Saturday, August 16, 2014

கோலா கரடி


 
தப்பவெப்ப நிலைக்கு ஏற்ப இடம் பெயரும் கோலா கரடிகள் கோலா கரடிகள், மரங்களை கட்டிப் பிடித்தாற்போன்று தூங்கும் இயல்பு கொண்டவை. இளம் சாம்பல் நிறத்திலும், அடர்ந்த உரோமங்களுடனும் காட்சியளிப்பவை. இவை காட்டில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற் போன்று இடம் பெயர்ந்து தூங்கும் மரங்களையும், உண்ணும் இலைகளையும் மாற்றிக் கொள்வதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுளளன. இதனை மெல்போர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கல் கீர்னி மற்றும் நாட்டலி பிரிஸ்சியோ ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிரெஞ் தீவில் இருக்கும் 37 கோலா கரடிகளை தேர்வு செய்து அவைகளின் நடவடிக்கைகளை ரகசிய கேமரா மற்றும் ஒளி சேகரிப்பு கருவிகல் மூலம் கண்காணித்தனர். 6 வருடங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலனாக கோலா கரடிகள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற் போன்று அடன் உடலில் நிலவும் வெப்ப நிலையை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலான செயல் பாடுகளில் ஈடுபடுகின்றன எண்பதை கண்டறிந்துள்ளனர். கோலா கரடிகள் பொதுவாக ஒரு நாளில் 20 மணி நேரம் வரை தூங்கக்கூடியவை. இதனால் வெப்ப காலங்களில் உடலில் இருக்கும் குளிர் தன்மையை தக்கவைத்துக்கொள்ள காட்டில் இருக்கும் அசாசியா என்ற மரத்திற்கு இடம் பெயருகின்றன. அசாசியா மரங்கள் பொதுவாக குளிர் தன்மை கொண்டவை. இதனால் கோடைகாலங்களில் நிலவும் வெப்ப சூழலை இந்த மரத்தின் மூலமாக சமாளிக்கின்றன. மேலும் குளிர்காலங்களில் வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள யூக்கலிப்டஸ் மரங்களில் தூங்கி அதன் இலைகளை உட்கொள்கின்றன. வெப்ப காலங்களில் மரத்தின் உச்சியில் தூங்கும் கோலா கரடிகள் உணவாக எதையும் எடுத்துக் கொள்வதில்லை. 
 இது குறித்து ஆய்வாளர் ஆண்ட்ரூ கிராக்கன்பெர்ஜர் கூறும்போது, கடந்த 2009ம் ஆண்டில் ஏற்பட்ட வெப்ப அலையால் கோலா கரடிகளில் 4ல் ஒரு பங்கு இறந்து விட்டது.  எனவே, கடினமான சூழலில் சில உயிர்வாழ் இனங்களை வாழ வைக்கும் காரணிகளை குறித்து புரிந்து வைத்து கொள்வது மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.  மரங்களில் வசிப்பதை விரும்பும் குரங்குகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற மிருகங்களும் இந்த விசயங்களையே கடைப்பிடிக்கின்றன என ஆய்வு குழு மேலும் தெரிவித்துள்ளது.

 கடந்த வருடம் ஆஸ்திரேலிய அரசாங்கம் கோலா கரடிகளை அழிந்து வரும் உயிரினங்கள் வரிசையில் இருப்பதாக பட்டியலிட்டு உள்ளது. அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் அவை காணாமல் போய் விடும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.  ஆரோக்கியமான கோலா கரடி ஒன்று 16 வருடங்கள் வரை வாழ கூடியது.  ஆஸ்திரேலியாவில் முன்பு 10 லட்சம் வரை கோலா கரடிகள் வசித்துள்ளன. 

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

No comments: