Friday, February 24, 2012

1மரம் வளர்த்தனால் ஆய பயனென் கொல்?

   வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார்," கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தருநிழலே' என இயற்கையை இறைவனது சொரூபமாக வர்ணிக்கிறார். காடு வளர்த்தால், இறைவனை வணங்குதல், தருமம் செய்தல் ஆகிய மூன்று கடமைகளுள் மரம் வளர்த்தல் மனிதனின் தலையாய கயமை என்கிறார் திருமூலர்.
   "நல்ல காடு வளர்ப்போம்" என்றார் பாரதியார். நம் மக்கள் இயற்கையை தெய்வமாய், அன்னையாய் வணங்கினார்கள். துளசியாகட்டும், அரசமரமாகட்டும், வேப்பமரமாகட்டும், அத்தானை செடி, கொடிகளும் இறைவனின் இருப்பிடம், உயிரினங்களின் உறைவிடம், நோய்தீர்க்கும் மருந்துகளின் பிறப்பிடம். "ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி மூங்கில்போல் கிளைந்து வாழவேண்டும்" என்று வாழ்க்கை நெறியை உணர்த்துகிறது மரம்.
    "வெயில் நுழை பறியா குயில் நுழை பொதும்பர்" என்ரும் "முட்புதர்கள் மொய்த்த தரை - எதிர் முட்டும் கருங்கற்களும் நெருங்கும் - மக்கள் இட்டு அடி எடுத்து வைக்கயிலையே கால் நடுங்கும் உள் நாடுங்கும் என்றும் இலக்கியங்கள் காட்டைச் சிறப்பித்துப் பாடுகின்றன. மரங்கள் நிழல், இலை, காய், கனி, மணம், குனம், தனம், பானம், ஞானம், சாந்தம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு இப்படி மனித சமுதாயத்திற்குப் பல நன்மைகள் தருவதால் பண்டைய காலத்தில் மரங்களை "தரு" என அழைத்தார்கள்.
   இன்று காடு வளர்க்கும் பண்பு மனிதர்களிடையே அருகி வருகிறது. மரங்களும் ஏனைய தாவரங்களும் அடர்த்தியாகவும், அதைச்சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு எனப்படும். நம் நாட்டில், மெளர்ய, குப்த அரசர்கள் காலத்திலிருந்து முகலாய அரசர்கள் காலம் வரை வனங்களைப் பேனுவதிலும், சாலைகளில் நிழல்தரும் மரங்களை வைப்பதிலும் ஆர்வம் காட்டி இயற்கையோடு இனைந்த வாழ்வை வாழ்ந்தார்கள்,

ஒருவர் ஒரு மரம் வளர்த்து நம சந்ததிகளு......

மரம் வளர்ப்பு தொடரும்...

No comments: