Saturday, February 5, 2011

இலைதான் போர்வை


  பெரும்பாலான மரங்கள், தங்களின் அடி மரத்தினை சிற்றிய வளர்ச்சியில் கவனம் செலுத்தும். அங்கிருந்து கிளம்பும் கிளைகள் அந்த இடத்தில் அடர்த்தியான இலைகளான போர்வை போன்ற அமைப்பை ஏற்படுத்திவிடும். இந்த இலை போர்வையை மீறி கொண்டு உயரமாய் வளரும் மரங்களும் உண்டு. அது போன்ற மரங்களில் மிக அறியப்பட்டவைகள் கபோக் மற்றும் பெரிய இலைகள் கொண்ட மஹாகோனி மரங்கள்.
  இவற்றை விட மேல், பிரூம்லியட் மரங்கள் எல்லா மரங்களை விடவும் உடரமாய் வளர்ந்து, தனக்கு தேவையான சூரிய ஒளிடை போட்டியின்றி பெறும். மேலே உயரமாய் வளர்ந்த மரங்களின் விதானத்தின் கீழே சிறிய மரங்கள். சூரிய ஒளிக்காக தன் வளர்ச்சியை அதிகப்படுத்தும். பெரிய வயதான மரங்களை போல இலைகளுக்கு நீண்ட குறுகிய உச்சி உண்டு. இதன் மூலம் சூரிய ஒளியை பெற்றுவிடும். இந்த மத்திய மர அடுக்குக்கு கீழே புதர், குத்து செடி அடுக்கு ஏற்பட்டிருக்கும்.
  இங்கே இயற்கையான உருவ அளவில் குறைந்திருக்கும் மரங்கள், புதர்களாக வளர்ந்திருக்கும்.வெகு சிலவே 6மீ., (20) அடி உயரம் வளரும்.

இயற்கையை காப்பது நம் கடமை...

No comments: