Friday, February 4, 2011

சின்ன வேட்டைக்காரன்


  அடர்த்தியான பசுமை, இருட்டான, ஈரக் கசிவான ஆச்சர்யமாக அமைதியாக இருக்கும் காட்டின் தரைப்பகுதியில், வெகு சில உயிரினங்கள்தான் வாழ்கிறது. தாவர தின்னியான, 'டாப்பிர்' விலங்கு தன் உணவாக விதைகளையும், பழங்களையும் உண்கிறது. இங்கிருக்கும் பல பிராணிகள் தங்கள் பெரும்பாலான பொழுதை மரங்களில் செலவிடுகின்றன. ஆனால், கோடிஸ் என்னும் விலங்கு மரத்திலும், தரையிலும் தீவனம் தேடும்.
   பிற விலங்குகளை தாக்கி உண்ணும் விலங்குகளுக்கு அருமையான மறைவிடமாக அமைந்து விடுகிறது. அதோடு அந்த விலங்குகளின் உடல் நிறமும் சூழலுக்கு ஏற்ப இருக்கும். புள்ளிகள் நிறைந்த பூனை வகைகளில் மேக வண்ண சிறுத்தை, ஒசிலாட், கோலி குண்டு பூனை போன்ற பெரும் பாலானவை இங்கேதான் வாழ்கின்றன.
  சின்ன வேட்டைக்காரன், அட்டகாசமாய் இருக்கும் இந்த குட்டி (மியாவ்) "மார்கே பாப்பா" அமேசான் மழை காட்டு பூனைகளில் ஒன்றாகும்.
பூமியை காக்க, பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!

No comments: