Tuesday, August 4, 2009

ஈரமில்லாத ஈரானிய ராணுவம்‍

ஈரானில் 'லாயல் மிலிஷியா' என்றொரு ராணுவப் பிரிவு இருக்கிறது. 1979 இல் மக்கள் ராணுவமாக அயதுல்லா கொமினியால் தொடங்கப்பட்ட இந்தப் பிரிவு ஈரானின் பிரதான ராணுவத்தின் கீழ் செயல்படுகிறது. கொமினிக்குப் பிறகு அவரது இடத்திற்க்கு வந்த காமெனிக்கு இப்போது இந்த லாயல் மிலிஷியா ரெம்பவும் விசுவாசமாக இருக்கிறது.

இந்த ராணுவப் பிரிவினருக்குத் தரப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று என்ன தெரியுமா?

குற்றம் செய்ததாக மரண தண்டனை விதிக்கப்படும் ஈரானிய இளம் பென்களை 'தற்காலிகமாக' திருமணம் செய்து கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தினத்திறக்கு முதல் நாள் இரவு அவர்களை கற்பழிக்க வேண்டும்.

ஏன் இந்தக் கொடுமை?

ஈரானில் 'கன்னி கழியாத' பெண்களை மரண தண்டனைக்கு உட்படுத்துவது சட்டத்தை மீறியதாகக் கருதப்படுகிறது. அவர்களுக்கு மரண தண்டனை தரலாம். ஆனால் நிறை வேற்றப்படும்போது அவர்கள் கன்னிகளாக இருக்ககூடாது.

விசுவாச ரானுவப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தந்த வாக்கு மூலம் இது: 'ஐயோ ரெம்பக் கொடுமை இது. நாளை காலை மரண தண்டனை என்றால் இன்று இரவு தடண்டனை பெற்ற பெண்ணை நான் தற்காலிகமாக மணந்து கொண்டு கற்பழிக்க வேண்டும். அப்படி என் கடமையைச் செய்யும்போது அந்த இளம் பெண்களின் கதறல் கேட்டு நான் நொறுங்கிப் போகிறேன். பல பெண்கள் 'அது' முடிந்ததும் தன் நகங்களால் உடல் முழுவதும் கீறிக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன். மருநாள் மரண தண்டனையை எதிர்கொள்ளும்போது முகத்தில் அவர்கள் எந்த எக்ஸிபிரஷனும் இல்லாமல் நிற்பது இன்னும் சோகம்.

மரண தண்டனை கூட அவர்களுக்கு பயமில்லை. அதற்க்கு முதல் நாள் நடக்கும் கொடுமைதான் அவர்களுக்குப் பயம்.

இப்படியும் நடக்கிறது உலகத்தில் இந்த 20ஆம் நூற்றாண்டில்.

(நன்றி தினமணி கதிர் அக்கரைச் சீமை ராணிமைந்தன்).

சோ.ஞானசேகர்.

No comments: