Saturday, April 9, 2011

நமது நாடு 12. ஆரியர் வேதங்கள்


      ஆரிய மக்கள், இந்தியாவை அடைந்தபின் தங்கள் கடவுளர் மீது பாடிய பாடல்களின் திரட்டு வேதம் எனப்படும். வேதங்கள் பாடப்பட்ட காலத்தில் ஆரியர் எழுத்தெழுதும் முறையை அறியாதிருந்தனர்.  ஆகவே ஒருவர் பாட   மற்றவர்கள் கேட்டு அப்பாடல்களை நெட்டுருச் செய்தனர். நீண்டகாலம் எழுதப்படாத செவி வழக்கில் வந்தமையின் அவை எழுதாக்கிளவி என்னும் பெயர் பெற்றன. அப்பாடல்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருக்கு, எசுர், சாமம் என்னும் பெயர் பெற்றன. பின்பு அதர்வணம் என்னும் ஒரு வேதமும் சேர்க்கப்பட்டு வேதங்கள் நான்கு ஆயின. அவை தமிழர் வழிபட்ட கடவுளர் மீது பாடப்பட்டனவல்ல.

   ஆரியர் தமிழர்களைப்போல ஆலயங்களை அமைத்து அவைகளிற் சென்று கடவுளை வழிபடவில்லை. அவர்கள் வேள்விச் சாலைகள் அமைத்து அவைகளில் பெரிய வேள்விகள் செய்தனர். வேள்விகளில் பல விலங்குகள் பலியிடப்பட்டன. நூறு வேள்வி  வேட்கின்றவன் இந்திர பதவியை அடைகிறான் என்று அக்கால அரசர் நம்பினார்கள். இந்திரன் வானுலகத்துக்கு அரசன் என ஆரியமக்கள் நம்பிவந்தனர்.

     வேதங்களுக்குப்பின் ஆரணியங்கள் என்னும் நூல்கள் எழுந்தன. அவை, முதுமைக் காலத்திற் காட்டிற் சென்று தவஞ்செய்வோர் படிப்பதற்காக எழுதப்பட்டவை.

     ஆரணியங்களுக்குப்பின் பிராமணங்கள் என்னும் நூல்கள் எழுதப்பட்டன. பிராமணங்கள் வேள்விக் கிரியைகளைப்பற்றி விரிவாகக் கூறும் நூல்கள். அந்நூல்களிற் பயிற்சியடைந்ததோர் பிராமனர்  எனப்பட்டனர். அவை கூறும் வேள்விமுறைகள் தமிழர்க்குரியன வல்ல. பிராமணரும் தமிழ் மரபினரல்லர். ஒரு காலத்தில், சமக்கிருதம் தேவமொழி என்றும், தமிழ் மனிதமொழி என்றும் மக்கள் தமது அறியாமையால் நம்பத் தலைப்பட்டார்கள். அப்பொழுது தென்நாட்டு ஆலயங்களுக்கு வழங்கிய தமிழ்ப் பெயர்களுக்குப் பதில் வடமொழிப் பெயர்கள் இடப்பட்டன. தமிழ் அந்தணரான பார்ப்பானருக்கும் பிராமணர் என்னும் பெயர் வழங்குவதாயிற்று.  இதனாலேயே பார்ப்பனர் ஆரியரே என்னும் கருத்து
ஏற்படலாயிற்று.


நமது நாடு தொடரும்...

 
பசுமை நிறைந்த உலகை உருவாக்குவோம்.....

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு

S.Gnanasekar said...

நன்றி நன்பர் ஆர். ஞானசேகரன் அவர்களே. நமது நாடு முதல் அத்தியாயத்தில் இருந்து படிக்கவும்.