Thursday, August 9, 2012

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி!


 இந்திய சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் இஞ்சிக்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பொருள்கள் இஞ்சியில் இயற்கையிலேயே உள்ளதால், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
 சிட்னி பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து மேற்கொண்ட ஆய்வில், ரத்தத்தில் அதிக குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் திறன் இஞ்சிக்கு உள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால், இதய பாதிப்பு-சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க இஞ்சி உதவுவதுடன், பக்க விளைவுகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் திறன் இஞ்சிக்கு உள்ள இந்த ஆராய்ச்சி முடிவு 'பிளான்ட்டாமெடிகா' மருத்துவ சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது.
 இதை நமது முன்னோர்கள் காலையில் இஞ்சி, மாலையில் சுக்கு, இரவில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் நோய் இன்றி வாழலாம் என்று கூறினார்கள்.

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

No comments: