Saturday, July 30, 2011

கிவி பறவை (Kiwi)

      கிவி பறவை (Kiwi) இது ஒரு கோழி இனம் இது பல வித்தியாசமான பன்புகள் கொண்டது. இதன் இறக்கைகள் மென்மையான சாம்பல்-பழுப்பு நிறத்தில் சிறிய மற்றும் மறைக்கப்பட்டதாக இருக்கும். மற்றும் மூக்கு நீளமானது வளைந்து இருக்கும். கால்களில் நான்கு விரல்களில் ஒரு பெரிய தடித்த மற்றும் தசை உள்ளன. கிவி தனித்து இரவு நேரங்களில் நடமாடும், இவை பகல் முழுவதும் பொந்துகளில் தூங்கும் மற்றும் புழுக்கள், பூச்சிகள், மற்றும் பழங்களை உண்ணும் இவை நியூசிலாந்து அதை சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளில் வாழ்கின்றனர்.
     கிவியின் முட்டைகள் தாயின் அளவை பொருத்து பெரிதாக உள்ளன, பெண் கிவி தனது உடல் நிறையில் 15-20 சதவிதத்திற்கு சமமான ஒரு முட்டையை இடும். தீக்கோழி முட்டைகள் பெண்தீக்கோழி தான் எடையில் வெறும் 2 சதவீதமாகவும், மனிதன் அதன் தாயின் எடையில் வெறும் 5 சதவீத எடையுடையது.
     கிவி அனைத்தும் ஐந்து அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் உள்ளன, அனைத்து இனங்களும் மோசமான வரலாற்று காடு அழித்தலால் பாதிக்கப்பட்டது. ஆனால் அவைகள் காட்டுவசிப்பிடங்களை தற்போது பெரிய பகுதிகள் மற்றும் தேசிய பூங்காக்களில் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது அவைகளின் உயிர் பிழைத்தலுக்கு மிக பெரிய அச்சுருத்தல், பாலூட்டி கொன்றுண்ணுகள் வேட்டையாடிகளைல் உள்ளது.
    கிவி  நியூசிலாந்தின் தேசிய அடையாளமாக உள்ளது. ஒரு சின்னமாக கிவி முதல் நியூசிலாந்து பிரிவுகளின் முத்திரைகள்  19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்தது. இது பின்னர் 1886 இல் தென் சென்டர்பரி பட்டாலியன் மற்றும் 1887 இல் ஹேஸ்டிங்ஸ் துப்பாக்கி தன்னார்வலர்களின் முத்திரைகள் இடம்பெற்றது. பிறகு விரைவில், கிவி பல இராணுவ முத்திரைகளில் வெளிவந்தது, மற்றும் 1906 இல் கிவி, ஷூ பாலிஷ்க்கு  இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
   முதல் உலக போரின் போது, நியூசிலாந்து வீரர்கள் பெயர் கிவி "kiwi" பொது பயன்பாட்டிற்கு வந்தது, மற்றும் ஒரு மாபெரும் கிவி (இப்போது Bulford Kiwi அறியப்படுகிறது),
    கிவி Kiwi நியூசிலாந்தில் மிகவும் நன்கு அறியப்பட்ட தேசிய சின்னமாக மாறிவிட்டது, மற்றும் பறவை பல நியூசிலாந்து நகரங்களில், கிளப் மற்றும் அமைப்புக்களின் ஆயுத, மற்றும் முத்திரைகள் கோட் முக்கியமாக உள்ளது. நியூசிலாந்து டாலரில் பெரும்பாலும் கிவி "kiwi டாலர்" என குறிப்பிடப்படுகிறது.

வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...

  

Thursday, July 28, 2011

நமது நாடு 29.தமிழரின் வீரவாழ்க்கை

    வீரம் என்பது மக்கள் எல்லோராலும் கொண்டாடப்படும் சிறந்த மன உணர்ச்சி. ஒரு சிறந்த கொள்கையின் பொருட்டுத், தமது உயிருக்கு நேரும் கேட்டைப் பொருத்தாது எதிர்த்துப் போராடுதலே வீரம் என ஒருவாறு கூறலாம். உயிர் துறக்க ஒருக்கமாயிருத்தலின் வீரம் என்பதும் துறவுபோன்ற அரிய உணர்ச்சியாகும்.
    தமது நாட்டைப் பகைவரின்றும் காத்தற்பொருட்டு ஒருவராற் காட்டப்படும் வீரம் மிக உயர்வுடையதாகக் கொள்ளப்பட்டது. முற்காலத்தில் வீரத்தாற் சிறந்தவன் ஒருவனே அரசன் ஆனான். அவனே படையை நடத்திச் சென்றான். அரசனுக்கு அடுத்தபடியில் படைத் தலைவன் முதன்மையுடையவனா யிருந்தான். வீரர்களுக்குப் பட்டங்கள் அரசனால் வழங்கப்பட்டன. இனினும் அரசினால் பெருமக்களுக்கு அளிக்கப்படும் பட்டங்களிற் பல அவ்வீர பட்டங்களின் எதிர் ஒலிகளேயாகும்.
   முற்கால ஆடவர் தாம் வீரர் என்னும் பெயர் பெறுதல் வேண்டுமென விரும்பினார்கள். வீரனை மக்களும் அரசனும் மதித்தனர். பெண்கள் யாதேனும் ஒரு வீரச் செயலைக் காட்டுகின்ற ஒரு வீரனையே மணக்க விரும்பினார்கள். இன்று பெண்கள் கழுத்தில் அணியும் தாலியும் வீரத்தை உணர்த்துவதே. முற்காலப் பெண்கள் தம் கணவர் புலியைக்கொன்று வீரத்தின் அறிகுறியாகக் கொண்டுவந்த அதன் பற்களைக் கயிற்றிற் கோத்துக் கழுத்தில் மாலையாக அனிந்தார்கள். இன்றும் பொன்னினாற் செய்யப்பட்டுத் திருமணக் காலத்தில் அணியப்படும் தாலி அவ்வழக்கத்தின் எதிரொலியேயாகும். ஆரிய மக்களே தமிழ் நாட்டுக்கு இவ்வழக்கத்தைக் கொண்டுவந்து புகுத்தினார்கள் என வரலாறு அறியாத சிலர் கூறுவர். ஆரியர்களிடத்தில் தாலிகட்டும் சடங்குகளோ வழக்கங்களோ ஒரு போதும் இருக்கவில்லை.
   நாட்டின் பொருட்டு யாதேனும் ஒரு வீரச்செயலைக் காட்டி மடிந்து போகிறவனே வானுலகம் புகுகின்றான் என்று மக்கள் நம்பினார்கள். போரில் இறவாது நோய்வாய்ப்பட்டு இறந்த அரசை வாளாற் பிளந்து, பின்பு அடக்கஞ் செய்தல் முற்காலத்தில் மரபு என்பது தமிழ் இலக்கியங்களிற் காணப்படுகின்றது. அவ்வாறு செய்தல் அவர்கள் போரில் வாளால் வெட்டுண்டிறந்தார்கள் எனபதைக் குறிப்பதற்கேயாம். இதனால் போரிடத்து மடிதலை அக்காலமக்கள் எவ்வளவு உயர்வாகக் கருதினார்கள் என்பது நன்கு விளங்குகின்றது. போரிற் புறங் கொடுத்தாலும் முதுகிற்காயம் படுதலும் இழிவுடையன என்று கருதப்பட்டன. முதுகிற் புண்பட்ட அரசர் பலர் நாணத்தினால் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார்கள். முகத்திலும் மார்பிலும் பட்டு ஆறிய வாள், அம்புத் தழும்புகள் வீரபதக்கங்களிலும் (Medals)சிறந்த அணிகலன்களாக மதிக்கப்பட்டன. ஒவ்வொறு வீரனும் தனது நாட்டின்பொருட்டு உயிரைத் துரும்பென மதித்தான். போரிடத்தே வியக்கத் தகும் வீரச் செயலைக் காட்டி ஒருவன் இறந்தால் இறந்த இடத்தில் அவன் வீரச் செயல்களை எழுதிய கல் நடப்பட்டது.
   ஆடவர் மட்டுமல்லர், பெண்டிரும் வீரம் செறிந்து விளங்கினார்கள். தங்கணவரும் புதல்வரும் போர்க்களத்தே சென்று வீரச் செயல்களைக் காட்டுவதை அவர்கள் விரும்பினார்கள் வியக்கத் தகும் வீரச்செயலைக் காட்டி அவர்கள் போர்களத்தே மாண்டனராயின் அதுகுறித்து அவர்கள் கவன்று கண்ணீர் வடித்திலர், அவர் போரிற் புறங்கொடுத்தோடி வந்தாராயினும், முதுகிற் புண்பட்டாராயினும் பெரிதும் வருந்தினார்கள். பழைய தமிழரின் வீரத்தை நினைக்கும் போது எமது உள்ளம் சுழலுகின்றது. இன்று அவ்வீரம் எங்கு ஒளித்தது!

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

Wednesday, July 27, 2011

டிராகன் பழம் (Dragon Fruit )

    டிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை. நானும் இதைப்பற்றி படித்திருக்கிறேன் கேள்விபட்டு இகுக்கிறேன்.  இந்தப் பழத்தை பார்ப்பதற்கு நம்ம ஊர் சப்பாத்தி கள்ளி பழம்போல் உள்ளது. உள் நிறமும் அப்படித்தான் இருக்கிறது. இது ஒரு கற்றாலை குடும்பம். கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இதன் நிறம், வடிவம் மற்றும் திகைப்பூட்டும் பூக்கள் இதன் பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். இரவில் பூக்கள் பூப்பதால் இதை "நைட் ராணி" என்று கூறப்படுகிறது. வழக்கமாக பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், அது மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணலாம். இந்த பழத்தில் பச்சை செதில்கள் போல் அமைப்பு உள்ளது. பழம் மையத்தில், இனிப்பு கூழ் சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
     டிராகன் பழம் ஒரு மிதமான அளவு உலர் வெப்ப மண்டல சீதோஷ்ண நிலையில் வளரும். இதன்  சரியான பிறப்பிடம் தெரியவில்லை, ஆனால் தெற்கு பெலிஸ் மூலமாக மெக்ஸிக்கோ, குவாதமாலா, எல் சால்வடார் மற்றும் கோஸ்டா ரிகா இருக்க வாய்ப்பு உள்ளது. இது வெப்ப மண்டல பகுதிகளில் உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது.
   மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் சிறிய அளவீடுகளில் வணிக ரீதியாக வளர்த்து குறிப்பாக கொலம்பியாவில்புகழ்பெற்று விளங்குகிறது. இப்போது அமெரிக்க, ஆசிய, மெக்ஸிக்கோ, வியட்நாம் வரை பரவியுள்ளது. உற்பத்தி மெக்ஸிக்கோ,    இந்தோனேஷியா (குறிப்பாக மேற்கு ஜாவாவில்), தாய்வான், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, மலேஷியா, மற்றும் மிக சமீபத்தில் வங்காளம் போன்ற ஆசிய நாடுகளில் பயிரிடப்படுகின்றன. அவைகள் ஓகினாவாவில், ஹவாய், இஸ்ரேல், ஆகிய இடங்களில் காணப்படுகின்றன வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு சீனாவில் பயிரிடப்படுகின்றன.
     டிராகன் பழம் மகரந்த சேர்க்கை வெளவால்கள் மற்றும் அந்துப்பூச்சிகளாள் இரவில்  ஏற்படுகிறது. பழங்கள் சிவப்பு தோல் மற்றும் வெள்ளை சதை கொண்டிருக்கிறது, சிவப்பு தோல் மற்றும் சிவப்பு சதை உள்ளது, மஞ்சள் தோல் மற்றும் வெள்ளை சதை கொண்டிருக்கிறது.
     தாவரம் வளர குறைந்தது மூன்று மாதங்களுக்கு தேவைப்படுகிறது. அது பின்னர் ஒவ்வொரு மாதம் வரை ஆறு மாத காலம் வரை பழம் விளைகிறது. ஒவ்வொரு பழம் 700 மற்றும் 800 கிராம் வரை எடையுள்ளதாக. ஸ்வீட் டிராகன் பழம் மென்மையான நறுமணத்தை கொண்டிருக்கிறது.
  104F வரையிலான வெப்பநிலைகளை சமாளித்துக்கொள்ளும், மற்றும் பனி குறுகிய காலமே தாங்கும் ஆனால் நீண்ட குளிரிரை தாங்காது சேதம் ஏற்படும்.
      டிராகன் பழம் 20-50 ஆண்டுகள் மழை   ஈரமான, வெப்ப மண்டல பகுதிகளில், தாவரங்கள் நன்றாக வளர்கின்றன.
  100 கிராம் பழத்தில் உள்ள  ஊட்டச்சத்துகள் தோரயமாக.
நீர் 80-90 கிராம்
கார்போஹைட்ரேட்கள் 9-14 கிராம்
புரதம் 0.15-0.5 கிராம்
கொழுப்பு 0.1-0.6 கிராம்
இழை 0.3-0.9 கிராம்
சாம்பல் 0.4-0.7 கிராம்
கலோரிகள்: 35-50
கால்சியம் 6-10 மி
இரும்பு 0.3-0.7 மிகி
பாஸ்பரஸ் 16 - 36 மி.கி.
கேரட்டின் (வைட்டமின் A) தடயங்கள்
தயாமின் (வைட்டமின் B1) தடயங்கள்
ரிபோஃப்ளாவினோடு (விட்டமின் B2) தடயங்கள்
நியாஸின் (வைட்டமின் B3) 0.2-0.45 மி
அஸ்கார்பிக் அமிலம் (விட்டமின் சி) 4-25 மி
இந்த புள்ளிவிவரங்கள் சாகுபடி நிலைமைகளின் படி மாறும். ஆரோக்கியமான ஆரோக்கியமான பழம் டிராகன் பழம்.

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...

Monday, July 25, 2011

காஃபி (Coffee)

    காஃபி (Coffee) இதை நாம் அனைவரும் விரும்பி அருந்தும் பானம். இந்தக் காஃபி எங்கிருந்து தோன்றியது தெரியுமா? எதியோப்பியாவில்தான் முதன் முதலில் காஃபிச் செடிகள் தோன்றின.  
   ஆனால் ஒரு செவி வழி கதை பரவலாக உண்டு கதையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த   சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள். ஆடுகள் ஏன் அப்படி நடந்து கொள்கிறது அவர்களுக்கு தெரியவில்லை மறு நாளும் ஒரு குறிப்பிட்ட செடியின் இலை, காய்களை சாப்பிட்டு சுறு சுறுப்பாக இருந்தது அதுதான் காப்பிச் செடி. ஆடுகள் காஃபிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்ததெனக் கண்டு தாங்களும் அவ்வாறே உண்டு காப்பியின் சிறப்பான உணர்வூட்டும் தன்மையை உணர்ந்தனர். இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும்.
     700 ஆண்டுகளுக்கு முன்னர், எதியோப்பியாவிலிருந்து ஏமன் நாட்டுக்கும் பிற அரபு நாடுகளுக்கும் காப்பிச் செடி கொண்டுபோகப்பட்டது. அரபு வியாபாரிகள்தான் காஃபி விதைகளை (400 ஆண்டுகளுக்கு முன்னர்) ஆசியா கண்டத்துக்கும் இந்தியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் விற்பனைக்காகக் கொண்டு சென்றனர். 1727-ம் ஆண்டு பிரேசில் நாட்டில்தான் முதல் காஃபி எஸ்டேட் நிறுவப்பட்டது.
   இந்தியாவுக்கு காஃபி வந்தது ஒரு சுவையான வரலாறு: 1720-ம் ஆண்டு பாபா புதான் என்பவர் மெக்காவுக்குச் சென்று வரும்போது 7 காஃபி விதைகளைக் கொண்டு வந்தார். கர்நாடகாவிலுள்ள சிக்மகளூர் கிராமத்தில் தனது நிலத்தில் இந்த விதைகளை விதைத்தார். இந்தியக் காஃபிச் செடிகள் அனைத்தும் இந்த 7 விதைகளிலிருந்துதான் தோன்றின. பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால் நீலகிரி மலைப் பகுதியில் காஃபி எஸ்டேட்டுகள் ஏராளமாக நிறுவப்பட்டன. இன்றும் இது தொடர்கிறது.
         காஃபி (Coffee) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்). ஆரம்பக் காலத்தில் பானமாக இல்லாமல் வெறுமனே காப்பி இலைகளைச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.
காஃபி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காஃபிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காஃபி ஆகும். இந்தியாவில் பலரும் பாலுடனும் சிறிது சர்க்கரை (சீனி) சேர்த்துக் குடிப்பார்கள். மேற்கு நாடுகளில் பால் இல்லாமலும், சர்கரை இல்லாமலும் கசப்பான கரும் காஃபியாகக் குடிக்கிறார்கள். சர்க்கரை சேர்த்துக் குடித்தாலும் காஃபி சற்று கசப்பான நீர்ம உணவுதான் (பானம்தான்). ஒரு குவளை (தம்ளார்) (200 மில்லி லிட்டர்) காஃபி குடித்தாலே அதில் 80-140 மில்லி கிராம் வரை காஃவீன் என்னும் போதைப் பொருள் இருக்கும்   இந்த காஃவீன் என்னும் போதைப் பொருள் இருப்பதால் காஃபி குடிப்பவர்கள் ஒருவகையான பழக்க அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள்.

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்...

Saturday, July 23, 2011

நமது நாடு 28.கடவுட் கொள்கை.

   மிகப் பழைய காலத்திலேயே தமிழ் மக்கள், எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் உண்டு என அறிந்து அவரை வழிபட்டார்கள். நினைவுக்கு எட்டாதவர், எல்லாவற்றையும் இயக்குபவர் என்னும் பொருளில் அவர்கள் எல்லாம்வல்ல அம்முழுமுதற் பொருளுக்குக் கடவுள் இயவுள் என்னும் பெயர்களை இட்டு வழங்கினர். ஆறாயிரம் ஆண்டுகளுக்குமுன் பொறிக்கப்பட்ட மொகஞ்சொதரோ முத்திரைகளில் கடவுள்  என்னும் பெயர் காணப்படுகிறது.
    கடவுள் உயிர்களிடத்து தாயுந் தந்தையும் பேன்று அருள் வழங்குபவர் என அவர்கள் நம்பினார்கள். ஆகவே அவர்கள் கடவுளை அம்மை வடிவிலும் அப்பர் வடிவிலும் வைத்து வழிபட்டார்கள். அம்மையும் அப்பரும் வேறு வேறு அல்லர் என்பதை விளக்கும் பொருட்டுப் பாதி ஆணும் பாதி பெண்ணுமாயுள்ள வடிவங்களையும் வைத்து அவர்கள் வழிபட்டார்கள்.
   நல்வினை தீவினைகளின் விளைவாகிய ஊழ், மறு பிறப்பு, உயிர்களின் அழிவின்மை போன்ற உண்மைகள் அவர்களால் நன்கு அறியப்பட்டிருந்தன. உள்ளத்தை ஒருவழிப்படுத்தி இறைவனை நினைத்தாலாகிய யோகத்தைப்பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். மொகஞ்சொதரோ முத்திரைகளில் இறைவன் யோகத்தில் அமர்ந்திருக்கும் கோலமுடைய வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இறைவன் பசுவின் (உயிர்களின்) பதி என்னும் கருத்தை விளக்க அவ்வடிவைச் சுற்றிப் பல விலங்குகள், மக்கள் முதலியவற்றின் வடிவங்களும் வெட்டப்பட்டுள்ளன. உள்ளத்தை ஒரு வழிப்படுத்தி இறைவனை நினைப்பதால் மனிதன் பெரிய ஆற்றல்களைப் பெறுகின்றான். அவ்வகை ஆற்றல் அடைந்தோர் சித்தர் எனப்பட்டார்கள்.
   இவ்வகை ஆற்றல் பெற்றோர் உலக மக்களும், அரசனும் நல்வழிப்படுதல் வேண்டும் என்று கோவில்களில் சென்று கடவுளை வேண்டினார்கள். இவேவாறு செய்யப்படும் பூசை பரார்த்த பூசை (பிறர்பொருட்டுச் செய்யப்படும் பூசை) எனப்படும் இதற்கு எடுத்துக் காட்டு,
"வாழ்க வந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக மும்துயர் தீரவே"

என்னும் சம்பந்தர் தேவாரமாகும்.
   கோவில்கள் நல்லார் வந்து கூடும் இடங்கள் ஆதலின் அவர்கள் இணத்தினால் மக்கல் நல்வவிப்படுத்துவார்கள் என்னும் கருத்துப்பற்றியே ஒளவைப் பிராட்டியாரும் கோயிலில்லாதவூரிற் குடியிருக்க வேண்டாம் என அருளிச்செய்தார்.
   தமிழ் மக்களின் வவிபாட்டுக்குரிய கோவில்களில் ''மலங்கெடுத்து மனங்கரைக்கும்'' திருவாசகம், தேவாரம் முதலிய தமிழ்ப்பால்கள் பத்திச் சுவை ததும்பப் பாடப்படுதல் வேண்டும். தமிழ் மக்கள் பொருள் விளங்கமாட்டாத வடமொழிச் சுலோகங்களைத் தமிழ்க்கடவுளர் முன்னிலையில் ஓதுதல் அறிவுடைடார் செயலாகமாட்டது. மக்கள் முன்னேற்றம் அடையவேண்டுமாயின் அவர்கள் தமது உயிர் நிலையாயுள்ள கோவில்களில் சீர்திருத்தஞ் செய்தல் வேண்டும்.

நமது நாடு வளரும்...

அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...

ரம்புத்தான் பழம்

    ரம்புத்தான் பழம் இது ஒரு வெப்ப மண்டல பழம் தென்கிழக்கு ஆசிய தீவுகளில் பிறப்பிடமாக கொண்ட, பழங்குடியினருக்கு சொந்தமான ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். ரம்புத்தான் என்ற வார்த்தைக்கு தோல் போன்ற முடி என்று பொருள்.
   இது ஆப்பிரிக்கா, கம்போடியா, கரீபியன், மத்திய அமெரிக்கா, இந்தியா, இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் ஏராளமாக உள்ளன.  தமிழ்நாட்டில் கொடைக் கானல் பகுதியில் விளைகிறது.
     இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. தற்போது பழங்களை அதிகம் சாப்பிடாமல் இரசாயனம் கலந்த குளிர்பானங்களை விரும்பி அருந்து கின்றனர். இவை உடலுக்கு பல தீங்குகளை இழைக்கக்கூடியது. அதனால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
    ரம்புத்தான் பழத்தின் புறத்தோல் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் மேற்புறத்தில் மென்மையான முடிகள் போன்று காணப்படும். இதனை பாதியாக மேல் தோலை நீக்கினால் சதைப்பகுதி காணப்படும். இதுவே சாப்பிடும் பகுதியாகும். இதனுள் விதை சற்று நீள்வட்ட வடிவில் காணப்படும். ரம்புத்தான் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடியது.
    இப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும். ரம்புத்தான்  பழங்களின் சர்க்கரை அளவு பழங்களின் சதையின் ஒவ்வொரு 100 கிராமுக்கும் நீர்ச்சத்து - 82.3 கிராம், புரதம் - 0.46 கிராம், கார்போஹைட்ரேட் - 16.02 கிராம், சர்க்கரை - 2.9 கிராம், நார்சத்து - 0.24 கிராம், கால்சியம் - 10.6 மி.கிராம், பாஸ்பரஸ் - 12.9 மி.கிராம்,
அஸ்கார்பிக் அமிலம் - 30 மி.கிராம் உள்ளது.
   ரம்புத்தான்  வளர்ச்சி நீர் கிடைப்பதை பொறுத்து புதிய கிளைகள் மற்றும் இலைகள் உருவாக்கும். திராட்சை போல சிறிது ஒன்றாக குழுவாக இருக்கும். வளர்ச்சி நிலையை பொறுத்து சதை, வெவ்வேறு சுவையை கொண்டிருக்கும், ரம்புத்தான் அதிக அமில எனினும், லிச்சி ஒத்த ஒரு, இனிப்பு, புளிப்பு மற்றும் மணம் சுவை, கொண்டிருக்கிறது.
   இப்பழத்தை மதிய வேளையில் சாப்பிட்டு வருவது நல்லது. இரவு நேரங்களில் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும். இதனால் இரவு நேரங்களில் இப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

Thursday, July 21, 2011

துருவ கரடி

    போலார் கரடிகள், அல்லது "கடல் கரடிகள்,  இது 600 கிலோ  முதல் (1300) வரை எடையுள்ளதாக இருக்கும். மேலும் அதன் உயரம் 3 மீ முதல் (10 அடி) வரை அதன் அளவு இருக்கும்.  சராசரியாக அவைகள் சுமார் 4 ஆண்டுகளில் பாலியல் முதிர்ச்சி அடையும், சுமார் 25 வருடங்கள் வாழ்கின்றான. அவைகள் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில்  தோன்றும் என்றாலும், தங்களின் ரோமங்களில் தெளிவாக உள்ளது. மற்றும் அவைகளின் தோல் கருப்பு தான்.
   ஆர்க்டிக் பனி மற்றும் கடல்  துருவ கரடி ஒரு கடுமையான சூழலில் வாழ்கிறது. அதன் முடிகளின் பூச்சுகள் 37 டிகிரி  செல்சியஸ்  வெப்பநிலையை வைத்து குளிர் துருவ கரடி உடலை காக்கிறது. மேலும் துருவ கரடி பாதங்கள் குறிப்பாக கடல் பனி  நீச்சல் மற்றும் நடப்பதற்கு ஏதுவாக அதன் விரல்கள், முடிகள் உள்ளன.
  போலார் கரடிகள், வலிமையான மூக்குகளையுடையது. உணவுக்காக   வேட்டையாடும் போது அவைகள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அவைகள் தன் சுவாசத்தால் வாசனையை உனர்ந்து.  பொறுமையுடன் காத்திருக்கும் தன் சுவாச எல்லைக்குள் வந்தவுடன் வேட்டையாடி சாப்பிடும். உணவு பற்றாக்குறையின் போது துருவ கரடி எதுவும் சாப்பிடும். போதுமான உணவுகள் குறுகிய கால் ரெய்ண்டெர், பறவைகள், பறவை முட்டைகள், கடற் பாசிகள் மற்றும் கடற் திமிங்கலங்கள்.
   போலார் கரடிகள், மற்ற கரடி போன்ற ஓய்வு இல்லை, ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு தேக்க நிலை இருக்கும். வசந்த காலத்தில் இனச்சேர்க்கை பிறகு, ஒரு பெண் துருவ கரடி அதிக அளவு உணவை உன்னும் மற்றும் அவரது குட்டிகள் வருகைக்காக ஒரு மகப்பேறு குகையில்  கோடை காலத்தில் செலவழிக்கிறது.
   இலையுதிர் காலத்தில், அவை ஒரு தேக்க நிலையை அடைகிறது. இந்த நிலையில் குட்டியை பிறசவிக்கிறது பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக்கும். இரண்டு குட்டிகளும், அத்தியாவசிய வேட்டை மற்றும் உயிர் காக்கும் திறன் கற்பதற்காக அவற்றின் தாயுடன் இரண்டு ஆண்டுகள் செலவழிக்கும்.
   புவி வெப்பமடைதலால் பெரிதும் துருவ கரடி  பாதிக்கிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு 2007 இல் ஒன்பது ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்திய பின்னர், பனி வாழ்விடங்களை குறைவு காரணமாக 2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் துருவ கரடிகள்,  மூன்றில் ஒரு பங்கு இழப்பு  ஏற்படும் என்று கணித்து உள்ளது. குறிப்பாக பெரிய கரடிகளின் குறைவு மட்டுமல்ல பெரிய துருவ கரடிகள், சுகாதரமும் பாதிக்கிறது. இது புதிய கரடி குட்டிகள் வெற்றிகரமான இனப்பெருக்கத்திற்கும், பராமரிப்பும் தடுக்கப்படுகிறது. பனி உருகல், சரிவு, அதிகரிக்கும் வெப்பநிலை போன்ற இந்த கண்டுபிடிப்புகள் பின்னணியில், அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவை அருகிவரும் இனங்கள் சட்டத்தின் கீழ் ஒரு அச்சுறுத்தினார். துருவ கரடி போன்ற இனங்கள் அழிவால் அமெரிக்க அரசின் வற்புறுத்தலால் ஒரு திட்டத்தை உருவாக்கியது. அவர்கள் தற்போது ஐயுசிஎன் தான் ரெட் பட்டியல் மூலம் பாதிக்கப்படும் இன பட்டியலை வெளியிட்டுள்ளன.
   துருவ கரடி வாழ்விடம் காப்பாற்ற உதவ, நீங்கள் புவி வெப்பமடைதலை தடுப்பதற்காக  உங்கள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புவி வெப்பமடைதலை தடுக்க உள்ளூரில் விளையும், உற்பத்தி, மறுசுழற்சி பொருள்களை பயன்படுத்தவும்.....

தூக்கம் ஏன் ஏற்படுகிறது?

     தூக்கம் ஏன் ஏற்படுகிறது? என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தங்கள் கண்டரிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
   நம் உடலில் உள்ள உறிப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.
   நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதியில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.
  இன்னும் சில விஞ்ஞானிகள், நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையை நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம்.
   நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இனைப்புகள் தடைபடுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
   மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியே தூக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று சிலர் கூறுகின்றனர்.
   தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிருபிக்க விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனையில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும். விலங்குகளால் தூக்கமில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும்.
   மனிதர்களுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்கவேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.
   குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதிப்பிக்கப்படுவதற்கும் அதிகநேரம் தூங்கவேண்டும் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்கவேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
  அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார்.

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்.....
  

Saturday, July 16, 2011

கீரிப்பிள்ளை

    வன​வி​லங்​கு​கள் என்​றாலே சிங்​கம்,​​ புலி,​​ யானை,​​ சிறுத்தை,​​ கரடி,​​ ஓநாய் என்ற ஊனுண்​ணி​கள்​தான் முத​லில் நினை​வுக்கு வரு​ம்.​ ஆனால்,​​ சத்​தம் போடா​மல் வனத்​தை​யும் சுற்​றுச்​சூ​ழ​லை​யும் பாது​காப்​ப​தில் பெரும் பங்​காற்​று​பவை சிறு ஊன் உண்​ணி​கள் எனப்​ப​டும் பூனை வகை​கள்,​​ கீரி வகை​கள் மற்​றும் நீர் நாய்,​​ மர நாய் போன்​ற​வை​க​ளா​கும்.​ இவையே விவ​சா​யி​க​ளின் தோழர்​க​ளா​க​வும் அழைக்​கப்​ப​டு​கின்​றன.​
     மாமிச பட்சிகளான ஊனுண்ணிகளில் 5 முதல் 8 கிலோ எடை வரையுள்ள விலங்குகளே சிறு ஊன் உண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. நகரமயமாக்கலினாலும், விவசாய நிலங்கள் அழிந்து வருவதாலும் பல வருடங்களுக்கு முன்னர் கிராமங்களில் நமது வீடுகளுக்கு அருகில்  சுற்றிக் கொண்டிருந்த இவ்விலங்குகள் தற்போது வனப்பகுதிகளை மட்டுமே நம்பி வாழக்கூடிய நிலையிலுள்ளதால் பெரும்பாலானவை அழிவின் விளிம்பிலுள்ளன.
     மங்கூஸ் எனப்படும் கீரி இனத்தில் காமன் கிரே, ருடி மங்கூஸ், பிரவுன் மங்கூஸ், ஸ்டிரைப்படு நெக் மங்கூஸ் போன்றவை.
    கீரிப்பிள்ளை பொதுவான இனங்கள் உள்ளது. 11 அங்குலத்தில் இருந்து 16 அங்குலம் வரை இருக்கும். அவைகளின் ரோமங்களின் நிறம் ஆரஞ்சு, பழுப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்துடன் இருக்கும். அவைகளுக்கு குறுகிய கால்கள் இருக்கும் மற்றும் ஆண்கள் பெண்களை பெரிதாக இருக்கும். அவைகள் இரவில் நிலவொளியில் வேட்டையாடும்.
    கீரிகள் புல்வெளிகளிலும், வறண்ட பகுதிகளிலும் பொந்து அமைத்து  தனியாகவோ அல்லது ஜோடிகள் வாழ்கிறது. மற்றும் பாறைகளின் இடையே ஒரு குகை போன்ற அமைப்பு அமைத்து வாழ்கிறது.
    பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், பறவைகள், விலங்குகள், நில நீர் வாழ்வன, அழுகிய, முட்டை மற்றும் எப்போதாவது பழத்தில் உள்ள கொட்டையை உணவாக உட்கொள்கிறது.
     கீரி ஒரு வருடத்தில் பல முறை குட்டிபோடுகிறது கருகாலம் 60 நாட்கள்  மூன்று அல்லது நான்கு குட்டிகள் போடும் குட்டிகளை பெண்கீரியே வளர்க்கும். 3 வாரத்தில் அவைகள் கண்களை திறக்கும் மற்றும் 4 வது வாரத்தில் அவைகள் திட உணவு சாப்பிட தொடங்குகிறது 50 நாட்களில் அவைகளின் வயது எடை மூன்று மடங்காக ஆகும். வயது 9, 10 வாரங்களில் பாலியல் முதிர்ச்சி அடைகிறது. கீரி வகைகள் 40 கிளையினங்கள் உள்ளன.
     பாம்பாட்டிகளிடம் மட்டுமே நாம் பார்த்த கீரிப்பிள்ளை தற்போது எங்கு இருக்கின்றதென்றே தெரியவில்லை. அழகான இவற்றின் வால் முடியைக் கொண்டு ஓவியம் தீட்டுவதற்கான தூரிகைகளைத் தயாரிப்பதற்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டதால் கீரிப்பிள்ளை இனம் அதற்காகவே அழிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் இறைச்சிக்காகவும் இவை பெருமளவில் வேட்டையாடப்பட்டு விட்டன.

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ...

Wednesday, July 13, 2011

ஆர்க்டிக் நரி

       ஆர்க்டிக் இது பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருக்காது, ஆனால் இந்த  இடங்களில் சில விலங்குகள் வசிப்பிடமாக உள்ளது. அதில் ஒன்று ஆர்ட்டிக் நரி இது ஒரு "நாய்" குடும்பம் ஆர்க்டிக் தட்ப வெப்ப நிலை -112 டிகிரி பாரன்ஹீட் வரை செல்லும்  மற்றும் வானிலை 94 டிகிரி வரும்போது இந்த நரிகள் மட்டும் நடுக்கம் இல்லாமல் இருக்கும். நீண்ட குளிர்காலத்தில், சூரியன் 24 மணி நேரமும் ஒளிரும் போது  இதை நம்பாத நரிகள் இருட்டு மற்றும் கோடை காலத்தில் வசிக்க முடியாது.
   ஆர்க்டிக் நரிகள் சில நேரங்களில் சாம்பல், நீலம், அழகான வெள்ளை முடிகளாக இருக்கும்.கோடை நெருங்கி வரும் நிலையில், ஆர்க்டிக் நரி வெள்ளை முடிகள் உதிரத்தொடங்கி பழுப்பு நிறமாக மாறத்தொடங்குகிறது.  பிறகு அதே செப்டம்பர் மற்றும் அக்டோபர் பழுப்பு தோல் வரும் வரை நடக்கிறது, மற்றும் நவம்பர் மாதம் தோலானது முழுமையாக வெள்ளையாக மாறும்  ஆர்க்டிக் நரிகள் அழகான சிறிய, அவைகளின் தலை மற்றும் உடல் 1 ½, அல்லது 2 ½ அடியாக இருக்கும் மற்றும் அவைகளின் வால் பொதுவாக 10-16 அங்குல இருக்கும். அவைகளின் எடை சராசரி 5-13 பவுண்டுகளாக இருக்கும்.  
    ஆர்க்டிக் நரிகள் முக்கியமாக  ஊனுண்ணிகள் என்பதால் ஆனால் அவைகளுக்கு உணவு கண்டுபிடிப்பது எளிது. அவைகள் மீன்,  மற்றும் பிற பாலூட்டிகள் உண்றும்.  அவைகள் உணவுக்காக காத்திருக்கும் போது மற்ற விலங்குகள் சிந்திய மிச்சத்தை சாப்பிடுகிறது. அவைகள் சாணம் மற்றும் கொட்டைகள் போன்ற சில பழங்களை உண்ணும்.
  ஆர்க்டிக் நரிகள் மட்டுமே  11 ஆண்டுகள் வரை சராசரியாக வாழமுடியும் அது நீண்ட நாள் வாழ முடியாது.
   ஆர்க்டிக் நரிகள் சாப்பிடும் அதே உணவுகளை துருவ கரடி மற்றும் ஆர்க்டிக் ஓநாய்கள் போட்டியிட, அவைகள் முக்கியமாக மீன், பறவைகள், மற்றும் சிறிய பாலூட்டிகள் துருவ கரடி போட்டியிட. ஆர்க்டிக் ஓநாய்கள் ஆர்க்டிக் முயல்களை இந்த நரிகள், மீன், பாலூட்டிகள், பூச்சிகள், போன்றவைகளுக்கு போட்டியிடுகிறன.
    இந்த நரிகள் விலங்குகளை வேட்டையாட தங்களது பற்களை பயன்படுத்தும், அவைதான் அவற்றின் முக்கிய பலம். அவை தங்கள் இரையை துண்டிப்பதற்கு தங்களது இரண்டு அங்குல நீளமான நகங்களைப் பயன்படுத்தும்.

வனவிலங்குகளை காத்து இயற்கையை காப்போம்.......

பறக்கும் மீன்கள்

   பறக்கும் மீன்கள் உலகம் முழுவதும் குறிப்பாக சூடான வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் பகுதியில் வசிக்கிறது. ஏழு ஒன்பது இனங்களில் குழுவாக சுமார் 64 இனங்கள் உள்ளன. அவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல் வடிவத்தில் இருக்கும். மேற்பரப்பை உடைக்கவும் நீருக்கடியில் வேகத்தை அதிகரிக்கவும், மேலும் அவற்றின் பெரிய, விங் போன்ற pectoral துடுப்புகள் அவர்களுக்கு காற்றில் பறக்க உதவுகிறது.
   பறக்கும் மீன் பல உண்டு அவைகள் தங்களை இரையாக்கி கொள்ள வரும் மற்ற காடல் உயிரினங்களில் இருந்து தப்பிக்க, பறக்கும் திறன் பெற்றிருக்காலாம் என்று கருதப்படுகிறது. பிளாங்டன் உள்ளிட்ட மீன்கள் உணவுக்காக  பறக்கும்.
     பறக்கும் மீன் துடுப்புகள் எல்லாம் மேல் மடல்களைக் காட்டிலும் நீண்ட கீழ் மடல் கிளைவிட்ட வால்களில் இருக்கிறது. பல இனங்கள் இடுப்பு துடுப்புகள் பெரியதாக   இருக்கும் இவை நான்கு இறகு பறக்கும் மீன் எனப்படும்.
    ஒரு மணி நேரத்திற்கு 37 மைல் (60 கிலோமீட்டர்) பறக்கிறது. பறக்கும் மீன் நீரினுள் இருக்கையில் தன் இறக்கை போன்ற துடுப்பை, உடலோடு ஒட்டியவாறு வைத்திருக்கும். வேகமாகச் செல்ல நினைக்கையில், நீரினுள் இருக்கும் போதே பறப்பதற்கு முன் ஓடுதளத்தில், ஓடும் விமானம் போல் வேகமெடுத்து, நீரின் மேற்பறப்பை நோக்கி நீந்தி வந்து, நீர்பரப்பை அடைந்ததும் தன் பக்கத்துடுப்புகளை முழுவதும் விரித்துத் துள்ளித் தாவும். பெரிய விசை நீருக்கடியில் பெறுவதன் மூலம் மேல்நோக்கி  நான்கு இறகு பறக்கும் மீன் மேற்பரப்பை உடைக்கிறது சில நேரங்களில் 4 அடி (1.2 மீட்டர்) அதிகமான உயரங்களை அடைந்து 655 அடி (200 மீட்டர்) வரை, நீண்ட தூரம்  காற்றில் பறக்கிறது.
  பறக்கும் மீன்கள் பல கடல் உயிரினங்கள்  போல, ஒளியை கவர்கிறது. இரவில் மீன் பிடிக்கும் மீனவர்கள் ஒளியை பாய்ச்சி இந்த மீன்களை அதிகமாக பியிக்கிறார்கள்.

இயற்கையின் கொடை கடல், நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.........

Monday, July 11, 2011

நமது நாடு 27.சமயம் உண்டானவகை

    ஆதிகாலந் தொட்டு மக்கள் சாவுக்கு மிக அஞ்சினார்கள். இறந்தபின் உயிகள் இவ்வுலகத்திலோ வேறு உலகத்திலோ ஆவிகளாக உறைகின்றன என்று அவர்கள் எண்ணினார்கள். ஆகவே இறந்தவர்களை அடக்கஞ் செய்யும்போது அவர்களின் பக்கத்தில் உணவும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் வைக்கப்பட்டன. இறந்தவர்களின் ஆவிகள் மக்களுக்கு நன்மைகளையும் தீமைகளையும் செய்யவல்லன என்னும் நம்பிக்கை மக்களிடையே இருந்தது.
 ஆகவே அவர்கள் இறந்தவர்களின் ஆவிகளை மகிழ்விக்கும் பொருட்டு அவைகளுக்கு மடைகளும் பலிகளும் இட்டு வழிபட்டார்கள். இவ்வழிபாடு தென் புலத்தார் வழிபாடு எனப்படும். இதன் வளர்ச்சியே சிறு தெய்வ வழிபாடாக மாறியுள்ளது. இன்றைய மக்கள் பெரும்பாலோரின் சமயம் இதுவேயாகும் பின்பு மக்கள் ஒளியுடைய ஞாயிற்றை முழுமிதற் கடவுளாகக் கருதி வழிபட்டார்கள். பழைய மக்கள் எல்லோரும் கடவுளுக்கு இட்டு வழங்கிய எல்லாப் பெயர்களும் ஒளியுடையவன் என்னும் பொருள் உடையனவா இருக்கின்றான். மக்கள் தொடக்கத்தில் கடவுளை மலைமுகடுகளிற் கண்டு வழிபட்டார்கள்.
பின்பு மலையின் வடிவைக் குறிக்கும் முக்கோணக் கற்கல் ஞாயிற்றின் குறியாக நட்டு வழிபடப்பட்டன. இக்கற்களே சிவலிங்கங்களாகும். சிவலிங்கங்கள் நிழல் மரங்களின் கீழ் வைத்து வழிபடப்பட்டன. அவைகளைச் சுற்றிக் கட்டிடம் எழுந்தது. அஃது அமைப்பில் அரசனின் அரன்மனையை ஒத்தது. அங்கு நடத்தப்படும் செய்கை ஓர் அரசனுக்கு அவன் ஏவலாளர் நாள் முழுவதும் செய்யும் தொண்டுகளை ஒப்பன.    மக்கள் நல்வினை தீவினைகளைப் பற்றிப் பகுத்தறிவுடையவர்களானார்கள். ஆகவே நல்லொழுக்க விதிகள் சமயத்துடன் சேர்க்கப்பட்டன. இதனை வலியுறுத்தும் பொருட்டுத் துறக்கம் நரகக் கொள்கைகளும் எழுந்தன. பின்பு படிப்படியே உயிர், உலகம், இறை என்பவைகளைப் பற்றிய மெய்யுணர்வு ஆராய்ச்சி உண்டாயிற்று.

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு...

தேயிலை

   தேநீர் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிப்போன ஒன்று. தேயிலை…என்று சொல்லும்போதே தேநீரின் சுவை நாவில் ஊறுகிறது. இதை உபயோகிப்போர் அதிகம். தெரியாதவர்கள் மிகவும் சிலர்.
    தேயிலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனர்கள் தற்செயலாக கண்டுபிடித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. சீன பேரரசர் ஷேன் நாங் அவருககாக குடிநீர் கொதிக்க வைக்கும் போது, அருகில் உள்ள ஒரு புதரில் இருந்து காய்ந்த இலைகள் கொதிநீரில் விழுந்தது, தண்ணீர் குறைந்த போது கலர் மாற்றம் ஏற்பட்டது. அதை சுவைத்துப் பார்ததில் அதுசுவைக இருந்திருக்கிறது  பருகியபின் சுறுசுறுப்பு எற்பட்டதின் விளைவாக தேயிலை சீனர்களால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
தேயிலைச் செடிகள் வெப்பமான காலநிலை மற்றும் சூரிய ஒளி குறைந்தபட்சம் 5-6 மணி நேரம் ஒவ்வொரு நாளும் வேண்டும்.  பெரும்பாலும் வெப்பமண்டல அல்லது துணை வெப்பமண்டல காலநிலையில் வளர்க்கப்படுகின்றன.
    தேயிலை உற்பத்தியில் முன்னணி உள்ள முக்கிய நாடுகள், சீனா, ஜப்பான், வியட்நாம், இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா.
   சீனா இவர்களது, கேமில்லியா சைனஸிஸ், தேயிலை செடி, இப்போது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. இன்று, இந்தியா, ஜப்பான்  இலங்கை, தைவான், ஆப்பிரிக்கா, மற்றும் இந்தோனேஷியா உள்ள தேயிலை தோட்டங்கள், உலகின் தேயிலை தேவையை பூர்த்திசெய்கிறது.
   வெவ்வேறு தேயிலைகள் அனைத்தும் பல்வேறு வகைகள் இருக்கின்றன, வெள்ளை, பச்சை, ஊலோங், சிவப்பு, கருப்பு போன்ற அவைகள்.  கேமில்லியா சைனஸிஸ், பொதுவான தேயிலை.  தேயிலை வளர்க்க மண்வளம் முக்கியம் தண்ணீர் தேங்காத மலை பகுதியாக இருக்கவேண்டும்.
தேயிலை செடிகளின் உயரம்1.5 மீட்டர் வரை வளரவிடலாம் அதற்குமேல் விட்டால் கொழுந்து பறிக்கமுடியாது. தேயிலை செடியினை வளர விட்டுவிட்டால், 30 அடி உயரம் மேல் வளர்ந்து விடும். தேயிலை செடி உண்மையில் செடி அல்ல அது மரம் அதை வெட்டி வளர்காமல் விட்டால் மரமாகிவிடும். இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேனீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
  நமது நாட்டில் அஸாம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இவ்வளவு சுவை மிக்க தேநீர் நாம் சுவைக்கும் போது, அதில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களின் நிலமை படுமோசமாக இருக்கும். 

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

Wednesday, July 6, 2011

பவளப் பாறைகள்

    பவள திட்டுகள் பொதுவாக தெளிவான, வெப்ப மண்டல சமுத்திரங்களில் காணப்படும். அவை உயிர் வாழ்வதற்கு சூரிய ஒளி தேவை பவள திட்டுகள் மேற்பரப்பில் இருந்து ஆழமாக சுமார் 150 அடி (45 மீட்டர்) வரை நீரில் உருவாகின்றன. திட்டுகள் மூன்று வகையானவை கடல் திட்டுகள், தடுப்பு திட்டுகள், மற்றும் பவழத்தீவுகள் உள்ளடக்குகின்றன. கடல் திட்டுகள் கண்டங்கள் மற்றும் தீவுகள் கடற்கரைவரிகளை சேர்ந்து உருவாகின்றன மற்றும் பொதுவாக ஹவாய் மற்றும் கரீபியன் காணப்படும். தடுப்பு திட்டுகள் இந்திய பசிபிக் மற்றும் கரீபியன் மிகவும் அடிக்கடி நிகழக்கூடிய கடல் திட்டுகள், விட தொலைவில் கடல்கடந்து காணப்படுகின்றன. பவழத்தீவுகள் அதிகமாக இந்திய பசிபிக்கில் காணப்படும் ஒரு மத்திய நீர்ப்பரப்பு, அதை சுற்றியுள்ள குறைந்த பவள தீவுகள் ஒருரே தொடரில் உள்ளன. உலகின் மிக பெரிய பவளப் பாறைகள், ஆஸ்திரேலியாவில் பெரும் தடுப்பு பவளத்திட்டு 1200 மைல்கள் (1900 கிமீ) பெரியதாக உள்ளது. அது சியாட்டில், வாஷிங்க்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா இடையே தூரத்தைவிட அதிகமாக இருக்கிறது.
   பவள திட்டுகள் உள்ள தண்ணீரின் வெப்பநிலை  - 82 ° F (20 - 28 ° C),தேவை. பெரும்பாலும்  கிழக்கு கடற்கரையில் நெடுகிலும் அமைந்திருக்கும். அலைகள் பாறைகள் உணவு, ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் கொண்டு வர காரணம் திட்டுகள் வழக்கமாக அலை நடவடிக்கை நிறைய அந்த பகுதிகளில் உருவாக்க. அலைகளும் பாறைகள் மீது விழும் வண்டல் தடுக்க. திட்டுகள் மேலும் பெரும்பாலும் மேலோட்டமான வெதுவெதுப்பான கடல் பகுதியில் இருக்கும் இது வளர தண்ணீர், கால்சியம் வேண்டும்.
   சூரிய பவள பாறைகள் சுற்றுச்சூழல் ஆற்றல் மூலமாகும். பைட்டோபிளாங்க்டனின், பாசி மற்றும் பிற தாவரங்கள் என்று தாவர பிளாங்டன், ஒளிச்சேர்க்கையின் மூலம் வேதியியல் ஆற்றல் ஒளி ஆற்றல் மாற்றப்படுகிறது. விலங்குகள், தாவரங்கள் மற்றும் பிற விலங்குகளை உண்ணும், ஆற்றல், உணவு சங்கிலி வழியாக. பவளத்திட்டு கட்டிட கோரல்கள் அவர்களின் திசுக்களில் வாழும் zooxanthellae எனப்படும் நுண்ணிய பாசிகள், இணைந்து ஒளிச்சேர்க்கையின் மூலம் பவள பாறைக்கு ஆக்ஸிஜன் மற்றும் உணவு வழங்குகிறது. பவள பாறை விழுது பாசி ஒரு வீடு, மற்றும் அது சுவாசம் மூலமாக தேவைகளை கார்பன் டை ஆக்சைடு கொடுக்கிறது. Zooxanthellae தவிர, ஆல்கா மற்றும் கடல் புற்கள் பவள பாறைகள் ஒரு சூழலிலும் அமைப்பினிலும் தாவரங்கள் முக்கியமான வகைகள் உள்ளன. இந்த செடிகள் பாறைகள் வாழும் விலங்குகளுக்கு உணவு மற்றும் ஆக்சிஜன் கொடுக்கின்றன. அவை சங்கு மற்றும் கடல் நண்டு போன்றவை இளம் பாறைகள் விலங்குகள் தங்குவதற்கு  காரணமாக கடல் புற்கள்  முக்கியமான உள்ளன.
    வட அமெரிக்கா மொத்த கண்டத்திலும் பறவைகளின் இனங்கள் உள்ளன தென்கிழக்கு ஆசியாவில் பவள பாறைகள் இரண்டு ஏக்கர் உள்ளன. மீன்களின் பலவும் வெவ்வேறு வகைகளை அங்கே கானலாம் என்று தெரியுமா? அதிர்ச்சியாக இல்லை? பவள திட்டுகள் மட்டுமே கடல்படுகையின் சுமார் 1% வரை உருவாக்க, மாறாக அவை கடல் வாழ்க்கை வீட்டில் கிட்டத்தட்ட 25%. அவை ஆழமாக நீல கடல் பயணம் விலங்குகள், ஒரு பாலைவன சோலை போல, பவள பாறை திட்டுகள் பயன்படுகின்றன, அல்லது அவை பாறைகள் உள்ள குடியிருப்பாளர்கள் வாழவேண்டும். பவளப்பாபாறைகளில் அதிக விலங்குகள் உள்ளன. அவைகள் கடின பாறைகள் தங்களை தாங்களே இணைத்துக் கொள்ளும் மற்றும் நிரந்தரமாக அங்கு வாழும் பவளமொட்டுக்கள் எனப்படும் சிறிய உயிரினங்கள், இருக்கின்றன. பாறைகள் நியூயார்க் நகரில் ஒரு பெரிய அபார்ட்மெண்ட் கட்டிடம் போல் உள்ளது மற்றும் பவள பூச்சிகளின் ஒவ்வொரு அபார்ட்மெண்ட் சேர்ந்து வாழும். கோரல்கள் நெருக்கமாக கடல் அனிமோன்கள் மற்றும் கடல் ஜெல்லீஸ் தொடர்பாக உள்ளன, மற்றும் பாதுகாப்பு தங்கள் விழுதுகளை பயன்படுத்தி தங்கள் இரையை பிடிக்க. கோரல்கள் இயற்கை நிறமிகள் மற்றும் அவற்றின் திசுக்களில் zooxanthellae காரணமாக வண்ணங்கள் பல்வேறு, வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, நீலம் ஆரஞ்சு மற்றும் ஊதா, இருக்க முடியும்.
   பவள பாறைகளில் வாழும்  மற்ற விலங்குகள் கடல் அர்சின்ஸ், கடற்பாசிகள், கடல் நட்சத்திரங்கள், புழுக்கள், மீன்கள், சுறாக்கள், கதிர்கள், கடல் நண்டு, இறால், ஆக்டோபஸி, நத்தைகள் மற்றும் பல உள்ளடக்குகின்றன. இந்த விலங்குகள் பல பவள பூச்சிகளின் மற்றும் zooxanthellae போன்ற ஒரு குழு ஒன்றாக  வேலை செய்கிறது. இந்த பணிக்குழுவின் கூட்டுவாழ்வு முறை என்று அழைக்கப்படுகிறது. பாறைகள் மீது கூட்டுவாழ்வு முறை ஒரு உதாரணம் அனிமோன்மீன். மீன் போன்ற பட்டாம்பூச்சி மீன் கொடூரர்களில், இருந்து அனிமோன் பாதுகாக்கிறது கடல் அனிமோன் தான் விழுதுகளை, மீன் மற்றும் முட்டையை பாதுகாத்து மற்றும் பாதுகாப்பு வழங்குகின்றன. சில நேரங்களில் அனிமோன் மீன் கூட தங்கள் வீட்டிற்கு அனிமோன் ஒட்டுண்ணிகள் நீக்குகிறது.
பவள பாறைகள் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக முக்கியமானதக இருக்கின்றன. அவை உலக வெப்பமயமாதல் உருவாக்குவதில் பங்களிக்கிறது இது கார்பன் டை ஆக்சைடு, நீக்க மற்றும் மறுசுழற்சி செய்ய திட்டுகள் வலுவான அலைகள் மற்றும் புயல்களில் இருந்து தாக்கத்தை உறிஞ்சும். கடுமையான வானிலை நிலங்களை பாதுகாக்க பயன்படுகிறது. திட்டுகள் உணவு, எடுத்துக்காட்டாக, கடல் நண்டு மற்றும் சங்கொலி வழங்குகின்றன. பவள திட்டுகள் மேலும் ஒரு பெரிய சுற்றுலா பயணிகளை கவருவதக இருக்கின்றன. பவள திட்டுகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு  ஒரு பெரிய ஆதாரமாக இருக்கின்றன. பவளப் பாறைகள் இல்லாமல், இந்த தாவரங்கள் மற்றும் விலங்குகள் நிறைய இறக்க நேரிடும். சில மக்கள் பவள பாறை திட்டுகளை முக்கிய மருந்துகளாகப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, சில பவள பாறை எலும்புக்கூடுகள் சீரமைப்பு, எலும்பு அறுவை சிகிச்சை ஒரு எலும்புக்கு மாற்றாக பயன்படுத்த முடியும். பவள திட்டுகள் மேலும் ஒரு பயனுள்ள கல்வி கருவியாக இருக்கின்றன. மக்கள் நிலையான உயிரினம் வாழும் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல், மற்றும் பவள பாறை திட்டுகள் படிப்பதன் மூலம் உயிரினங்கள் மற்றும் அவற்றின் சூழலில் இடையே உறவு பற்றி கற்றுக்கொள்ள முடியும்.
    பவள திட்டுகள் ஒரு ஆபத்தான வேகத்தில் அழிந்து வருகின்றன. இது நாம் ஏற்கனவே உலகின் திட்டுகள் 10% இழந்துவிட்டோம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, மற்றும் விஞ்ஞானிகள் அடுத்த 50 ஆண்டுகளில் புவியின் பவள பாறை திட்டுகள் பலவும் நீக்கப்படும் என்று கனிக்கப்பட்டுள்ளது இந்த அழிவு பெரும்பாலும் மனித நடவடிக்கையே காரனம்.
தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது,கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன. இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும்,கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள்.     
     மாசு, கழிவு நீர், மண் அரிப்பு, பொறுப்பற்ற மீன்பிடித்தல், மோசமான சுற்றுலா நடைமுறைகள், மற்றும் புவி வெப்பமடைதல் இவைகளால் பவளப்பாறை அழியும் நிலைக்கு தள்ளப்படும். இயற்கையான கடல் அரனைகாப்பது நமது கடமை.சுனாமி வந்த போது பவளப்பாறைகள் அதிகம் இருந்ததால் தான் ராமேசுவரம் பகுதி எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பாகவும், அதிகமாகவும் உயிர் வாழ பேருதவியாக இருப்பது பவள உயிரிகள் எனப்படும் பவளப்பாறைகள்.

இயற்கையின் கொடை கடலை மாசுபடாமல் இருக்க உதவுவோம்......

கடல் விசிறி

   மன்னார் வளைகுடாவில் உள்ள உயிரினங்களில் பவளப்பாறை உயரினங் கள் மிகவும் "காஸ்ட்லி' ஆனவை. இதில் மிருதுவானவை, கடினமானவை என இருவகைகள் உள்ளன. மிருதுவான பவளப் பாறை உயிரினங்கள் மருத்துவத்துக்கு பெரிய அளவில் உதவுகின்றன. அந்த வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினம் தான் "கடல் விசிறி'.
   கடலின் அடியில் மட்டுமே வாழும் இவை ஓரே இடத்தில் நின்று வளரும் தன்மை கொண்டவை. சல்லடை போல தோற்றம் கொண்ட இந்த உயிரினம், நீர் வழியே கடந்து செல்லும் சிறிய உயிரினங்களை உண்டு வாழும். சல்லடை வழியே வடிகட்டி உண்பது இதன் தனிச்சிறப்பு. ஆண்டுக்கு ஒரு செ.மீ., குறைவான வளர்ச்சியே இவற்றுக்கு உண்டு. இவற்றின் உருவ அமைப்பை பார்க்கும் வளர்ச்சியை பெற குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும். இதனால் இவை நீண்ட நாள் வளரும் உயிரினமாகிறது. கடலின் அடியில் இருக்கும் இதன் உருவ அமைப்பு மீன் உற்பத்தி, நண்டு, சிப்பிகள் இனப்பெருக்கத்துக்கு பேருதவியாக உள்ளது. கடல் அடியில் கலங்கம் ஏற்படாமல் இருக்க "கடல் விசிறி'கள் பங்கு முக்கியமானதாகும்.
   பவளப் பாறை வகையை சேர்ந்த உயிரினம் என்பதை தவிர்த்து, பவளப்பாறை யை யொட்டிய பகுதியில் தான் இவை காணப்படும். இவற்றின் மருத்துவ குணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகிறது. இதன் முக்கியத்துவம் அறியாமல்இதை மன்னார் வளைகுடாவில் மீனவர்கள் வீணடித்து வருகின்றனர். மிருதுவான இவை மடிவலைகளில் பெரும்பாலும் சிக்கிவிடுகின்றன. தொடர்ந்து அழிந்து வரும் இந்த இனத்தின் வகை தற்போது 20க்கும் குறைவாகவே மன்னார் வளைகுடாவில் உள்ளன.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...

Monday, July 4, 2011

மனிதனுக்கு அஞ்சும் காட்டுவாசிகள்

      எந்த ஒரு வசதியும் இல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் நூறு சதவீதம் இயற்கையோடு இயற்கையாக வாழும் நூற்றுக்கனக்கான பழங்குடியினர் இருக்கிறார்கள்.
   குகைகளில் வசித்து விலங்குகளை வேட்டையாடும் பழங்குடி மக்கள் பலர் இன்னமும் சமைக்கத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். நெருப்பை பற்றி தெரியும் என்றாலும், அதை வைத்து சமைக்க தெரியாது. அதேபோல் அவர்கள் உலகத்தோடு ஒட்டி உறவாடவும் விரும்புவது இல்லை. அந்தமான் நிகோபர் தீவுகளில் சென்டினல் என்ற தீவில் வசிக்கும் சென்டினலீஸ் பழங்குடி மக்கள் இதுவரைக்கும் தங்கள் அருகில் யாரையும் நெருங்கவிட்டதே இல்லை. நாகரீகத்தையும் நவின உலகத்தையும் கற்றுத்தருகிறோம் என்று வெளியில் இருந்து காட்டுக்குள் செல்பவர்காளாலும் காட்டு மனிதர்ளுக்கு ஆபத்து உண்டு. காட்டில் ஏற்படும் எவ்வளவோ கொடூரமான வியாதிகளில் பிழைத்துக் கொள்ளும் இவர்களால் நாகரீக மனிதர்களால் ஏற்படும் சாதாரண நோய்களைகூட தாங்கிக் கொள்ள முடிவதில்லை. உதாரணமாக நாகரீக மனிதன் மூலம் பரவிய ஜலதோஷத்தை கூட தாங்கமுடியாமல் காட்டு மனிதர்களின் உயிர் பறிபோய் விடுகிறது. இதனாலே நாகரீக மனிதர்கள் அவர்களுக்கு ஆகாதவர்களாக இருக்கிறார்கள்.
 

  பிரேசில் அமேசான் நதிக்கு அருகே வசிக்கும் பழங்குடியின மக்களை புகைப்படம் எடுக்க ஹெலிகாப்டரில் சென்றார், புனாய் என்ற போட்டோ கிராபர். அந்த மக்களின் வசிப்பிடத்திற்கு மேல் ஹெலிக்காப்டர் பறந்தபோது அதை ஏதோ பெரிய ஆபத்தான பறவை என்று நினைத்த காட்டுவாசிகள் அதை நோக்கி சரசரவென அம்புகளை விட்டனர். அதையும் தவற விடாமல் போட்டோ எடுத்து வந்த புனாய் பத்திரிகைகளில் வெளியிட, அந்தபகுதி மிகவும் பிரபலமானது. இப்போது பத்திரிக்கையாளர்கள் அந்தப்பகுதியை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காட்டு விலங்குகளிடம் இருந்து தப்பிக்கத் தெரிந்த இந்தகாட்டுவாசிகளுக்கு நவீன மனிதர்களிடம் இருந்து தப்பிக்க தெரியவில்லை. காங்கோ காடுகளின் குகைகளில் வசிக்கும் பிக்மி என்ற பழங்குடியினருக்கு வேட்டை தான் பிரதான தொழில். வேட்டையை தவிர அவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது.

ஆனால் மற்ற ஆதிவாசிக் கூட்டத்துக்கும் இவர்களுக்கும் சண்டை ஏற்படும் சூல்நிலை வந்தால், உடனடியாக முதல் வேலையாக வெள்ளைக்கொடி காட்டி சமதானமாகி விடுவார்கள். இந்த மத்திய ஆப்பிரிக்க நாட்டுக்கு போய்வர பிரான்சில் இருந்து இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மட்டும் ஒரே ஒரு விமானம் உள்ளது. காங்கோ காடு பிரான்சைத் தவிர உலகத்தில் வேறு எந்த நாட்டுடனும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொளள வில்லை. இப்படி இருந்தும் கூட இந்த அப்பாவி காட்டுவாசிகளான பிக்மியை காங்கோ வீரர்கள் வேட்டையாடி உண்பார்களாம். காங்கோ இன மக்களின் வேட்டையாடும் விலங்குகல் பட்டியலில் இந்த பிக்மி இனமும் இடம் பெற்றிருக்கிறது.

இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.

Friday, July 1, 2011

மின்னல்

   வான்வெளியில் மின்சாரத்தின் வெளிப்பாடே மின்னல். இது வினாடிக்கு குறைவான நேரத்தில் ஒளிக்கீற்றாகக் கொடி பிரிந்து மறைகிறது. மேகங்களில் அணுக்கள் மின்னூட்டம் பெற்று, எதிர் மின்னூட்டத்தால் ஈர்க்கப்படும்போது வெளியாகும் மின்சாரப் பாய்ச்சலே மின்னலாகிறது.
   மழையின் சீற்றத்தின்போதும், எரிமலைகளின் சீற்றத்தின்போதும், புழுதிப் புயல்களின் போதும் மேகங்களின் உராய்வால் மின்னல் தோன்றுகிறது. மின்னலின் வேகம் மணிக்கு 36 ஆயிரம் கி.மீ. தூரம். 30 லட்சம் சென்டிகிரேடு வரை வெப்பத்தை மின்னல் வெளியிடுகிறது. அந்த மிதமிஞ்சிய வெப்பத்தில் சில வேளைகளில் மணல் துகள்கள் உருவாகி ஒன்று சேர்ந்து ஃபல்கரைட் எள்னும் கண்ணாடிக் குழாய்களாகக்கூட மாறும்.
   கட்டுப்படுத்த இயலாத காட்டுத் தீ ஏற்படுத்தும் சாம்பல் புழுதிகூட மின்னல் தோன்றக் காரணமாகும். மேகத்தினுள் பொதிந்திருக்கும் பனிக்கட்டி மின்னலைத் தூண்டும் காரணியாக இருக்கலாம். ஆனாலும், மின்னல் எப்படி உருவாகிறது என்பதற்கான காரணங்கள் இன்னும் முழுமையாகக் கண்டு பிடிக்கப்படாமலேயே இருக்கிறது.
   மின்னல் மின்னும்போது வெளியிடப்படும் மிக அதிக வெப்பம் அதைச் சுற்றிலும் உள்ள காற்றினில் ஓர் அலையைக் கிளப்புகிறது. அதிக அளவு அழுத்தத்துக்குள்ளான காற்று, அழுத்தக் குறைவான பகுதிக்கு அதிவேகமாக இடமாற்றம் செய்யும் போது கிளம்பும் ஒலியே இடி ஓசை. ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் முதலில் மின்னல் ஒளி தெரிந்து, சிறிய இடைவெளிக்குப் பிறகு இடியுடன் ஒலி கேட்கிறது.
   தாமஸ் ஃப்ரான்கோய்ஸ் டையபார்ட், டி லோர்ஸ் ஆகிய பிரஞ்சு விஞ்ஞானிகள் பட்டம் ஒன்றைப் பறக்கவிட்டு, மின்னல் தோன்றும் போது அதில் மின்சாரம் கடத்தப்படும் ஆராச்சியை முதலில் நிகழ்த்தினார்கள். சில வாரங்களிலேயே பெஞ்சமின்ஃப்ராங்க்ளினும் இதேபோல ஒரு பரிசோதனையை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிகளைப் பின்பற்றி மின்னலை ஆராய்ச்சி செய்த ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் ரிச்மேன் மின்னல் தாக்கி இறந்தார். அவரைத் தாக்கிய மின்னல் பந்து மின்னல் வகையைச் சேர்ந்தது. நாலணா நாணய அளவில் இருந்து பல மீட்டர்கள் வரை விட்டம் கொண்ட உருண்டை வடிவமான மின்னல்களைப் பந்து மின்னல் என்கிறார்கள்.
   மின்னல் தாக்குதல் பேரழிவுகளையும் ஏற்படுத்தி விடுவதுண்டு. 1769-ல் இத்தாலியில் செயின்ட் நாஸைர் தேவாலயத்தை மின்னல் தாக்கியது. அங்கே பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்து 100 டன் வெடிமருந்து தீப்பற்றிக்கொள்ள, மூவாயிரம் நபர்கள் இறந்தனர். மின்னல் தாக்கிய ப்ரெஸிகா நகரில் ஆறில் ஒரு பங்கு தரைமட்டம் ஆனது. 1902-ல் பாரிஸில் ஈஃபிள் கோபுரம் மின்னலால் தாக்கப்பட்டது. 1994-ல் எகிப்தில் ட்ரோங்கா பகுதியில் எரிபொருள் டேங்குகளை மின்னல் தாக்கியதில் 469 பேர் உயிரிழந்தனர். மிக அரிதாக மின்னல்கள் விமானங்களைத் தாக்குவதும் உண்டு.
   மின்னலால் தாக்கப்படும் சிலர் பார்வையிழப்பதற்குக் காரணம் மின்னலின் அதீத ஒளி அல்ல. மின்னல் மூலம் கடத்தப்படும் மின்சாரம் விழித்திரையையும் பார்வை நரம்புகளையும் பாதிப்பதே காரணம். கனடாவின் வான்கூவர் பகுதியில் காதில் சிறு ஸ்பீக்கர் பொருத்திப் பாட்டுக் கேட்ட ஒருவரை இயர் போன் மூலம் மின்னல் தாக்கியது.
   மின்னல் மரங்களைத் தாக்கும் என்பது உண்மைதான். மின்னல் பாயும்போது மரத்தின் கடினமான மையப்பகுதி, நீராவி அளவுக்கு எக்கச்சக்கமாக சூடாகி  வெளிப்புறப் பட்டையைப் பிளந்து வெளியேறும். இப்படிப்பட்ட நேரங்களில் மரத்துக்கு அருகில் இருப்பவர்கள் உயிர் தப்பமுடியாது. தூரக்கிழக்கு நாடுகள் மற்றும் சைபீரியா போன்ற பகுதிகளில் உள்ள காடுகளில் தீ உண்டாவதற்கு முக்கியக் காரணம் மரங்களை மின்னல் தாக்குவதே
   எல்ம், ஓக் மற்றும் பைன் வகை மரங்கள் மின்னல் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகுபவை. தேக்கு போன்ற மரங்கள் உயரமாக வளரும் இயல்புடையவை. ஏராளமான சல்லிவேர்கள் மட்டுமே கொண்டவை. இலைப்பரப்பும் அதிகம் கொண்டவை. இவற்றைப் பெரிய கட்டிடங்களுக்கு அருகில் வளர்ப்பதால் இம்மரங்கள் மின்னலைக் கடத்திப் பூமியில் விட்டுவிடும். கட்டிடங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது.
   கிளைகள் பிரியும் விதம், தோன்றும் இடம், அதன் வடிவம் போன்றவற்றின் அடிப்படையில் மின்னல் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
   1900-ல் நிகோலா டெஸ்லா என்ற செர்பிய விஞ்ஞானி செயற்கையாக மின்னலை ஏற்படுத்திக் காட்டினர்.
   மின்னலின் பாதிப்பைத் தடுக்கப் பெரிய கட்டிடங்களில் இடிதாங்கி அமைப்பைப் பொருத்துவார்கள். இது மின்னலை பூமிக்குள் கடத்திவிடும். கட்டிடங்களுக்குப் பாதிப்பு இருக்காது. மின்னலின்போது வெளிப்படும் சக்கியைப் பயன்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்......