Saturday, March 5, 2011

நெல்லிக்காய்

                     நெல்லிக்காய் இளமை காக்கும் காய்
  நெல்லிக்காய் அனைவரும் விரும்பி சாபிடும் காய். நெல்லிக்காய் சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் இனிப்பு சுவையாக இருக்கும். பெருநெல்லி,  சிறுநெல்லி இரண்டு வகை உண்டு இது இளமை காக்கும் காய். எளிதில் ஜீரணமாகும் இது மற்ற உணவுகளையும் எளிதில் ஜீரணமாக வைக்கும். குடல் பகுதியிலும், உணவுக் குழாயிலும் இருக்கும் அடைப்பை நீக்கும்.

   இனிப்பு, துவரிபு, காரம், புளிப்பு, கசப்பு என 5 சுவைகளும் கலந்தது. இதில் 'வைட்டமின் சி' அதிகமாக இருப்பதால், தோலோட நிறத்தைப் பாதுகாக்கும். வருடத்திற்கு 3 மாதங்கள் மட்டுமே நெல்லிக்காய் காய்க்கும். இதன் இலை, காய், வத்தல் மூன்றுமே மருத்துவக்குணம் உடையது.
ஒரு கைப்பிடி நெல்லிக்காய் இலையை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அந்தத் தண்ணீரில் வாய் கொப்புளிச்சா வாய்ப்புண் சரியாகும். நன்கு முற்றிய நெல்லிக்காய்களை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து தினமும் இரண்டு சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும் நன்கு பசி எடுக்கும், சோர்வு நீங்கி உற்சாகம் கிடைக்கும்.
 
   "சி' வைட்டமின் மிகுதியாக உள்ள காய் நெல்லிக்காய். ஐந்துகிலோ ஆரஞ்சுப்பழத்தில் உள்ள "சி'வைட்டமின் அளவு ஒரு கிலோ நெல்லிக்காய் இருக்கும். உடல் அணுக்களைப் பாதுகாப்பதில் இந்தக் கனி மிகச் சிறந்த காரணியாக விளங்குகின்றது.

  இதனை பச்சையாக உண்பதால், ஈறுகளில் ஏற்படும் அனைத்து நோய்களும் எளிதில் நீங்கி விடும். உடலில் உண்டாகும் அதிக சூட்டைத் தணித்து, குளிர்ச்சியை உண்டாக்கும் ஓர் அரிய மருந்து. மேலும் கர்ப்பப்பை கோளாறுகளையும் இது போக்குகிறது.          

  வைட்டமின் `சி' நிறைந்தது, நெல்லிக்காய். அதன் அற்புதமான மருத்துவக்குணங்கள்...

  உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகிறது. பற்களுக்கு உறுதியைத் தருகின்றன. கல்லீரல் குறைபாட்டை நீக்குகிறது. இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.

   சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாதுகாக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

   சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.

    பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.

   விந்தணுக்களுக்கு வீரியத்தைக் கொடுக்கிறது. பெண் இனப்பெருக்க உறுப்பிற்கு பாதுகாப்பையும், உறுதியையும் தருகிறது.

    சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

இயற்கை நமக்கு கொடை...

No comments: