Tuesday, September 22, 2009

நாவல் மரம்

நாவல் மரத்தையோ அதன் பழத்தையோ எங்கு பார்த்தாலும் எனக்கு எங்கள் ஊர் ஞாபகம் வரும். எங்கள் ஊரின் மேற்கே கோவில்தோப்புனு ஒரு இடம். அந்த இடத்தில் கருப்பசாமி கோவில், பஞ்சபாண்டவர் கோவில் உள்ளது. இந்த இடத்தில் பலவகை மரங்கள் உள்ளது. அதில் நாவல் மரம் ஒன்று, அடுத்து ஒரு அரசமரம். இந்த இரண்டு மரங்களும் ரெம்ப பெரியமரம் 5பேர் கட்டிபிடிக்களாம் அவ்வளவு பெரியது.இந்த நாவல்மரத்தின் வயது என்னனு ஊர் பெரியவர்களிடம் கேட்கும் போது எங்களுக்கு எங்கடா தெரியும் எங்க அய்யா, தாத்தான்ட்ட கேக்கும்போது அது நாங்க சின்னபையனாக இருக்கும் போது இப்படித்தாண்டா இருந்ததுனு சொன்னாங்கனு சொல்வாங்க.


ஆடி மாதம் ஆரம்பத்தில் இருந்து பழம் பழுத்து விழும் காலை 5மணிக்கு பழத்தை சேகதிப்பதற்க்கு நாம்தான் முதலில் வந்திருக்கோம் நினைத்தால் நமக்கு முன் நிறையப் பேர் வந்துதிருப்பார்கள். ஒவ்வெருவரும் நிறையப் பழங்களை சேகரிப்பார்கள் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.சமிபத்தில் ஊருக்கு போய் இருந்தேன் அப்ப என் பையன்களிடம் வாங்கடா போய் நாவல் பழம் எடுக்கப் போகலாம்னு சொன்னேன் அப்ப எங்க அம்மா அங்கே மரமே இல்லைனு சொன்னாஙக ஏன் என்ன ஆச்சுனு கேட்டதுக்கு மரம் எரிஞ்போச்சுனு சொன்னாஙக. அதை கேட்டவுடன் எனக்கு நெம்ப அதிர்சியாகவும் வருத்தமாக இருந்தது.எப்படிமா எரிஞ்சதுனு கேக்க பசங்க தேன் எடுத்து விட்டு தீ பந்தத்தை சரியாக அனைக்காமல் மரத்துக்குள் போட்டுட்டு வந்துட்டாங்க இரவில் மரம் எரிந்துவிட்டதுனு சொன்னாங்க. இடத்தை போய் பார்த்தேன் மரம் இருந்த சுவடுதான் இருந்தது பல வருடமரம் நெடியில் வெந்து சாம்பம் ஆகிவிட்டது. மரம் நடுவில் பெரிய ஓட்டை இருக்கும் வண்டுகள் குடைந்த ஓட்டைகள் நிறைய இருக்கும் அதனால் தீ விரவில் பற்றிக் கொண்டது. நாங்களும் தேன் எடுத்திருக்கிறோம் கவனமா தீயை அனைத்து போட்டுட்டுத்தான் வருவோம்.


சரி விசயத்துக்கு வருவோம் நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் உடல் துர்நாற்றம், வயிறு உப்புசம், சிறுநீர்க்குறைவு, கிருமிகளின் தொற்று, சர்க்கரை நோய், வெள்ளைப்பாடு, தொண்டை குரல் வளைப்புண், பல் ஆடுதல், மண்ணிரல் வீக்கம், சளி, இருமல், அதிக அளவிலான மாதவிடாய் போக்கு, ஆஸ்தும், கரப்பான், தோல்நோய், இரத்த பேதி, அடிக்கடி தாகம் எடுத்தல் போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.இதன் பழம், இலை, பட்டை, நாவல் பழக் கெட்டையின் பருப்பு இவைகலை காயவைத்து பொடி செய்து காலை, மாலை சாப்பிட சர்கரை நோய் கட்டுப்படும் சர்கரை நோய்க்கு அருமருந்து. சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாவல் பழம் சாப்பிடவும்.


நன்றி மீண்டும் பேசுவோம்.


சோ.ஞானசேகர்..

2 comments:

புது.பார்தீ said...

please visit www.partchil.blogspot.com

partchil said...

please visit www.partchil.blogspot