Monday, July 2, 2012

'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்

  புன்செய் நிலத்தில் விளையும் நல்ல சத்தான தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை யாரும் பயன்படுத்துவதில்லை. நன்செய் நிலத்தில் விளையும் தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை அதிகம் பயன்படுத்துகிறோம். நமது முன்னேர்கள் நன்செய் தானியங்கள் நஞ்சு  புன்செய் பயிர் தானியங்கள் சத்து என்பர். அப்படிபட்ட தானியங்களில் ஒன்றுதான் கம்பு.
    நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.
   கம்பு பயிர் உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் ஆப்பிரிக்கா, இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வரும் ஒரு சத்துமிக்கப் தானியப் பயிராகும். கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதன்மை பெற்று விளங்குகின்றது. போதிய அளவு மாவுச்சத்தும், தேவையான அமிலங்களான கரோட்டின், லைசின் ஆகியவற்றை பெற்ற புரதமும், வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த தானியம் கம்பு, தங்க தானியம் என்று அழைக்கப்படுகிறது.
   உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் வைட்டமின் சத்துக் குறைவேயாகும். வைட்டமின் அளவில் கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் சிறந்தே விழங்குகிறது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணி பீட்டா கரோட்டீன். இது கம்பு பயிரில் இயற்கையிலேயே அதிக அளவில் உள்ளது. அரிசியில் அதிக பீட்டா கரோட்டீன் உள்ள தங்க அரிசி ரகங்களை உருவாக்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் கம்பில் இயற்கையிலேயே மஞ்சல் நிறம் கொண்ட தானியங்கள் அதிக அளவில் பீட்டா கரோட்டீனைக் கொண்டுள்ளாதாக ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ரிசாட் கண்டறிந்துள்ளது. கம்பு உணவு ஏழை எளிய கிராமங்களில் உள்ள மக்களால் மட்டுமே உண்ணப்படும் உணவு என்ற எண்ணம் பரவலாக உள்ளது. தற்போது கிராமங்களிலும் இந்நிலை மாறி அரிசி, கோதுமை உணவு அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இப்படி ஒரு குறிப்பிட்ட உணவு மட்டுமே உட்கொள்வதால் சில சத்துக் குறைபாடு நோய்கள் வரக்கூடும். கம்பு தானியத்தில் அரிசியை போலவே பல்வேறு மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கலாம். ஆகையால் நாம் உண்ணும் உணவில் சத்து நிறைந்த கம்பையும் ஓர் அங்கமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் பல சத்துக்குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.
      கம்பு மட்டுமல்லாமல் நமது உணவில் சேர்க்க மறந்து போன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற  தானியங்கள் இன்னும் பல தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் இல்லைமல் ஆரோக்கியமாக நமது முன்னோர்கள் போல வாழலாம்.

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...

No comments: