Thursday, July 3, 2014

சீதாபழம்

சீதாபழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து,  பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையு‌ம் அடங்கியுள்ளது.

இ‌வ்வளவு ச‌த்து‌க்க‌ள் ‌சீதாபழ‌த்‌தி‌ல் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ குண‌ங்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது. 

மரு‌த்துவ குண‌ங்க‌ள்!

சீதாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும்.

சீதாபழச் சதையோடு உப்பை‌க் கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.

விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.

சீதாபழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

சீதாபழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

சீதாபழம் விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. 

சிறுவர்களுக்கு சீதாபழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும்.

சிறிதளவு வெந்தயம், சிறு பயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீதாபழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும். 

சீதாபழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். 

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...

No comments: