Thursday, September 13, 2012

வெட்டிவேர் செலவில்லாத சுத்திகரிப்பு கருவி!


 அறிவியல் எனற பெயரால் உயிருள்ள நிலத்தில் ரசாயன உரங்களை கொட்டினோம். அதன் விளைவு நிலம் வளமிழந்து போய்விட்டது. அதை மீண்டும் சீர்திருத்தி, பழையபடி இயற்கை விவசாயத்திற்கு கொண்டு வருவதற்கு இன்றைக்கு நிறையவே கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஆனால் இனி கஷ்டப்பட தேவையிருக்காது. எங்கெல்லாம் ரசாயன உரத்தால் பாதிக்கப்பட்ட நிலம் உள்ளதோ, அங்கு வெட்டிவேரினைப் பயிரிட்டால் போதும்... மண் பழையபடி உயிர்த்தன்மை மிக்கதாக மாறிவிடும். காரணம், மண்ணிலிருக்கும் விஷத்தன்மையை முற்க்கும் வல்லமை வெட்டிவேரிடம் இருக்கிறது.
  நாகரிகம் என்ற பெயரால் நகரங்கள் முழுக்கக் சாக்கடைகளை உருவாக்கி விட்டோம். தொழிற்சாலைக் கழிவுகளை, குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படும் ஆறுகளில் கலந்து ஓடச் செய்துவிட்டோம். இதனால் புற்றுநோய், நரம்புக் கோளாறு என்ற அதிபயங்கர ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் நம்மைத் தாக்க ஆரம்பித்துவிட்டன.
 ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் இப்படிபட்ட சூழ்நிலை உள்ள கழிவுநீர் வெளியே செல்லும் பகுதியில் வெட்டிவேர்களை வளர்த்ததில், கழிவுநீரில் இருந்த குரோமியம், காட்மியம் போன்ற போன்ற உயர் உலேகங்கள் எல்லாம் சிலமாதங்கலில் காணமல் போய்விட்டன. கழிவுநீர் நல்ல நீராக மாறிவிட்டது. இத்தைகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்தது வெட்டிவேர்.
 ஆஸ்திரேலியாவை காட்டிலும் சாக்கடைகள் அதிகம் ஓடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிவமைத்ததில், சில மாதங்களில் அந்த நீர் நல்ல நீராக மாரியது.
 நமது சென்னை மாநகரின் இதை வளர்க்கலாம். திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர்களையும் இம் முறையிலே சுத்திகரிக்கலாம் செலவே இல்லாமல்.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

No comments: