Friday, September 9, 2011

மூங்கில் காடுகள்


   மூங்கில் காடுகள், சீனா, ஜப்பான் மற்றும் கிழக்கு  தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் காணலாம். ஆனால் அவைகள் கூட வடக்கு ஆஸ்திரேலியா, இந்தியா,  சகாரா ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க வெப்பமண்டல பகுதிகளில் காணலாம். மூங்கில் காடுகள் குறிப்பாக மூங்கில் செடிகள் தங்களை வளர்ச்சி சுழற்சி அடிப்படையில், கடின காடுகள் பெரிதும் மாறுபடுகின்றன.
   மூங்கில் காடுகள் பல நூற்றாண்டுகளாக உணவு மற்றும் கட்டிட பொருட்களுக்கு ஒரு ஆதாரமாக மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மற்றும் அவைகள் இன்றும் அதே நோக்கங்களுக்காக, குறிப்பாக ஆசியாவில், பயன்படுத்தப்படுகின்றன. அவைகளுடைய பொருள் முக்கியத்துவத்தை தவிர, மூங்கில் காடுகள், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் கலாச்சார அடையாளமாக உள்ளன. சீனாவில்,  மூங்கில் தோப்புகளில் புத்த கோயில்கள் இருக்கும். மூங்கில் காடுகள் தீயவைகளை விரட்டுவதற்காக நம்பப்படுகிறது.
  மூங்கில் காடுகள் உருவாக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்றாலும், மூங்கில் காடுகள் மிக வேகமாக வளர்கின்றன மற்றும் முழுமையாக முதிர்ந்த மூங்கில் செடிகள், 3 முதல் 7 ஆண்டுகளுக்குள், உயரம் 20 முதல் 30 அடி வரை வளரும். மூங்கில் அனைத்து ஒரு மரம், ஆனால் அது ஒரு பெரிய புல் ஒரு வகை,  மூங்கில் செடி தான் தளிர்கள் இறந்து பிறகு, அவைகள் விழுந்துவிடும்.  தாவர மூல கணுவில் இருந்து முளைகள் விட்டு வளரும்.
   மூங்கில் மரங்கள் 48 வருடங்களுக்கு ஒரு முறை  பூக்கும்.
இந்த பூவிலிருந்து வரும் மனிகளை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. காட்டில் உள்ள மக்கள் அதை சமைத்து சாப்பிடுகிறார்கள். மூங்கில்கள் பூத்து முடிந்தவுடன் காய்ந்து விடும். இதே போன்று 1980களில் சீனாவில் பசானியா பாங்கியானா (Bashania fangiana) என்ற மூங்கில் இனத்தின் மிகுதியான பூப்பினால் அங்குள்ள பாண்டா (Giant Panda) விலங்குகள் பாதிக்கப்பட்டன. பாண்டாகரடிகள் மூங்கில் இலை அதிகமாக உணனும்.
   மூங்கில் பூக்கும் போது அதி விளையும் நெல் அரிசியை சாப்பிடுவதற்கு அதிகப்படியான எலி வரும். அச்சமயத்தில் அதிகமாக இனப்பெருக்கம் செய்யும், மூங்கில் பூத்து முடிந்தவுடன் அவை உணவைத் தேடி வயல்களில் வந்து விளையும் தானியங்களை அழித்துவிடும். அச்சமயத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்படும்.
   காட்டில் இருக்கும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு மூங்கில். நாம் காட்டி இருக்கும் மூங்கில் மரத்தையெல்லாம் வெட்டி அழிப்பதால் அதற்கு உணவும், மறைவிடமும் கிடைக்காமல் போவதாலும் அதன் வழித்தடங்களை அழித்து விடுவதாலும் யானைகள் மனிதர்கள் வாழ்விடத்தை நோக்கி வருகிது.
    பச்சைத்தங்கம் என்று அழைக்கப்படும் இந்த மூங்கில் உலகில் சுமார் 1400 இனங்களில் இந்தியாவில் 136 இனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பெருவாரை (தட்டை மூங்கில்) மற்றும் சிறுவாரை (கல் மூங்கில்) என இருவகைகள் மட்டுமே காணப்படுகின்றன.
   முள்ளில்லா மூங்கில் ரகங்கள் தமிழ்நாட்டிற்கு ஏற்றதாகவும், லாபகரமான வளர்ச்சியும் கூடியதாகவும் உள்ளதால், அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலிருந்து கொண்டுவந்து இரண்டு ரகங்களாக இவைகள் - கெட்டி மூங்கில், பொந்து மூங்கில் என சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
   வலுவாகவும், நீண்டகாலம் கெடாமலும் இருப்பதால், வீடு கட்டவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும், விவசாயத் தொழில்களுக்கும், மேஜை, நாற்காலிகள், கலைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
    ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் பிராணவாயு அதாவது ஆக்சிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவை 800 கிராம். ஆனால், ஒரு குத்து தருவதோ 850 கிராம். ஒரு மூங்கில் குத்தில் வெளியிடக்கூடிய பிராண வாயு ஒரு மனிதனுக்குப் போதுமானது.
 
 ஆளுக்கொரு மூங்கில் மரம் அல்லது குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மூங்கில் மரம் இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும்!


No comments: