Saturday, August 23, 2014

வெளவால்களை காக்கும் கிராமம்!

காஞ்சிபுரத்தை அடுத்த விஷார் தாமரைக்குளம் அருகே உள்ள ஆலமரத்தில் வசிக்கும் வெளவ்வால் கூட்டம்.

வெளவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக காஞ்சிபுரம் அருகே விஷார் கிராம மக்கள் வெடிகளைத் தவிர்த்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ளது விஷார் கிராமம். இக்கிராமத்தில் பீமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே தாமரைகுளம் உள்ளது.

இக்குளத்தின் அருகே 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வசித்து வருகின்றன.

இரவில் உலாவி விட்டு, பகலில் இம்மரத்தில் ஓய்வெடுக்கும் வெளவால் கூட்டங்களுடன் இம்மரத்தைப் பார்க்கும்போது, சடைமுடி சாமியார் எழுந்து நிற்பது போன்று காட்சி தருகிறது. இதே போன்று மேலும் 2 மரங்கள் முன்பு இருந்துள்ளன. கடந்த பல நூறு ஆண்டுகளாகவே இங்கு வெளவால்கள் குடியிருந்து வருவதாக இக்கிராமவாசிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பகலில் ஓய்வெடுக்கும் வெளவால்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் கிராம மக்கள் உறுதியுடன் இருந்து வருகின்றனர். மேலும் இந்த வெளவால்கள் தங்களது கிராமத்தின் அடையாளம் என்றும் போற்றி வருகின்றனர். இதனால் தீபாவளி மற்றும் கோயில் திருவிழா காலங்களில் இக்கிராம மக்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை பயன்படுத்துவதை தலைமுறை, தலைமுறையாக தவிர்த்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கச் செய்வதன் மூலம், வெளவால்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடலாம் என்றும், கிராமத்தைவிட்டு அவை கூட்டமாக சென்று விடக்கூடாது என்பதற்காகவும் இக்கிராமத்தில் பட்டாசுகளை வெடிப்பதில்லை. ÷அதே நேரம், பூச்சட்டி, சங்குசக்கரம், மத்தாப்பு உள்ளிட்ட ஒளிரும் பட்டாசுகளை பயன்டுத்துகின்றனர்.

இதுபோல் ஒவ்வெறு கிராம மக்களும் தங்களது கிரமத்தில் உள்ள பறவைகள், விலங்குகள், மரங்களை பாது காத்தால் இயற்கை இயற்கையாக இருக்கும் நாடு செழிப்பாக இருக்கும்.

No comments: