Tuesday, December 15, 2009

சுவாமி ஐயப்பன்


    கார்த்திகை மதம் ஆரம்பித்து விட்டால் போதும் பலர் ஐயப்பன் சாமி கோவிலுக்கு மாலை போட்டு 41 நாள் விரதம் இருந்து சென்று வருவார்கள். நிறையப்பேருக்கு ஐயப்பன் கோவிலுக்கு ஏன் போகிறோம் என்று தெரியாது. எல்லோரும் போகிறார்கள் நாமும் போய்வருவோம் என்று போய்வருகிறார்கள்.

   அந்தக்காலத்தில் (மலைதேசம்) கேரளா மன்னன் போட்ட திட்டம். அங்கு நிலப்பரப்பு அதிகம் கிடையாது எல்லாம் மலைப்பரப்பு அதிகம். அதனால் அடிக்கடி உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது இதை போக்க என்ன செய்யலாம் என்று யோசனை செய்தபோது தான் ஒரு திட்டம் உறுவானதுதான் இந்த ஐயப்பன் கோவில் வழிபாடு.

   ஆடி மாதம் விதைவிதைத்து ஆவனி, புரட்டாசி மாதங்களில் நடவு முடிந்திருக்கும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்யும் தைமாதம்தான் அறுவடை நடைபெரும் அதுவரை உணவுத்தானியம் கையிருப்பு குறைவாக இருக்கும். இதை சமாளிக்க ஐயப்பனுக்கு கோவிலுக்கு மாலைபோடுதல் ஆரம்பித்தது. எப்படி இதில்சாத்தியம் இதில் என்ன என்ன அடங்கியிருக்கிறது. இதில் பல திட்டங்கள் அடங்கியிருக்கிறது.  உணவுப்பற்றாக்குறையை போக்கும் வீட்டுக்கு ஒருவர், அல்லது இருவர் மாலை போட்டு இருந்தால் ஒருவர் ஒரு வேலை சாப்பாடு மட்டும் சாப்பிட்டால் இரண்டு வேலை சாப்பாடு மிச்சம். இதேமாதிரி வீட்டுக்கு ஒருவர் இருவர் இருந்தால் நாட்டில் எவ்வளவு உணவுத் தானியங்கள் சேமிக்கப்படும். இதில் உணவு பகிர்வு நடைபெருகிறது.ஒரு வேலை உணவு உண்டு இரண்டு வேலை நோம்பு இருந்து மலை மேல் சென்று அங்கு உள்ள மூலிகை செடிகளின் காற்றை சுவாசித்து வரும் போது உடல் ஆரோக்கியம் அடைகிறது. இந்த இரண்டு மாதம் குளிராக இருக்கும் அந்தநேரத்தில் கனவன் மனைவி சேர்ந்தால் குழந்தை உருவாகக்கூடிய வாய்புகள் அதிகம் அதனால் மாலை போட்டுவிட்டால் அதை தவிற்கலாம்.

  பொருளாதரம், மருத்துவம், குடும்பகட்டுப்பாடு இப்படி பலவழிகளில் நாட்டுக்கு நன்மை உண்டு.

   இது மட்டும் அல்ல அந்த மாநிலத்துக்கு நாம் தெரிந்தோ தெரியாமலே நிறைய நன்மை செய்து கொண்டு இருக்கிறோம்.

  இங்கு இருந்து ஒரு ஐயப்ப பக்தர் இருமுடி கட்டி போகும் போது அதற்குள் தேங்காய், நெய், அரிசி இத்தனையும் கொண்டு செல்வார். அரிசி அவர் சாப்பாட்டுக்கு அவரே இங்கிருந்து அரிசி கொண்டு செல்கிறார். தேங்காய் இது அதிகமாக விளையும் மாநிலம் கேரளா அங்கு விளைந்த தேங்காயை நம்மிடம் விற்று காசாக்கிவிட்டு நம்மலை வைத்தே மீண்டும் அங்கே கொண்டு வரவைக்கிறார்கள். நெய் அங்கு ஆடு, மாடு, மற்றும் கால்நடைகள் அதிகம் வளர்பது கிடையாது. ஏன்னென்றால் கால்நடைகள் வளர்த்தால் காடுகள் அழிந்து விடும் என்று அதிகம் வளர்பதில்லை. அதலால் பசு நெய் கிடைப்பது குறைவு. அதனால் இங்கிருந்து நெய் கொண்டு செல்வார்கள். நாம் கொண்டு சென்ற நெய் டின்களில் அடைத்து நம்மிடம்மே காசாக்கிறார்கள். இதுமட்டும் அல்லாமல் ஒரு ஆற்றை கடக்கும் போது அழுதா நதி கடக்கும் போது ஆளுக்கு ஒரு கல் எடுத்து கல்லிடும் குன்றில் கொண்டு போடவேண்டும். எப்படி நம்மலை வைத்தே நதியை தூர்வாரும் ஐடியா. இது போக ஆள்கள் வந்து போனதால் காடு அழிந்து விடும் என்று 18 வருடம் வந்தால் ஆளுக்கு ஒரு தென்னங்கன்று கொண்டுவர வேண்டும் எண்று ஒரு நிபந்தனை. ஆக நம்மலை வைத்தே காடு அழியாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.

   இங்கிருந்து கோடிக்கணக்கான பக்தர்களால் பல கோடிக்கணக்கான பணம் வருமானம் பெருகிறது கேரளா மாநிலம். அனால் நமக்கு உரிமையுள்ள முல்லை பெரியார் அணை மற்றும் பல இடத்தில் ஓடும் ஆறுகளின் நீர் வீனாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். நாம் எப்படி இருக்கிறோம் என்று பாருங்கள். இங்கு எத்தனை லட்சம் கேரள மக்கள் இருக்கிறார்கள் வீடு, நிலம் என்று வசதியாக இருக்கிறார்கள் ஆனால் நாம் அங்கு கை அகல நிலம் வாங்கமுடியாது. மேலும் இங்கு டீகடை நடத்தும் ஆள் யார் 100க்கு 90பேர் மளையாளி எப்படி நம்முடைய தண்ணீரை எடுத்து நமக்கே விற்று காசாக்குறங்க பாருங்க. மேலும் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோவில்கள் நிறைய உண்டு அங்கே போய் வாருங்கள் மலைமேல் நிறைய கோவில் இருக்கிறது அங்கு சென்று வரலாம் மேற்கு தொடர்ச்சி மலையில் நிறைய இடம் உண்டு சதுரகிரி மலை, (அகத்தியர்வாழ்த பூமி) பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை சித்தர்கள் நிறைந்த வணங்கள் உண்டு அங்கு சென்று வாருங்கள் உடம்பும் மணமும் மகிழ்சியாக இருக்கும்.

  இதை பார்க்கும் அன்பர்கள் நான் பிரிவினை வாதியாகவும், நாத்திகனகவும், பார்க்கவேண்டாம் எனக்கு கடவுள் நம்பிக்கையுண்டு ஆனால் மூடநம்பிக்கை இல்லை. தாய்நாட்டு பற்று உண்டு,  தாய்மொழி பற்று உண்டு.

சோ.ஞானசேகர்..

No comments: