Saturday, August 15, 2009

"நம்ம ஊர் தட்டான் தும்பி"
நம்மில் நிறையப்பேருக்கு வெளிநாடு செல்ல ஆசையிருக்கும். சிலபேர் சுத்திப்பார்க்க போவார்கள். சிலபேர் வேலை நிமித்தமாக போவார்கள். ஒவ்வெருவருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஆனால் அதற்க்கு நிறைய பார்மால்ட்டி இருக்கு பாஸ்போர்ட், விசா எடுக்கவேண்டும். அப்பொழுதான் விமாணத்தில் பறந்து வெளிநாடு செல்லமுடியும். இதெல்லாம் இல்லாமல் போய்வருபவர்கள் உண்டு யார்னு உங்களுக்கு தெரியும் யார் நம்மலுடைய பறைவைகள்தான்.

வசந்தகாலம் வந்துவிட்டால் பறவைகள் நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் வந்து முட்டையிட்டு, குஞ்சு பொரித்து அந்தக் குஞ்சுகளுடன் தாய்நாடு திரும்பும், இப்படி வந்து போகிற பறவைகளை நம் நாட்டில் நிறைய சரணாலயத்தில் பார்த்து இருக்கிறேம் கேள்விப்பட்டிருக்கிறேம்.இது இல்லாமல் வண்ணத்துப் பூச்சிகளும் நீண்டதுரம் 4ஆயிரத்து 300 மைல் துரம் பயணிப்பாதாக கேள்விப்பட்டிருக்கிறேம். இதெல்லாம் இல்லாமல் நம்ம ஊரில் மழை காலம் முடிந்தவுடன் ஒரு பூச்சி இணம் பறக்கும் அதுதான் 'தட்டான் பூச்சி' (தும்பினும்) சொல்வார்கள். இதுவும் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கிறது 12 ஆயிரம் மைல்கள் பயணம் செய்கிறது நம் தமிழ் நாட்டு தட்டான்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட்டு மாதம் தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டு அக்டோபர் ம்தம் மாலத்தீவை அடைகிறது. பின்னர் அங்கிருந்து நவம்பரில் செகேல்ஸ் தீவை அடைகிறது. டிசம்பரில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொசம்பிக் நகரை அடைகிறது. அங்கு இருந்து ஏப்ரல் மாதம் மாலத்தீவு வழியாக மீண்டும் இந்தியா திரும்புகிறது. இதில் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவெனில் அவை ஒவ்வொரு இடத்திலும் சில நாட்களே தங்குகின்றன. இடையே 600 மிதல் 800 கிலோமீட்டர் தூரம் கடலை கடக்கின்றன. இவை 3 ஆயிரத்து 200 அடி உடரத்தில் பறக்கின்றன. தாழ்வாக பறந்தால் காற்றிந் வேகம் தட்டாந்களை தள்ளிவிட்டு திசை மாற்றிவிடக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் சுவராசியமான விசயம் என்னவென்றால் இப்படி நீண்டதூரம் கண்டம் விட்டு கண்டம் செல்வதற்கு அவற்றின் அத்தியாவசிய தேவையான சுத்தமான தண்ணிர் கிடைக்காததுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நாம் சின்னவயதில் சாதரனமாக நினைத்து அடித்து துன்புறுத்திய ஒரு தட்டானுக்கு இப்படி ஒரு திறமை..

நன்றி தினத்தந்தி இளைஞர் மலர்....



சோ.ஞானசேகர்..
"இலங்கையில் நிலவும் சுமுக நிலை"
'இலங்கை தமிழர்கள் இலங்கையில் சுமுகமாக 'இருக்கிறார்கள். முதல்வர் மு.கருணாநிதி கன்னட கவிஞர் சர்வக்ஞரின் சிலை திறப்பு விழாவில் பேசியது, இலங்கைத் தமிழர் பிறச்னையில் சுமுக நிலை ஏற்பட்டுவிடக்கூடாது எனச் சிலர் விரும்பியதாகவும், இப்போதுகூட சிலர் அதைக் கிளறிவிடுகிறார்கள் என்று பேசினார்.எப்படி இலங்கையில் நம் சகோதர, சகோதிரிகள் சுகுமுகமாகவும், சந்தோசமாகவும் இருக்கிறார்கள் என்று பாருங்கள்........









Tuesday, August 4, 2009

ஈரமில்லாத ஈரானிய ராணுவம்‍

ஈரானில் 'லாயல் மிலிஷியா' என்றொரு ராணுவப் பிரிவு இருக்கிறது. 1979 இல் மக்கள் ராணுவமாக அயதுல்லா கொமினியால் தொடங்கப்பட்ட இந்தப் பிரிவு ஈரானின் பிரதான ராணுவத்தின் கீழ் செயல்படுகிறது. கொமினிக்குப் பிறகு அவரது இடத்திற்க்கு வந்த காமெனிக்கு இப்போது இந்த லாயல் மிலிஷியா ரெம்பவும் விசுவாசமாக இருக்கிறது.

இந்த ராணுவப் பிரிவினருக்குத் தரப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று என்ன தெரியுமா?

குற்றம் செய்ததாக மரண தண்டனை விதிக்கப்படும் ஈரானிய இளம் பென்களை 'தற்காலிகமாக' திருமணம் செய்து கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தினத்திறக்கு முதல் நாள் இரவு அவர்களை கற்பழிக்க வேண்டும்.

ஏன் இந்தக் கொடுமை?

ஈரானில் 'கன்னி கழியாத' பெண்களை மரண தண்டனைக்கு உட்படுத்துவது சட்டத்தை மீறியதாகக் கருதப்படுகிறது. அவர்களுக்கு மரண தண்டனை தரலாம். ஆனால் நிறை வேற்றப்படும்போது அவர்கள் கன்னிகளாக இருக்ககூடாது.

விசுவாச ரானுவப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தந்த வாக்கு மூலம் இது: 'ஐயோ ரெம்பக் கொடுமை இது. நாளை காலை மரண தண்டனை என்றால் இன்று இரவு தடண்டனை பெற்ற பெண்ணை நான் தற்காலிகமாக மணந்து கொண்டு கற்பழிக்க வேண்டும். அப்படி என் கடமையைச் செய்யும்போது அந்த இளம் பெண்களின் கதறல் கேட்டு நான் நொறுங்கிப் போகிறேன். பல பெண்கள் 'அது' முடிந்ததும் தன் நகங்களால் உடல் முழுவதும் கீறிக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன். மருநாள் மரண தண்டனையை எதிர்கொள்ளும்போது முகத்தில் அவர்கள் எந்த எக்ஸிபிரஷனும் இல்லாமல் நிற்பது இன்னும் சோகம்.

மரண தண்டனை கூட அவர்களுக்கு பயமில்லை. அதற்க்கு முதல் நாள் நடக்கும் கொடுமைதான் அவர்களுக்குப் பயம்.

இப்படியும் நடக்கிறது உலகத்தில் இந்த 20ஆம் நூற்றாண்டில்.

(நன்றி தினமணி கதிர் அக்கரைச் சீமை ராணிமைந்தன்).

சோ.ஞானசேகர்.