Saturday, December 31, 2011

2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

   வலைப்பதிவு நன்பர்கள் அனைவருக்கும் என்

விலங்குகளின் பற்கள்

  முதுகெலும்புள்ள உயிரினங்களின் பற்கள் அனைத்தும் சிறிய அளவில் கால்சியத்தால் ஆனவை. இவை கெட்டியாக, வெண்மை நிறத்தில் காணப்படும். விலங்குகள் இத்தகைய பற்களைக் கொண்டு உணவை மென்று தின்னுகின்றன. மாமிசம் சாப்பிடும் விலங்குகளுக்கு பற்கள் கூர்மையாக இருக்கும். இவை மாமிசத்தை வேட்டையாடுவதற்காகவும், தங்கள் பாதுகாப்பிற்காகவும் அமைந்திருக்கும். கீழ்தாடை எழும்புகளில் பல் ஈறுகளில் பற்களின் வேர் பதிந்திருக்கும். பல திசுக்கள்ல் ஆன இந்த பற்கள் உறுதியாகவும், கெட்டியாகவும் அமைந்திருக்கும்.
   பாலூட்டிகளின் பற்கள் நீண்ட நாட்களுக்கு உறுதியாக இருக்கும். தொல்உயிரின ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் பற்களை கொண்டு அவை எந்த காலகட்டத்தில் வாழ்ந்துள்ளன என்றும், அவற்றின் உறவுகள் பற்றியும் கன்டறிந்து விடுகி்ன்றனர்.
   விலங்குகளின் உணவுமுறைக்கு ஏற்ப  அவற்றின் பற்கள் பல்வேறு அமைப்புகளில் காணப்படுகின்றன.
  உதாரனமாக கடினமான தாவரங்களை அரைத்து தின்பதற்கு ஏற்றவகையில் தாவர உண்ணிகளுக்கு  உறுதியான பின் கடவாய் பற்கள் அதிகமாக இருக்கும். மாமிச உண்ணிகளுக்கு இறைச்சியை கிழித்து சாப்பிடும் வகையில் கோரப்பற்கள் அதிகமக காணப்படும்.
   பாலூட்டிகளுக்கு 2வரிசைகளில் பற்கள் காணப்படும். குழந்தை பற்கள், பால் பற்கள், ஆரம்ப நிலைபற்கள், வளர்ச்சியடைந்த பற்கள் என்று நான்கு நிலைகளில் காணப்படும். பிறந்து 6 மாதங்களுக்குள் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கத் தொடங்கி விடுகிறது. இந்த நிலையில் சில குழந்தைகளுக்கு ஒன்று அல்லது பல பற்கள் காணப்படும். பின்னர், பால்பற்கள் விழுந்து உறுதியான பற்கள் முளைக்கத் தொடங்கும்.
   சில விலங்குகளுக்கு ஒரு வரிசையில் பற்கள் கைணப்படும். சில விலங்குகளுக்கு பல வரிசைகளில் பற்கள் காணப்படும். சுறா மீனுக்கு 2 வாரங்களுக்கு ஒரு முறை பழைய பற்கள் விழுந்து புதிதாக பற்கள் முளைக்கும்.
   கொறித்துத் தின்னும் விலங்குகளுக்கு பற்கள் உறுதியாக இருக்கும். எலி போன்ற விலங்குகளுக்கு முகத்தின் கீழ்பக்க அமைப்பு பாதுகாப்பு கவசம் போல காணப்படும்.
  தென் அமெரிக்காவில் வாழும் கினியா பிக்ஸ் மற்றும் முயல்களுக்கு பின்கடவாய் பற்களும், கூரிய வெட்டுப்பற்களும் காணப்படும்.

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

Tuesday, December 27, 2011

உருளைக்கிழங்கு சாப்பிட்டா பிரஷர் குறையுமாம்

   உருளைக்கிழங்கு என்று சொன்னாலே நம்மில் பலருக்கு ஞாபகம் வருவது சிப்ஸ். நொறுக்குதீனிகளில் உருளைக்கிழங்கு சிப்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள், இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.
    அதேநேரத்தில் உருளைக்கிழங்கு என்றாலே, 'ஐயோ 'என்று அலறுபவர்களும் உண்டு. கேஸ் டிரபிள், உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சனைகளை நினைத்து உருளைக்கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.
   ஆனால் 'நீங்கள் நினைப்பது தவறு. உருளைக்கிழங்கு ரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திறனுண்டு' என்று ஆய்வாளர்கள் அடித்துச்சொல்கிறார்கள்.
   ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்துகொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை, மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமேரிக்காவைச்சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இதுதொடர்பான ஆய்வை நடத்தியது.
    இந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோவேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிபுள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாதகாலம் இந்த உருளைக்கிழங்கை கொடுத்து வந்தனர்.
   பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது, அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடை அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
   அதெல்லாம் சரி, ரத்தக்கொதிப்பை குறைக்குமளவுக்கு உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?
    பைடோ கெமிக்கல் (Phytochemicals) என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில வேதிப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் உருளைக்கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.
   உருளைக்கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் பேன்றவற்றை அதுக வெப்பத்தில் சமைப்பதால், ரத்த கொதிப்பை குறைக்கவல்ல வேதிப்பொருட்களும், பைடோ கெமிக்கல்ஸ்களும் அழிக்கபட்டுவிடுகின்றன. எனவே, சிப்சில் எஞ்சியிருப்பது உருளைக்கிழங்கின் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தாதுக்கள் மட்டுமே எனறு சிப்ஸ் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் ஜோய் வின்சன்.
   இந்தஆய்வில் பயன்படுத்தப்பட்டது கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு என்பதால், ம்ம்ம்....நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நீங்கள் புலம்பவேண்டாம். ஏனென்றால், வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன்தான் இருக்குமென்று உருதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.
   இனிமேல் பிரஸர் குறைய தைரியமாக உருளைக்கிழங்கு சாப்பிடலாம்   

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.  

Monday, December 26, 2011

     மனிதன் உலகில் தோன்றுவதற்கு முன்பே பூமியில் தோன்றி  வாழ்ந்து வரும் பெருமை பூச்சியினங்களுக்கு உண்டு. இவற்றின் ஆற்றலும், சிந்தனைக்கே எட்டாத பணிகளும் நம்மை வியக்க வைக்கின்றன.
   சமிப காலம் வரை புதிராக இருந்த பூச்சியினங்களின் வாழ்க்கை    விசித்திரங்களை இயற்கை ஆய்வாளர்கள் தமது நுண்ணிறிவைக் கொண்டு, உழைப்பு, துணிவின் மூலம் கண்டு பிடித்திருக்கின்றனர். பூமியின் உண்வையாண "பழங்குடிகள்" பூச்சிகளே.
   பல்வேறு விதமான எதிரிகளை எதிர்த்துப் போராடி பல லட்சம் ஆண்டுகளாகப் பூமியில் நிலைத்து நிற்கும் பூச்சியினம், இயற்கையின் படைப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. பல துறைகளில் மனிதனின் திறனுக்கு அப்பாற்பட்ட அதிசயத் திறனை பூச்சியினம் பெற்றிருக்கிறது.
   பூச்சி இனத்தில் தச்சுத் தொழிலாளர்கள், மண்பாண்ட விற்பனர்கள், நெசவு நெய்பவர், வலைபின்னுபவர், வீரர்கள், பாடகர்கள், அஞ்சா நெஞ்சுறுதி படைத்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள், பொறியியல் வல்லூநர்கள் என்றும் பலர் உள்ளனர் என்றால் ஆச்சரியமாயில்லை?
   மனிதனுக்கு முன்பே கரையான்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளை அமைத்திருக்கின்றனர். குளவிகள் காகிதம், சுண்ணாம்புச் சாந்தும் உற்பத்தி செய்திருக்கின்றன. கம்பளிப் பூச்சிகள் நெசவுத் திறன் வாய்ந்தவையாக உள்ளன. எறும்புகள் தமது கூட்டு முயற்சியால் மண் குன்றுகளில் 'பெருநகர்களை' அமைத்திருக்கின்றன.
   இப்படி பூச்சியினங்களை ஆராயும்போது அவை ஏற்படுத்தும் ஆச்சரியம் விரிந்துகொண்ட் போகிறது.
பூச்சி, பறவை, விலங்குகள் இவைகளிடம் இருந்துதான் மனிதன் தொழிலைக் கற்று இருக்க வேண்டும் இதன் மூலம் அறியப்படுகிறது.

வனவிலங்குகள், பறவைகள்,
பூச்சிகள்  இற்றைக் காத்து இயற்கையை காப்போம்...

Thursday, December 22, 2011

வவ்வால் பறக்கும் ரகசியம்


    குட்டி போட்டு பால் தருவதால், வவ்வாலை பறவை வகைகளில் சேர்க்க முடியாது. வவ்வாலுக்கு கண்கள் உண்டு இருந்தாலும் அதற்கு பார்வைத்திறன் தேவையில்லை. வவ்வால் 'சவுண்டு ரேஞ்சிங்' என்ற முறைப்படி இருளில் மோதிக்கொள்ளாமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப பறந்து செல்கிறது. இதற்கு அல்ட்ரா சவுண்ட் என்ற ஒலி அலைகள் உதவுகின்றன. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் சைக்கிள்கள் (சைக்கிள் என்பது ஒலிகளுக்கான அளவு) வரைதான் ஒலி அலைகளை உணர முடியும்.
   வவ்வாலின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சைக்கிள் அளவில் ஒலி உண்டாகிறது. இந்த சத்தத்தை நம்மால் உணர முடியாது. இவை இந்த சத்தத்தை சின்ன சின்ன துடிப்பலைகளாகத் தான் வெளிப்படுத்தும். வவ்வால்கள் வினாடிக்கு 5 முதல் 60 வரை துடிப்பலைகளை வெளிப்படுத்தும்.
    ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம்தான்.
    17 மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தால், வவ்வால் வெளிப்படுத்தும் அல்ட்டாசவுண்ட் அதைப் போய் அடைந்து திரும்ப ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரமாகும். எனவே வெளிப்படுத்தும் சவுண்டுக்கும், எதிரொலித்து திரும்பும் சவுண்டுக்கும், இடையே உள்ள நேர வித்தியாசத்தை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப சாமர்த்தியமாக பறக்கிறது வவ்வால்.

காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன, பெருமளவில் மனிதகுலத்திற்கு...

காற்று மாசுபடுதல்


     இயற்கையுடன் இணைந்து வாழும்போது நாம் ஆரோக்கியமாக வாழலாம். கடந்த நூற்றாண்டில் ஏராளமான அறிவியல், தொழில் புரட்சி பல நன்மைகளைச் செய்துள்ளது. என்றாலும், சுற்றுப்புறமும், நாம் சுவாசிக்கும் காற்றும் மாசுபடுவதால், பலவிதமான தீமைகள் உண்டாகுகின்றன.
    காற்றில் கலக்கும் ரசாயன கழிவுகள் காற்றை அசுத்தமாக்கி விடுகின்றன. இதற்கு காற்று மாசுபடுதல் என்று பெயர். சமையல் வாயு, மின்சார விளக்குகளின் வெப்பம், வாகனங்களில் இருந்து வெள்வரும் கார்பன்-மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் மாசை உண்டாக்குகிறது.
    தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் சல்பர்-டை-ஆக்சைடு, கார்பன்-மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றில் ஹைட்ரோ கார்பன், புற்றுநோயை உண்டாக்கக் கூ டியது.
    சில ரசாயனங்கள் காற்றில் உள்ள நீர்த் திவலைகளுடன் சேர்ந்து பனி மூட்டத்தை உருவாக்கி விடுகின்றன. இதை சுவாசித்தால், உடனடியாக உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...    

Wednesday, December 21, 2011

கழுதைப்புலி

     கழுதைப்புலி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர்   விலங்காகும். இவ்விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது. இவ்விலங்குகள் ஒரே இடத்தில் வசிக்காதவை திரிந்துகொண்டிருக்கும்.  
   கழுதைப்புலி அசாத்திய திறமை உடைய ஒரு விலங்கு. மோப்பம், சப்தம் ஆகியவற்றை உணர்வதில் கில்லாடி. பார்க் சாதாரனமாக இருந்தாலும் மிகவும் கொடுரமான விலங்கு. விதவிதமா ஊளையிட்டே தன் இன நன்பர்களுக்கு சொல்ல நினைக்கும் சங்கதியைத் தெரிவித்து விடுமாம். இதனுடைய வாலின் அசைவுகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும் அதன் எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ளலாம். வால் நுனி பூமியை நோக்கி இருந்தால், சாதரனமாக இருக்கிறது என்று அர்த்தம். சிலிர்த்துக்கொண்டு நிமிர்ந்து  இருந்தால் எதற்கும் தயாராகிவிட்டது என்று அர்த்தம். வால் வில்லாய் வளைந்து முதுகைத் தொட்டுக் கொண்டு இருந்தால், 'ஜாலியாக' உள்ளது என்று அர்த்தம். வாலைச்சுருட்டி பின்னங்கால்களுக்கு இடையியே இடுக்கி வைத்துக்கொண்டு இருந்தால், எதையோ பார்த்து பயந்து போய் ஓடுகிறது என்று அர்த்தம்.
   கழுதைப் புலிகள் உற்சாகமான நேரங்களில், காடு அதிர சப்த மாக பாடுமாம். கழுதைப்புலிகள் வேட்டையாட நினைக்கும் விலங்கை கூட்டம் போட்டுத்தான் தேர்ந்தெடுக்குமாம். கழுதைப்புலிகளின் எண்ணிக்கை அதிகமமாக இருந்தால், இன்று பெரிய வேட்டை நடக்கப்போகிறது என்று அர்த்தம். அந்தி சாயிம் நேரத்தில் தான் கழுதைப்புலிகள் கொலைவெறியுடன் வேட்டையாடச் செல்லும். எந்த வகை விலங்கை தேர்ந்தெடுத்தாலும் எந்த விலங்கு பலவீனமாக உள்ளது என்று கண்டுபிடித்து அதை தொடர்ந்து சென்று வேட்டையாடுமாம். எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் கூட்டமாக சேர்ந்து தாக்கும்.
   கழுதைப்புலி வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். பெண் கழுதைப்புலிகள் 2-3 வருடங்களில் பருவமடைந்து இனப்பெருக்கத்திற்கு தயராகும். இதன் பேறுகாலம் 88 முதல் 92 நாட்களாகும். தாய் கழுதைப்புலி குட்டிகளை பெரும்பாலும் குகைகளில் ஈன்றெடுக்கும். பொதுவாக 1 முதல் 5 குட்டிகள் வரை ஈனும். குட்டிகள் பிறந்த 30 நாட்களுக்குப் பிறகு மாமிச உணவை உட்கொள்ள ஆரம்பிக்கும்.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...