Saturday, January 14, 2012

கிரீன் கான்செப்ட்

   கன்ஸ்யூமர் டியூரபிள் துறையில் சமிபகாலமாக பின்பற்றப்படும் ஒரு கான்செப்ட் இகோ கான்செப்ட். எகாலஜி எனப்படும் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையில் அந்தப் பொருள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் இகோ கான்செப்ட். இயற்கையைப் பேனும் விதத்திலும் இயற்கைக்கு எதிரான அம்சங்ள் இருந்தால் குறைவாக  இருக்கும் வகையிலும் அமைவதுதான் இகோ கான்செப்ட். இதை ஒவ்வொரு நிறுவனங்ளும் ஒவ்வொரு பெயர்களில் அழைக்கின்றனர். சில நிறுவனங்கள் இதை, கிரீன் கான்செப்ட் என்றும், சில நிறுவனங்கள் என்வரோமென்டல் கான்செப்ட் என்றும் சில நேச்சுரல் என்றும் இன்னும் சில நிறுவனங்கள் எர்த்திலி கான்செப்ட் என்றும் அழைக்கின்றனர்.
    இவை அனைத்திலும் பொதுவாக உள்ள அம்சம் என்னவென்றால், பொதுமக்கள் அந்தப் பொருளைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கோ அல்லது அதனால் சமுகத்திற்கோ எந்த இயற்கை பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதுதான் கன்ஸ்யூமர் டியூரபிள் என்று கூறப்படும் அன்றாட பயன்பாட்டு எலக்ட்ரானிக் கருவிகள் எளிதில் மட்காத, நீண்டகாலத்திற்கு அழியாத பிளாஸ்டிக், இரும்பு போன்ற உலோகங்கள்ல் உருவாக்கப்படுகின்றன. அந்தக்கருவிகள் அதிக அளவில் தயாரிக்கப்படும்போது, அதிக அளவில் பயன்படுத்தப்படும் போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு உருவாக்கப்படவேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அரசுகளால் வலியுறுத்தப்படுகின்றனர்.
    எந்தெந்த வகையில் கிரின் கான்செப்ட்டை பின்பற்ற முடியும்.
   தானக அழியும் விதத்தில் அந்தப் பொருள் தயாரிக்கப்படவேண்டும். அதன் பாகங்களில் 90 சதவீதம், தானாக அழியக் கூடியதாக இருக்க வேண்டும். மீதமிருக்கும் 10 சதவீத பொருளும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எளிதில் அழிக்கப்படும் விதத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
   குறிப்பாக, அதிக கடினமான செயற்கை மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் அழியக்கூடிய (பயோ டிகிரேடபிள் ) விதத்தில் இருக்க வேண்டும்.
    கன்ஸ்யூமர் பொருட்களின் வெளிபுறத்தில் சுற்றப்பட்டிருக்கும் காகிதம், அட்டைகள் அடையாளக் குறிப்புகள் போன்றவை எளிதில் மட்கும் காகிதத்தில் இருக்கவேண்டும்.
    மேலும் அவை மறுசுழற்சி செய்யும் விதத்தில் இருக்கவேண்டும். மறுசுழற்சியின்போதும் முந்தைய அளவிலான பயன்பாடு இருக்க வேண்டும்.
   ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் என்றால், அவை எந்த விகிதத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுடன் அவ்வாறு ஆபத்து ஏற்பட்டால் அதை சரி செய்வது எப்படி என்பதை குறிக்கப்பட வேண்டும்.
    கன்ஸ்யூமர் பொருட்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பயன்பாடு கொண்டதாக இருக்க வேண்டும். அடிக்கடி வாங்கும் வகையில் இருக்கக் கூடாது. அவ்வாறு அடிக்கடி வாங்கும் வகையில் இருந்தால், அதனால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் மாசு அதிகரித்துவிடும் என்பதால் நீண்டகால பயன்பாடு கொண்டதாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.
   அந்தப் பொருட்களை அழிக்கும்போது, மோசமான வாயுக்கள், உடல்நலத்திற்கு தீங்கிழைக்கும் அம்சங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    இதுபோன்ற பல அம்சங்களைப் பின்பற்றியே கன்ஸ்யூமர் டியூரபிள் பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது. இவற்றைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்பது இயற்கையை பேணும் நடவடிக்கையாககக் கருதப்படவேண்டுமே தவிர கட்டுப்பாடாக கருதக்கூடாது.

நன்றி: தினத்தந்தி

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

Friday, January 13, 2012

பிக்மிஸ் இனத்தவரின் அதிசய வேட்டை

 
   ஆப்பிரிக்காவில் மக்கள் நடமாய்யம் இல்லாத அடர்ந்த மத்திய காடுகளில் இன்னும் ஒரு பிரிவினர் பழங்குடியினரின் வாழ்க்கை  நிலையில் இருந்து மாறமல் வாழ்க்கையை  நடத்தி வருகின்றனர். இவர்கள் ஒரு மீட்டர்  உயரம் வரை மட்டுமே இருக்கின்றனர். இவர்கள்  தான் பிக்மி இனத்தவர். இவர்கள் சுமார் 100  பேர் கொண்ட குழுவினராக வாழ்கின்றளர்.  இவர்கள் நிலையாக ஒரே இடத்தில்  வாழ்வதில்லை. எங்கெல்லாம் உணவு  கிடைக்கிறதோ, அங்கே போய் தங்கள் குடியிருப்பை மாற்றிக் கொள்கின்றனர். தற்போது இவர்களது நாகரிகம் சற்று   வளர்ந்துள்ளது. பிக்மி இனத்தவரின் வழக்காமான  செயல்கள்ல் ஒன்று தேன் எடுப்பது.  மற்றொன்று வேட்டையாடுவது.  
       பிக்மிஸ் இனத்தவர்கள் 'வைண்ட் பைப்' என்ற  ஒருவகையான ஆயுதத்தை வைத்துள்ளனர். இதில்  ஒருவகையான பச்சைத் தவளையின் உடலில்
இருந்து கொடிய விஷத்தை எடுத்து, அதை சிறிய   ஊசி போன்ற மரகுச்சிகளில் தடவுகின்றனர். பின்னர் மூங்கில் குழாயினுள்  பொருத்துகின்றனர். பின்னர், மூங்கில் குழாயை வாயில் வைத்து இலக்கை நோக்கி  ஊதவும், உடனே விஷம் தடவப்பட்ட மரக்குச்சி  விழங்குகளின் உடலில் பாய்கிறது. இப்படி  விலங்குகளை கொன்று, வேட்டையாடுகிறார்கள்.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

அமேசான் மழைக்காடு


    அமேசான் மழைக்காடு   உலகின் மிகப்பெரிய இயற்கை வளங்களை உள்ளடக்கிய ஒன்று மற்றும் மிகவும்  அச்சமான பகுதியாக உள்ளது.
     தென் அமெரிக்க வெப்பமண்டல மழைக்காடுகளின்  மகத்தான 1.4 பில்லியன் ஏக்கர் பரப்பளவை கெண்டுள்ளது பூமியின் மொத்த பிராணவாயுவின் அளவில்  (20%) உருவாக்குகிறது.
     உலகின் பல்வேறு விலங்கு இனங்கள்  அனைத்தும் (33%) கொண்டுள்ளது. பாலூட்டிகள் 800 இனங்கள் பல்லிகள் மற்றும் ஊர்வன 500 இனங்கள், உட்பட, அமேசான் காடுகளில் வாழ்கிறது,  மற்றும் பறவைகளின் 1,500 இனங்கள்  உள்ளதாக கருதப்படுகிறது.
    மழைக்காடுகளில் மேலும் தாவரங்கள் மற்றும் பூச்சிகள் ஒரு மதிப்பீட்டின்படி 30,000,000 வகையான கிட்டத்தட்ட 80,000 தனிப்பட்ட இனங்களின் தாயகமாக உள்ளது.
     அது உங்கள் பழம் மற்றும் காய்கறி உணவு நான்கில் மூன்று பங்கு (75%) அமேசான் போன்ற மழைக்காடுகள் வளரக்கூடிய என்று வாய்ப்பு இருக்கிறது.  மழைக்காடுகள் தாவரங்கள் உள்ளடக்குகின்றன; ஆரஞ்சு, எலுமிச்சை
பழங்கள், கிரேப்ப்ரூட், தேங்காய், வாழைப்பழங்கள், அன்னாசிபழம், மாம்பழம் மற்றும் தக்காளி போன்ற பழங்கள், சோளம், உருளைக்கிழங்கு, நெல் மற்றும் உள்ளிட்ட காய்கறிகள், கருப்பு மிளகு, கோக்கோ,  இலவங்கப்பட்டை, இஞ்சி, கரும்பு போன்ற மசாலா  பயிர்கள், காபி மற்றும் வெண்ணிலா; மற்றும்  பருப்புகள் மற்றும் முந்திரி கொட்டைகள் உட்பட. இதற்கிடையில், அனைத்து மேற்கத்திய மருந்துகள் ஒன்றின் மீது நான்காவது (25%) வெப்பமண்டல மழைக்காடுகள் காணப்படும் தாவர பொருட்களில் இருந்து பெறப்படுகிறது.
மற்றும் அமேசான் காடுகளில் உள்ள தாவரங்கள்  எல்லா மனித நோய்களை குணப்படுத்த கூடிய புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன. அமேசான்  காடுகளில் வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது அனைத்து தாவரங்களும் 99.9% விஞ்ஞானிகளால்
சோதிக்கப்படாமல் இருக்கிறது.
 
    இயற்கை வளங்கள் அமேசான் பகுதியில் கொட்டிக்கிடக்கும் செல்வம் இது தெய்வீக இயற்கை விளைச்சல் என்றால்  ஆச்சர்ரியப்படமல் இருக்கமுடியாது அல்லவா?.

Thursday, January 12, 2012

இந்திய, ஆப்பிரிக்க யானைகள்

 இந்திய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என்று யானைகள் இருவகைப்படுகின்றன. இந்திய யானைகளை ஆசிய யானைகள் என்றும் கூறுகின்றனர். வாழ்விடம் யானை அடர்ந்த புதர் மண்டிய மலைப்பாங்கான பகுதிகளில் வாழ விரும்புகின்றன. பச்சை மூங்கில் மற்றும் புல் கூடுதல் உள்ள இடங்களை மிகவும் விரும்புகின்றன. மற்றும் ஈரமான காடுகள் அல்லது குளிர் உள்ள இடத்தில் இருக்கும். அவைகள் தண்ணீர் உள்ள இடம் ஓடை அல்லது ஆறு, குளம் உள்ளபகுதியை தேர்வுசெய்து தனது இருப்பிடத்தை மாற்றியமைக்கும். இயற்கையான உனவை விரும்பி உண்ணும்.
  
    இந்த யானைகள் ஆசியாவில் தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, இலங்கை, சுமத்ரா, ஜாவா, மலேசியா போன்ற இடங்களில் கானப்படுகின்றன. இந்தியாவில் இமயத்தின் அடிவாரம், அசாம், உத்திரப்பிரதேசம், நீலகிரி, மைசூர், குடகு, கேரளம் போன்ற இடங்களில் யானைகள் மிகுதியாக கானப்படுகின்றன.
   இலங்கையின் வடக்குப் பகுதியில் கானப்படும் ஒருவகை யானைகள் உருவத்தில் சிறியவை. இவற்றுக்கு தந்தம் கிடையாது. எனவே இவற்றைத் தனி இனமாகவும் சிலர் கருதுகின்றனர்.
    ஆனால் இலங்கையில் தந்தத்துடன் கானப்படும் யானைகள் இந்தியாவில் இருந்து சென்றவையே. இந்திய யானைகள், எலிபாஸ் மேக்ஸிமஸ் என்ற இனத்தைச் சேர்ந்தவை.
ஆப்பிரிக்க யானைகள், ஆப்பிரிக்காவில் உள்ள பாலைவனத்தின் தென் பகுதியிலும், எத்தியோப்பியா, கென்யா நாட்டிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை லோக்சோடோண்டா ஆப்பிரிக்கானா என்ற இனத்தைச் சேர்ந்தவை.
   இந்திய யானைகளுக்கும் ஆப்பிரிக்க யானைகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. இந்திய யானைகளின் சராசரி உயரம் 9 அடி. மிகப் பெரிய யானைகள் 10 அடி 6 அங்குலத்துக்கு மேல் வளர்வதில்லை. ஆப்பிரிக்க யானைகளின் சராசரி உயரம் 11 அடி. சில யானைகள் பதினொன்றரை அடிக்கு மேலும் வளர்வது உண்டு.
    இந்திய யானைகள் சுமார் 5 டன் எடை இருக்கும். ஆனால் ஆப்பிரிக்க யானைகளோ சுமார் ஆறரைடன் எடை இருக்கும்.
     இந்திய யானைகளின் தலை ஆப்பிரிக்க யானைகளின் தலையைவிட பெரியது. 
இந்திய யானைகளின் காதுகளை விட ஆப்பிரிக்க யானைகளின் பெரியவை. அதன் காதுகள் தோள் வரை நீண்டிருக்கும். உலகிலுள்ள எல்லா விலங்குகளின் காதுகளையும்விட ஆப்பிரிக்க யானைகளின் காதுகளே மிகப் பெரியவை.
    இந்திய யானைகளில் பெண் யானைக்குத் தந்தம் கிடையாது. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டு   யானைகளுக்கும் நன்கு நீண்டு வளர்ந்த தந்தங்களும் உண்டு.
   இந்திய யானைகளின் முன் கால்களில் ஐந்து நகங்களும், பின் கால்களில் நாண்கு நகங்களும் உண்டு. ஆனால் ஆப்பிரிக்க யானைக்கு முன்கால்களில் நான்கு நகங்களும், பின்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும்.
   இந்திய யானையின் முதுகு குவிந்திருக்கும். இதன் முதுகின் நடுப்பக்கம் மற்ற இடங்களைவிட உயர்ந்திருக்கும். ஆனால் ஆப்பிரிக்க யானையில் உயர்ந்த பாகம் அதன் தோள்களே ஆகும்.
   இந்திய யானையின் துதிக்கையின் முன்பாகத்தில் விரல் போன்ற தசையமைப்பு சற்று நீண்டு காணப்படும். இதற்கு, துதிக்கையின் உதடு என்று பெயர். இந்திய யானையின் துதிக்கையில் ஒரே ஒரு உதடு மட்டும் உண்டு. ஆனால் ஆப்பிரிக்க யானையின் துதிக்கையின் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் உதடுகள் கானப்படுகின்றன. அதாவது ஆப்பிரிக்க யானையின் துதிக்கையில் இரண்டு உதடுகள் உள்ளன.
   இந்திய யானை பொதுவாக சாதுவானது. பார்க்க அழகாக இருக்கும். ஆப்பிரிக்க யானை அவ்வளவு அழகாக இருக்காது. ஆனால் மூர்க்கமானவை. பெண் யானை, ஆண் யானையைவிட அதிக ஆபத்தை விளைவிக்கலாம். இந்திய யானையின் நிறத்தைவிட ஆப்பிரிக்க யானையின் நிறம் சற்று அடர்ந்திருக்கும்.
   மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், இந்திய யானைக்கு மதம் பிடிப்பது உண்டு. ஆனால் ஆப்பிரிக்க யானைக்கு மதம் பிடிப்பது இல்லை.

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்,  வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...

Tuesday, January 3, 2012

கபிலர் தமிழ் பூக்கள்

1. செங்காந்தள்                             2. ஆம்பல்
3. அனிச்சம்                             4. குவளை
                                      

   5. குறிஞ்சி
   6. வெட்சி                        7. செங்கோடுவேரி
                                                                                                         

               8. தேமா                        9. மணிச்சிகை (செம்மணி)
                                          

10. உந்தூழ் (பெருமூங்கில்)  11. கூவிளம்  (வில்வம்)
                      

12. எறுழம்                                13. சுள்ளி
                                            

14. கூவிரம்                        15. வடவனம்
                                            

       16. வாகை                   17. குடசம்  (வெட்பாலை)
                                          
18. எருவை கோரை    19. செருவிளை காக்கம் சங்கு


 20. கருவிளம்                        21. பயினி
                                          
22. வானி (ஓமம்)                       23. குரவம்               
                                           
24. பசும்பிடி (இனமுகிழ்    25. வகுளம் (மகிழம்)   
                                           
26. காயா                               27. ஆவிரை
                                           
28. வேரல் (சிறு மூங்கில்)                  29. சூரல்
                         

30. பூளை                     31. கண்ணி (குன்றி மணி)
                                        

32. குருகிலை (முருக்கிலை)             33. மருதம்
                    

   34. கோங்கம்                35. போங்கம்
                                      
 36. திலகம்                     37. பாதிரி
 38. செருந்தி                     39. அதிரல் (புனலி)

40. சண்பகம்                       41. கரந்தை
                                      

  42. குளவி (காட்டுமல்லிகை)           43. கலிமா
                      

44. தில்லை                        45. பாலை
                                       
46. முல்லை                   47. குல்லை
                                    

48. பிடவம்                    49. மாரோடம்
                                        
50. வாழை                     51. வள்ளி
                                   
52. நெய்தல்                              53. தாழை (தென்னம்பாளை)
                                    
54. தளவம்                       55. தாமரை
                                       
56. ஞாழல்                         57. மௌவல்
              58. கொகுடி           59. சேடல் (பவளமல்லிகை)
60. செம்மல்                       61. கெங்குரலி
                                      

  62. கோடல்                      63. கைதை (தாழை)
                                           
  64. வழை (சுரபுன்னை)                65. காஞ்சி
                               

  66. நெய்தல்                        67. பாங்கர்
                                          

68. மரா (கடம்பம்)         69. தணக்கம் (நுணா)
                                      

70. ஈங்கை                           71. இலவம்
                                         

72. கொன்றை                            73. அடும்பு
                                        

74. ஆத்தி                             75. அவரை
                                            

 76. பகன்றை                           77. பலாசம்
 78. பிண்டி                                79. வஞ்சி
80. பித்திகம்                       81. சிந்துவாரம் (நொச்சி)

  82. தும்பை                        83. துழாய் (துளசி)
                                           
84. தோன்றி                  85. நந்தி (நந்தியாவட்டம்)
                                       
  86. நறவம்                     87. புன்னாகம்
                                             

88. பாரம் (பருத்தி)                89. பீரம் (பீர்க்கு)
                                         

90. குருக்கத்தி                91. ஆரம் (சந்தனம்)
                                         

92. காழ்வை (அகில்)                  93. புன்னை
                                   

94. நரந்தம் (நாரத்தம்)                            95. நாகம்
                                    
96. நள்ளிருநாறி (இருவாட்சி)  97. குருந்தம்  (காட்டெலுமிச்சை)
                   

98. வேங்கை                        99. புழகு (மலை எருக்கு)

 
இவை அனைத்தும் நம் தமிழ் மண்ணில் மலரும் பூக்கள். குறிஞ்சிப் பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்கள்.

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.


நன்றி... தினமணி.....