Tuesday, July 21, 2009

காட்டன் சூதாட்டம்
நான் எத்தனையோ சூதாட்டம் கேள்விப் பட்டிருக்கிரேன் சீட்டுகட்டு ஆடுவதை பார்த்து இருக்கிறேன் அதனால் பல குடும்பம் கஷ்டத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறது. அடுத்து குதிரை ரேஸ் இதில் பணத்தை கட்டி பணத்தை இலந்து விட்டதை பிடிக்கிறேன் என்று உள்ளதை இலந்ததுதான் மிச்சம். அடுத்து லாட்டரி சீட்டு இந்த சீட்டை வாங்கி லாட்டரி அடிக்கும் என்று சோத்துக்கு லாட்டரி அடித்ததுதான் மிச்சம். இதை அரசாங்கம் தடை செய்து விட்டது. அடுத்து மூன்று சீட் இதில் ஆசைபட்டு கூலி பணம் முழுவதும் இலந்தது தான் மிச்சம் இது ஒரு வகை, அடுத்து ஒரு டப்பாவில் நான்கு ஐந்து அடையாள கட்டைகளை போட்டு கட கடனு கலக்கி வைசார் ஐஞ்சு வைச்சா பத்து, பத்து வைச்சா இருவது இப்படி ஒரு சூதாட்டம் இந்தனை சூதாட்டம் நடக்கிறது. இதலாம் அரசாங்கம் ஒழிக்கும் என்று நினைத்தால் சுத்தமடத்தனம் ஏன்னா இதை நடத்துவது அவர்களின் கைதடிகள்தான். இதல்லாம் போகட்டும் இந்த காட்டன் சூதாட்டம்னா என்னானு பார்போம் முதலில் இந்த சூதாட்டம்னா என்னானு எனக்கு தெரியாது பேப்பரில் வந்த செய்தியை பார்த்து (நன்றி தினமனி....) நன்பர் ஒருவரிடம் கேட்டேன் அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்து சிரித்தார் ஏன் சிர்க்கிறேங்கனு கேட்டேன் அதற்க்கு அவர் விளக்கம் சொன்னார். ஒரு நம்பர் மேல் பணம் கட்டினால் இதை நடத்துபவர் ஒரு நம்பர் கொண்ட பேப்பர் அச்சிட்டு வெளியிடுவார் எந்தெந்த நம்பர் உள்ளதோ அது பரிசுக்கு உரிய நம்பர் அந்த நம்பகுரியவர் பரிசு பெற்றவர் ஆவார். இது என்னனா ஒரு 20 வருடங்களுக்கு முன் மும்பையில் பருத்தியின் விலையை நிர்நயம் செய்து தினமும் செய்தி பேப்பரில் வெளிவருவதை வைத்து சூதாடியுள்ளார்கள் அதுதான் இன்று ஒரு மிகப் பெரிய சூதாட்டமாக ஏழைகளை பிடித்து ஆட்டுகிறது. இதை எப்படி ஒழிக்கப்போகிறது நமது அரசாங்கம்.
சோ.ஞானசேகர்.

No comments: