Thursday, December 22, 2011

காற்று மாசுபடுதல்


     இயற்கையுடன் இணைந்து வாழும்போது நாம் ஆரோக்கியமாக வாழலாம். கடந்த நூற்றாண்டில் ஏராளமான அறிவியல், தொழில் புரட்சி பல நன்மைகளைச் செய்துள்ளது. என்றாலும், சுற்றுப்புறமும், நாம் சுவாசிக்கும் காற்றும் மாசுபடுவதால், பலவிதமான தீமைகள் உண்டாகுகின்றன.
    காற்றில் கலக்கும் ரசாயன கழிவுகள் காற்றை அசுத்தமாக்கி விடுகின்றன. இதற்கு காற்று மாசுபடுதல் என்று பெயர். சமையல் வாயு, மின்சார விளக்குகளின் வெப்பம், வாகனங்களில் இருந்து வெள்வரும் கார்பன்-மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் மாசை உண்டாக்குகிறது.
    தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் சல்பர்-டை-ஆக்சைடு, கார்பன்-மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றில் ஹைட்ரோ கார்பன், புற்றுநோயை உண்டாக்கக் கூ டியது.
    சில ரசாயனங்கள் காற்றில் உள்ள நீர்த் திவலைகளுடன் சேர்ந்து பனி மூட்டத்தை உருவாக்கி விடுகின்றன. இதை சுவாசித்தால், உடனடியாக உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...    

No comments: