Saturday, September 29, 2012

பாலைவன உயிரினங்கள்


  பாலைவனத்தில் பார்க்குமிடமெல்லாம் மருந்துக்குக்கூட தண்ணீர்கிடைக்காது, ஆனால் இந்த இடத்திலும் பல உயிரினங்கள் வாழ்கின்றன. தாவரங்கள் முளைக்கின்றனர். இதுதான் இயற்கையின் வினோதம்.
  பாலைவனத்தில் பகலில் கடுமையான வெப்பமும் இரவில் கடுமையான குளிரும் இருக்கும். வெப்பத்தின் கொடுமையை தாங்கிக் கொள்வதற்காக ஆங்காங்கே காணப்படும் புதர்களில் அங்கு வாழும் உயிரினங்கள் ஒதுங்கிக்கொள்ளும். எப்போதவது பெய்யும் மழையின் நீரை சேமித்து வைத்துக்கொள்ளும்.
  பாலைவனத்தில் நத்தைகள் ஏராளமாக இருக்கும் அமெரிக்க பாலைவனங்களில் "பேக் ரேட்" என்ற ஒருவகை எலிகள் உண்டு. வட ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ள பாலைவனங்களில் "ஜெர்போவா" என்ற விலங்குகள் உண்டு. இவை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட கங்காருவைப்போல நீளமான பின்னங்கால்களை கொண்டிருக்கும். அரேபிய, ஆப்பிரிக்க பாலைவனங்களில் ஓநாய் வகையைச் சேர்ந்த ஒருவகை விலங்கு காணப்படுகிறது.
  பலவிதமான பல்லிகள், ஆந்தைகள், புழு, பூச்சிகள், கொடிய விஷமுடய பாம்புகளை பாலைவனங்களில் அதிகம் காணலாம். இவை உயிர்வாழ நீர் அதிகம் தேவையில்லை. வியர்வை, சிறுநீர் கூட மிகமிகக் குறைந்த அளவிலேயே வெளிப்படும். சிறு அளவில் வெளியிடப்படும் இவற்றின் சிறுநீரில் யூரியாவும், யூரிக் அமிலமும் அதிகம்.
  பாலைவன மிருகங்களில் மிக முக்கியமானது ஒட்டகமாகும். இதை பாலைவனக் கப்பல் என்கிறார்கள். உலர்ந்த புல்லும், முட்செடிகளும் இதன் உணவு. அதன் மூக்கு, காது, கண் முதலிவை மணலால் பாதிக்கப்படாடதபடி அமைந்துள்ளது.
  பாலைவனத்தில் புதர்செடிகளும், சப்பாத்திக்கள்ளி வகையைச் சேர்ந்த செடிகளும் காணப்படுகின்றன. புதர் செடிகளில் இலைகளை விட முட்கள்தான் அதிகம். இலைகள் குறைந்திருப்பதால் நீர் ஆவியாதல் குறைவாகவே இருக்கும். சப்பாத்திக் கள்ளியின் தண்டுப்பகுதி தடித்து சதைப்பற்றுள்ளதாக அமைந்திருக்கிறது. இதிலும் முள் மட்டுமே உண்டு. இலைகள் கிடையாது.
  சில வகை சப்பாத்திக் கள்ளிகளின் முட்கள் நிலத்தை நோக்கி வளர்ந்திருக்கும். இதன் நுனியில் தங்கும் பனித்துளிகள் நிலத்தில் விழுவதால் அடிப்பகுதியில் நீர்ப்பசை இருந்து கொண்டே இருக்கும். இதன் வேர்களும் நிலத்தின் அடியில் வெகுதூரம் பரந்து இருக்கும். பல நாள் வெயில் வாட்டிய பிறகு ஒரு மழை பெய்தால்கூட போதும் இந்த வேர்கள் நீரை முழுமையாக உறிஞ்சிக் கொள்கின்றன. சில கல்ளிச் செடிகள் அவற்றின் அருகில் வேறு எந்த செடியையும் வளர விடாது. இதனால் அதிக உணவும் நீரும் இதற்கு கிடைக்கின்றன. இப்படியாக உயிரினங்கள் பாலைவனத்தில் உயிர் வாழ்ந்து வருகின்றன.

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ... 

No comments: