Tuesday, August 28, 2012

தமிழ் மொழி


தடுக்கி விழுந்தால் மட்டும்   அ...   ஆ...

சிரிக்கும் போது மட்டும்   இ...   ஈ...

சூடு பட்டால் மட்டும்   உ...   ஊ...

அதட்டும் போதும் மட்டும்   எ...   ஏ...

ஐயத்தின போது மட்டும்   ஐ...

ஆச்சரியத்தின் போது மட்டும்   ஒ...ஓ...

வக்கணையின் போது மட்டும்   ஔ...

விக்களின் போது மட்டும்   ஃ...

என்று தமிழ் பேசி மற்ற நேரம்
வேற்று மொழி  பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!


இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.....


No comments: