Thursday, December 10, 2009

சுற்றுச்சூழல் பாதிப்பு,​பருவநிலை மாறுபாடு அச்சுறுத்தல்:40 ஆண்டுகளில் 100 கோடி மக்கள் இடம்​பெயரும் அபாயம்




     பரு​வ​நிலை மாறு​பாடு மற்​றும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பால் வரும் காலங்​க​ளில் மனித சமு​தா​யம் பெரும் பாதிப்​புக்​குள்​ளாக உள்​ள​தாக ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​

​ ​ இத​னால் தென்​கி​ழக்கு ஆசியா,​​ மத்​திய அமெ​ரிக்கா,​​ மேற்கு ஆப்​பி​ரிக்​கா​வின் ஒரு பகுதி ஆகிய பகு​தி​க​ளில் வாழும் மக்​கள்​தான் கடும் பாதிப்​புக்​குள்​ளாக உள்​ள​தா​க​வும் புலம்​பெ​யர்ந்த மக்​க​ளுக்​கான சர்​வ​தேச அமைப்பு நடத்​திய ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​

​   பரு​வ​நிலை மாறு​பாடு,​​ சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பால் இந்த பகு​தி​க​ளில் இருந்து அடுத்த 40 ஆண்​டு​க​ளில் 100 கோடி மக்​கள் இடம்​பெ​யர்வு மற்​றும் புலம்​பெ​ய​ர​லாம்.​

​  கடந்த 20 ஆண்​டு​க​ளாக இயற்கை பேர​ழி​வு​கள் இரு​ம​டங்கு அதி​க​ரித்​துள்​ளன.​ சமீ​ப​கா​ல​மாக பூகம்​பம்,​​ வறட்சி,​​ வெள்​ளம் ஆகி​யவை மனித சமு​தா​யத்​துக்கே பெரும் சவா​லாக உரு​வெ​டுத்​துள்​ளன.​

மனி​தன் உயிர்​வாழ்​வ​தற்கு அவ​சி​ய​மான காற்று,​​ நீர்,​​ நிலம் ஆகிய சீர்​கே​டும் அதி​க​ரித்து வரு​கி​றது.​

​ அதே​போல,​​ இந்த நூற்​றாண்​டின் இறு​திக்​குள் புவி​யின் வெப்​ப​நி​லை​யும் 2 டிகிரி சென்​டி​கி​ரேட் முதல் 5 டிகிரி சென்​டி​கி​ரேட் வரை அதி​க​ரிக்க வாய்ப்​புள்​ளது.​

​ இது​போன்ற கார​ணங்​க​ளால் மனித சமு​தா​யம் அதிக இன்​னல்​களை சந்​திக்க வேண்​டி​யுள்​ளது.​ பசுமை இல்ல வாயுக்​க​ளால் ஏற்​ப​டும் பரு​வ​நிலை மாறு​பாட்​டால் கடல் மட்​டம் உயர்ந்து வரு​கி​றது.​ இது கட​லுக்கு மத்​தி​யில் அமைந்​துள்ள நாடு​க​ளுக்கு அச்​சு​றுத்​த​லாக உள்​ளது.​ கடல் மட்​டம் தொடர்ந்து உய​ரு​மா​னால் கட​லுக்கு மத்​தி​யில் உள்ள நாடு​கள் மூழ்​கிப்​போ​கும் அபா​ய​மும் உள்​ளது.​

​ இத​னால் இது​போன்ற நாடு​க​ளில் வசிக்​கும் மக்​கள் தற்​போதே எதிர்​கால அபா​யத்தை நினைத்து பிற நாடு​க​ளுக்கு புலம்​பெ​யர ஆரம்​பித்​து​விட்​ட​னர்.​ எங்​கெல்​லாம் சுற்​றுச்​சூ​ழல் அதி​க​ரித்​துள்​ளதோ அந்​நாட்​டைச் சேர்ந்த மக்​கள் அரு​கில் உள்ள நாடு​க​ளுக்கு புலம்​பெ​ய​ரத் தொடங்​கி​யுள்​ள​னர்.​

​ சில நாடு​க​ளில் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​மிக்க பகு​தி​க​ளில் வசிப்​ப​வர்​கள் பாதிப்​பில்​லாத பகுதி நோக்கி இடம்​பெ​யர்​கின்​ற​னர்.​ இத​னால் ஓரி​டத்​தி​லேயே அதிக மக்​கள் குவி​யும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.​ இது மேலும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​புக்கு வழி ஏற்​ப​டுத்​து​கி​றது.​

​ அது​மட்​டு​மல்​லா​மல் ஓரி​டத்​தில் இருந்து மற்​றொரு இடத்​துக்கு மக்​கள் இடம்​பெ​ய​ரும் போது சில நேரங்​க​ளில் மக்​க​ளி​டையே மோத​லும் தவிர்க்க முடி​யா​த​தாகி விடு​கி​றது.​

இது எதிர்​கா​லத்​தில் பெரிய பிரச்​னை​யாக உரு​வெ​டுக்க வாய்ப்​புள்​ள​தா​க​வும் புலம்​பெ​ய​ரும் மக்​க​ளுக்​கான சர்​வ​தேச அமைப்​பின் ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.

நன்றி தினமணி நாளிதழ்...

சோ.ஞானசேகர்.

No comments: