தேள் கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள், செந்தேள். இதன் உடல் கணுக்களால் ஆனது. இன்னும் ஒரு தேள் இனம் நட்டுவாக்கிளி இது கொட்டினால் கவனிக்காவிடில் மரணம் நிச்சயம். இது ஆறு கால்களும், இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.
   தன்னேட பாதுகாப்புக்காகவும், உணவைப் பெறுவதற்கு உதவி செய்யவுமே தேள்களுக்கு விஷம் இருக்குது.வாலின் நுனியில் உள்ள கொடுக்கால் பூச்சிகளைக் கொட்டி, அது இறந்த பிறகோ அல்லது மயக்கமுற்ற பிறகோ அந்தப் பூச்சிகளை உண்ணும். உலக அளவுல சுமார் ஆயிரம் வகையான தேள்கள் இருக்கிறது. அவற்றில், எழுநூறு வகையான தேள்களுக்கு மிதமான, வீரியம் குறைந்த  விஷம் தான் உண்டு. இந்த நஞ்சைக்கொண்டு மனிதனைக் கொல்ல முடியாது. ஆனா அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள சில தேள்கள், இறப்பை உண்டாக்கும் அளவுக்கு கடுமையான விஷத்தைக் கொண்டிருக்கும்.
  சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்த இது, வறண்ட, வெப்பமான பகுதிகளில் வசிக்கும். இரவு நேரத்தில் நடமாடுற தேள், பலவிதமான வெட்டுக்கிளிகள், தத்துக்கிளி, கரப்பான்பூச்சி முதல் சிறிய வீட்டுப்பூச்சிகள் வரை சாப்பிட்டு, நமக்கு நன்மை சய்கிறது. தரை, சுவர், கற்கள், மண்மேடு போன்றவற்றுல உள்ள துவாரங்களிலும் இது ஓய்வு எடுக்கும்.அரை அங்குலம் முதல் 12 அங்குலம் வரை வளரும்.

இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்.
இயற்கை நமக்களித்த ஆதார ஒளி சூரியன்!

No comments: