ஆப்பிள் பழத்தில் 25 சதவீதம் காற்று நிரம்பியிருக்கும். அதனால்தான் ஆப்பில் தண்ணீரில் மிதக்கிறது.
வெள்ளரி எண்பது காய்கறி கிடையைது பழவகையாகும். இதை எளிதாக கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. விதைகளை நடுவில் கொண்டிருக்கும் அனைத்துமே பழ வகையைச் சார்ந்தவையே!
வாழைப்பழத்தில் அதிகமான சத்துப் பொரு்கள் உள்ளன. அதனால்தான் குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் உணவில் வாழையும் சேர்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் வாழையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ரசாயன பொருட்களும் உள்ளனவாம்.
சீனாவிலும், ஜப்பானிலும் தர்பூசனி பழங்களை சிறந்த பரிசுப் பொருளாக வழங்குகிறார்கள்.
குள்ள வில்லோ (Dwarf Willow)என்பதுதான் உலகின் சிறிய மர வகையாகும். கிரீன்லாந்தில் காணப்படும் இந்த வகைமரங்களின் மொத்த உயரமே 2 அங்குலம்தான். உலகின் உடரமான மரம் செக்கோயா. 360 அடிக்கும் அதிகமான உயரம் வளரக்கூடியவை இவை.
உலக அளவில் மிகுதியாக விளையும் இரு காய்கறிகள் என்றால் அது தக்காளியும், உருளையும்தான். ஆனால் வெங்காயம்தான் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக உள்ளது. ஏனெனில் எல்லாவகை பதார்த்தங்களிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.

'வீனஸ் பிளை' டிரேப் என்னும் பூச்சிகளை உண்ணும் செடிகள் அமெரிக்காவின் கரோலினா பகுதியில் காணப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் யானைப் புல் என்று ஒருவகைப் பெரிய புற்கள் உள்ளன. இது4.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. யானைகள் மாலை வேளையில் இந்தப் புதர்களில் மறைந்து வாழ்வதால் இற்கு இந்தம் பெயர் வந்தது.
"பாவ்பாப் மரம்" என்று ஒருவகை மரங்கள் ஆப்பிரிக்கா காடுகளில் உள்ளன. இதற்கு ஒரு சிறப்பு உண்டு. பஞ்சு போன்ற இதன் தண்டுப் பகுதியில் லிட்டர் கணக்கில் தண்ணீர் சேமிக்கப்பட்டிருக்கும். அதிகப்பட்சம் ஆயிரம் லிட்டர் முதல் 11/4 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் இதன் தண்டில் சேமிக்கப்படுகிறது.
மரங்கள் தங்களுக்கு தேவையான 90 சதவீத ஆற்றலை வளிமண்டலத்தில் இருந்தே பெறுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் சூரிய ஒளிதான் அதன் முக்கிய ஊட்டம். 10 சதவீத சத்துக்களையே மண்ணில் இருந்து எடுத்துக் கொள்கிறது.

வில்லோ மரத்தில் இருந்து கிரிக்கெட் மட்டை தயாரிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். உலகின் சிறந்த வலி நிவாரணி 'ஆஸ்பிரின்' மருந்து தயாரிப்பிலும் வில்லோ மரங்கள்தான் பயன்படுகின்றன. பேஸ்பால் மட்டைகள் கிக்கோரி மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
'சாக்லெட்' கோகோ பீன் மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...
No comments:
Post a Comment