Tuesday, February 28, 2012

4.மரம் வளர்த்தனால் ஆய பயனென் கொல் ?

    விண்ணும் மண்ணும் இணைந்த அற்புதப் படைப்பே மரம். மரங்களின் இலைகளில் பச்சையம் எனும் வண்ணக்கலவைப் பொருள், சூரியனின் ஒளிக்கதிர்களை ஈர்த்து, அதனை உணவாக மாற்றுகிறது. ஒரு ஹெக்டேரில் உள்ள காடு, ஆண்டு ஒன்றுக்கு 3.7 டன் கரியமிலவாயுவை உட்கொண்டு 2 டன் பிராணவாயுவை தரும். கரியமிலவாயு மண்ணின் ஆழத்திலுள்ள பல்வேறு மூலங்கள், வற்றாத கடலிலிருந்து முகிலாக மாறிக் மழையாக் கியைக்கும் நீர், இவற்றைக் கொண்டு அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையான உணவையும். உலகத்துக்குப் பயன்படும் ஆயிரமாயிரம் பொருள்களையும் தரும் ஆற்றலைக்கொண்டது மரம். இந்த அபாகர ஆற்றலால் அனைத்து உயிர்களுக்கும் அமுதசுரப்பியாக விளங்குகிற மரத்தால்தான் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் வாழ முடிகிறது.
    1900-ல் உலகிலுள்ள மொத்தக் காடுகள் 7,000 மில்லியன் ஹெக்டேர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 1975-ல் இது 2,980 மில்லியன் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது. ஓராண்டில் 2,50,000 சதுர கிலோ மீட்டர் வீதம் காடுகள் அழிக்கப்படுகின்றன.

மரம் வளர்ப்பு தொடரும்...

மரம் வளர்த்து பசுமை நிறைந்த உலகை உருவாக்குவோம்.....

No comments: