Monday, September 5, 2011

வனங்களின் அருமை


      அனைத்து நாடுகளிலும், இயற்கை வளங்களை அளிப்பதில் காடுகளின் பங்கு முக்கியமாக உள்ளது.

   மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணற்ற மூலிகைகள், ஒப்பனைப்பொருட்கள் மற்றும் பல மதிப்புள்ள விளைபொருட்கள் ஆகியவற்றையும் காடுகள் அளிக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், காடுகளின் பங்கு கணிசமான அளவில் உள்ளது.
   ஒவ்வொரு காடுகளிலும், காட்டுயிர்களின் எண்ணிக்கை முழுமையாக இருக்கிறது. நாம் பயன்படுத்தும் காட்டு வளங்களின் சூழ்நிலையை சமநிலையாக வைத்திருக்க வேண்டும்.
  காடுகளின் வளத்தை தவறாக பயன்படுத்துவதால் தான், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேராபத்துக்கள் ஏற்படுகின்றன.
   காட்டு விலங்குகள் இடம் பெயர்ந்து மக்கள் வாழும் இடங்களை தேடி உணவுக்காகவும் நீருக்காகவும் வருகின்றன.
  இதைவிட இன்னும் ஒரு அதிச்சியான விசம் காடுகள் அழிப்பால் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக உயிரினங்கல் வடதிசை நோக்கி விரைந்து செல்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
   இது தொடர்பாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2 ஆயிரம் உயிரின வகைகள், வருடத்திற்கு ஒரு மைல் என்ற வேகத்தில் நிலநடுக்கோட்டில் இருந்து வடக்குப் பகுதி நோக்கி நகர்வது தெரியவந்துள்லது.
   இந்த உயிரினங்களில் பெரும்பாலனவை பூமியின் வடகோளத்தைச் சேர்ந்தவை. பல்லாண்டு காலமாகவே இப்படி நகர்ந்து வருகின்றன என்றதும் தற்போது அவற்றின் வேகம் கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மணிக்கு எட்டு அங்குலங்கள் என்ற வேகத்தில் நகர்ந்து வருகின்றன.
   "உயிரினங்கள் வடக்கு நோக்கி நகரும் வேகம் ஒரு முக்கியமான விஷயம். அது நாம் நினைத்ததை விட அதிகமாக இருக்கிறது என்கிறார்".
   இந்த ஆய்வை மேற்கொம்ட யார்க் பல்கலைக்கழகத்தின் கிறிஸ் தாமஸ். குளிரான காலநிலையை நாடியே உயிரினங்கள் இவ்வாறு இடம்பெயர்கின்றன.
   கடந்த பத்தாண்டுகள் தான் பூமியின் மிக வெப்பாமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. இகில் 2005-ம், 2010-ம் அதிகபட்ச வெப்பநிலை ஆண்டுகளாக இருக்கின்றன.
   2000 ஆண்டுகளில் வெப்பநிலை உயரத் தொடங்கியதுமே உயிரினங்கள் குளிரான இடத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. இவ்வாறு நகரும் உயிரினங்களில் ஐரோப்பாவின்  'சிட்டி காப்பர்' வண்ணத்துப்பூச்சியும், ஸ்வீடனின்  'பர்ப்பி எம்பர்' வண்ணத்துப்பூச்சியும் குறிப்பிடத்தக்கவை. இங்லாந்தின்  'காமா' பட்டாம்பூச்சி கடந்த 21 ஆண்டுகளில் 135 மைகள் தூரம் நகர்ந்துள்ளது.
   வெப்பநிலை காரணமாக மிக வேகமாக இடம்பெயரும் உயிரினங்களில் ஒன்று,  'சிலோமெட்டஸ்' என்ற இங்லாந்து சிலந்தி. இந்த சிறிய சிலந்தி கடந்த 25 ஆண்டுகளில் 200 மைல்கள் வடக்கு நோக்கி தனது இருப்பிடத்தை நகர்த்திக்கொண்டுள்ளது. அதாவது ஒரு ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக 8 மைல்கள்.
  இப்படி பெரிய விலங்குகளும், சிறிய பூச்சி, பறவை இனங்களும் இடம் நகர்வது அலட்சியப்படுத்தும் விசயம் அல்ல. அவைகள் நமக்கு கொடுக்கும் எச்சரிக்கை என்பதை மனிதர்களாகிய நாம் உணரவேண்டும். அதலால் இயற்கை வளங்களை காப்பது நமது கடமை என்பதை உணரவேண்டும்.

  நாம் பயன்படுத்தும் காட்டு வளங்களின் சூழ்நிலையை சமநிலையாக வைத்திருக்க வேண்டும்.

No comments: