Saturday, September 15, 2012

காய்கறியில் பசுமையை அதிகரிக்கும் பெரும் மோசடி


 'காய்கறிகள் பெரியதாக காய்ப்பதற்கும், அதிக விளைச்சலை ஊக்குவிக்கவும் செலுத்தப்படும் ஆக்சிடோசின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்'.
 அதிக மகசூலை தருவதற்காக குறிப்பாக காய்கரிகள் பெரிய அளவில் காய்ப்பதற்காக விவசாயிகள்,  ஆக்சிடோசின் என்ற ஹார்மோனை பயிர்களுக்கு செலுத்துகின்றனர்.
 இதனால், காய்கறிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே அதிக பருமனையும், அழகான வடிவத்தையும், சில காய்கறிகள் அதிக பசுமை நிறத்தையும் பெறுகின்றன. பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் கத்தரிக்காயில் ஆக்சிடோசின் ஹார்மோன் அதிக அளவில் செலுத்தப்படுகிறது.
 ஆக்சிடோசின் ஹார்மோன் பிரசவத்தின்போது பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. விர, மனிதர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட மருந்து அட்டவணையில் ஆக்சிடோசின் இடம் பெற்றுள்ளது.
 ஆனால் விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு ஆக்சிடோசின் கொடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
 ஆக்சிடோசின் ஹார்மோன் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தொடர்ந்து சாப்பிடும் போது நரம்பு தளர்ச்சி, மலட்டுத்தன்மை, புற்றுநோய், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் கர்பிணிகளுக்கு பிரசவத்தின் போது பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.
 சந்தையில் ஆக்சிடோசின் விலை மலிவாகவும் எளிதாகவும் கிடைப்பதால், விவசாகள் அதை வாங்கி காய்கறி பயிர்களில் செலுத்துகின்றனர்.
 காய்கறிகள் மற்றும் பழங்களில் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்.
 'ஒரு காய்கறியையோ, பழத்தையோ வாங்கும் போது அது ஆக்சிடோசின் செலுத்தப்பட்டு விளைவிக்கப்பட்டதா? என்பதை கண்டறிய சாதாரண மக்களால் முடியாது. இந்த ஹார்மோனால் உடனடியாக பாதிப்பு இல்லாவிட்டாலும் பின்விளைவுகள் ஏற்படும் என்கின்றனர்'.

இயற்கை அன்னை நமக்கு அளித்த அழகு காடுகள்...

No comments: