Friday, March 11, 2011

வரிக்குதிரை


   வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில் குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை வரிக்குதிரைகள் எனப்படுகின்றன.

  வரிக்குதிரைகள் குகிரை இனத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் குணயியல்பைப் பொருத்தவரை குதிரைகளுக்கும் வரிக்குதிரைகளுக்கும் மிகவும் வித்தியாசம் உண்டு.  வரிக்குதிரைகள் மனிதர்களுடன் இசைந்து பழகாத குணயில்புடையவை. மனிதர்களின் கட்டளைகளைக் குதிரைகள் ஏற்று நடப்பதைப்போல, வரிக்குதிரைகள் நடக்காது. வாய்ப்புக் கியைத்தால் மனிதர்களைத் துன்புறுத்தவும் தயங்காதவை. இவை, குதிரைகளைப் போல அமைதியாகவும் அல்ல. பயம் என்பதே இவற்றிக்குக் கிடையாது. எப்போதும் மிரட்சியடைந்ததைப் போலத்தான் நடந்துகொள்ளும். ஓட்டமெடுத்தால், கட்டுப்படுத்த முடியாத பயங்கர வேகத்தில்தான் ஓடும். இத்தகைய காரணங்களால்தான், வரிக்குதிரைகள் காட்டிலேயே வாழட்டும் என்று மனிதர்கள் விட்டுவிட்டார்கள். வரிக்குதிரைகள் மனிதர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவையாக இருந்தால், நமக்கு குதிரை வண்டிகளுக்குப் பதிலாக வரிக்குதிரை வண்டிகள் இருந்திருக்கும்.

மரம் வளர்ப்போம் வரும் சந்ததி காப்போம்.....

No comments: