Wednesday, June 8, 2011

வறண்ட மேகங்கள்


   சூரியனில் இருந்து வெளிவரும் வெப்பமானது, தண்ணீரைச் சூடாக்கிறது. தன்னால் முடிந்த அளவுக்கு வெப்பத்தை உள்வாங்கும் தண்ணீர், மீதி வெப்பத்தை திருப்பி அனுப்புகிறது. அதுதான் நீராவியாக மேலே செல்கிறது. அவ்வாறு மேலே செல்லும்போது நீராவி குளிர்ந்து, காற்றில் கலந்திருக்கும் தூசுத் துகள்களில் பட்டு அடர்த்தியாகிறது. அதாவது, நீர்த்துளிகளாக மாறுகிறது. இந்தத் துளிகள் கனமாகவும், பெரிதாகவும் மாறும்போது மழையாகப் பூமியில் விழுகிறது.
   தற்போது வாகனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை ஏராளமாக பல்கிப் பெருகிவிட்டன. இதனால் வளிமண்டலத்தில் புகையின் அளவு அதிகரித்துவிட்டது. இந்தப் புகையால் காற்றில் உள்ள தூசுக்கள்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவ்வாறு தூசுக்கள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மழைத்துளிகள் பெரிதாக வாய்ப்பில்லை. எனவே, சிறுசிறு துகள்களாக மழைத்துளிகள் மாறிவிடும். இப்படி சிறுசிறு துளிகள் அடங்கிய மேகத்தை, வறண்ட மேகம் என்று அழைக்கின்றனர். இதில் மழையே இருக்காது.
   தூய்மையான மழை மேகத்தையும், வறண்ட மேகத்தையும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர். தூய்மையான மழை மேகங்களில் இருப்பதில் பாதி அளவு மழைத்துளிகளே வறண்ட மேகத்தில் இருப்பது தெரிய வந்தது.
    எனவே, மழை வேண்டுமென்றால், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். வாகனங்களும், தொழிற்சாலைகளும் வெளியிடும் புகையைக் கட்டுப்படுத்த வெண்டும் ஏராளமான மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இதையெல்லாம் செய்யாவிட்டால், பிற்காலத்தில் மேகம் கூடும். ஆனால் மழை பெய்யாது என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

No comments: