Monday, December 26, 2011

     மனிதன் உலகில் தோன்றுவதற்கு முன்பே பூமியில் தோன்றி  வாழ்ந்து வரும் பெருமை பூச்சியினங்களுக்கு உண்டு. இவற்றின் ஆற்றலும், சிந்தனைக்கே எட்டாத பணிகளும் நம்மை வியக்க வைக்கின்றன.
   சமிப காலம் வரை புதிராக இருந்த பூச்சியினங்களின் வாழ்க்கை    விசித்திரங்களை இயற்கை ஆய்வாளர்கள் தமது நுண்ணிறிவைக் கொண்டு, உழைப்பு, துணிவின் மூலம் கண்டு பிடித்திருக்கின்றனர். பூமியின் உண்வையாண "பழங்குடிகள்" பூச்சிகளே.
   பல்வேறு விதமான எதிரிகளை எதிர்த்துப் போராடி பல லட்சம் ஆண்டுகளாகப் பூமியில் நிலைத்து நிற்கும் பூச்சியினம், இயற்கையின் படைப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. பல துறைகளில் மனிதனின் திறனுக்கு அப்பாற்பட்ட அதிசயத் திறனை பூச்சியினம் பெற்றிருக்கிறது.
   பூச்சி இனத்தில் தச்சுத் தொழிலாளர்கள், மண்பாண்ட விற்பனர்கள், நெசவு நெய்பவர், வலைபின்னுபவர், வீரர்கள், பாடகர்கள், அஞ்சா நெஞ்சுறுதி படைத்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள், பொறியியல் வல்லூநர்கள் என்றும் பலர் உள்ளனர் என்றால் ஆச்சரியமாயில்லை?
   மனிதனுக்கு முன்பே கரையான்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளை அமைத்திருக்கின்றனர். குளவிகள் காகிதம், சுண்ணாம்புச் சாந்தும் உற்பத்தி செய்திருக்கின்றன. கம்பளிப் பூச்சிகள் நெசவுத் திறன் வாய்ந்தவையாக உள்ளன. எறும்புகள் தமது கூட்டு முயற்சியால் மண் குன்றுகளில் 'பெருநகர்களை' அமைத்திருக்கின்றன.
   இப்படி பூச்சியினங்களை ஆராயும்போது அவை ஏற்படுத்தும் ஆச்சரியம் விரிந்துகொண்ட் போகிறது.
பூச்சி, பறவை, விலங்குகள் இவைகளிடம் இருந்துதான் மனிதன் தொழிலைக் கற்று இருக்க வேண்டும் இதன் மூலம் அறியப்படுகிறது.

வனவிலங்குகள், பறவைகள்,
பூச்சிகள்  இற்றைக் காத்து இயற்கையை காப்போம்...

No comments: