Thursday, January 23, 2014

ஆப்ரிக்க சிங்கம்

அழிவின் விளிம்பில் மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள்
 மேற்கு ஆப்ரிக்க சிங்கம்

மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய பிரத்யேகமான சிங்கங்கள் இன்றைய நிலையில் அங்கே வெறும் 400 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் நிலைமை இப்படியே போனால், இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் என்றும் இது குறித்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒன்று எச்சரித்திருக்கிறது.
பந்த்தேரா என்கிற தன்னார்வ அமைப்பு மேற்கு ஆப்ரிக்கப் பிராந்தியத்தில் இருக்கும் பதினேழு நாடுகளில் தனது ஆய்வை மேற்கொண்டது.
செனகலில் துவங்கி நைஜீரியா வரையிலான 17 நாடுகளில் சுமார் ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் இறுதி அறிக்கையில் இந்த பிராந்தியத்துக்கே பிரத்யேகமானதும், மரபணு ரீதியில் மற்ற ஆப்ரிக்க சிங்கங்களிடமிருந்து வேறுபட்டதுமான மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் வரலாற்று ரீதியில் வாழ்ந்த இடங்களில் இன்று வெறும் ஒரே ஒரு சதவீத இடங்களில் மட்டுமே அவை வாழ்வதாக தெரிவித்திருக்கிறக்கிறது.
இந்த அறிக்கையை எழுதிய ஆய்வாளர்களில் ஒருவரான பிலிப் ஹென்ஸ்ஷெசெல் இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசியபோது, சரித்திர ரீதியாக மேற்கு ஆப்ரிக்காவில் சிங்கங்கள் வாழ்ந்துவந்த அவற்றின் பாரம்பரிய வாழ்விடங்கள் 99 சதவீதம் குறைந்துள்ளது என்பது எமது ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
சிங்கங்கள் வாழ்விடங்கள் விவசாயத் தேவைகளுக்காக பெருமளவில் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டத்தே இதற்கு முக்கிய காரணம் என்றும், பருத்தி பயிர் செயவதற்காகவும், உணவுத் தேவைக்கான இதர பயிர்களுக்காவும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“கடந்த இருபது ஆண்டுகளில் பத்து நாடுகளுக்கும் மேலாக வாழ்ந்து சுற்றித்திருந்த சிங்கங்கள் இப்போது ஒரு குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட இடங்களிலேயே, அதிலும் மிகவும் ஆபத்தும் அபாயமும் நிறைந்த சூழலில் வாழ்கின்றன என்பது கவலையளிக்கும் ஒரு விஷயம்", என்றும் கூறினார் ஆய்வாளர் பிலிப் ஹென்ஷெசெல்.
மேற்கு ஆப்ரிக்க சிங்கக்குட்டி
இந்த சிங்கங்கள் இப்படி வேகமாக அழிவின் விளிம்புக்கு சென்றுகொண்டிருப்பது தமக்கு மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்த ஹென்ஷெசெல், இவை ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் சிங்கங்களில் மரபணு ரீதியில் மாறுபட்டவை என்பதால் இவற்றின் அழிவு என்பது ஒட்டுமொத்தமாக ஒருவகையான சிங்க இனமே அழிவதாகவே அர்த்தப்படும் என்று கூறினார்.
அழிவின் விளிம்பில் நிற்கும் இந்த அரியவகை மேற்கு ஆப்ரிக்க சிங்கங்களை பாதுகாக்க தேவைப்படும் நிதிவசதி இங்குள்ள அரசுகளிடம் இல்லை என்பதுடன், அந்த அரசுகளுக்கு வேறுபல முன்னுரிமை விவகாரங்களும் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்களை பாதுகாப்பதற்கு சர்வதேச நிதி உதவி தேவை என்று வாதாடும் அவர், அதற்கும் முன்னதாக, இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் அழிவில் விளிம்பில் இருக்கும் அருகிவரும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அடுத்த கட்டமாக இந்த வகையான மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் இயற்கையாக வாழும் பிரதேசங்களை பாதுகாக்கத் தேவையான சர்வதேச நிதி உதவியையும் உலக நாடுகள் செய்யவேண்டும் என்றும் அவர் கோரினார்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

சர்க்கரை ‘வெள்ளை விஷம்'

 சர்க்கரை என்ற பெயரில் மெல்லக் கொல்லும் ‘வெள்ளை விஷம்' : 
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் அரை தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போய் விடும்.

‘இட் இஸ் கான்....'. ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் சர்க்கரை என்ற பெயரில் அன்றாடம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். விடாத மைஅழுக்கையே சில நொடிகளில் போக்கும் இந்த சர்க்கரையை சலிக்காமல் தினந்தோறும் உட்கொள்ளும் நமது குடல் என்ன பாடுபடும்? என்ற நமது சிந்தனையை சர்க்கரையின் இனிப்பு சுவை மழுங்கடித்து விடுகிறது என்ற அதிர்ச்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ, காப்பியில் இருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரையும் நமது அன்றாட உணவினூடே ஒரு ஊடுபொருளாக நமது குடலுக்குள் செல்கிறது. 

இது தவிர, கிலோ கிலோவாக இனிப்பு தின்பண்டங்களை தின்று தீர்ப்பவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

'இல்லாத ஊருக்கு இலுப்பம் பூதான் சர்க்கரை' என்ற முதுமொழிக்கு ஏற்ப, இலுப்பம் பூவைப் போன்று வெள்ளை வெளேர் என்று சிரிக்கும் சர்க்கரையை, ஆலைகளில் எப்படி  தயாரிக்கிறார்கள்? என்கிற விபரத்தை முழுமையாக  தெரிந்து கொண்டவர்கள் அதைத் தொடக்கூட ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்.

இந்த வெள்ளை சர்க்கரையை தயாரிக்க என்னென்ன வகையான ரசாயன‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்பதை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ‘மாலை மலர் டாட்.காம் விரும்புகிறது.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் புளுயுடு பாக்டீரியாவை கட்டுப்படுத்த பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.

2. பிழிந்தெடுக்கப்பட்ட கரும்பு சாற்றுடன் 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரேட் கொதிநிலையில், ஒரு லிட்டர் கரும்பு சாற்றுடன் 200 மில்லி பாஸ்போரிக் ஆசிட் வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த கட்டத்தில் பாஸ்போரிக் ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்தப்படுகிறது.

4. 102 சென்டிகிரேட் வெப்பநிலை கொண்ட கொதிகலனில் சூடுபடுத்தப்படும் இந்த சாறு தன்வசம் தேக்கி வைத்திருந்த நல்ல விட்டமின்களை இழக்கின்றது: எதிர் வினையாக, அளவுக்கு அதிகமான செயற்கை சுண்ணாம்பு சத்து கூடி விடுகிறது.

5. அடுத்த கட்டமாக, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் இட்டு மண், சக்கை போன்ற பொருள்களை தெளிய வைத்து, வடிகட்டி, பிரித்து எடுத்த பின்னர் தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. மீண்டும் கொதிகலனில் இட்டு காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து, நீர்த்துப் போய் கிடக்கும் கரும்பின் சாறு அடர்த்தி மிக்க சர்க்கரை குழம்பாக உருமாற்றப்படுகிறது.

7. அதன் பின்னர்,  சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்கப்பட்டு, படிக நிலையில் கற்கண்டாக சர்க்கரை மறுபிறவி எடுக்கிறது. இந்த மறுபிறவி காலத்தில் சல்பர் டை ஆக்சைடு எனப்படும் மெல்லக் கொல்லும் நஞ்சு, ஒவ்வொரு துளி சர்க்கரையிலும் பரவி, கலந்து விடுகிறது.

8. இவ்வாறு தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. அதனால் தான், தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை பயன்படுத்த கூடாது என நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்தனர்.

9. தயாரிக்கப்பட்டு ஆறு மாத காலத்தை கடக்கும் போது சர்க்கரையில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

இதன் விளைவாக, குடல் சார்ந்த நோய்கள் மட்டுமன்றி, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற கொடிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

எனவே, ஆலைகளில் தயாரான வெள்ளை சர்க்கரையின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு, வெல்லம், பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை தாராளமாக பயன்படுத்தி மேற்கண்ட நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகியே இருப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் ’இனிதாக’ மேற்கொள்ள முடியும்.

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம். ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன. ...