Friday, August 3, 2012

புலிகள் சரணாலயம்: சத்தியமங்கலம் சரிவருமா?


 தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் காட்டில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புலிகள் காப்பகம் அமைக்கப்படுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்று தமிழ்நாட்டின் வனத்துறை அமைச்சர் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.
 ஏற்கெனவே முதுமலை, ஆனைமலை மற்றும் களக்காடு முண்டந்துறை ஆகிய மூன்று புலிகள் சரணாலயங்கள் தமிழ்நாட்டில் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 163 புலிகள் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவித்திருந்தது.
 இந்த பின்னணியில் சத்தியமங்கலம் காடுகளில் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதாக தெரிவித்த அமைச்சர், இந்த புலிகளை பாதுகாக்கும் நோக்கில் சத்தியமங்கலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மாநிலத்தின் நான்காவது புலிகள் சரணாலயம் அமைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார்.
 அமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக்கதாக இருந்தாலும் அதேசமயம் இந்த புலிகள் காப்பகத்திற்காக சத்தியமங்கலம் காடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் பூர்விக குடிமக்களையும் அங்கிருந்து வெளியேற்றக்கூடாது. 
 மலைவாழ் மக்களை வனத்தில் விவசாயம் செய , மேலும், வனத்தில் கிடைக்கும் தேன், சிகைக்காய், நெல்லி போன்ற பொருள்களைச் சேகரித்து விற்பனை செய, வனத்தில் சேகரிக்கும் பொருள்களை மலைவாழ் மக்கள் விற்பனை செய்து கொள்ளலாம் என்ற வன உரிமைச் சட்டத்தை தமிழக அரசு  நடைமுறைப்படுத்த வேண்டும். சுற்றுலா வழிகாட்டி, சுற்றுச்சூழல் பாதுகாவலர், வேட்டைத் தடுப்பு காவலர், விருந்தினர் மாளிகைகளில் சமையல் பணி மற்றும் காவலர் போன்ற பணிகளில் மலைவாழ் மக்களை ஈடுபடுத்தப்பட வேண்டும். 
 ஆஸ்திரேலிய அரசு எப்படி  தனாமி பாலைவனத்தில் உள்ள அழிந்துவரும் உயிரினங்களை பாதுகாக்கும் வேலையை பூர்வகுடி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதோ, அது போன்று சத்தியமங்கலம் காட்டில் வாழும் பூர்வகுடி மக்களிடமே வன விலங்குகள், மற்றும் தாவரங்களை பாதுகாக்கும் பொருப்பை அவர்களிடமே கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வேலைவாய்ப்பு கொடுக்கபடவேண்டும்.

இற்கையின் பொக்கிஷம் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...

No comments: