Thursday, July 30, 2015

நெருப்புக் கோழி

 அசுரப்பறவை என்று இங்கே குறிப்பிடுவது தீப்பறவையைத்தான்! ஆம்! நெருப்புக் கோழி! இது பறவை இனங்களில் மிகப்பெரியது! விசித்திர இயல்புகள் நிறைந்தது! முழு உருவமுடைய ஆண் பறவை ஏறக்குறைய 2.5மீட்டர் உயரமும் 135 அல்லது 180 கிலோ எடையும் கொண்டிருக்கும்.

 இப்பறவை மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகிறது! ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இவை மிகுதியாகக் காணப்படுகின்றன! இதன் பெரிய முட்டையொன்று 1.4 கிலோ முதல் 1.8 கிலோ எடையைக் கொண்டிருக்கும்! இப்பறவை உணவுக்கு பயன்படுவதோடு இதன் சிறகுகளிலிருந்து கிடைக்கும் இறக்கைகள் அலங்கரிப்புக்கும் உதவுகின்றன! ஆப்பிரிக்க ஆதிவாசிகள் இவ்விறக்கைகளை உடையாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். காலம் செல்லச் செல்ல நாகரிக நாடுகளிலும் இவ்விறக்கைகள் அழகு அணியாகப் பயன்படுத்தப்படலாயின.

 ஆண் பறவையின் உடலில் கருப்பு நிறமுடைய இறக்கைகள் காணப்படும். இப்பறவையின் சிறகுகள் வெண்மை நிறம் கொண்டவையாகவும் இதன் வால் இறக்கைகள் நிரம்பியதாகவும் இருக்கும். பெண் பறவையின் இறக்கைகள் மங்கலாகவும் சாம்பல் தவிட்டு நிறங்களில் கவர்ச்சியின்றியும் காணப்படும்.

 தீப்பறவைகளில் பலவகை உள்ளன. அதில் ஒரு வகை வடஆப்பிரிக்கா, சிரியா, மெசபடோமியா ஆகிய இடங்களிலும் மற்றொரு வகை சோமாலிலாந்திலும் காணப்படுகின்றன. ஆனால் இவற்றிலெல்லாம் சிறந்த இனம் தென் ஆப்பிரிக்காவில் உள்ளதுதான். அதிலும் "கலஹரி' பாலைவனத்தில் காணப்படுவதே மிகச் சிறப்புடையதாகும்.

 பாலைவனப்புதர்களில் இவை மறைந்திருக்கும். புதர்களின் உள்ளிருந்தவாறே இவை தம் எதிரிகளைக் கவனித்துக்கொள்ளும். இதற்கேற்றவாறு இதன் நீண்ட கழுத்தும் சிறு தட்டையான தலையும் அமைந்துள்ளன. புதரினுள்ளிருந்து இது தலையை உயர்த்திப் பார்க்கும்போது இதைக் கண்டு கொள்ள இயலாது.

 இந்த அசுரப் பறவைகளால் பறக்க இயலாது. ஆனால் விரைவாக ஓடும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இதன் விரிந்த சிறகுகள் இதன் ஓட்டத்திற்குத் துணையாக உதவுகின்றன. விமானத்தின் சிறகுகள்போல் இதன் சிறகுகள் ஓரளவு வேகமாகச் செல்லும் ஆற்றலை இதற்கு அளிக்கின்றன. குதிரைபோல் வேகமாகச் செல்லும் இது மணியொன்றுக்கு 42 கி.மீ. ஓட்டம் தொலைவைக் கடக்கும் ஆற்றல் உடையது. இதன் ஓட்டம் வளைவு கொண்டதாக இருப்பதால் எளிதில் இது வேட்டையாடுவோர் கையில் அகப்பட்டுக்கொள்கிறது.

 நீண்ட நாட்கள் இவை நீரின்றி வாழும் இயல்பு பெற்றவை! இப்பறவைகள் எல்லா வகையான உணவையும் உட்கொள்ளும்! சிறு பிராணிகள், புற்கள், இலைகள், பழங்கள், கொட்டைகள் போன்றவை இவற்றின் உணவாகும்.

 ஆண் பறவைகள் அடிக்கடி சிங்கத்தைப் போன்று கர்ஜனை செய்யும்!

 பெண் பறவைகள் அனைத்தும் ஒரே கூட்டில் முட்டையிடும்! ஆண்பறவை இவற்றை அடைகாக்கும்! திருட வரும் நரிகள், கழுதைப்புலிகள் மற்றும் ஏனைய மிருகங்களிடமிருந்தும் ஆண் பறவை மணிக்கணக்காக முட்டைகளைப் பாதுகாக்கிறது! பிறகு ஷிப்ட் முறையில் பெண் பொறுப்பேற்றுக் கொள்கிறது! இரைதேடுவதற்கு வெளியில் செல்லும்போது முட்டைகளை மணலில் புதைத்து வைத்துவிட்டுச் செல்கின்றன!

 சூரியனின் வெப்பத்தால் இவை கெட்டுப் போகாமலும் பாதுகாத்துக் கொள்கின்றன.

 ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இப்பறவைகளின் இறக்கைகள் நாகரிகச் சின்னங்கள் ஆன பிறகு இப்பறவைகளை வளர்க்கப் பண்ணைகள் பல தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளன.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

Tuesday, July 21, 2015

"கிங் சால்மன்' (KING SALMON)

"கிங் சால்மன்' (KING SALMON) அமெரிக்காவின் ஒரு மாநிலமான அலாஸ்காவின் தேசிய மீன்! உலகிலுள்ள சுவையான மீன்களில் முதலிடத்தைப் பிடிப்பது கிங் சால்மன் ஆகும். அலாஸ்கா அரசின் வருமானத்துக்குக் கணிசமாக உதவும் இந்த மீன் நல்ல நீரில் உற்பத்தி ஆகிறது. பிறந்த சில மாதங்களில் ஆயிரக் கணக்கான மைல் தூரம் பயணம் செய்து கடலை அடைகிறது!

மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி மீன் பிடிப்பவர்களிடமிருந்தும், கரடிகள், மற்றும் பருந்துகளிடமிருந்தும் தப்பிப் பிழைத்துத் தான் பிறந்த இடத்துக்கே வந்து சேர்கின்றன! இதில் என்ன வியப்பென்றால் கடலிலிருந்து ஆற்றுக்குள் இவை நீந்த வேண்டும்! கடலில் கலக்கும் ஆற்றின் வேகம் எப்படியிருக்கும்? அந்த வேகத்தை எதிர்த்து இவை கூட்டம் கூட்டமாக நீந்திச் செல்வது அரியதோர் காட்சியாகும்! அதைவிட அதிசயமான விஷயம் என்னவென்றால் அருவி எதிர்ப்படும்போது அம்மீன் மேல் நோக்கிப் பாய்ந்து அருவியின் வேகத்தை எதிர்த்துச் செல்கிறது!! அதைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாகும்!

அப்படிப் பாய்ந்து வரும் மீன்களைப் பிடிப்பதற்காக நீர் நிலைகள் அருவிகள் ஓரம் "கிரிஸ்லி' (GRIZZLY)கரடிகள் காத்திருக்கும்! சால்மன் மீன்களைப் பார்த்ததும் பாய்ந்து பிடிக்கும். அருவி நீரை மீன் எதிர்த்துப் பாய்வது ஒரு வியப்பென்றால் அவற்றைப் பாய்ந்து பிடிக்கக் காத்திருக்கும் கரடிகள் அருவி நீரில் முன்னங்கால்களைத் தூக்கிப் பாய்ந்து மீனைப்பிடித்து சமநிலை தவறாமல் மீண்டும் தரையில் காலூன்றுவது ஓர் அதிசயம்! அதைப் பார்ப்பவர்களுக்குக் கரடியை அருவி அடித்துக் கொண்டு போய்விடும் என்றுதான் தோன்றும்! சால்மன்களுக்குத்தான் எவ்வளவு வாழ்க்கைப் போராட்டம்!

இம்மாபெரும் போராட்டத்தில் தப்பி தான் பிறந்த இடத்துக்கே வந்து சேரும் சால்மன் மீன்கள் சுமார் 1500லிருந்து 10000ஆயிரம் முட்டைகள் இடும். இதற்காக இவை நூற்றுக் கணக்கான மைல்கள் நீந்த வேண்டியிருக்கிறது! சில மீன்கள் ஆயிரம் மைல்கள் கூட நீந்தும்! இந்த பயணத்தில் சோர்வுற்று சில மீன்கள் இறந்துவிடுவதும் உண்டு! பயணத்தில் வெற்றி பெற்று இட்ட முட்டைகளை பெண்மீன்கள் மட்டுமின்றி ஆண் மீன்களும் போட்டி போட்டுக்கொண்டு காக்கிறது!

தான் பிறந்த இடத்தை அடைந்த இம்மீன்கள் மீண்டும் கடலை அடைவதில்லை. பின்னே?

பொறிந்த தன் குஞ்சுகளைப் பார்த்துக் கொண்டே சில நாட்களில் பெரிய சால்மன்கள் இறந்துவிடும். சில மாதங்களில் பெரியனவாக வளர்ந்து விட்ட சால்மன்கள் கடலை நோக்கி பயணம் செய்யும். மீன்களில் "கிங் சால்மன்'களின் வாழ்க்கை ஒரு சரித்திரம் என்பதில் சந்தேகமில்லை!


இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்.

Monday, July 20, 2015

மேற்குத் தொடர்ச்சி மலைகள்!

உலகின் வன வளங்கள், மிகுந்த இடங்கள் சுமார் முப்பத்திரெண்டு! அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும்! இம்மலைத் தொடர் 2012ஆம் ஆண்டு உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது!

இது இமயமலையைவிட பழமையானது!

80மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளினால் உருவான புவியியல் அமைப்பே மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகும் என்பது புவியியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவு ஆகும்.

இந்த மலைத்தொடரானது குஜராத் மாநிலத்தில் தபதி நதியில் தொடங்கி மஹாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளா, வழியாக தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை 1600கி.மீ. தூரத்திற்கு வரைபடத்தில் சங்கிலித் தொடர்போல் நீண்டு உள்ளது!

இம்மலைத்தொடர் தக்காண பீடபூமியின் மேற்கு எல்லையாக அரபிக்கடலிற்கு இணையாக

கடற்கரையினை ஒட்டி வடக்கு தெற்காக நீண்டு உள்ளது. அரபிக் கடலிற்கும் இந்த மலைத்தொடருக்கும் இடைப்பட்ட நீண்ட குறுகிய பகுதி "மேற்குக் கடற்கரை சமவெளிப்பகுதி' எனப்படுகிறது!

அரபிக் கடற்கரைப் பக்கமுள்ள மலைப்பகுதிகள் செங்குத்தாக உயர்ந்தும் தக்காண பீடபூமியின் பக்கம் உள்ள மலைகள் கிழக்குப்பகுதி மென்சரிவாகவும் காணப்படுகின்றன.

அகஸ்தியர்மலை, மகேந்திரகிரி,பொதிகைமலை,பாபநாசம் மலை, சபரிமலை, பழனிமலை, மஹாபலேஸ்வரர் மலை, நந்தி மலை,குடகு மலை, உதயகிரி, கந்தகிரி உள்ளிட்ட அனைத்து மலைகளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதிகளேயாகும்!

இம்மலைத்தொடர் வடக்கே குஜராத் பகுதியில் 3000அடிகள் முதல் 5000அடிகள் உயரமும் கோவாவிற்குத் தெற்கே சுமார் 3000அடிகள் உயரமும் இருக்கிறது!

ஆனால் தமிழ்நாட்டின் தென்பகுதியில் நீலகிரி மலையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தின் உயரம் 8652அடிகள் ஆகும். இங்குதான் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணைகின்றன! இந் மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனைமுடி சிகரமே தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரமாகும். இதன் உயரம் 8842அடிகள் ஆகும். இந்த பகுதியிலிருந்துதான் வடக்கில் ஆனைமலையும், வடகிழக்கில் பழனி மலையும் மற்றும் தெற்கில் ஏலமலையும் பிரிந்து செல்கிறது! மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 35 சிகரங்கள் உள்ளன!

கணவாய்கள்!

தால் கணவாய், போர் கணவாய், மற்றும் பாலக்காட்டுக் கணவாய் ஆகியவை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் முக்கிய கணவாய்கள் ஆகும். இந்த கணவாய்களை மேற்குக் கடற்கரை சமவெளி பகுதிக்கும் கிழக்கில் உள்ள நிலப்பகுதிக்கும் (தக்காணப் பீடபூமிக்கும்) இடையில் சாலைகள் மற்றும் இரயில் போக்குவரத்திற்குப் பெரிதும் பயன்படுகின்றன. இதில் போர் கணவாயும் தால் கணவாயும் கொங்கன் கடற்கரை பகுதியை கிழக்கில் உள்ள நிலப்பகுதியுடனும், பாலக்காட்டுக் கணவாய் கேரளக் கடற்கரையை தமிழ்நாட்டுடனும் இணைக்கிறது!

ஆறுகள்!

இந்த மலைத்தொடரில் தோன்றும் ஆறுகளில் 126 குறிப்பிடத்தக்கவை ஆகும். தென்னிந்தியாவின் விவசாயம், குடிநீர், தொழிற்சாலைகள் என ஒட்டுமொத்த தேவைக்கும் இந்த ஆறுகளே பெருமளவில் உதவுகின்றன!

குடகுமலையில் தோன்றும் காவிரி (800கி.மீ.), மகாபலேஸ்வரர் மலையில் தோன்றும் கிருஷ்ணா (1400கி.மீ.), சிவகிரி மலையில் தோன்றும் பெரியாறு, நாசிக் ப்ரம்மகிரி மலையில் குன்றுகளில் தோன்றும் கோதாவரி, அகஸ்தியர் மலையில் தோன்றும் தாமிரபரணி உள்ளிட்ட பல பெரிய ஆறுகளும், மணிமுத்தாறு, தென்பெண்ணையாறு, வைகை, கபினி, ஒüரங்காபாத் அஜந்தா மலைகளில் தோன்றும் பென்கங்கா நதி, துங்கபத்ரா, நொய்யல், கோய்னா, வாஸ்னா, பஞ்சகங்கா, சாராவதி, பீமா, ஏர்வா, மலப்பிரபா, கடப்பிரபா, கோதையாறு, உள்ளிட்ட பல சிறிய ஆறுகளும் இந்த மலைத்தொடரில் தோன்றி சமவெளி பகுதியினை கடந்து வங்காள விரிகுடா அல்லது அரபிக்கடலில் கலக்கின்றன!

இவ்வாறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 50அணைகள் குறிப்பிடத் தக்கவையாகும்.

அருவிகள்!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன! குற்றாலம் அருவி, அகஸ்தியர் அருவி, சுருளி அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, கஞ்சனா கட்சே, சோகக், சாலக்குடி, கல்சட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, ஜோக் நீர்வீழ்ச்சி முதலியவை இம்மலைத்தொடரில் உள்ள 29 முக்கியமான அருவிகளில் சிலவாகும். கிழக்குப் பகுதியைவிட மேற்குப்பகுதி செங்குத்தாக இருப்பதால் அருவிகளின் உயரமும் நீரின் வேகமும் அதிகமாக இருக்கும்!

செயற்கை ஏரிகள்!

ஊட்டி ஏரி, கொடைக்கானல் ஏரி, பேரிஜம் ஏரி, பூக்காடு ஏரி, தேவிக்குளம் ஏரி, உள்ளிட்ட பல செயற்கை ஏரிகள் இம்மலைத்தொடர் சார்ந்த பகுதிகளில் உள்ளது.

தென்மேற்குப் பருவக்காற்று!

இம்மலைத்தொடரினால் அரபிக்கடல் பகுதியில் இருந்து வீசும் குளிர்ந்த தென்மேற்குப் பருவக் காற்றின் ஒரு பகுதி தடுக்கப்படுகிறது! இதனால் மலைத்தொடரின் மேற்கு சரிவுகளும், மேற்கு சமவெளி பகுதிகளும் நல்ல மழையினை பெற்று செழிப்புடன் இருக்கிறது. ஆனால் மலையின் கிழக்கு சரிவுகளும் கிழக்கு பீடபூமி பகுதிகளும் மழை மறைவு பகுதியாக உள்ளதால் மிதமான மற்றும் குறைவான மழையினைப் பெறுகிறது.

வனப்பகுதி!

மலைத்தொடரின் மேற்குப் பகுதிக்கு ஓர் ஆண்டில் 200செ.மீ க்கும் அதிகமான மழைப்பொழிவு கிடைக்கிறது! எனவே இங்கு அடர்ந்த காடுகள் மிக அதிகம்! சூரிய ஒளியே தரையில் படாதவாறு இக்காடுகள் அடர்த்தியாக உள்ளன! இவை பசுமை மாறா காடுகள் எனப்படும்! மரங்கள் 60மீட்டர் உயரம் வரை வளர்பவை! ரோஸ் மரம், எபானி, மககோகனி, ரப்பர், சின்கோனா, மூங்கில் மற்றும் லயனரிஸ் மரங்கள் மிக முக்கியமானவை!

கிழக்குப்பகுதியில் மிதமான (75-200செ.மீ) மழைப்பொழிவு காரணமாக இலையுதிர்க்காடுகள் எனப்படும் வெப்ப மண்டல பருவக்காற்றுக் காடுகள் காணப்படுகின்றன! தேக்கு, சால், சந்தனமரம், வேட்டில் மற்றும் வேப்பமரம் போன்றவை இப்பகுதியில் வளரும் சில முக்கியமான மரங்கள் ஆகும்.

மிகவும் குறைவான (75செ.மீ. க்கும் கீழ்) மழைபெறும் கிழக்கு சரிவு பகுதிகளில் வறட்சி அதிகம். இங்கு அக்கோசியா, பாபூல், பலாஸ், சுக்ரி, கஜீரி, கயிர், பனை போன்ற மரங்கள் காணப்படுகின்றன! குறுங்காடுகளும், முட்புதர் காடுகளும், புல்வெளிகளும், சோலைக்காடுகளும் இப்பகுதியில் காணப்படுகின்றன.

வளங்கள்!

பல்லாயிரக்கணக்கான பூக்கும் தாவரங்களும், பூக்காத வகைத்தாவரங்களும், மூலிகைச்செடிகளும் இங்கு காணப்படுகின்றன!

ஆயிரக்கணக்கான பூச்சி வகைகள், நூற்றுக்கணக்கான பறவை இனங்கள், நீரிலும் நிலத்திலும் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள், மீன் வகைகள், மேலும் புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், யானைகள்,வரையாடுகள்,மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பாலூட்டி விலங்கினங்கள் இம்மலைப்பகுதியில் காணப்படுகின்றன!

சபரிமலை, பழனிமலை, சதுரகிரி, நந்திமலை, மருதமலை, வெள்ளியங்கிரி போன்ற பற்பல ஆன்மீகத் தலங்களும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. புவிப்பரப்பிலிருந்து மிக உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி இருப்பதால் மூணாறு, கொடைக்கானல், மேகமலை, நீலகிரி, ஊட்டி, மகாபலேஷ்வர், போன்ற கோடைவாசஸ்தலங்கள் பல உள்ளன.

நீர்மின் உற்பத்தி, அணைகளால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பெறப்படும் விவசாயம்,மரங்கள், பழங்கள், காய்வகைகள்,மூலிகை மருந்துகள், தொழில்வளம், மழையால் கிடைக்கும் குடிநீர் வளம், தூயகாற்று ஆகியவை இம்மேற்குத் தொடர்ச்சிமலைகள் தரும் வரங்களாகும்!

மெல்ல அழியும் வனம்!

வணிகரீதியான கட்டிடங்களாலும், பணப்பயிர் சாகுபடியாலும், சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டுவதாலும், மிருகங்களை வேட்டையாடுவதாலும், கிரானைட் சுரங்கங்களாலும், கனிம வளங்களை சுரண்டுவதாலும், பல்வேறு தேவைகளுக்காக ஆழ்துளைக்கிணறுகளாலும், நன்னீர் வேதிப்பொருட்களால் மாசுபடுவதாலும், ஆயிரக்கணக்கான நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது!

தாவரங்களுக்கும், விலங்கினங்களுக்கும், நீர்நில வாழ் உயிரினங்களுக்கும், மற்றும் மனிதர்களின் வாழ்வாதாரமாகவும், ஆன்மீக எழுச்சிக்கான ஆதாரமாகவும் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகள் இயற்கை அன்னையின் கருணை மிக்க அருட்பொழிவாகும்!!

இம்மலைத்தொடரை வணங்குவோம்! பாதுகாப்போம்!

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்

நன்றி:  தினமணி சிறுவர் மணி வார இதழ்.

Thursday, June 18, 2015

வால் மீனுக்கு கல்யாணம் இல்லாமலேயே பிரசவம்!


பொதுவாக, பிடித்து வைத்து வளர்க்கப்படும் உயிரினங்களில் இது நிகழ்வதுண்டு என்றாலும், இயற்கையான சூழலில் வாழும் உயிரினங்களில், இதுபோல நிகழ்வது அரிது. நியூயார்க்கிலுள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் செய்த ஆய்வில், வால் சுறாக்கள், ஆண் மீன்களுடன் உறவு கொள்ளாமலேயும், குஞ்சுகள் ஈனுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. கன்னி தாய் பிரசவிக்கும் இந்த முறைக்கு, 'பார்தினோஜெனெசிஸ்' என்று பெயர்.
பிடித்து வைத்து வளர்க்கப்படும் உயிரினங்கள், தங்கள் இனம் அழியாமல் காப்பதற்காக, இதுபோல பிரசவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன என்பதை, பல ஆண்டுகளாக உயிரியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். நட்சத்திர மீன், தேனீக்கள் போன்றவையும், பாலுாட்டிகளில் முயல் இனமும், இது போல ஆண் கலவியில்லாமலும், செயற்கை கருத்தரிப்பு முறைகள் இல்லாமலும் கர்ப்பம் தரிப்பதுண்டு.
பறவையினங்களில், பண்ணைக் கோழிகளும் இதேபோல முட்டையிடுகின்றன. ஹங்கேரியில் ஒரு மீன் காட்சியகத்தில், பெரிய பெண் சுறா ஒன்று, ஆண் சுறாவுடன் உறவு கொள்ளாமலேயே கருவுற்று குஞ்சு பொரித்தது. ஆண் துணையின்றி கருத்தரித்த வால் சுறா பற்றி, செய்தி வெளிவர ஆரம்பித்ததுமே, ஆண் பாலினமே அவசியமற்றதாகி விடுமோ என்ற பீதியூட்டும் கேள்வியையும், சில உயிரியல் விஞ்ஞானிகள் கிளப்பி விட்டிருக்கின்றனர்.
மிரட்டலான தோற்றமுள்ள, 'சா பிஷ்' என்றழைக்கப்படும் வால் சுறா, விஞ்ஞானிகளை தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் வால் சுறா, ஆண் மீனுடன் கலவி செய்யாமலேயே, குஞ்சுகளை ஈன்றிருக்கிறது.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்.

Wednesday, June 17, 2015

ஒரே ஆண்டில் 176 புதிய விலங்குகள் கண்டுபிடிப்பு!


 இந்திய வன விலங்குகள் பற்றிய விரிவான பதிவுகளை வைத்திருக்க வேண்டிய பொறுப்பு, இந்திய உயிரியல் சர்வே பிரிவிடம் தான் உள்ளது. இது மத்திய சுற்றுச்சூழல், வனவுயிர் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்த அலுவலகத்தின் அறிக்கைப்படி, கடந்த ஓர் ஆண்டு காலத்தில், இந்தியா முழுவதிலும் களப்பணியில் இருக்கும், இசட்.எஸ்.ஐ.,யின் விலங்கியல் வல்லுனர்கள், புதிதாக, 176 விலங்கினங்களை கண்டுபிடித்து, விவரித்து பதிவு செய்துள்ளனர்.
 இந்த கண்டுபிடிப்புகளில், பூச்சியினங்களுக்கே முதலிடம். அடர்ந்த காடுகளில், யார் கண்ணிலும் படாமலேயே தப்பி விடும் பூச்சிகளில், 93 புது வகைகள், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 இந்த பட்டியலில், 23 வகை புதிய மீன்கள்; நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய தவளை போன்றவற்றில், 24 புது இனங்கள்; 12 வகை புதிய சிலந்திகள்; நண்டு, இறால் போன்ற வற்றில், 12 புது வகைகள் கண்டறியப்பட்டு உள்ளன.
 'புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள விலங்கினங்களை, மிக குறுகிய புவிப்பரப்பில் தான் காண முடிகிறது. எனவே அவை ஏற்கனவே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுவது தான் இதற்கு முக்கிய காரணம்' என்கிறார் இசட்.எஸ்.ஐ.,யின் இயக்குனரான டாக்டர் கே.வெங்கட்ரமணன்.
 பெரும்பாலான புதிய கண்டுபிடிப்புகள் வாழ்வது, பல்லுயிர்தன்மை செறிந்த கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த வனப் பகுதிகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தான். இந்தியாவில் கிழக்கு இமாலயம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள், பல்லுயிரி மண்டலங்களாக, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஓர் ஆண்டில் இந்திய உயிரியல் வல்லுனர்கள், 176 புதிய விலங்குகளை கண்டுபிடித்து இருக்கின்றனர். 'இவை வனவுயிர் அறிவியலுக்கு புதியவை' என, கோல்கட்டாவிலுள்ள இந்திய உயிரியல் சர்வேயான, இசட்.எஸ்.ஐ., கூறுகிறது.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Tuesday, March 17, 2015

சாம்பல் நிற அணில்களின் சரணாலயம்

பல அரிய தாவரங்களையும், விலங்குகளையும் தென்னகத்தே கொண்டுள்ள திருவில்லிபுத்தூர் மேற்குமலைத் தொடரில் இயற்கை சூழலில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது.
 1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச் சரணாலயம் 480 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது. இயற்கையின் ஈடற்ற படைப்பாக இருக்கும் இந்தச் சரணாலயம் நில அமைப்பிலும், மழை அளவிலும் தட்பவெப்ப நிலையிலும் பலவித மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தின் இடையில் அமைந்துள்ள இந்த சாம்பல் நிற அணில்கள் சரணாலயப் பகுதி தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழைகளால் பயன் பெறுகிறது. பல வகை உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற பலவகை காடுகள் காணப்படும் இந்தப் பகுதியில் ஆண்டு சராசரி மழை அளவு 500 மி.மீ.
 அந்த சரணாலயத்தில்தான் உலகிலேயே அரிய விலங்கினமான சாம்பல் நிற அணில்கள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்னர் சேலம், ஆத்தூர், திண்டுக்கல், சிறுமலை, பழனி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இந்த அணில்கள் இருந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது பொள்ளாச்சி, பழனி மற்றும் மேற்கு மலைத்தொடரில் உள்ள திருவில்லிபுத்தூர் வனப்பகுதிகளில்தான் இந்த சாம்பல் நிற அணில்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
 அழிந்து வரக்கூடிய இந்த சாம்பல் நிற அணில்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 1989-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியையும், விருதுநகர் மாவட்ட வனப்பகுதியையும் சாம்பல் நிற அணில்கள் வன உயிரின சரணாலயமாக அறிவித்தது.
 பொதுவாக ஒவ்வொரு அணிலும் 2 கூடுகளை கட்டுகிறது. காரணம், ஒரு கூடு காற்றினாலோ அல்லது மழையினாலோ சேதமடைந்தால் மற்றொரு கூட்டில் வாழ்வதற்கு ஒரு முன்னேற்பாடு. புளியம்பழம், மாம்பழம் மற்றும் பழ வகைகளையும் மரப்பட்டைகளையும் உணவாக உட்கொள்ளும் இவை குட்டிப்போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. ஆண்டுக்கு ஒரு குட்டி வீதம் ஈனும் இவற்றின் கர்ப்ப காலம் 35 முதல் 40 நாட்களாகும். இவற்றின் ஆயுள்காலம் 14 ஆண்டுகள்.
 அதிவேகமாக மரம் விட்டு மரம் தாவும் இந்த அணில்கள் இரை தேடுவது காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும்தான். மற்ற நேரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு...
வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

 

Tuesday, March 3, 2015

உலகில் வாழும் மிகப்பெரிய மரம்

 
  நீலத்திமிங்கலம் என்பதே நம்மில் பலர் கூறும் விடையாக இருக்கும். அதைவிட பிரமாண்டமான ஒரு மரமே, இப்போது, உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம்! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள செக்கோயா தேசியப் பூங்காவில் காணப்படும் 'கலிபோர்னியா பிக்' (பெரிய) மரங்களே அவை.
  இவற்றில் பல 270 அடி உயரம் வரை நீண்டு வளரக்கூடியவை. சில செம்மரங்கள் 350 அடியையும் எட்டும். கலிபோர்னியா பிக் மரங்களோ, அகலத்திலும் எடையிலும் கூட பிரமாண்டமானவை. இவற்றில் ஒரு மரம் 26 அடி அகலம் கொண்டிருக்கிறது. அடிமரத்தின் பட்டைகள் சில இடங்களில் 24 அடி அகலமாக உள்ளன. எடை 2,145 டன்!
  இதுபோன்ற ஒரு மரத்திலிருந்து 500 கோடி தீக்குச்சிகள் தயாரிக்க முடியும்! பல கோடி ஆண்டுகளுக்கு முன், பிரமாண்ட செக்கோயா மரங்கள் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் காணப்பட்டன. இப்போது கலிபோர்னியாவின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இவற்றில் பல மரங்கள் கி.மு. 2 ஆயிரமாவது ஆண்டுக்கும் முன்பு தோன்றியவை!

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Friday, February 20, 2015

பறவைகளின் மொழி


 பறவைகள் ஏதோ சும்மா கத்திக் கொண்டு பறந்து செல்வதாக நினைக்க வேண்டாம். அதுதான் அவைகளின் மொழி. பறவைகளின் ஒவ்வொரு கத்தலுக்கும் பொருள் உண்டு. ரஷ்யாவின் மாஸ்கோ பல்கலைக்கழக பரவை ஆராய்ச்சியாளர்கள், இதுபற்றிய ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றம் கண்டு உள்ளார்கள். அவர்கள் பறவைகளின் மொழியை கிட்டததட்ட புரிந்து கொண்டார்கள்.
 பறவைகள் சாதாரணமாக கத்துவதை அவர்கள் பதிவு செய்து வந்தார்கள். ஏராளமான ஒலிகளை பதிவு செய்தபின், குஞ்சுகளுக்கு அவற்றின் ஒலியை ஒலிபரப்பி காண்பித்து அது எதற்கான ஒலி என்பதை அறிய ஆரம்பித்தார்கள். ஒன்று கூடுங்கள், அபாயம் வருகிறது ஓடுங்கள், இரை இருக்கிறது வாருங்கள் என்பதற்கான ஒலிகள் எவை என்பதை அவர்கள் எளிதில் பிரித்து அறிந்தார்கள். பதிவு செய்யப்பட்ட ஒலியை, குஞ்சுப் பறவைகள் தங்கள் தாய்ப் பறவையின் ஆணையாக கருதி நடந்து காெண்டதால் ஆய்வாளர்கள் பறவைகளின் மொழியை ஓரளவு புரிந்து கொண்டார்கள்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்.

டிரண்டுலா சிலந்தி

டிரண்டுலாவின் வாழ்க்கை
உடல் நடுங்கும் கடுமையான நஞ்சு கொண்ட சிலந்தி வகைதான் டிரண்டுலா. ஆனால் விஷமுள்ள இதை, எளிதில் அடிமையாக்கி விடுகிறது ஒரு குளவி இனம். இனப்பெருக்கம் செய்ய தயாராகிவிட்ட குளவிகள், டிரண்டுலா சிலந்தியை தேடிப்பிடிக்கும். சிலந்தியின் வாய்க்கு அருகே குளவி கொட்டிவிடுகிறது. என்ன மாயத்தாலோ அதன் பிறகு இந்த விஷச்சிலந்தி, குளவியின் அடுமைபோல அமைதியாகிவிடுகிறது. பிறகு சிலந்தியின் வயிற்றைக் கிழித்து, தன் முட்டைகளை அங்கே இடுகிறது குளவி. சில நாட்கள் கழித்து முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு இறந்த டிரண்டுலாதான் முதல் உணவு.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

Saturday, January 31, 2015

கடல் ஆமைகள் சுற்றுச்சூழல் மாசினால் எப்படி பாதிக்கிறது?

 
கடல் ஆமைகள் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான உயிரினம். பனி யுகம் மற்றும் கண்டங்கள் இடம் பெயர்ந்த காலத்துக்கு முன்பிருந்தே வாழ்கின்றன. ஆனாலும் அவற்ரால் புவி வெப்பமாதல் மற்றும் கதல் நீர்மட்டம் உயர்வதை தாக்குப் பிடிக்க முடிவதில்லை. பச்சை ஆமை, ஹாவ்க்ஸ்பில், லாக்கர்கெட், கெம்ப்ஸ் ரைட்லி, ஆலிவ் ரைட்லி, தோல்பை ஆமை போன்ற 6 ஆமை இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.
  பெண் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் முட்டையிடுவதற்காக கடற்கரைக்கு வருகின்றன. அவை முட்டைகளை மணலில் குழிதோண்டி இடுகின்றன. புவி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கடற்கரையொட்டிய பகுதியில் இடப்படும் ஆமை முட்டைகள் அதிகமாக அழிகின்றன. அதேபோல வெப்பநிலை உயர்வு அதிகமான பெண் ஆமைகள் உருவாக காரணமாகின்றன. புளோரிடா மாகாணத்தில் ஆமை முட்டைகள் 90 சதவீதம் பெண் ஆமைக்குஞ்சுகளை பொரித்திருகின்றன. இதே நிலை நீடித்தால் விரைவில் ஆண் ஆமைகள் இல்லாமல் அந்த இணமே அழியும் நிலை உருவாகிவிடும்

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...

Friday, September 19, 2014

அருகிவரும் காட்டு உணவுத் தாவரங்கள்

 
உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்த தரவுகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் காட்டுத்தாவரங்கள் உணவுத் தாவரங்களுக்கு மிகவும் நெருக்கமானவைதான், அவற்றை உணவாக உண்ணவும் முடியும். ஆனால், இவை பல்வேறு வகையான சூழ்நிலைகளிலும் தாக்குப் பிடித்து வாழக்கூடியவையாகும்.
இருக்கக்கூடிய வளங்களை பயன்படுத்தி, அவற்றுக்கு அமைவாய் இவை வாழக்கூடியவை.
  இருந்தபோதிலும், இவற்றில் பெரும்பாலானவை அவற்றை பராமரிக்கும் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள, மத்திய கிழக்கின் மோதல் வலயத்தில் வளர்கின்றன.
  உலகில் இப்படியான காட்டுத் தானிய வகைகள் சிறப்பாக வளரக் கூடிய பல இடங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அந்த இடங்களில் இவற்றை பராமரித்து வளர்த்தால், எதிர்கால உணவுத் தேவைக்கான மூலமாக இவை பயன்படுத்தப்படலாம்.
  பலதரப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக இந்த காட்டுத் தாவரங்களையும், வழமையான உணவுத் தாவரங்களுடன் சேர்த்து விவசாயிகள் வளர்க்கிறார்கள். உள்ளூர் காலநிலைக்கு தாக்குப் பிடித்து வாழக்கூடிய தாவரங்களை வளர்ப்பது இவர்கள் நோக்கமாகும்.
  வெறுமனே காட்டு உணவுத்தாவரங்களை வளர்ப்பது என்பது அல்லாமல், விவசாயிகளும், தாவரங்களை வளர்ப்போரும், காலநிலை மாற்றத்துக்கு தக்கதான தாவரங்களை உருவாக்க உதவுவதே தமது நோக்கம் என்று கூறுகிறார் ப்ர்ர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நைஜல் மாக்ஸ்ட்டெட்.
  காட்டுத் தாவரங்களில் பயனுள்ள உணவு வகைகளும், வரட்சியை தாக்குப் பிடிக்கும் வகைகளும் அடங்கும்.
  2050 அளவில் 9.6 பில்லியனாக அதிகரிக்கவுள்ள உலக மக்கள் சனத்தொகையின் உணவுத்தேவைக்கு இந்தக் காட்டு உணவுத் தாவரங்கள் மிகவும் அவசியம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Saturday, September 6, 2014

மரம் வளர்க்க ஒரு சட்டம்

   
   மரங்கள் இயற்கையின் கொடை நாம் இந்த பூமியில் வாழ வழி செய்பவை. ஆனால் மனிதர்கள் மரங்களை போற்றுவதில்லை. தனது சுய நலத்துக்காக மனிதன் தொடர்ந்து மரங்களை அழித்துக் கொண்டே இருக்கிறான். இந்த கேடு கெட்ட பழக்கத்துக்கு எந்த நாடும் விதி விலக்கு அல்ல. எல்லா நாட்டிலும் மனிதர்கள் தம் பங்குக்கு மரங்களை அழித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
பில்ப்பைன்ஸ் நாட்டில் 50 வருடங்களுக்கு முன்பு மரம் வெட்டுதல் மிகப்பெரிய தொழிலாக விஸ்வரூபம் எடுத்திருந்தது. காடுகள் கண் மண் தெரியாமல் அழிக்கப்பட்டன, பெரும்பாலன காடுகள் இருந்த சுவடே தெரியாமல் தரைமட்டமாயின. மரங்கள் இல்லாததால் சுற்றுச் சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாட்டில் மழை பெய்வது வெகுவாக குறைந்து போனது. வெயில் கொளுத்தியதது, வறட்சி ஏற்பட்டது.
   பில்ப்பைன்ஸ் அரசு தாமதமாக கண் விழித்துக்கொண்டது. பெரிய அளவில் மரங்கள் வளர்த்து நாட்டின் சுற்றுச் சூழலை இயல்பு நிலைக்கு கொண்டு வரவில்லை என்றால் பெரும் பஞ்சம் ஏற்படும் என்று நினைத்தது. சூழலை கட்டுப்படுத்தவும், நாட்டின் அழகை மேலும் மேம்படுத்தவும் 1977-ம் ஆண்டில் ஒரு சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வந்தது. அதன்படி 10 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஒவ்வொரு மாதமும் ஒரு மரம் நட்டு அது அழிந்து விடாமல் பாதுகத்து வளர்க்க வேண்டும் என்று கூறியது.
  இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அரசால் வழங்கப்படும் எல்லா சலுகைகளும், உரிமைகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது போக 175 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் மரங்கள் வளர்ப்பை ஊக்குவிப்பதர்காக மக்கள் விரும்பும் மரங்ளின் நாற்றுகள் அரசு இலவசமாக வழங்கியது.
 இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அரசின் குறியீட்டை விட அதிகமாக மரம் வளர்த்தவர்களுக்கு அரசாங்கம் ஒரு சான்றிதழும், அரசு வேலைகளில் முன்னுரிமையும் கொடுத்தது. இந்த திட்டத்தின்படி 5 ஆண்டுகள் முடிவதற்குள் 36 கோடி புதிய மரங்கள் நாட்டில் முளைத்தன. இன்றைக்கு இயற்கை வளம் நிறம்பிய ஒரு தேசமாக பில்ப்பைன்ஸ் பசுமையோடு திகழ்கிறது.
  மக்கள் துணையிருந்தால் எதுவும் சாத்தியமே. நாமும் எத்தனை நாளைக்குத்தான் வெறும் விழிப்புணர்வை மட்டும் கொடுத்துக் கொண்டே இருப்பது. அரசு சட்டமாக கொண்டு வந்து கடுமையாக அதை அமல்படுத்தினால் இந்தியாவும் ஒரு பசுமை பூமிதான் என்பதில் சந்தேகம் இல்லை.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

Thursday, August 28, 2014

தேன் அத்தி

 

தேன் அத்திப் பழமானது ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் பார்க்காமல் உண்ணக்கூடிய பழமாக உள்ளது. சீன மொழியில் பிக் என்று அழைக்கப்படுகிறது. பிக் என்பது சின மொழியில் பூவில்லாமல் காய்ப்பது என்பது பொருள் ஆகும். ஆனால் அத்திப்பூவில் பூ உள்ளது. கனியான பிறகு பூவானது விதையாக மாறுகிறது. அத்திப்பழம் பல நிறங்களில் கிடைக்கிறது. இது வகைக்கு ஏற்ப இளம் சிவப்பு, பச்சை, மஞ்சல், பழுப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. அத்திப்பழம் பழங்கால மனிதனின் மிக முக்கிய உணவாகும். எகிப்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மிக முக்கிய உணவாக இது உள்ளது.
  தேன் அத்தியானது மிகவும் பழங்காலத்திலேயே பயிரிட்டு வளர்த்து வந்துள்ளனர். தற்போது நாம் பார்க்கும் அத்தி மரங்கள் காட்டு மரங்களிலிருந்து மாறுபட்டு இருக்கும். அத்திமரமாணது ஆசிய மைய பகுதியில் முதன் முதலில் தோன்றி உள்ளது. புதிய கற்கால ஆய்வுகள் முலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இது ஆசியவை ஒட்டிய அனைத்து பகுதியிலும் பின்னர் பரவியிருக்கிறது. இது மருத்துவ பயன் உடையது.

இயற்கை நமக்கு கொடுத்த கொடை மழை.  மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...

Saturday, August 23, 2014

வெளவால்களை காக்கும் கிராமம்!

காஞ்சிபுரத்தை அடுத்த விஷார் தாமரைக்குளம் அருகே உள்ள ஆலமரத்தில் வசிக்கும் வெளவ்வால் கூட்டம்.

வெளவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக காஞ்சிபுரம் அருகே விஷார் கிராம மக்கள் வெடிகளைத் தவிர்த்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ளது விஷார் கிராமம். இக்கிராமத்தில் பீமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே தாமரைகுளம் உள்ளது.

இக்குளத்தின் அருகே 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வசித்து வருகின்றன.

இரவில் உலாவி விட்டு, பகலில் இம்மரத்தில் ஓய்வெடுக்கும் வெளவால் கூட்டங்களுடன் இம்மரத்தைப் பார்க்கும்போது, சடைமுடி சாமியார் எழுந்து நிற்பது போன்று காட்சி தருகிறது. இதே போன்று மேலும் 2 மரங்கள் முன்பு இருந்துள்ளன. கடந்த பல நூறு ஆண்டுகளாகவே இங்கு வெளவால்கள் குடியிருந்து வருவதாக இக்கிராமவாசிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பகலில் ஓய்வெடுக்கும் வெளவால்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் கிராம மக்கள் உறுதியுடன் இருந்து வருகின்றனர். மேலும் இந்த வெளவால்கள் தங்களது கிராமத்தின் அடையாளம் என்றும் போற்றி வருகின்றனர். இதனால் தீபாவளி மற்றும் கோயில் திருவிழா காலங்களில் இக்கிராம மக்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை பயன்படுத்துவதை தலைமுறை, தலைமுறையாக தவிர்த்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கச் செய்வதன் மூலம், வெளவால்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடலாம் என்றும், கிராமத்தைவிட்டு அவை கூட்டமாக சென்று விடக்கூடாது என்பதற்காகவும் இக்கிராமத்தில் பட்டாசுகளை வெடிப்பதில்லை. ÷அதே நேரம், பூச்சட்டி, சங்குசக்கரம், மத்தாப்பு உள்ளிட்ட ஒளிரும் பட்டாசுகளை பயன்டுத்துகின்றனர்.

இதுபோல் ஒவ்வெறு கிராம மக்களும் தங்களது கிரமத்தில் உள்ள பறவைகள், விலங்குகள், மரங்களை பாது காத்தால் இயற்கை இயற்கையாக இருக்கும் நாடு செழிப்பாக இருக்கும்.

Tuesday, August 19, 2014

பிரேசில் திராட்சை மரம் (Aboticaba Tree)


 பிரேசில் திராட்சை மரம் (Aboticaba Tree) தெற்கு பிரேசில் பசுமையாகவும் மிகவும் அடர்த்தியாகவும் வளரும் மரம் இது. இந்தமரம் உலகின் பல வெப்ப மண்டல பகுதிகளில் பரவலாக உள்ளது. இதன் இலைகள் சிறு ஈட்டி போல் உள்ளது. இது அதன் சொந்த நாட்டில் சுமார் 12 மீட்டர் உயரத்திற்கு வளர்கிறது. உலகின் பல பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படும் போது 3-5 மீட்டர் வரை வளர்கிறது.

 இலைகள் ஒரு இனிமையான வாசனை மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. தண்டு மற்றும் மரத்தின் கிளைகள் ஒரு பிங்க் நிறம் மற்றும் சாம்பல் புள்ளிகளால் ஆன வெளிறிய தோலால் மூடப்பட்டிருக்கும். வசந்த மற்றும் கோடை காலத்தில்,  மரத்தின் அடிமரம், தண்டு மற்றும் முக்கிய கிளைகளில் நேரடியாக பல சிறிய வெள்ளை மலர்களால் மூடப்பட்டிருக்கும்.

 தண்டு மற்றும் முக்கிய கிளைகளில் பூ மொட்டுக்கள் உருவாகும் இந்த செயல்முறை கொக்கோ மற்றும் ஏனைய வெப்பமண்டல பழ மரங்கள் சில வற்றில் காணலாம்.

 இது வசந்த காலம் முடிந்தவுடன் இலையுதிர் காலத்தில் பழங்கள் 3-4 வாரங்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஆரம்ப காலத்தில் பழங்கள் கருப்பு, சிவப்பு, மற்றும் பச்சையாக இருக்கும். பழுத்த பழங்கள் திராட்சை பழங்களை ஒத்திருக்கின்றன. அவை மிகவும் இனிப்பாக இருக்கும். பழுத்த பழம் 4 அல்லது 5 நாள் வரைதான் கெடாமல் இருக்கும்.  

 குளிர்காலத்தில் இந்த மரத்தின் இலைகள் அனைத்தும் உதிர்ந்து விடும், பின்னர் இளஞ்சிவப்பு இதழ்கள் துளிர் விட்டு வழக்கமான கரும் பச்சை நிறமாக வசந்த காலத்தில் தோன்றும். 

 100 கிராம் பழத்தில்  22 மி.கி. வைட்டமின் சி, 0 கிராம் கொழுப்பு, 1 கிராம் புரதம், 13 கிராம் கார்போஹைட்ரேட், 6 மிகி கால்சியம், 0.01 மிகி thiamin, 9 மிகி பாஸ்பரஸ், 0.6 கிராம் நார்ச்சத்து, கொண்டிருக்கிறது.
   
  இதன் பழத்தில் ஜெலி மற்றும் ஐஸ்கிரீம் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். பிரேசிலில் மிகவும் ருசியானது மது பாணம் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். 

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்... 
           

Monday, August 18, 2014

புங்கமரம்


இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள்.  இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.  மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள்.   மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடிகளும் உள்ளன.

 இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் பல வகைகள் உள்ளன.  இந்த மரங்களில் புங்க மரத்தின் மருத்துவப் பயன்களை அறிந்து கொள்வோம்.

 ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான்.  எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை.  அதிக நிழலை தரக்கூடியது.  பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும்.  இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும்.  சாலை ஓரங்களில் நிழல்  தரவும்,, மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

 புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று.  வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி  சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.

 புங்க மர விதையிலிருந்து பயோடீசல் (Biodisel) உருவாக்கலாம்  இந்த விதைகளிலிருந்து 30 - 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளது.

செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....

Saturday, August 16, 2014

கோலா கரடி


 
தப்பவெப்ப நிலைக்கு ஏற்ப இடம் பெயரும் கோலா கரடிகள் கோலா கரடிகள், மரங்களை கட்டிப் பிடித்தாற்போன்று தூங்கும் இயல்பு கொண்டவை. இளம் சாம்பல் நிறத்திலும், அடர்ந்த உரோமங்களுடனும் காட்சியளிப்பவை. இவை காட்டில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற் போன்று இடம் பெயர்ந்து தூங்கும் மரங்களையும், உண்ணும் இலைகளையும் மாற்றிக் கொள்வதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுளளன. இதனை மெல்போர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கல் கீர்னி மற்றும் நாட்டலி பிரிஸ்சியோ ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிரெஞ் தீவில் இருக்கும் 37 கோலா கரடிகளை தேர்வு செய்து அவைகளின் நடவடிக்கைகளை ரகசிய கேமரா மற்றும் ஒளி சேகரிப்பு கருவிகல் மூலம் கண்காணித்தனர். 6 வருடங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலனாக கோலா கரடிகள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற் போன்று அடன் உடலில் நிலவும் வெப்ப நிலையை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலான செயல் பாடுகளில் ஈடுபடுகின்றன எண்பதை கண்டறிந்துள்ளனர். கோலா கரடிகள் பொதுவாக ஒரு நாளில் 20 மணி நேரம் வரை தூங்கக்கூடியவை. இதனால் வெப்ப காலங்களில் உடலில் இருக்கும் குளிர் தன்மையை தக்கவைத்துக்கொள்ள காட்டில் இருக்கும் அசாசியா என்ற மரத்திற்கு இடம் பெயருகின்றன. அசாசியா மரங்கள் பொதுவாக குளிர் தன்மை கொண்டவை. இதனால் கோடைகாலங்களில் நிலவும் வெப்ப சூழலை இந்த மரத்தின் மூலமாக சமாளிக்கின்றன. மேலும் குளிர்காலங்களில் வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள யூக்கலிப்டஸ் மரங்களில் தூங்கி அதன் இலைகளை உட்கொள்கின்றன. வெப்ப காலங்களில் மரத்தின் உச்சியில் தூங்கும் கோலா கரடிகள் உணவாக எதையும் எடுத்துக் கொள்வதில்லை. 
 இது குறித்து ஆய்வாளர் ஆண்ட்ரூ கிராக்கன்பெர்ஜர் கூறும்போது, கடந்த 2009ம் ஆண்டில் ஏற்பட்ட வெப்ப அலையால் கோலா கரடிகளில் 4ல் ஒரு பங்கு இறந்து விட்டது.  எனவே, கடினமான சூழலில் சில உயிர்வாழ் இனங்களை வாழ வைக்கும் காரணிகளை குறித்து புரிந்து வைத்து கொள்வது மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.  மரங்களில் வசிப்பதை விரும்பும் குரங்குகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற மிருகங்களும் இந்த விசயங்களையே கடைப்பிடிக்கின்றன என ஆய்வு குழு மேலும் தெரிவித்துள்ளது.

 கடந்த வருடம் ஆஸ்திரேலிய அரசாங்கம் கோலா கரடிகளை அழிந்து வரும் உயிரினங்கள் வரிசையில் இருப்பதாக பட்டியலிட்டு உள்ளது. அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் அவை காணாமல் போய் விடும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.  ஆரோக்கியமான கோலா கரடி ஒன்று 16 வருடங்கள் வரை வாழ கூடியது.  ஆஸ்திரேலியாவில் முன்பு 10 லட்சம் வரை கோலா கரடிகள் வசித்துள்ளன. 

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

Thursday, August 14, 2014

தேக்கு மரம்

தேக்கு மரம் இது மிகவும் பொதுவான இந்திய மரங்களில் ஒன்றாகும். (குடும்ப வெர்ப்பினேசி) ஒரு பெரிய இலையுதிர் மரம். தேக்கு பரவலாக 2,000 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது இது மிகவும் உயரமாகவும் தடிமனகவும் இலைகள் அடர்த்தியாகவும் வளரக்கூடியது. அறுபது, எண்பது ஆண்டுகளில் உயர்ந்த முதிர்சியடைந்த மரங்களாகும். இந்த மரங்கள் உயரம் 45 மீட்டர் வரை வளர முடியும். இந்தியா, மியான்மர் (பர்மா),  தாய்லாந்து,  பிலிப்பைன்ஸ், ஜாவா மற்றும் மலாய் தீவு களில் காணப்படுகின்றன. தேக்கு ஆபிரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவிலும் நடப்படுகிறது.

இந்திய தேக்குமரம் ஒரிசா, மத்திய பிரதேசம் வழியாக தெற்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆரவல்லி மலை தெற்கு எல்லைகள் வரை பரவியுள்ளது. உலர்ந்த மற்றும் ஈரமான இலையுதிர் காடுகள் மற்றும் தெற்கு தீபகற்ப இந்தியாவில்  இயல்பாகவே வளரும். அதன் சிறந்த வளர்ச்சி  வளமான,  மண்ணில் 3 முதல் 5 மாதங்களுக்கு ஒரு உலர் பருவத்தில் ஆண்டுதோறும் 125 250 செ.மீ மழை பெறும்.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு தேக்கு மரத்தின் அனைத்து  இலைகளும் உதிர்ந்து புதியதாக வளரும். வளர்ந்த மரத்தின் வலுவான இலைகள் 60 செ.மீ. நீளம் வரை வளரும். மரத்தின் கிளைகளில் எண்ணற்ற சிறிய வெள்ளை பூக்கள் மலரும் பூக்கள் வாசனையாகவும் ஐந்து அல்லது ஆறு இதழ்கள் கொண்டிருக்கிகும். பல லட்சம் மலர்களைக்கொண்டிருக்கும் அந்த மலர்கள் கூட அதிகபட்சமாக 2.5 செ.மீ. அளவு அதிகரிக்கும். இந்த சமயத்தில் தேக்குமரம்  மிகவும் அழகாக தெரியும்.

தேக்குமரம் நாடு முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. இது மருத்துவ குணங்கள் உடையது மரம் மதிப்புயையது என்பதால் இது உற்பத்தி இல்லாத நாடுகளில் இதன் வர்த்தக மதிப்பு அதிகம். இந்த மரம் மிகவும் பலமான, கடினமான மற்றும் நீடித்த வலுவானது மற்றும் இதில் தனித்துவமான வாசனை எண்ணெய் உள்ளது இந்த எண்ணெய் மரத்தை காக்கிறது. இந்த மரம் பரந்த அளவில் தளவாடங்கள், வீடுகள், கப்பல்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மரத்தின் இலைகளில் இருந்து பெறப்படும் சாறு துணி சாயமாக பயன்படுத்தப்படுகிறது.  மரத்தின் பகுதிகளில் மிக மருத்துவரீதியில் மதிப்புவாய்ந்ததாக உள்ளன.  தலைவலி, செரிமானமின்மை குறைக்க மற்றும் வயிற்று பிரச்சினைகள் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது.

மேலும், தேக்கு மரம் தூள் பேஸ்ட்,  டையூரிடிக், கல்லீரல், அழற்சி மற்றும் பல்வலி குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது மர சாம்பல்  கண் இமைகள் வீக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது மற்றும் பார்வை மேம்படுகிறது என்று நம்பப்படுகிறது. வடிகட்டும் மூலம் பெறப்படும் ஆயில் படை, படர்தாமரை இவற்றிற்கு பஸ்தர் மாவட்ட பழங்குடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். மற்றும் மூச்சு குழாய் அழற்சி சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. விதைகளில் (கொட்டைகள்) இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் முடி வளர்ச்சி  மற்றும் சொறி சிரங்கு கட்டுப்படுத்துகிறது. இந்திய தேக்கு மரங்கள் ஆயுர்வேத நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய தேக்குமரம் அதன் விரைவான வளர்ச்சி மற்றும் உயர் தரமான மரமாக மதிப்பிடப்படுகிறது பல வெப்பமண்டல நாடுகளில் தேக்கு மரங்கள் ஒரு முக்கியமான தோட்டங்களாக உள்ளது.  தேக்கு மரம் முக்கியமாக அதன் அசாதாரண ஆயுள் சூடான நாடுகளில் மதிப்பிடப்படுகிறது. இந்தியா, மியான்மர் ஆகிய நாடுகளில் பாதுகாப்பு மர விட்டங்களில் பல நூற்றாண்டுகளாக பழைய கட்டிடங்களில் காணப்படுகின்றன, மற்றும் தேக்கு விட்டங்கள் அரண்மனைகள், கோயில்களில்  1,000 ஆண்டுகளுக்கு நீடித்தது அழிவில்லாமல் இன்றும்  நிலைத்து இருக்கிறது.

செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....

Wednesday, August 13, 2014

மரங்கள் என்னும் வரங்கள்


ஆதியில் காடுகளில் வாழ்ந்த மனிதன், எப்பொழுது இலைகளையும், தழைகளையும் நாகரிகம் எனக் கருதி ஆடைகளாக உடுத்தத் தொடங்கினானோ, அன்றே மனிதன் மரங்களின் மீதான வன்முறையை ஆரம்பித்துவிட்டான். இன்று நாம் வாழும் பூமி வெப்பமயமாக்கலில் சிக்கி எதிர்

காலத்தில் உயிரினங்கள் வாழத் தகுதியற்ற வெப்பப் பந்தாக உருமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கையின் பெருங்கொடை மரங்கள். மனிதன் தான் கொண்ட பேராசையின் பெரும் விளைவாக காடுகளின் மீது கைவைத்து மரங்களை அழித்து, வாழுகின்ற பூமி தனக்கானது மட்டுமே என எண்ணி பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஊறு விளைவித்தான்.

1950-ஆம் ஆண்டு பூமியின் சராசரி வெப்பநிலை 13.8 டிகிரி செல்ஸியஸாக இருந்தது. அது 1997-ஆம் ஆண்டு 14.6 டிகிரி செல்ஸியஸாக அதிகரித்துவிட்டது. வருடாவருடம் வெப்ப நிலையின் அளவு உயர்ந்து கொண்டே வந்தால் பனிப்பாறை உருகி, கடல்மட்டம் உயர்ந்து கடலோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்படும்.

காடுகளைத் திருத்தி கழனிகளை அமைத்த மனித இனம், இன்று கழனிகளை அழித்து வான்முட்டும் வணிக வளாகங்களையும், அடுக்ககங்களையும் அமைத்து இயற்கைக்கு எமனாகச் செயல்படுகிறது.

அந்தக் காலத்தில் தமிழகத்தில் சுமார் 33,000 ஏரிகள் இருந்தன. இன்று நகரமயமாதல் எனும் இயற்கைக்கு முரணான வளர்ச்சியில் ஏரிகள் தூர்க்கப்பட்டு பேருந்து நிலையங்களாகவும், கல்வி நிறுவனங்களாகவும், மருத்துவமனைகளாகவும் காட்சியளிக்கின்றன. வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியாகும் புளுரோ குளுரோ கார்பன் வளி மண்டல ஓúஸான் படலத்தில் (ஞழஞசஉ) ஓட்டை விழ வைக்கிறது.

பயன்படுத்தாமல் வீசி எரியும் அலைபேசி, தொலைக்காட்சி, கணினி என மின் கழிவுக் குப்பைகள் போன்றவை அவற்றின் பங்கிற்கு காற்றை நஞ்சாக்குகின்றன.

வாகன உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்து அயல்நாட்டுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதாகப் பெருமை கொள்ளும் அதே வேளையில், அயல்நாட்டு நிறுவனங்கள் சப்தமில்லாமல் நம்மீது தண்ணீர் சுரண்டலை நிகழ்த்துவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நான்கு சக்கர வாகனம் உற்பத்தி செய்வதற்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

ஐம்பது ஆண்டுகள் வாழும் வளமான மரத்தை நாம் வெட்டினால், அதனால் ஏற்படும் இழப்பு ரூபாய் கணக்கில் சுமார் 50 லட்சம்.வாழும் பூமியை வளமாக்க நாடெங்கிலும் உள்ள தரிசு நிலங்களை கணக்கிட்டு மரக்கன்றுகளை நட வேண்டும். மலைப்பாங்கான பகுதிகளில் ஹெலிகாப்டர் துணை கொண்டு விதை

களைத் தூவ வேண்டும். நம் குழந்தைகளுக்கு மரங்களில் பயன்களைச் சொல்லி வளர்க்க வேண்டும்.
தினமணி:
நன்றி By அ.பிரமநாதன்

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

Thursday, August 7, 2014

பறவைகள் குடிபெயர்வு


பதினோராயிரம் கி.மீ.தூரத்துக்கு குடிபெயரும் பறவைகள் மீண்டும் இருப்பிடம் திரும்பும் விந்தை
பிராணிகள் குடிபெயர்வு என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை முன்னிட்டு புலம் பெயருவதைக் குறிக்கும். எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன. மேலும் மனிதனைப்போலவே விலங்கினங்கள் கோடைகாலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விரைகின்றன.
 அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலங்களில் மாற்றிக்கொள்கின்றன. குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் அல்லது பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடம்பெயர்வு செய்வது குடிபெயர்வு (வலசை போதல்) எனப்படும். அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
 குடிபெயரும் பறவைகள், பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில் தான் தனது இருப்பிடத்தை அறிகின்றன.
 பறவைகள் குடிபெயரும் போது பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில் உணவு கிடைப்பதும் குறைகிறது. அப்போது பல பறவைகள் வெதுவெதுப்பான நல்ல சாதகமான தட்ப வெப்பநிலையை நோக்கி நீண்ட தூரம் பறந்து செல்லத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றன.
 இடப்பெயர்ச்சி துவங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன. சில பறவைகள் கூட்டமாக எப்படி அணிவகுத்துச் செல்வது என்று ஒத்திகைகள்கூடப் பார்க்கின்றன. பிறகு ஆழமான மூதாதைப் பண்புகளின் தூண்டலால் உந்தப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்கு செல்லத் துவங்குகின்றன.
 இடம் பெயரும் பறவைகள் இருவிதமான நேர் உணர்வைப் பெற்றுள்ளன. ஒன்று உள்ளூர் நேரத்தைச் சார்ந்தது. மற்றொன்று பருவ நிலை மாற்றம் தொடர்பானது. மேலும் அவை புவிக்காந்தப்புலத்தைச் சார்ந்தது. ஆனால் உலகின் சில பகுதிகளில் தீர்க்க ரேகைகள் புவி காந்தப் புலத் தன்மைக்கு ஏற்ப அதிகம் மாறுவதில்லை.
 இளம் பறவைகளைக் கொண்டு இலையுதிர் காலத்திலும், வயதான பறவைகளைக் கொண்டு வசந்த காலத்திலும் இடம்பெயர்வு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுகளின் படி கால, நேர, இட அடிப்படையில் அமையும் பறவைகளின் வான் பயண உத்திகள், வயதான பறவைகளுக்கு அதிகமாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. ரீட்வார்ப்லர் என்ற இனப் பறவைகள் தீர்க்க ரேகையைக் கண்டறிவதுடன், இரு அச்சு வான் பயண முறையை மேற்கொண்டு வசந்த காலத்தில் தத்தம் வாழிடங்களுக்குச் சரியாக வந்து சேர்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 பல வகையான தரைப் புலம் பெயர் பறவைகள் மிக நீண்ட தூரங்கள் இடம் பெயருகின்றன. இனப்பெருக்க காலத்தை மித வெப்பப் பகுதிகளில் அல்லது ஆர்ட்டிக் வட அரைக்கோளத்தில் கழிக்கின்ற பறவைகள், மற்றக் காலங்களில் வெப்ப வலயங்களை அல்லது தென் அரைக்கோளத்திலுள்ள மிதவெப்ப வலயப் பகுதிகளை நாடிச் செல்வதே மிகவும் பொதுவாகக் காணப்படும் புலப்பெயர்வு ஆகும்.
 சான்றாக வடக்கு ஐரோப்பாவிலுள்ள குருவிகள் ஆபிரிக்காவிலுள்ள குளிர்கால இடங்களை நோக்கி 6,800 மைல்கள் (11000 கி.மீ.) அல்லது அதற்கு அதிகமாகப் பறந்து செல்கின்றன. இவை தங்களுக்குள் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் ஒன்று மோதாமலும் சரியான இடைவெளியுடனும் ஒரு குறிப்பிட்ட வேகத்துடனும் பறந்து செல்கின்றன. வட பிரதேசக் கோடை காலத்தின் நீண்ட பகற்காலம், புதிதாகப் பொரித்த குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டது. இக்காலத்தில் இப்பகுதிகளில் உணவும் கூடுதலாகக் கிடைக்கும்.
 இலையுதிர் காலத்தில் பகற்காலம் சுருங்கி உணவு கிடைப்பதும் அரிதாகும் போது, பறவைகள் வெப்பப் பகுதிகளுக்கு வருகின்றன. இப் பகுதிகளில் பருவகாலங்களைப் பொறுத்து, உணவு கிடைப்பதில் அதிக மாற்றம் இருப்பதில்லை. இவ்வாறு புலம்பெயர்வதால் கிடைக்கும் நன்மைகள், களைப்பு, சக்திச் செலவு, புலம்பெயர்வின் போது ஏற்படும் ஆபத்துக்கள் என்பன போன்ற பாதக அம்சங்களை ஈடுசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
 புலம்பெயர்வுக்கு முந்திய காலப் பகுதியில் பல பறவைகளில் அதிகரித்த செயற்பாடுகள் அல்லது புலம்பெயர்வு அமைதியின்மை காணப்படுகின்றது. அத்துடன் அதிகரித்த கொழுப்பு படிதல் போன்ற உடற் கூற்றியல் மாற்றங்களும் ஏற்படுகின்றன. கூண்டிலடைத்து வளர்க்கப்பட்ட பறவைகளும், பறக்கவிடும் போது, இயற்கையில் இவ்வினப் பறவைகள் புலப்பெயர்வின் போது பறக்கும் அதே திசையிலேயே பறக்க முயல்வது தெரிய வந்துள்ளது.
 அத்துடன் இயற்கையாகப் புலம்பெயரும் பறவைகளிடம் நிகழும் பறப்புத் திசை மாற்றமும் ஏறத்தாழ அதே காலத்திலேயே கூண்டுப் பறவைகளிலும் நிகழ்வது அறியப்பட்டுள்ளது. குடிபெயரும் உயிரினங்களில் பாலைவன வெட்டுக்கிளிப் பூச்சிகளும் அடங்குகின்றன. பெருந்திரள் கூட்டமாக இடம்பெயரும் போது ஒரு நாளைக்கு 3000 தொன் தாவரங்களை உண்ணுகின்றன.  ஒரு பெருந்திரள் கூட்டத்தில் சுமார் 50,000 மில்லியன் வரை பூச்சிகள் இருக்கும்.
 கடலில் வாழக்கூடிய மீன்கள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிலங்கிலம் ஆகியவையும் குடிபெயர்கின்றன. சால்மன் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடலிலிருந்து நன்னீரை நோக்கி 1500 மைல் (2400 கி.மீ) வரை பயணிக்கின்றன. இவ்வாறு நீண்ட தூரப் பயணத்தில் முற்றிலும் ஆற்றலிழந்த நிலையில் இனப்பெருக்கத்திற்குப் பின் பல மீன்கள் இறந்து விடுகின்றன. ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக நீண்ட தூரம் இடம்பெயர்கின்றன. குறிப்பாக பிரேசில் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக எட்டு வாரங்களில் 1250 மைல்கள் (2000 கி.மீ.) பயணிக்கின்றன.
 வட அமெரிக்காவிலுள்ள பாரன் மைதான மான்கள் 3700 மைல்களுக்கும் (5000 கி.மீ.) மேலாகப் பயணிக்கின்றன. இதுவே பாலூட்டிகளில் அதிக தூரம் நடைபெறும் வருடாந்த இடம்பெயர்வு ஆகும். கிரேக்க மேதை அரிஸ்டோட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பருவ கால இடம்பெயர்வைக் கண்டறிந்தார். கி.மு. 384 - 322 இல் எழுதிய ‘விலங்குகளின் வரலாறு’ என்ற நூலில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். தற்காலிகத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த ஆராய்ச்சிகள் பெருகியுள்ளன.
 இவற்றிற்கென தனிப் படிப்புகளும் முனைவர் சலீம் அலி (1896 - 1987) என்பவர் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்த பறவை நிபுணர் ஆவார். இவரின் ஆய்வுகள் மூலம் பறவைகள் பற்றிய பல்வேறு சுவையான தகவல்கள் கிடைத்துள்ளன.பறவைகள் தங்களது இடப்பெயர்ச்சிக்கு குறைந்தது இரண்டு அச்சுகளாகிய அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் பயன்படுத்துகின்றன எனப் புதிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரு சிலரின் ஆய்வுப்படி பறவைகளின் இடப்பெயர்வு வடக்கு, தெற்கு திசையில் அமைகின்றது.
 ரஷ்யாவில் உள்ள ரிபாஷி என்னுமிடத்தில் உள்ள உயிரியல் மையத்தில் ஆய்வாளர் நிகிதா சென்ஸ்டவ் வசந்த காலத்தில் பறவைகள் நெடுந்தொலைவு மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் சென்று திரும்பும் போது கிழக்கு மேற்காக இடம்பெயர்கின்றன என்று தன் ஆய்வில் கூறியுள்ளார். இதிலிருந்து பறவைகள் எவ்வாறு அட்ச ரேகைகளைக் கண்டறிகின்றன என்பது தெரியவில்லை.
 ஆனால் தீர்க்க ரேகை என்பது வடக்கு, தெற்கு திசைகளில் செல்கிறது. இதை நடுப்பகலில் உள்ள சூரியனின் இருப்பிடத்தை வைத்தோ அல்லது பூமியின் காந்தப்புலத்தை வைத்தோ எளிதில் கண்டறியலாம் என்று சென்ஸ்டவ் விளக்கியுள்ளார். மூன்றாவதாக வானத்தில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் இடம்பெயரும் பறவைகள், அவை செல்ல வேண்டிய இடத்தில் தீர்க்க ரேகையை அறிந்து இடம் பெயருகின்றன என்பர். ஆனால் இதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை.

அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...