Saturday, September 17, 2011

இந்தியக் காடுகள்

     இந்தியாவில் அதன் புவியியல், வரலாறு மற்றும் கலாச்சார, இயற்கை சுற்றுச்சூழல்  பன்முகத்தன்மை ஒரு தனித்துவமான அடையாளத்தை, கொண்டிருக்கிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், மேற்கு தொடர்ச்சி மலைகளில் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பசுமையான வெப்பமண்டல மழைக்காடுகள்  வடக்கே இமயமலை ஆல்பைன் புதர்க்காடுகள் பசுமைமாறா மழை காடுகள், இலையுதிர் பருவ காடுகள், முள் காடுகள், வெப்ப மண்டல காடுகள்,  மிதவெப்ப மண்டல பைன் காடுகளை கொண்டிருக்கிறது.
    இதில் 16 முக்கிய காடுகள் வகைகள் 221 சிறு வகைகளாக பிரித்து, அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. இந்திய காட்டின் வகைகளை பொது அமைப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
   மேற்கத்திய மலைத்தொடர்கள், இது துணை தீபகற்பம் இந்திய அரபிக்கடல் கடலோர; மற்றும் வடக்கு கிழக்கில் அசாம் பகுதியில் இந்திய வெப்பமண்டல காடுகளின் முக்கிய பகுதிகளில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் காணப்படுகின்றன. இந்திய மழைக்காடுகள் சிறிய மீதமுள்ளவைகளாக ஒரிசா மாநில காடுகள் காணப்படுகின்றன. பசுமைமாறா காடுகள் மனித குறுக்கீடால் அரை-பசுமைமாறா காடுகளாக தரம் குறைத்து கொண்டுள்ளன. அரை பசுமையான மழைக்காடுகள் பசுமைமாறா உருவாக்கம் விட விரிவானதாக உள்ளது. மூன்று முக்கிய மழைக்காடுகள் பகுதிகளில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை இரண்டிலும் கணிசமான வேறுபாடுகள் அங்கு உள்ளன.
   இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை காடுகளின் மலைத்தொடர்கள் மேற்கு (கடற்கரை) விளிம்புகளில் மற்றும் கிழக்கு பக்கத்தில் குறைவான மழை அங்கே ஏற்படுகின்றன. இந்தியாவில் காடுகள் பெரிய வணிக முக்கியத்துவத்தை கொண்டுள்ளது தேக்கு இந்திய ரோஸ்வுட்  மலபார் கினோ   பல மர இனங்கள் கொண்டிருக்கின்றன, ஆனால் அவைகள் இப்போது பல பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டு விட்டது. இந்திய மழை காடுகளில் ஒரு மகத்தான மர இனங்கள்  பல அங்கு உள்ளது. மேல் கூரை மரங்கள் குறைந்தது 60 சதவீதம் தனித்தனியாக மொத்த எண்ணிக்கையை விட ஒரு சதவிகிதம் இல்லை. தென் மேற்கு இந்திய பசுமைமாறா காடுகள், அநேக பகுதிகளில் நீரோடைகள் சேர்த்து மோசமாக வடிகட்டிய நிலை ஏற்பட்டுவிட்டது  இந்திய வனப்படுதிகளில.
   வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய வெப்பமண்டல தாவர (அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் மற்றும் அருணாச்சல பிரதேச சமவெளி பகுதிகளில் அடங்கும்) பொதுவாக 900 மீ வரை உயரத்தில் வளரும். அது பசுமையாக மற்றும் அரை பசுமைமாறா மழை காடுகள், ஈரமான இலையுதிர் பருவ காடுகள், ஆற்றங்கரை காடுகள், சதுப்பு மற்றும் புல்வெளிகள் இருக்கிறது. இந்தியாவில் பசுமைமாறா மழை காடுகள் மழை வீழ்ச்சி வருடத்திற்கு 2300 மிமீ தாண்டுகிற அசாம் பள்ளத்தாக்கு, கிழக்கு இமயமலை அடிவாரத்தில் மற்றும் நாகா ஹில்ஸ், மேகாலயா, மிசோராம் கீழ் பகுதிகள், மற்றும் மணிப்பூர் காணப்படுகின்றன. அசாம் பள்ளத்தாக்கில் 50மிமீ 7மிமீ வரை ஏற்படுகின்றன. இந்தியாவில் பருவ மழை காடுகள் இந்த பகுதியில் பரவலாக முக்கியமாக ஈரமான சல் காடுகள், உள்ளன.
   அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வெப்ப மண்டல பசுமைமாறா மழை காடுகள் மற்றும் வெப்ப மண்டல பகுதி பசுமைமாறா மழைக்காடுகள் அத்துடன் வெப்ப மண்டல பருவ ஈரமான பருவ காடுகள்  கொண்டிருக்கின்றன. தீவு தெற்கு பகுதிகளில் சில தீவுகளில் இந்த இந்திய காடுகளில் மேலாதிக்க இனங்கள், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ளன. அந்தமான் மழைக்காலங்களான காடுகள் தெர்மினலியா ஆதிக்கத்தில் உள்ளன.
 
இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...

Saturday, September 10, 2011

அல்பெடராஸ் பறவை

     ஹானலுலூ: காடு மற்றும் கடல் பகுதிகளில் வசிக்கும் பறவையினங்களில் ஒன்றான அல்பெடராஸ், உலகிலேயே மிகவும் வயதான தாய்ப்பறவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க பறவை 60 வயதிலும்  முட்டை போடுகிறதாம். அமெரிக்காவின் கடல் மற்றும் வனத்துறை ஆராய்ச்சியாளர்கள், ஹானலுலூவின் வடமேற்கு பகுதியில் இருந்து சுமார் 2000 கி.மீ. தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அல்பெட்ராஸ் என்ற பறவையின் முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், அந்த முட்டையை போட்ட தாய்ப்பறவை 60 வயது நிறைந்தது என தெரியவந்துள்ளது.  விஸ்டம் என்று பெயரிடப்பட்ட இந்த அல்பட்ராஸ், 1956&ம் ஆண்டு 5 வயதில் முதல் முட்டை இட்டது என்று அமெரிக்க ஜியலாஜிக்கல் கணக்கெடுப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    அமெரிக்காவின் பறவைகள் பாதுகாப்பு நிறுவனத்தலைவர் மற்றும் பறவை இன ஆர்வலர் ப்ரூஸ் பீட்டர்ஜான் கூறியது: ஆராய்ச்சி குறிப்பேடுகளின்படி ராட்சத பறவை இனமான அல்பட்ராஸ், 90 ஆண்டுகளுக்கு முன்பு  அமெரிக்காவில் அதிக அளவில் வசித்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முட்டைக்கு முன்பு, விஸ்டம் 30 முதல் 35 முட்டைகள் இட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த இனம் அழிந்து வரும் இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அரிய பறவை இனமான அல்பெட்ராஸை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

நன்றி தமிழ் முரசு.....

Friday, September 9, 2011

மூங்கில் காடுகள்


   மூங்கில் காடுகள், சீனா, ஜப்பான் மற்றும் கிழக்கு  தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் காணலாம். ஆனால் அவைகள் கூட வடக்கு ஆஸ்திரேலியா, இந்தியா,  சகாரா ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க வெப்பமண்டல பகுதிகளில் காணலாம். மூங்கில் காடுகள் குறிப்பாக மூங்கில் செடிகள் தங்களை வளர்ச்சி சுழற்சி அடிப்படையில், கடின காடுகள் பெரிதும் மாறுபடுகின்றன.
   மூங்கில் காடுகள் பல நூற்றாண்டுகளாக உணவு மற்றும் கட்டிட பொருட்களுக்கு ஒரு ஆதாரமாக மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மற்றும் அவைகள் இன்றும் அதே நோக்கங்களுக்காக, குறிப்பாக ஆசியாவில், பயன்படுத்தப்படுகின்றன. அவைகளுடைய பொருள் முக்கியத்துவத்தை தவிர, மூங்கில் காடுகள், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் கலாச்சார அடையாளமாக உள்ளன. சீனாவில்,  மூங்கில் தோப்புகளில் புத்த கோயில்கள் இருக்கும். மூங்கில் காடுகள் தீயவைகளை விரட்டுவதற்காக நம்பப்படுகிறது.
  மூங்கில் காடுகள் உருவாக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்றாலும், மூங்கில் காடுகள் மிக வேகமாக வளர்கின்றன மற்றும் முழுமையாக முதிர்ந்த மூங்கில் செடிகள், 3 முதல் 7 ஆண்டுகளுக்குள், உயரம் 20 முதல் 30 அடி வரை வளரும். மூங்கில் அனைத்து ஒரு மரம், ஆனால் அது ஒரு பெரிய புல் ஒரு வகை,  மூங்கில் செடி தான் தளிர்கள் இறந்து பிறகு, அவைகள் விழுந்துவிடும்.  தாவர மூல கணுவில் இருந்து முளைகள் விட்டு வளரும்.
   மூங்கில் மரங்கள் 48 வருடங்களுக்கு ஒரு முறை  பூக்கும்.
இந்த பூவிலிருந்து வரும் மனிகளை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. காட்டில் உள்ள மக்கள் அதை சமைத்து சாப்பிடுகிறார்கள். மூங்கில்கள் பூத்து முடிந்தவுடன் காய்ந்து விடும். இதே போன்று 1980களில் சீனாவில் பசானியா பாங்கியானா (Bashania fangiana) என்ற மூங்கில் இனத்தின் மிகுதியான பூப்பினால் அங்குள்ள பாண்டா (Giant Panda) விலங்குகள் பாதிக்கப்பட்டன. பாண்டாகரடிகள் மூங்கில் இலை அதிகமாக உணனும்.
   மூங்கில் பூக்கும் போது அதி விளையும் நெல் அரிசியை சாப்பிடுவதற்கு அதிகப்படியான எலி வரும். அச்சமயத்தில் அதிகமாக இனப்பெருக்கம் செய்யும், மூங்கில் பூத்து முடிந்தவுடன் அவை உணவைத் தேடி வயல்களில் வந்து விளையும் தானியங்களை அழித்துவிடும். அச்சமயத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்படும்.
   காட்டில் இருக்கும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு மூங்கில். நாம் காட்டி இருக்கும் மூங்கில் மரத்தையெல்லாம் வெட்டி அழிப்பதால் அதற்கு உணவும், மறைவிடமும் கிடைக்காமல் போவதாலும் அதன் வழித்தடங்களை அழித்து விடுவதாலும் யானைகள் மனிதர்கள் வாழ்விடத்தை நோக்கி வருகிது.
    பச்சைத்தங்கம் என்று அழைக்கப்படும் இந்த மூங்கில் உலகில் சுமார் 1400 இனங்களில் இந்தியாவில் 136 இனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பெருவாரை (தட்டை மூங்கில்) மற்றும் சிறுவாரை (கல் மூங்கில்) என இருவகைகள் மட்டுமே காணப்படுகின்றன.
   முள்ளில்லா மூங்கில் ரகங்கள் தமிழ்நாட்டிற்கு ஏற்றதாகவும், லாபகரமான வளர்ச்சியும் கூடியதாகவும் உள்ளதால், அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலிருந்து கொண்டுவந்து இரண்டு ரகங்களாக இவைகள் - கெட்டி மூங்கில், பொந்து மூங்கில் என சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
   வலுவாகவும், நீண்டகாலம் கெடாமலும் இருப்பதால், வீடு கட்டவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும், விவசாயத் தொழில்களுக்கும், மேஜை, நாற்காலிகள், கலைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
    ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் பிராணவாயு அதாவது ஆக்சிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவை 800 கிராம். ஆனால், ஒரு குத்து தருவதோ 850 கிராம். ஒரு மூங்கில் குத்தில் வெளியிடக்கூடிய பிராண வாயு ஒரு மனிதனுக்குப் போதுமானது.
 
 ஆளுக்கொரு மூங்கில் மரம் அல்லது குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மூங்கில் மரம் இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும்!


Tuesday, September 6, 2011

பசுமை இல்ல விளைவு

   சூரியனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதன் மூலம் பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை பெற்றுக்கொள்கிறது. பூமி தான் பெற்றுக்கொண்ட வெப்பத்தின் ஒரு பகுதியை மீண்டும் செந்நிறக்கதிர்களாக விண்வெளியை நோக்கி வீசுகிறது. இவற்றின் ஒரு பகுதி மேகம், நீராவி, கார்பன்-டை-ஆக்சைடு வாயு போன்றவற்றின் மீது படுகிறது. அவை இந்த கதிர்களை வெளியே விட்டுவிடாமல் தன்னகத்தே அடக்கி வைத்து விடுகின்றன. இப்படி தேக்கி வைக்கப்பட்ட கதிர்கள்தான் பூமியை சூடாக வைத்திருக்கின்றன. இதுதான் 'பச்சை வீட்டு விளைவு'  அல்லது 'பசுமை இல்ல விளைவு' என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்ற நிகழ்வு பூமியில் நடைபெறாமல் போனால், பூமி குளிர்ந்து நீர் முழுவதும் உறைந்துவிடும்.
   ஆனால், அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடு வளிமண்டலத்தில் மேலும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இந்த வாயுக்கள் பூமியைச் சுற்றிலும் கண்ணாடுக் கூண்டு போல இருந்து செந்நிறக் கதிர்களை வளிமண்டலத்தில் இருந்து தப்பி விட முடியாதபடி, தன்னகத்தே உறிஞ்சி வைத்துக் கொள்கின்றன.
   இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஒருபக்கம் கடும் வறட்சியும், மற்றெரு புறம் பெரும் வெள்ளம், கடும் புயல், சூறாவளி என்று இயற்கை சீற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
     பச்சை வீட்டு விளைவால் வெப்ப மண்டல நாடுகளின் பனி மலைகள் எப்போதோ உருகத் தொடங்கி விட்டன. துருவ பகுதிகளின் பனிக் குவியல்களும், உருக ஆரம்பித்து விட்டன. இவை கடலில் கொண்டு போய்ச் சேர்க்கும் நீரால் கடல் மட்டம் உயரும். ஏற்கனவே 25 சென்டிமீட்டராய் உயர்ந்து விட்ட கடல் மட்டம் இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு மீட்டரைத் தொட்டுவிடும் எனறு அஞ்சப்படுகிறது. இது மட்டும் நிகழ்ந்தால் மாலத்தீவுகள் மட்டுமல்லாமல், நியூயார்க் முதல் மும்பை வரை உள்ள கரையோர நகரங்கள் பலவும் கடலுக்குள் மூழ்கிவிடும். பூமி சூடாவதைக் கட்டுப்படுத்தி வைத்தால் மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து தப்ப முடியும்.
   நாம் எரிபொருட்களை எரித்து கரியாக்குவதால், காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. இதன் அளவில் பெரும்பகுதியை கடல் நீர் உள்வாங்கி தன்னுள் கரைத்து விடுகிறது. எரிபொருட்களின் பயன்பாட்டால் வரும் கார்பன்-டை-ஆக்சைடில் 48 சதவிதத்தை இப்படி கடல் உள்வாங்கிவிடுகிறது. இதனால் கடலுக்குக் கடல் இந்த வாயுவின் அளவு வேறுபடுகிறது. இந்த வாயு கடல் நீரில் கரைந்து கார்போனிக் அமிலமாக மாறுவதால் கடல்வாழ் உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கிறது.
   இதுபோன்ற அபாயகரமான விளைவுகள் பூமியில் தொடர்ந்து நடைபெறும்போது, ஒருகட்டத்தில் பூமியின் வெப்பம் அதிகரித்து விடுகிறது. இந்தக் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுவதைக் குறைக்கவே கியாட்டோ ஒப்பத்தம் உருவானது.
  பூமி வெப்பமாவதை தடுக்க மரம், செடி, கொடிகள், காடுகள், வனங்கள், வனவிலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் காப்போம்.

Monday, September 5, 2011

வனங்களின் அருமை


      அனைத்து நாடுகளிலும், இயற்கை வளங்களை அளிப்பதில் காடுகளின் பங்கு முக்கியமாக உள்ளது.

   மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணற்ற மூலிகைகள், ஒப்பனைப்பொருட்கள் மற்றும் பல மதிப்புள்ள விளைபொருட்கள் ஆகியவற்றையும் காடுகள் அளிக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், காடுகளின் பங்கு கணிசமான அளவில் உள்ளது.
   ஒவ்வொரு காடுகளிலும், காட்டுயிர்களின் எண்ணிக்கை முழுமையாக இருக்கிறது. நாம் பயன்படுத்தும் காட்டு வளங்களின் சூழ்நிலையை சமநிலையாக வைத்திருக்க வேண்டும்.
  காடுகளின் வளத்தை தவறாக பயன்படுத்துவதால் தான், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேராபத்துக்கள் ஏற்படுகின்றன.
   காட்டு விலங்குகள் இடம் பெயர்ந்து மக்கள் வாழும் இடங்களை தேடி உணவுக்காகவும் நீருக்காகவும் வருகின்றன.
  இதைவிட இன்னும் ஒரு அதிச்சியான விசம் காடுகள் அழிப்பால் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக உயிரினங்கல் வடதிசை நோக்கி விரைந்து செல்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
   இது தொடர்பாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2 ஆயிரம் உயிரின வகைகள், வருடத்திற்கு ஒரு மைல் என்ற வேகத்தில் நிலநடுக்கோட்டில் இருந்து வடக்குப் பகுதி நோக்கி நகர்வது தெரியவந்துள்லது.
   இந்த உயிரினங்களில் பெரும்பாலனவை பூமியின் வடகோளத்தைச் சேர்ந்தவை. பல்லாண்டு காலமாகவே இப்படி நகர்ந்து வருகின்றன என்றதும் தற்போது அவற்றின் வேகம் கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மணிக்கு எட்டு அங்குலங்கள் என்ற வேகத்தில் நகர்ந்து வருகின்றன.
   "உயிரினங்கள் வடக்கு நோக்கி நகரும் வேகம் ஒரு முக்கியமான விஷயம். அது நாம் நினைத்ததை விட அதிகமாக இருக்கிறது என்கிறார்".
   இந்த ஆய்வை மேற்கொம்ட யார்க் பல்கலைக்கழகத்தின் கிறிஸ் தாமஸ். குளிரான காலநிலையை நாடியே உயிரினங்கள் இவ்வாறு இடம்பெயர்கின்றன.
   கடந்த பத்தாண்டுகள் தான் பூமியின் மிக வெப்பாமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. இகில் 2005-ம், 2010-ம் அதிகபட்ச வெப்பநிலை ஆண்டுகளாக இருக்கின்றன.
   2000 ஆண்டுகளில் வெப்பநிலை உயரத் தொடங்கியதுமே உயிரினங்கள் குளிரான இடத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. இவ்வாறு நகரும் உயிரினங்களில் ஐரோப்பாவின்  'சிட்டி காப்பர்' வண்ணத்துப்பூச்சியும், ஸ்வீடனின்  'பர்ப்பி எம்பர்' வண்ணத்துப்பூச்சியும் குறிப்பிடத்தக்கவை. இங்லாந்தின்  'காமா' பட்டாம்பூச்சி கடந்த 21 ஆண்டுகளில் 135 மைகள் தூரம் நகர்ந்துள்ளது.
   வெப்பநிலை காரணமாக மிக வேகமாக இடம்பெயரும் உயிரினங்களில் ஒன்று,  'சிலோமெட்டஸ்' என்ற இங்லாந்து சிலந்தி. இந்த சிறிய சிலந்தி கடந்த 25 ஆண்டுகளில் 200 மைல்கள் வடக்கு நோக்கி தனது இருப்பிடத்தை நகர்த்திக்கொண்டுள்ளது. அதாவது ஒரு ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக 8 மைல்கள்.
  இப்படி பெரிய விலங்குகளும், சிறிய பூச்சி, பறவை இனங்களும் இடம் நகர்வது அலட்சியப்படுத்தும் விசயம் அல்ல. அவைகள் நமக்கு கொடுக்கும் எச்சரிக்கை என்பதை மனிதர்களாகிய நாம் உணரவேண்டும். அதலால் இயற்கை வளங்களை காப்பது நமது கடமை என்பதை உணரவேண்டும்.

  நாம் பயன்படுத்தும் காட்டு வளங்களின் சூழ்நிலையை சமநிலையாக வைத்திருக்க வேண்டும்.