Wednesday, June 15, 2011

நிலவில் இருந்து மின்சாரம்

    உலக அளவில் உள்ள பிரச்சினைகளில் ஒன்றாக மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. அணு சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் உள்ள ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் மாற்று வழிகளில் மின்சாரத்தை தயாரிப்பது குறித்து உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. சூரிய ஒளி, காற்று, கடல்அலை போன்றவற்ரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவுகள் அதிகமா இருப்பதால் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி தரவில்லை.
   இதற்கிடையில் ஜப்பானில் உள்ள விஞ்ஞானிகள், பூமிக்கு தேவையான மின்சாரத்தை நிலவில் இருந்து கொண்டு வர முடியுமா என்று ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற கட்டுமான நிறுவனமான ஷீமிஷூ கார்ப்பரேசன் இது தொடர்பான திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள திட்டம் இதுதான்.
   நிலவின் மீது கனிசமான அளவு சூரிய வெளிச்சம் விழுந்து கொண்டே இருக்கிறது. இந்த சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும். பின்னர் அதை பூமிக்கு அனுப்பவேண்டும். இந்த முறையில் 13 ஆயிரம் டெர்ரா வாட் அளவு மின்சாரத்தை தொடர்ந்து தயாரித்து பூமிக்கு அனுப்பமுடியும். இதன் மூலம் பூமியின் மின்சாரத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். நிலவில் மின்சாரம் தயாரிக்கும் பணி மற்றும் அந்த மின்சாரத்தை பூமிக்கு அனுப்பும் பணி ஆகியவற்றில் ரோபோ தொழில் நுட்பத்தை பயண்படுத்தலாம் என்றும் இதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும் என்பது அந்த நிறுவனத்தின் திட்டமாகும்.
   தற்போது காகித அளவில் இருக்கும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எந்த அனவுக்கு சாத்தியம் என்பது பற்றி அந்த நிறுவனம் விளக்கங்களையும் அளித்துள்ளது. மேலும் தற்போதுள்ள விண்வெளி மற்றும் ரொபோ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த முயற்சியில் வெற்றி பெற முடியும் என்பது இந்த நிறுவனத்தின் கருத்தாகும்.


காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

No comments: