Wednesday, August 1, 2012

ஆஸ்திரேலியாவின் வடக்கே உள்ள தனாமி பாலைவனம் 'பாதுகாப்புக்குரிய வலயமாக'

 ஆஸ்திரேலிய அரசு, அந்நாட்டின் பழங்குடி பிரதேசங்களில் சுமார் ஒரு கோடி ஹெக்டேயர் நிலப்பரப்பை 'பாதுகாப்புக்குரிய வலயமாக' பிரகடனப்படுத்தியுள்ளது. 
 ஆஸ்திரேலியாவின் வடக்கே உள்ள தனாமி பாலைவனம், அந்நாட்டிலிருந்து அழிந்துவரும் அரியவகை உயிரினங்கள் பலவற்றுக்கு வாழ்விடமாக இருந்துவருகிறது.
 துஷ்பிரயோகம், பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், மனித உரிமை
இந்த உயிரினங்கள் காட்டுப்பூனைகள் மற்றும் நரிகள் போன்ற விலங்குகளினாலும் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீயினாலும் பெரும்   அச்சுறுத்தலை எதிர்நோக்கிவருகின்றன.
 பழங்குடியினத்தைச் சேர்ந்த வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த பிரதேசத்தை காவல்காக்கும் வேலையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
 ஆஸ்திரேலியாவிலேயே மிகப்பெரியதாக அமைந்துள்ள இந்தப் புதிய பாதுகாப்பு வலயம் பெரும் பாலைவனங்களையும் அடர்த்தியில்லாத தாவர பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது.
 அரசுக்கும் பழங்குடி அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்குமிடையே கடந்த 4 ஆண்டுகளாக நடந்துவந்த பேச்சுவார்த்தைகளின் முடிவாக இந்த பிரகடனம் வெளியாகியுள்ளது.
 பாதுகாக்கப்படும் பழங்குடிப் பிரதேசங்களை பராமரிக்கும் வேலை பூர்வகுடி  அமைப்புகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.  எலியைப் போன்ற பில்பி என்ற அரியவகை பாலூட்டி இனம், கங்காருவை ஒத்த சிறிய வகை பாலூட்டி விலங்குகள், பாலைவன அரணைகள், வளைகளில் வாழும் ஒருவகை பல்லிகள் என அழிந்துவரும் உயிரினங்களை பாதுகாக்கும் வேலை பூர்வகுடி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தமக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அதேநேரம் இன்னொரு பக்கத்தில் தமது வாழ்க்கைமுறையை தக்க வைத்துக்கொள்ளவும் இந்த புதிய பிரகடனம் உதவும் என்று பழங்குடித் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 பூர்வகுடி மக்களின் வாழ்க்கை முறையில் நிலத்துக்குத் தான் முன்னிரிமை அளிக்கப்படுகிறது. பூமியே உலக படைப்புகளுக்கெல்லாம் ஆதாரம் என்று பூர்வகுடிகள் பாரம்பரியமாக நம்பிவருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்.

No comments: