Tuesday, August 28, 2012

'அம்மா' எனும் வார்த்தை அர்த்தம் சொல்லும் வார்த்தை!


 தமிழில் 'அம்மா' எனும் வார்த்தை உருவான விதம் அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக  'அ' எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' எனும் மெய் எழுத்தை இரண்டாவதகவும், 10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதல் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தையும் வைத்துள்ளனர்.
 அதே போன்றுதான் 'அப்பா' என்ற சொல்லும் அமைந்துள்ளது. இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற சொல்லில் 'ம்' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வன்மையானவர் என்பதால் அதில் 'ப்' எனும் வல்லின எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ் மொழி என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ள மொழி என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


மரம் வளர்ப்போம் புவி காப்போம் .....
 மரம் வளர்ப்போம் வரும் சந்ததி காப்போம்.....


No comments: