Thursday, February 10, 2011

நம்ம ஊர் ரோடு

    ரோடு ஒரு நாடு வளர்ச்சி அடைந்தது என்று கருதப்பட்டால், அந்த நாடு போக்குவரத்து     வசதியில் நல்ல முறையில் இருக்கும். அது தரை, நீர், ஆகாய மார்கம் இருக்கும்.
   நம் நாட்டில் தரை மார்க்கம்தான் அதிகம் பயன் படுத்துகிறோம். ஆனால் நமது சாலை வசதி எப்படியுள்ளது குண்டும் குழியுமாக சமமாக இல்லாமல், இது எல்லாம் எப்போதிருந்து 20,25 வருடங்களாக. ரோடு அனேக இடங்களில் போடப்படுகிறது ஆனால் அதன் நிலமை மிவும் மகாமட்டமான ரோடு, இது எதனால் தரமில்லாத பொருள்கள், அனுபவம் இல்லாத பொது நலத்தில் அக்கரை இல்லாத காண்டிராக்டர்களால், அதிகாரிகள் கண்டித்து கேக்க முடியாத நிலை, அரசியல் தலையிடு, அதிக லாபநோக்கோடு செயல்படுவது.
  முன்பு ரோடு போடுவது என்றால் முதலில் டெண்டர் விட்டு, மதிப்பீட்டு தொகையில் யார் குறைந்த தொகை கேப்பவருக்கு முன்னுரிமை.
இது போக ரோட்டை நீலம் அகலம் அளந்து, ஒரு அடிக்கு இத்தனை கன அடி கருங்கல், என்று அளவு கணக்கு எடுத்து, தார் கருங்கள் நன்கு நனைந்து இருக்கும் படி கலந்து போடுவார்கள். ரோடு தார் கருங்கல் உயரம் இத்தனை அங்குலம் இருக்கவேண்டும், என்று வறைமுறை இருந்தது. அதுவும் இப்போது கிடையாது.
   அதிக டன் எடைகொண்ட ரோடு ரோலரை ஓட்டினால் தார் சாலை நன்றாகப் பதியும். எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறோமோ, அவ்வளவு தூரம் சாலை திடமாக இருக்கும்.  ஆனால் குறைந்த எடையுள்ள ரோடு ரோலரை பயன்படுத்துவதால் தார் சாலை நன்றாகப் பதியாது. தார் கலவை நன்றாக  கலக்காமல் போடுவதால் மழைகாலத்தில் மழை நீர் வடிவதற்கு ரோட்டின் இரண்டு பக்கமும் வடிகால் இல்லாததால், மழைநீர் உட்பெயர்ந்து மழைநீர் தேங்கி ரோடு பெயர்ந்துபோகும்.  வெயில் காலத்தில் ரோடு போடமல் மழைகாலத்தில் போட்டு, ரோடு இப்பத்தான் போட்டார்கள் அதற்குள் மழை பெயர்த்து விட்டது என்று எனினும்படி செய்கிறார்கள். எங்கள் பகுதியில் இரவில் போட்ட ரோடு காலையில் பார்க்கும் போது எப்போதோ போட்ட ரோடுபோல் உள்ளது.
   இப்படி இருப்பதால் நமது வாகனங்கள் எவ்வளவு தேய்மானம், எரிபொருள் எவ்வளவு விரயம், பொருள் இழப்பு, காலம் விரயம் குண்டும் குழியுமாக இருப்பாதால் எத்தனை விபத்து. 
   நான்  ஒரு ஆங்கில சினிமா படம் டிவியில் பார்க நேர்ந்தது சைக்கிள்ரேஸ் அந்த ரேஸ் நடக்கும் இடமாகக் காட்டப்பட்ட இடம் மலைப்பாதை அதிக தூரம் அதை பார்க்கும் போது  அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. என் மகன் ரோட்டைப் பார்த்தவுடன் நம்ம நாட்டில் இது சான்சேயில்லப்பா என்றான் பாருங்க என்னால் பதில் சொல்லமுடியவில்லை போங்க. நம்ம சந்ததிக்காவது கிடைக்குமா? நல்ல ரோடு!

மரம் வளர்த்து மழை வளம் காப்போம்...

No comments: