Tuesday, December 31, 2013

இயற்கையின் இமயம்

இயற்கையின் இ(மை)மயம்
இயற்கை எய்துவிட்டது. இவரை விட இயற்கையை நேசித்தவர் மிகச்சிலரே.

இயற்கைக்கு இற்கை சுலோகங்கள் 

இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.

இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்.

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.

சுற்றுச்சூழலைப் பதுகாப்போம்.

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்.

செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.

இயற்கை நமக்கு கொடுத்த கொடை மலை.

இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...

இயற்கையை இயற்கையாக இருக்க விடுவோம்...

மரம் வளர்ப்போம் புவிகாப்போம்

இயற்கையின் அதிசயம் நமக்கு மகிழ்ச்சி...

இயற்கையை ரசித்து இயற்கையாக வாழவும்.

இயற்கை வனவளமே நாட்டின் வளம்...

பூமியை காக்க, பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! 

வனவிலங்குகளை காத்து இயற்கையை காப்போம்...

இயற்கையை காப்பது நம் கடமை...

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

மரம் வளர்த்து மழை வளம் காப்போம்...

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்...

இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...

இயற்கை நமக்கு கொடை...

மரம் வளர்ப்போம் புவி காப்போம...

மரம் வளர்ப்போம் வரும் சந்ததி காப்போம்.....

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுவோம்...

காட்டைவளர்த்து நாட்டைக்காப்போம்...

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுவோம்...

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்...

மரம் வளர்த்து புவி காப்போம்....

இயற்கை அன்னை நமக்கு அளித்த அழகு காடுகள்...

இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்.... 

பசுமை நிறைந்த உலகை உருவாக்குவோம்.....

தூய்மையை இழக்காத ஒன்று இயற்கைதான்...


இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

வனவளம் காப்போம் வளமான வாழ்வு பெறுவோம்...

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ... 

இயற்கை நமக்களித்த ஆதார ஒளி சூரியன்! 

இயற்கை எழில் கூடிய அருமையான பகுதி. ...

இயற்கையை நீ அழித்தால் இயற்கையோடு நீயும் அழிவாய்...

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...

இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது...

இயற்கை அண்ணை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு...

வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்



Monday, December 16, 2013

மாரடைப்பைத் தடுக்கும் ஆரஞ்சு

 
 உலகில் இருதயக் கோளாறு மற்றும் மாரடைப்பு காரணமாக பலர் மரணம் அடைகிறார்கள். ரத்தத்தில் இருவகையான கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. அவை 1. எச்.டி.எல். ( எச்.டி.எல் -ஹை டென்சிட்டி லிப்போ புரொட்டின்ஸ்) 2. எல்.டி.எல். - (லோ டென்சிட்டி லிப்போ புரொட்டின்ஸ்) இதில் எச்.டி.எல் சத்து 40 மில்லி கிராம் சதவீதத்துக்குக் குறையக் கூடாது. அதே போல் எல்.டி.எல் அளவு 100 மில்லி கிராம் சதவீதத்துக்கு குறைவாகவே இருக்க வேண்டும்.
  ரத்தத்தில் கொழுப்பு தேவைக்கு அதிகமாகச் சேருவதையும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்க எச்.டி.எல். சத்து உதவுகிறது. தினமும் 2 அல்லது 3 கிளாஸ் ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் ரத்தத்தில் எச். டி.எல். அளவு அதிகரிக்கிறது என்று டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஹெஸ்பிரிடின் என்ற சத்து காரணமாக அமைகிறது. எனவே தினமும் ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் மாரடைப்பு மற்றும் இருதயக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்று டாக்டர்கள் யோசனை கூறியுள்ளனர்.
 (ஆதாரம்: பொது அறிவுப்பெட்டகம்.)
நன்றி : தினமணி ஞாயிறு கொண்டாட்டம்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Saturday, December 14, 2013

தவளை நண்டு

 
மன்னார் வளைகுடாவில் அரிய வகை தவளை நண்டு
 19ஆம் நூற்றாண்டில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் காணப்பட்ட "தவளை நண்டு' (Frog crab) என அழைக்கப்படும் அரிய வகை நண்டு இப்போது மன்னார் வளைகுடா பகுதியில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து தூத்துக்குடி கடல் பகுதியில் ஆராய்ச்சி நடத்திவரும் மீன்வள ஆராய்ச்சியாளர் டி. வைத்தீஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உலகில் மொத்தம் 6,793 வகையான கடல் நண்டுகள் உள்ளன. குறிப்பாக, மன்னார் வளைகுடா பகுதியில் 254 வகையான நண்டுகள் உள்ளன. இதில் 24 வகையான நண்டுகள் விஷத்தன்மை கொண்டவை.
 இந்த வகை நண்டுகளிலிருந்து புற்றுநோய் உள்ளிட்ட பலவகை நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
  ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கடல் பகுதியில் வாழக்கூடிய தவளை நண்டு, ரனிணா ரனிணா என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த வகை நண்டு 19-ஆம் நூற்றாண்டில் வங்காள விரிகுடா பகுதியில் காணப்பட்டதாக மீன்வள ஆராய்ச்சியாளர் ஆன்டர்சன் என்பவர் 1888-ஆம் ஆண்டு உறுதி செய்துள்ளார்.
  இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில், விசைப்படகில் பிடித்துவரப்பட்ட கலசல் எனப்படும் கோழித் தீவனத்துக்கு பயன்படுத்தக் கூடிய மீன்களுடன் இந்த அரிய வகை தவளை நண்டு காணப்பட்டது.
  4.5 செ.மீ. நீளமும், 10 கிராம் எடையும் கொண்ட இந்த வெள்ளை நிற நண்டு தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் 310 மீட்டர் ஆழத்தில் பிடிபட்டுள்ளது.
  இந்த நண்டு மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குள் இடம் பெயர்ந்தது குறித்தும், இதன் மருத்துவ குணம் குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் மேலும் அரிய தகவல்கள் கிடைக்கும்.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்...